Sunday, July 25, 2010

பொய் வழக்கு போட்ட தேவாரத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்!


""ஹலோ தலைவரே... .... ஆன்மீகப் போர்வையில் அனைத்தை யும் செய்து அம்பலப்பட்டுப் போன நித்யானந்தா, தன்னோட இமேஜை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக ஏதேதோ ப்ளான் போடுறாரு.''

""உடைஞ்ச மண்பானையை ஒட்ட வைக்க முடியுமாப்பா?''

""ஹீலிங் பவர்னு சொல்லி பலரை வசியம் பண்ணிய சாமியாச்சே... அதனால புதுப்புது டெக்னிக்கெல்லாம் கடைப்பிடிக்கப் படுது. பக்தர்களை வைத்து பாதயாத்திரை நடத்தும் முயற்சிக்கு சரியா வரவேற்பில்லை. அதனால அரசியல்கட்சிகள் ஊர்வலத்துக்கு ஆள் திரட்டுற மாதிரி, வரும் ஞாயிற்றுக்கிழமை குரு பூர்ணிமான்னும் அதற்காக வாகனவசதி, சாப்பாடு, தண்ணீர் வசதியோடு பிடதி ஆசிர மத்துக்கு ஆட்களை வரவழைக்கும் ஏற்பாடுகள் நடந்தது. பழைய பக்தர்கள் பலரும், நாங்க வந்தா பொதுமக்கள் அடிப்பாங்க... வரமாட்டோம்னு மறுத்தாங்களாம். அவங்களுக் கெல்லாம் ஆசிரமத் தரப்பிலிருந்து, குரு பூர்ணிமாவுக்கு வரலைன்னா உடல்ரீதியான பாதிப்பு வரும்னு மிரட்டல்கள் போயிருக்கு.''

""மிரட்டியாவது பழைய இமேஜை க்ரி யேட் பண்ணணும்னு நித்யானந்தா நினைக் கிறார் போலும்.''
""தஞ்சை-திருவாரூர் மாவட்ட உ.பிக்கள் அவங்க ஏரியாவில் அ.தி.மு.க க்ளீன்போல்டுங் கிற இமேஜை உருவாக்கணும்ங்கிற நோக்கத்தில் செயல்பட்டுக்கிட்டிருக்காங்க. ரொம்ப வருடத்துக்கப்புறம் கலைஞர் தன்னோட சொந்த ஊரான திருவாரூருக்கு ரயிலில் போகப் போறாரு. ஜூலை 27-ந் தேதி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி திறப்புவிழா, தஞ்சாவூரில் கலைஞர் அரங்கம் திறப்புவிழா இதிலெல்லாம் கலந்துகொள்ளப்போகும் அவருக்கு சிறப்பான வரவேற்பு தருவதற்கான ஏற்பாடுகள் நடந்துக் கிட்டிருக்குது. அதற்கு முதல்நாள், மன்னார்குடி யில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாஜி மந்திரி அழகு.திருநாவுக்கரசு, முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன் இவங்களெல்லாம் தி.மு.கவில் இணையும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு ஆகியிருக் குது.''

""சசிகலா ஊரிலேயே அ.தி.மு.க மாஜிக்களை இழுக்கும் விழாவா?''

""தி.மு.க.வில் ஐக்கியமாகப்போகும் அழகு.திருநாவுக்கரசும் அவரோட ஆட்களும் மன்னார்குடி பகுதியில் வீடுவீடாகப் போய், தேர்தலுக்கு ஓட்டு கேட்பதுபோல.. தி.மு.கதான் நல்ல கட்சி... அதிலே சேரலாம் வாங்கன்னு ஆதரவாளர்களைத் திரட்டிக்கிட்டிருக்காங்க. இவங்களோடு கம்யூ னிஸ்ட் பிரமுகர்கள் சிலரையும் பார்க்க முடியுது. அதோடு, இந்த வட்டாரத்தில் உள்ள சிட்டிங் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒன்றிரண்டு பேர்கூட , ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் சேரலாம்ங் கிற எதிர்பார்ப்பு இருக்குது. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே தி.மு.க. தலைமைகிட்டே பேசியிருந்தாங்க. ஆனா, இதை மாவட்ட நிர்வாகத் தில் உள்ள ஆட்கள் விரும்பாம, நீங்க எப்படி நேரடியா பேசலாம்னு சத்தம்போட்டதால இணைப்பு தள்ளிப்போனது. இப்ப மறுபடியும் பேச்சுவார்த்தை ஆரம்பிச்சி சுமூகமா போய்க் கிட்டிருப்பதால், பேச்சு முடிந்ததும் இணைப்பு தான்னு எதிர்பார்க்கப்படுது.''

""இணைப்பு விஷயம் பற்றி சொன்னே... நான் நீக்கம் விஷயம் பற்றி கேட்கிறேன்.. ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்காரே?''

""தலித் கிறிஸ்தவரான அவர், இந்து தாழ்த்தப்பட்டவர்னு சர்டிபிகேட் கொடுத்து பணியில் சேர்ந்ததாகச் சொல்லி சஸ்பெண்ட் செய்திருக்குது அரசாங்கம். ஏற்கனவே தன் மீதான நெருக்கடிகளுக்காக கோர்ட்டுக்குப் போன உமாசங்கர், அரசு கேபிள் கார்ப்பரேஷன் பொறுப்பில் இருந்தபோது சுமங்கலி கேபிள் விஷனை அரசுடைமையாக்க முயற்சி எடுத்தேன் னும், அதற்கு எதிரா அந்த நிறுவனமும் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும் இடையூறு செய்ததாகவும், அதனால எஸ்.சி.வி நிர்வாகத்தையும் அமைச்சரையும் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும், அதனால தன் மீது சொத்துக் குவிப்பு வழக்கைப் போடவைத்ததோடு, சான்றிதழ் சம்பந்தமான பிரச்சினையையும் கிளப்புவதா கோர்ட்டில் சொல்லியிருந்தார். இப்ப அந்த சர்டிபிகேட் விவகாரத்தில்தான் அவரை சஸ்பெண்ட் பண்ணி யிருக்காங்க.''

""சர்ட்டிபிகேட் பற்றி சட்டம் என்ன சொல்லுது?''

""1964-ல் பிறந்த உமாசங்கர் 1984-ல் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள செங்கோல் மடம்ங்கிற இடத்தில் கிறிஸ்துவரா இருந்து இந்து மதத்திற்கு மாறிட்டார். அதற்கான சான்றிதழை மத்திய தேர்வாணைய மான யு.பி.எஸ்.சி. மூலம் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். ஆன போது கொடுத்திருக்கிறார். சட்டம் என்ன சொல்லுதுன்னா, இந்துவா இருந்த ஒருத்தர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி, பிறகு மறுபடியும் இந்துவா மாறினா அவரோட உறவினர் அஃபிட விட்டும் அரசாங்க நோட்டிஃபி கேஷனும் கொடுத்தால் அவர் இந்துவா ஏற்றுக்கொள்ளப் படுவார். ஆனா, கிறிஸ்துவரா பிறந்தவர் இந்துவா கன்வர்ட் ஆவதை சட்டம் அங்கீகாரம் பண்ணலை. உமாசங்கர் இப்படித் தான் கன்வர்ட் ஆகியிருக்கிறார். பேங்க்கில் வேலை பார்த்தபோது இந்து தாழ்த்தப்பட்டவர் என்ற சலுகையை அவர் பெறலை. ஐ.ஏ.எஸ். ஆகும்போது மட்டும் அதைப் பயன்படுத்தியது சட்டப்படி தப்புன்னு அரசுத் தரப்பு சொல்லுது.''

""இன்னொரு நடவடிக்கை பலரையும் சந்தோஷப்பட வச்சிருக் குங்க தலைவரே... முன்னாள் டி.ஜி.பி. தேவாரத்தின் தங்கை முறை உறவான ஜெசி நிர்மலாவுக்கும் டாக்டர் ராஜன் என்பவருக்கும் கல்யாணமாகி, கருத்து வேற்றுமையால் பிரிஞ்சிட்டாங்க. அந்த கோபத்தில் ஜெசி நிர்மலாவின் சகோதரர்கள் ஜெயசந்திர ஜோசப்பும், ஜாபர் ஜோசப்பும் டாக்டர் ராஜன் காரை ஏற்றி கொல்ல முயற்சித்ததாக பொய்ப்புகார் கொடுக்க, தேவாரத்தின் அதிகாரத்தால் ராஜன் மேலே வழக்கு போடப்பட்டது. 1995லேயே இந்த வழக்கு பொய்யான வழக்குன்னு தீர்ப்பாயிடிச்சி. அதிகாரத்தைத் தவறா பயன்படுத்தி தன்னை பழிவாங்க முயற்சித்த தேவாரம் மேலே நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனாதிபதி வரை டாக்டர் ராஜன் மனு கொடுத்தும் அப்ப எந்த நட வடிக்கையும் இல்லை. அதற்கப் புறம்தான் 97-ல் தேவாரம் மேலே மான நஷ்ட வழக்கு போட்டு 5 லட்ச ரூபாய் கோரினார் டாக்டர் ராஜன்.''

""வழக்கு என்னாச்சு?''

""13 வருசமா வழக்கு இழுத் தடிக்கப்பட்டது. இந்த நிலை மையில்தான், நாகர்கோவில் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் , 13 வருசமா ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதை எடுத்து விசாரித்தார். தேவாரம் தரப்பு கோர்ட்டுக்கே வராமல் புறக்கணித்ததை அறிந்ததுடன், அவர்கள் தரப்பில் சரியான ஆதாரமும் இல்லைன்னு விசாரணையில் தெரியவர, டாக்டர் ராஜனுக்கு 13 வருசத்துக்கான வட்டியோடு 5 லட்ச ரூபாயை தேவாரமும் ஜெசிநிர்மலாவின் சகோதரர்களும் கூட்டாகவோ தனித் தனியாகவோ தரணும்னு போன 21-ந் தேதியன்னைக்குத் தீர்ப்பளித்தார்..''

""மாஜி போலீஸ் அதிகாரியின் அதிகார போதைக்கு சவுக்கடி கொடுத்த இந்த தீர்ப்பு நிச்சயமா வரவேற்கப் படவேண்டிய தீர்ப்புதாம்ப்பா..''

""தலைவரே... கோர்ட் உத்தரவிட்டாலும் காவல் துறையில் உள்ள சிலர் திருந்துவதா தெரியலை. சீட்டிங் குற்றச்சாட்டுக்குள்ளான சுதந்திரசீலன் என்பவரை சென்னை சி.சி.பி. போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. கஸ்டடியில் எடுக்கப்பட்டவரிடம் விசாரணை நடத்த வேண்டிய சி.சி.பி. போலீசார், அவர் மேலே வழக்கு போட்டவரையும் அழைத்து கட்டபஞ்சாயத்து நடத்தி, குற்றஞ்சாட்டப் பட்டவரிடமிருந்து 3 கோடியே 50 லட்ச ரூபாயை டிமாண்ட் டிராப்ட்டாக வாங்கிக் கொடுத் திருக்காங்க. அதோடு, குற்றம்சாட்டப் பட்டவரின் ஜாமீன் பெட்டிஷனுக்கும் சி.சி.பியின் விசாரணை அதிகாரி அப்ஜெக் ஷனும் தெரிவிக்கலை. இதையெல்லாம் சைதாப் பேட்டை மெட்ரோ பாலிடன் மாஜிஸ்திரேட் தன்னோட ஆர்டரில் பதிவுசெய்தே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு பெயில் கொடுத்திருக் கிறார். இதற்குப்பிறகாவது சி.சி.பி. தன்னை மாற்றிக்கொண்டால் நல்லதுன்னு சக காக்கிகளே சொல்றாங்க..''

""நான் கேட்கப்போறதும் காக்கிகள் சம்பந்தப்பட்ட செய்திதான்.. தினபூமி ஆசிரியர் மணிமாறனை ராத்திரி நேரத்தில் போலீசார் கைது செய்ததையடுத்து, பத்திரிகை அமைப்பு கள் கடும் கண்டனத்தை வெளியிட, முதல்வர் உத்தரவின் பேரில் பத்திரிகை ஆசிரியர் விடுவிக்கப் பட்டிருக்கிறாரே, என்ன பின்னணி?.''

""லாட்டரி அதிபர் கே.ஏ.எஸ். சேகரின் தம்பிதான் மணிமாறன். மதுரை ஏரியாவில் நடைபெறும் குவாரி கொள்ளைகளைத் தொடர்ந்து வெளியிட்டதால், ஆளுங்கட்சி மற்றும் போலீஸ் சப்போர்ட்டுடன் குவாரி சக்கரவர்த்திகள் இந்த கைது படலத்தின் பின்னணியில் இருந்ததா பத்திரிகை வட்டாரம் சொல்லுது. குவாரி வட்டாரத்திலும் விசாரித்தேன்..''

""அவங்க என்ன சொல்றாங்க?.''

""மதுரை மேலூர் பக்கத்திலே சித்தம் பட்டிங்கிற இடத்தில், தினபூமி பத்திரிகை யாளர்களின் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி சார்பில் அதிர்ஷ்டம் வீடுகள்னு மனைப்பட்டா போடப்பட்டி ருக்குது. பிரபல குவாரி அதிபரான பி.ஆர்.பி.ங்கிற பி.ஆர்.பழனிச்சாமிக்கு இந்தப் பகுதியில் 5 கோடி மதிப்பிலான ஃபேக்டரி இருக்குது. அதோடு, அதிர்ஷ்டம் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ளாட் போட்டிருக்கிற இடத்தைச் சுற்றி 400 ஏக்கர் நிலத்தையும் பி.ஆர்.பி தரப்பு வாங்கி, வெடி வைத்து குவாரி தொழிலைப் பார்த்துக்கிட்டிருக்குதாம். இதனால, அந்த ப்ளாட்டுகளை அதிர்ஷ்டம் கன்ஸ்ட்ரக்ஷனால் விற்க முடியலை. இதையடுத்துதான், 1300 கோடி ரூபாய் குவாரி ஊழல்னு பத்திரிகையில் தொடர்ச் சியா செய்தி வெளியிட்டதா குவாரி வட்டாரம் சொல்லுது..''

""ம்....''

""இந்த விவகாரம் தொடர்பா குவாரி அதிபர்கள் சங்கம் சார்பில் நடந்த பிரஸ்மீட்டில் பி.ஆர்.பி. பேசினார். தினபூமி பத்திரிகை தரப்பிலிருந்து தங்களை மிரட்டுவதாகவும், பத்திரிகை ஆசிரியர் மிரட்டலைன்னும் அவர் சார்பில் சிலர் மிரட்டுறாங்கன்னும் சொல்லி யிருந்தார். ஆனா, போலீசோ பத்திரிகை ஆசிரியரே குவாரி அதிபரை மிரட்டியதா எஃப்.ஐ.ஆர். போட்டு நைட்டோடு நைட்டா அவர் உள்பட 3 பேரை அரெஸ்ட் செய்துட்டாங்க. இதைக் கண்டித்துதான் பத்திரிகை அமைப்பு கள் ஓங்கி குரல் கொடுத்தது.வியாழக்கிழமை காலையில்தான் முதல்வரின் கவனத்துக்கு இந்த விஷயம் தெரியவந்திருக்குது. மிரட்டல் புகார்னா வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டியதுதானே, எதற்காக கைது நடவடிக்கைன்னு போலீஸ் அதிகாரி களுக்கு டோஸ் விட்ட கலைஞர், பத்திரிகை ஆசிரியரை உடனே விடுதலை செய்யச் சொன்னதையடுத்து, வியாழக்கிழமை காலை யில் பத்திரிகை ஆசிரியர் மணிமாறன் விடுதலையானார்..''

""முதல்வரின் கவனத்துக்குப் போக வேண்டிய ஒரு விஷயத்தை சிவாஜி ரசிகர்கள் மனக்குமுறலோடு சொல்லிக்கிட்டிருக்காங்க. நடிகர் திலகம் சிவாஜியின் 9-வது நினைவுநாள் கடந்த 21-ந் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. அவர் இறந்து இத்தனை ஆண்டுகளாகியும் மணிமண்டபம் கட்டப்படலை. சத்யா ஸ்டுடி யோவுக்கு எதிரே மணிமண்டபம் கட்டுவதற் காக நடிகர் சங்கத்துக்கு ஜெ அரசு இடம் ஒதுக்கி அரசாணை போட்டது. அது பொ.ப.து இடம். அதை நடிகர் சங்கத்திற்கு மாற்றித் தரணும்னு சென்னை கலெக்டருக்கு பொ.ப.துவும் எழுதிடிச்சி. ஆனா, ஜெ ஆட்சி முடிகிற வரைக்கும் நடவடிக்கை எடுக்கலை. பல எதிர்ப்புகளையும் மீறி கடற்கரையில் சிவாஜிக்கு சிலை திறந்த கலைஞர் ஆட்சி யிலாவது மணிமண்டப பணிகள் நடக்கும்னு எதிர்பார்க்கப்பட்டது. இதுவரை தொடங்க வேயில்லை..''

""நடிகர் திலகத்துக்காக நடிகர் சங்கம் என்ன செய்யுதாம்?.''

""அதை நான் சொல்றேன்... இடத்தை நடிகர் சங்கம் பெயரில் மாற்றி வாங்குவதற்கு நடிகர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. கேட்டால், மணிமண்டபம் கட்ட அந்த இடம் போதாது. இன்னும் பெரிதாக வேறு இடம் வேணும்னு சொல்றாங்க. ஆனா, மாற்று இடம்கேட்டு இதுவரை அரசுக்கு எந்த கடிதமும் அனுப்பலை. இதைச் சொல்லிக் குமுறும் சிவாஜியின் ரசிகர்கள், தன் நண்பருக்காக கலைஞரே சிவாஜி மணிமண்டப விஷயத்தில் கவனம் செலுத்தணும்னு கோரிக்கை வைக்கிறாங்க..''

No comments:

Post a Comment