Sunday, July 18, 2010

திரைக்கூத்து!

காலில் விழுந்த ஐஸ்!

பாடல் காட்சி எடுக்கப்பட்டதோடு ‘"எந்திரன்' படப்பிடிப்பை முடித்துவிட்டார் ஷங்கர். கடைசிநாள் படப்பிடிப்பில் கடைசி ஷாட் எடுத்து முடிந்ததும் ரஜினியே எதிர் பாராதவிதமாக ரஜினியின் காலில் விழுந்து வணங்கினார் ஐஸ்வர்யா ராய். ஷாக்கான ரஜினி "எந்திரிங்கம்மா' என ஐஸ்வர்யாவை தூக்கி "நீங்க அமிதாப் சார் மருமகன்னாலும் எனக்கும் மருமகள் மாதிரித்தான். நல்லா இருங்கம்மா' என வாழ்த்தியிருக்கிறார். ஐஸின் அடக்கமும், ரஜினியின் வாழ்த்தும் நெகிழ வைத்திருக்கிறது யூனிட்டை.

பிரபலங்கள் ஷாக்!

இங்க இருந்துக்கிட்டு பேசுனா எப்படி? இலங்கைக்கு வந்து பாதிக்கப்பட்டவங்கள சந்திச்சு ஆறுதல் சொல்லணும். அந்த தமிழ் மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறாங்க' என அசின் போட்ட நியாயமான போடில் தமிழ் சினிமா பிரபலங்கள் நெஜமாவே ஷாக்கடிச்சுத்தான் போய்ட்டாங்களாம்.


விஜய் படத்துக்கு தடை!





விஜய்யிடம் தியேட்டர் அதிபர்கள் நஷ்ட ஈடு கேட்டு வருவதையும், அதற்காக தியேட்டர் அதிபர் சங்க செயற்குழு கூட விருப்பதையும் ஏற்கனவே கூவியிருந்தேன். 13-ந் தேதி சங்கத்தின் அவசர செயற்குழு கூடியது. தமிழகம் முழுவதிலிருந்தும் 60 தியேட்டர் உரிமையாளர்கள் கூடி விவாதித்த னர். "வில்லு', "குருவி', "சுறா' படங்களின் நஷ்டத்தை சரிக்கட்டும் விதமாக 35 சதவிகித பணத்தை விஜய் திருப்பித்தர வேண்டும் என முடிவு செய்தனர். அதாவது மூன்றேகால் கோடி ரூபாய். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் சிலரின் வாயைக் கிளறியபோது... "நாங்க கேக்குற தொகையை கொடுக்கலேன்னாலும் பரவால்ல. மூணுங்கிற எடத்துல ஒண்ண வாவது கொடுத்தா அதை பாதிக்கப் பட்டவங்களுக்கு பிரிச்சுக் கொடுப்போம். ஆனா விஜய் தரப்பு பிடிவாதமா இருக்கு. "அடுத்து வரப்போகும் விஜய்யின் "காதல் காவல்' படத்தை வெளியிடுறதில்லைனு முடிவு செஞ்சிருக்கோம்' என்றனர்.

ஆனால் விஜய் தரப்பு அசரவில்லை. ஜெயம் ராஜா இயக்கத்தில் ஆஸ்கார் ரவி மிக பிரமாண்டமாக தயாரிக்கும் "வேலாயுதம்' படத்தில் பிஸியாகவும், குஷியாகவும் ஈடுபட்டிருக்கிறார்.

அமோக வெற்றி!

"என்னா கோழி... தயா ரிப்பாளர் சங்க தேர்தலில் இராம.நாராயணன் அணி ரொம்ப தெம்பா இருக் காங்கன்னு சொல் லீருந்த... அந்த டீம் அமோகமா ஜெயிச்சிருச்சே!'னு தட்டிக் கொடுத்தார் கவுன்சில் கண்ணாயிரம்.

ஆக்டோபஸ் ஆருடமே பலிக்கிறப்ப... கோழியோட கணிப்பு தோக்குமா என்ன?!

படமாகும் கள் தொழிலாளி!

"கள் இறக்க அனுமதிக்க வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை விட... ‘"கள்ளை இறக்கவும் வேண்டாம், கள்ளால் இறக்கவும் வேண்டாம்' என பனைவாரியத் தலைவர் குமரி அனந்தன் சொல்ல...‘"விரைவில் கள் இறக்குவது குறித்து பரிசீலிக்கப்படும்' என கலைஞர் சொல்ல... அப்பப்பா.. இப்பவே சுத்துதே. கள் இறக்கிவிற்கும் தொழிலாளியை வைத்து "காண்டீபன்'' என்கிற படத்தை இயக்கி வருகிறார் சலங்கை துரை.

அர்ஜுனனோட வில்லு காண்டீபம். வில்லுக்கும் கள்ளுக்கும் முடிச்சப் போடுறீகளே...னு கேட்டா ‘"இப்போதைக்கு சஸ்பென்ஸ்'னு கண்ண சிமிட்றாரு சலங்கை.

எஸ்.ஜே.சூர்யா ஜோடி!





தன் படத்தில் அறிமுகப் படுத்தும் நடி கையோடு ஸ்கிரீனுக்கு வெளியேயும் ஒரு வல்லிய ரவுண்ட் வருவது எஸ்.ஜே. சூர்யா வழக்கம். தெலுங்கில் "கொமரம் புலி' படத்தை இயக்கி முடித்திருக் கும் சூர்யா அந்தப் படத்தின் நாயகி நிகிஷா பட்டேலுடன் பட்டயக் கிளப்புவதாக செப்புறாங்கய்யா செப்புறாங்க.

No comments:

Post a Comment