Sunday, July 4, 2010

பள்ளித் தோழியை மணந்தார் டோணி


shockan.blogspot.com

டேராடூன் : இந்திய கிரிக்கெட் அணியின்கேப்டன் டோணிக்கும், அவரது பள்ளித் தோழி சாக்ஷி சிங் ராவத்துக்கும் நேற்று இரவு விமரிசையாக திருமணம் நடந்தேறியகது.

இதில் குடும்பத்தினர், உறவினர்கள், மிக நெருங்கிய நண்பர்கள், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சிலர் என கொஞ்சம் பேரே கலந்து கொண்டனர்.

டேராடூனிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஸ்ராந்தி ரிசார்ட்ஸில் திருமணம் நடந்தது. மொத்தமே 60 பேர் வரை கலந்து கொண்டதாக தெரிகிறது.

கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், ஆசிஷ்நெஹ்ரா, ஆர்.பி.சிங், சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், பிசிசிஐ செயலாளருமான சீனிவாசனும் கலந்து கொண்டார்.

சினிமா நடிகர் ஜான் ஆப்ரகாம், இயக்குநர் பாரா கான் ஆகியோரும் வந்திருந்தனர்.

கருப்பு நிற ஷெர்வானியில் டோணியும், சுடிதார் பைஜாமாவில் மணப்பெண்ணும் இருந்தனர். இரவு 8 மணிக்கு கல்யாண நிகச்சிகள் தொடங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

அலங்கரிக்கப்பட்ட குதிரையில் அமர்ந்த டோணி தனது இடத்திலிருந்து மணமகள் தங்கியிருந்த இடத்திற்கு கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் பயணம் செய்து சென்றார்.

திருமணத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீடியாக்காரர்கள் அனுமதிக்கப்படவில்லை.

டோணிக்கு வருகிற 7ம் தேதி 29வது பிறந்த நாளாகும். அன்று மும்பையி்ல் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாக்ஷி உ.பி. மாநிலம் ஒளரங்கபாத்தைச் சேர்ந்தவர். ராஞ்சியில் அவருடைய தந்தை பணியாற்றியபோது டோணி குடும்பத்தினருடன் நட்பு ஏற்பட்டது. டோணியும், சாக்ஷியும், ராஞ்சியில் உள்ள டிஏவி பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment