Thursday, July 15, 2010

ஆக்டோபஸ்! சில சுவாரஸ்யங்கள்!


உலக கால்பந்து விளையாட்டில் முதல் முறை யாக இறுதிப் போட்டிக் குள் நுழைந்து உலகக் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது ஸ்பெயின்.

தென் ஆப்பிரிக்காவில் ஒருமாத காலம் நடந்த இந்த கால்பந்து திருவிழாவில் 32 நாடுகள் கலந்து கொண்டன. முதல்நாள் ஆட்டம் துவங்கிய ஜூன் 11 முதல் இறுதிப் போட்டி நடந்த ஜூலை 11 வரை ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப் பாகவும் த்ர்லிங்காகவும் ஆக்ரோஷ மாகவும் இருந்தன.

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான்களான இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரே சில், ஜெர்மனி, அர்ஜென்டி னா ஆகிய நாடுகளில் இரண்டுதான் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் என்று உலக ரசிகர்களாலும் முன்னாள் வீரர்களாலும் கணிக்கப்பட்டிருந்தன.

பல்வேறு தரப்பினராலும் எதிர்பார்க் கப்பட்ட உலக ஜாம்பவான் நாடுகள் எதுவும் இந்த முறை சோபிக்கவில்லை. இத்தாலி (கடந்த வருட சாம்பியன்), இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் லீக் போட்டிகளிலேயே தோல்வியுற்று மைதா னத்தை விட்டு வெளி யேறின. காலிறுதிப் போட்டியில் பரிதாப மாகத் தோற்றுப்போனது பிரேசிலும் அர்ஜென்டினாவும். அதேபோல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனியோ அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் மண்ணைக் கவ்வியது. ஆனால், மூன்றாம் இடத்துக்கு நடத்தப்பட்ட போட்டியில் மிகக்கடுமையாக உருகுவேயிடம் போராடி வெற்றிபெற்று ஆறுதலை அடைந்தது ஜெர்மனி.

இப்படி... உலக ஜாம்பவான் நாடுகள் தோல்வி யடைந்தது ஒருபுறம் இருக்க... இந்தமுறை அதிக கோல்களை விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர் களான இங்கிலாந்து ரூணி, பிரேசில் ககா, அர்ஜென்டினா மெஸ்ஸி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ, ரொ னால்டோ உள்ளிட்டோர் ரசிகர்களை ஏமாற்றினர்.





ஒன்றரை லட்சம் ரசிகர்கள் திரண்டிருந்த சாக்கர்சிட்டி மைதானத்தில் மிக உற்சாகமாகத் துவங்கியது இறுதிப்போட்டி. இந்தப் போட்டியை தொலைக்காட்சிகள் மூலம் உலக அளவில் 100 கோடி பேர் ரசித்தனர். போட்டி துவங்குவதற்கு முன்பு தென் ஆப்பிரிக்க நாட்டின் பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பிரபல பாப் பாடகி சாகிரா, தனது கவர்ச்சிக் குரலில் பாட்டுப்பாடி நடனமாடி விழாவை கோலாகல மாக்கினார்.

கால்பந்து விளையாட ஆரம்பித்து 76 ஆண்டுகள் ஆகி முதன்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஸ்பெயின், மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த நெதர்லாந்தை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் துவக்கத்திலிருந்தே இரு நாடுகளும் தங்களது ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தின. நெதர்லாந்து வெஸ்ஸி, மார்க்வான், ராபென் அர்ஜென், ஸ்பெயினின் கார்லஸ் புயோல், டேவிட்வில்லா ஆகிய முன்னணி வீரர்கள் தங்களின் ஆக்ரோ ஷத்தை ஒவ்வொரு "கிக்'கிலும் காட்டினர். ஆனால் அதைவிட ஆக்ரோஷமாக பந்தை தடுத்து எதிர்முனைக்குக் கடத்திச் சென்றது எதிர் அணி.

இப்படி இரு அணிகளும் தங்களின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டத்தின் முதல் பாதியில் யாருமே கோல் அடிக்க முடியவில்லை. முதல் கோலை அடிக்க 3 முறை வாய்ப்பு கிடைத்தும் அதனை தவறவிட்டது ஸ்பெயின்.

முதல் பாதியில் நிகழ்ந்த அதே ஆக்ரோ ஷத்தை இரண்டாம் பாதியிலும் இரு அணி வீரர்களும் வெளிப்படுத்தினர். ஆனாலும் இரண்டாவது கூடுதல் நேரம் முடிய மூன்று நிமிடம் இருக்கும் போது ஒரு கோல் அடித்து கோப்பையை கைப்பற்றி சாம்பியன் ஆனது ஸ்பெயின். இதனைத் தொடர்ந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், உற்சாகம் என களை கட்டியது சாக்கர் சிட்டி மைதானம்.

ஒருமாத காலம் நடந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் பல்வேறு சுவாரஸ்யங் களும் த்ர்லிங்குகளும் நடக்க, எந்த நாடு வெற்றி பெறும் என முன்கூட்டியே கணித்த ஆக்டோபஸ் என்கிற கடல்வாழ் உயிரினம்தான் சுவாரஸ்யத் தின் உச்சம். ஆக்டோபஸை போல, சிங்கப்பூர் கிளி ஒன்றும் போட்டிகளின் முடிவுகளை கணித்தது. இறுதிப் போட்டியில் ஸ்பெயினும், நெதர்லாந்தும் மோத... ஸ்பெயின்தான் ஜெயிக்கும் என்று ஆக்டோபஸும் நெதர்லாந்த் தான் ஜெயிக்குமென்று கிளியும் ஆருடம் சொல்லின. இதனால் ஆக்டோபஸா? கிளியா? யாரின் கணிப்பு வெற்றி பெறும்? என ரசிகர்களிடையே பந்தயம் வேறு நடந்தது.

ஆக்டோபஸின் கணிப்புகள் அப்படியே நடந்துள்ள நிலையில் ஆக்டோபஸின் குணா திசயங்கள் குறித்து மத்திய கடல் மற்றும் மீன்வள ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் முதுநிலை மற்றும் பொறுப்பு விஞ்ஞானியும் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளருமான முனைவர் முகமத் காசிமிடம் கேட்டபோது... ""எலும்புகளே இல்லாத உயிரினம் ஆக்டோபஸ். தண்ணீரிலும் தண்ணீரை விட்டு வெளியிலும் சுவாசித்து வாழ ஆக் டோபஸினால் முடியும். இதன் உணவு என்று பார்த்தால் சின்னச் சின்ன மத்தி மீன்கள், ஆழி மீன்கள், நண்டுகள், கிளிஞ்சல்கள்தான். கடல்வாழ் உயிரினங்களிலேயே மிகவும் ஐ-க்யூ கொண்டதாக ஆக்டோ பஸ் இருக்கிறது.

சென்ஸிட்டிவ்வான தசைகள் மூலம் தனக்கான உணவுகள் எங்கு, எந்த நேரத்தில் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் ஆற்றல் ஆக்டோபஸிற்கு உண்டு.

புத்தி கூர்மையுள்ள இந்த ஆக்டோபஸிற்கு பயிற்சி கொடுத்தோ மேயானால் அதன் புத்திசாலித்தனத்தை வெளிக்கொண்டு வர முடியும். அதுதான் உலக கால்பந்து விளையாட்டிலும் நடந்துள்ளது. அதற்கேற்ப ஆக்டோபஸ் கணிப்பு சரியாக இருக்கவும் சுவாரஸ்யம் மேலும் அதிகமாகி விட்டது. ஆக்டோபஸ் புத்திசாலியான சென் ஸிட்டிவ்வான கடல் வாழ் உயிரினம்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அது தீர்க்கதரிசி அல்ல. காகா உட்கார பனம்பழம் விழுந்த மாதிரிதான் ஆக்டோபஸ் உட்கார வெற்றி நிகழ்ந்திருக்கிறது. போட்டியில் கலந்துகொள்ளும் 2 நாடுகளின் பெட்டிகளோடு கலந்துகொள்ளாத மற்ற நாடுகளின் பெட்டிகளையும் வைத்து வெற்றியைத் தீர்மானி என்று ஆக்டோபஸிற்கு உத்தர விட்டிருந்தால்... அப்போது தெரிந்திருக்கும் ஆக்டோபஸின் ஆற்றல். அப்படி சோதித்துப் பார்க்காத நிலையில், ஆக்டோபஸ் கணிப்பை ஒரு சுவாரஸ்யமாக பார்ப்பதே போதுமானது'' என்று சுட்டிக் காட்டுகிறார்.

No comments:

Post a Comment