Wednesday, July 28, 2010

டாஸ்மாக் ஸ்டிரைக்!


ஆண்டுக்கு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் வருமா னத்தை தமிழக அரசுக்கு தந்து கொண்டிருக்கிறது டாஸ்மாக். அரசின் மொத்த நிதிச்சுமையில் பாதியளவுக்கு குறைப்பது டாஸ்மாக் வருமானம்தான்.

இந்த நிலையில் பணி நிரந்தரம், சம்பள உயர்வு, 8 மணி நேர வேலை, வார விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி... காலவரையறையின்றி டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவது என்கிற திட்டத்தை டாஸ்மாக் பணி யாளர்கள் கையில் எடுத்திருக்கும் விவகாரம், தமிழக அரசை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

இந்தத் திட்டத்திற்கு அ.தி.மு.க. தொழிற்சங்கப் பேரவை, சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி, பாட்டாளி தொழிற்சங்கம், விடுதலைச்சிறுத்தைகளின் தொழி லாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதால், மேலும் பரபரப்பாகியிருக்கிறது இந்த விவகாரம்.

ஆகஸ்ட் 11 முதல் நடத்தப்படவிருக்கும் இந்த தொடர் ஸ்டிரைக்கை எப்படி நடத்துவது என்பதற்கான ஆயத்த மாநாட்டை திருச்சியில் கடந்த 25-ந் தேதி நடத்தியது ஏ.ஐ.டி.யூ.சி-யின் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம். இந்த ஆயத்த மாநாட்டிற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகமாக வந்திருந்தனர். இதனால் கூட்டம் நடந்த ரோசன் மஹாலே திணறியது.

டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர், ""அரசு மதுபான கடைகளில் மேற்பார்வையாளராக, விற்பனையாளர்களாக, பார் உதவியாளர்களாக 34 ஆயிரம் பேர் இருக்கிறோம். ஆனால், நமக்கான அடிப்படை உரிமைகள் எதையும் இந்த அரசாங்கம் செய்து தர மறுக்கிறது. தொழிலாளர் நல சட்டங்களை மீறுகிறது அரசாங்கம். இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு எல்லா தொழிற்சங்கங்களும் நமக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால்... கடையடைப்புப் போராட் டம் நிச்சயம் வெற்றி பெறும்'' என்றார்.

ஏ.ஐ.டி.யூ.சி.யின் மாநில பொதுச்செயலாளர் தியாகராஜன், ""ஒரு நிறுவனம் தன்னுடைய லாபத்தில் 3-ல் ஒரு பகுதியை அதன் ஊழியர் களுக்குத் தரவேண்டும். அப்படிப் பார்த்தால் டாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் 16 ஆயிரம் கோடி. இதில் 3-ல் ஒரு பங்கு எனில் கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய் ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அரசாங்கம் அப்படித் தர மறுக்கிறது. நாம் ஒருநாள் கடையை இழுத்து மூடினால் டாஸ்மாக்கிற்கு 40 கோடி ரூபாய் நட்டம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். டாஸ் மாக்கைப் போல, வேறு எந்த நிறுவனமும் பெரிய அளவில் வருமானத்தை தந்ததில்லை. இந்த வரு மானத்தை வைத்துக்கொண்டுதான் உங்களால் இலவச திட்டங்களைக் கொடுக்க முடிகிறது. பணி யாளர்கள் கோரிக்கைகள் ஏற்கப்படா விட்டால், திட்டமிட்டபடி கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியே தீருவோம்'' என்றார் ஆவேசமாக.

பாட்டாளி தொழிற்சங்கத்தின் செயலாளர் ராமன், ""இதுவரை டாஸ்மாக் ஊழியர்கள் 2700 நாட்கள் வேலை செய்திருக்கிறார்கள். முறைப்படி இவர்களுக்கு சம்பளமாக 5.30 லட்சம் தந்திருக்க வேண்டும். ஆனால் 1.50 லட்சம் மட்டுமே தந்துள்ளனர்'' என்றார்.

அ.தி.மு.க. தொழிற்சங்க பேரவை தலைவர் பிச்சை, ""கட்டிங்கிற்கு காசு வாங்குவதாக எங்க ளுக்கு அபராதம் விதிக்கிறீர்களே... கட்டிங் விற்கச் சொல்றதே அதிகாரிகள்தானே. போலீஸ் முதல் ரவுடிகள் வரை எல்லாரும் மாமூல் வாங்கிட்டுப் போறாங்க. மறுத்தால் மிரட்டுறாங்க. இதற்கெல் லாம் பணத்துக்கு எங்கே போவது? அதுக்குத்தான் ஒரு ரூபா, ரெண்டு ரூபா சில்லரையைத் தர்ற தில்லை. இப்போ அதுலயும் மண்ணை வாரிப் போடுற மாதிரி... பாட்டில் விலையை ரவுண்ட் ஆக்கிட்டீங்க. இப்படி கொசுறு பணத்தையும் ரவுண்ட்டாக்கி அதன்மூலம் 400 கோடி ரூபாய் வருஷத்துக்கு லாபம் பார்க்கிறீங்க.. இந்த 400 கோடியை மட்டும் எங்களுக்கு ஒதுக்கினாலே... எங்க பிரச்சினையை தீர்த்துடலாமே?'' என்றார் ஆக்ரோஷமாக.

சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் சவுந்திர ராஜன், ""டாஸ்மாக் ஊழியர்களின் 16 மணி நேர பணியினை 12 மணி நேரமாக குறைக்கிறேன்னு சட்டமன்றத்திலே அறிவிக்கிறார் கலைஞர். இதற்கே நாம் கோர்ட்டில் வழக்குப் போடலாம். ஆகஸ்ட் மாசம் நீங்கள் ஸ்டிரைக் போராட் டத்தை நடத்துங்கள். செப்டம்பரில் நாங்கள் போக்கு வரத்துத் துறையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டு தயாராகிக்கொண்டிருக்கிறோம். முதலில் நிரந்தர சம்பளம் மாசம் 10 ஆயிரம் என அரசு அறிவிக் கும் பட்சத்தில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். இல்லை யேல் தொடர் கடையடைப்பு போராட்டம் நிறுத்தப் படமாட்டாது. நமது போராட்டம் மூலம் இந்த அரசை ஆட்டம் காண வைப்போம்'' என்றார் உரத்த குரல் எழுப்பி.

இப்படி ஆயத்த மாநாட்டில் எழுந்த ஆவேசங் களை அறிந்து, அடுத்தகட்ட ஆலோசனைகளை அதிகாரிகளிடம் நடத்திக்கொண்டிருக்கிறார் டாஸ்மாக் எம்.டி.சஞ்சய் சக்சேனா. டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது... ""டாஸ்மாக் பணியாளர் களின் தொடர் ஸ்டிரைக் அரசுக்கு தலைவலியைத்தான் கொடுக்கும். இந்த பிரச்சினையை எப்படி சால்வ் பண்ணுவதென்று டாஸ்மாக் உயரதிகாரிகளிடமும் நிதித்துறை அதிகாரிகளிடமும் விவாதித்திருக்கிறார் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி. "ஒருநாள் கடையை மூடினாலே 40, 50 கோடி ரூபாய் அரசுக்கு நட்டம் ஏற்படும்.

அதனால் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்பது பற்றி அரசுதான் முடிவெடுக்க வேண்டும்'னு தலைமைச் செயலாளரிடம் எங்க துறையின் உயரதிகாரிகள் சொல்லியிருக்காங்க. தொடர் ஸ்டிரைக் நடந்தால் எல்லா பணியாளர்களும் கலந்து கொள்வார்களா? எத்தனை பேர் போகமாட்டார்கள்? தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மட்டும் வேலைக்கு வந்தால் கடையை ரன்பண்ண முடியுமா? என்றெல்லாம் ரிப்போர்ட் அனுப்ப, மாவட்ட டாஸ்மாக் அதிகாரி களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆயத்த மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்? யார்? என்கிற விபரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறோம். அவர்களுக்கு தற்காலிக மெமோ கொடுத்துவிட்டு, அந்த இடத்தில் புதிய ஆட்களை நியமிப்பதன் மூலம் ஸ்டி ரைக்கை முறியடிக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது'' என்கின்றனர்.

No comments:

Post a Comment