Thursday, July 15, 2010

புலிகேசியான புண்ணாக்கு!


"ஆ...'ன்னு அலறிக்கிட்டே காட்றாரு. ரத்தம் பீச்சிக்கிட்டு வருது. அந்த வயித்தெரிச்சலான நேரத்துலயும் "டப்'புனு பஸ்ஸே அலர்ற மாதிரி சிரிச்சுப்புட்டேன்.

"ஆஸ்பத்திரிக்கி வாங்கய் யா'னு ரெண்டு பேரு அவர கைத்தாங்கலா எறக்குறாக.

"அடப்பாவி... என்னோட வேதன ஒனக்கு சிரிப்பா இருக்கா?'ங் கிற மாதிரி அந்தப் பெரியவரு என்னய ஒரு பார்வ பாத்தாரு.

எனக்கு சங்ங்ங்கட்டமா போயிருச்சு.

அந்த பெரியவருக்கு அங்கன வீக்கம். களவாணிப் பயபுள்ளைக... தெரியாம பிளேடப் போட்டு ஆபரேசன் பண்ணிப்புடுச்சுக.

இது ரொம்ப வகுத்தெரிச்ச லான சம்பவந்தான். சிரிச்சிருக்கக் கூடாதுதான்.

ஆனாலும் நான் பண்ற காமெடிகள்ல இப்புடிப்பட்ட வகுத்தெரிச்ச சிரிப்பு அனுபவங் களையும் சேத்துக்கிட்டேன். எதிரிக என்னய துவம்சம் பண்ணி அந்தல சிந்தல பண்ணீருவாய்ங்க. நான் வலியோட தவிப்பேன். மக்கள் மனசுவிட்டு சிரிப்பாக.

புயல் மாதிரி ஒரு விஷயம் நம்மள நோக்கி வரும். அது என்னா ஏதுன்னு தெருஞ்சுக்கிறதுக்கு முன் னாடியே நம்மள ஒரு வழி பண்ணீ ரும். "இப்ப என்னடா நடந்துச்சு?'னு யோசிக்கிறதுக்கு முன்னாடியே எல்லாம் நடந்து முடிஞ்சிரும். இந்த டைப்ல நான் நெறயா ஸீனு பண்ணீட்டேன். இதுவும் மதுரயில எனக்கு கெடச்ச அனுபவந்தான்.

அப்ப ஒதுக்குப் புறமா சாராயக்கட இருந்திச்சு. வௌôடுறதுக்கு நாங்க அந்த ஏரியாவ தாண்டித்தான் போவம்.

அன்னக்கி காலேல.... சால்னா கடக்காரரு வந்து அப்பத்தான் கடய தொறந்தாரு. வீட்லருந்து அவுச்சுக் கொண்டாந்திருந்த சுண்டல தாம்பாளத் துல கொட்டி பலகா மேல தூக்கி வச்சாரு. ரெண்டு பத்திக்குச்சிய எடுத்து கொளுத்தி சுண்டல் தட்டுக்கு மூணு சுத்து சுத்துனாரு.

‘"லொள்ளு'னு ஒரு சத்தம்.

கல்லாவ இழுத்து அதுக்கு பத்திக்குச்சியால சுத்தப் போனாரு.

"லொள்..லொள்லொள்'னு மறுபடி சத்தம்.

திரும்பிப்பாத்தாரு. தாவாங்கட்டய சொரிஞ் சுக்கிட்டே ‘"அடச்சீ நாயே'ங்கிற மாதிரி தெனா வெட்டா பாத்துப்புட்டு கல்லாவுக்கு பத்திக்குச்சிய சுத்திக்காமிச்சிட்டு பலகாவுல இருந்த இடுக்குல பத்திக்குச்சிய சொருகுனாரு. சேர்ல ஒக்காந்த மனுஷன் அப்புடியே கண்ணமூடி "மொய்ங் மொய்ங்'னு எதோ வாய்க்குள்ள மொனகுனாரு.

என்னத்த மொனகீருப்பாரு. "கடவுளே... எல்லா தீனிப்பண்டமும் வித்து நல்லா நெறயணும் கல்லா'னு ஆசாமியத் தவர எல்லாச் சாமியயும் கும்புட்ருப்பாரு.

அவரு கண்ணமூடி உருகிக்கிட்டிருக்க...

"வவ்வவ்வவ்... லொள்லொள்லொள்... கர்ரு...புர்ரு...உர்ரு'னு சும்மா சவுண்ட் எபெக்ட்டு ஜாஸ்தியாகுது.

என்னா நடக்குதுன்னே தெரியாம ஏரியாவ புழுதி மூடீருச்சு.

‘"நச்சுநச்சு'னு தும்மிக்கிட்டே ரெண்டுகைலயும் புழுதிய வெலக்கிக்கிட்டு நாங்க பாக்குறோம்.

ஏரியாக்குள்ள புதுசா வந்த லேடி டாக்க யார் டீல் பண்றதுங்கிற மேட்டர்ல லோக்கல் ஆம்பள நாய்களுக்குள்ள போட்டி. இந்த மேட்டர்ல அடுத்த ஏரியா ஆம்பள நாய் ஒண்ணும் வந்திருச்சு. இந்த எல்லப் பிரச்சனயில நடந்த களேபரம்தான் அது. புழுதி அடங்குனப் பின்னாடி பாத்தா... லேடி எஸ்கேப்பு. ஒருத்தனுக்கும் கெடைக்காமப் போச்சேனு தொங்கிப்போன மொகத்தோட வருசயா வாராய்ங்க ஏரியா நாய்ங்க.

அதுகள பாத்து கண்ல தண்ணி வர சிரிச்சுப்புட்டு... "சரி வாங்கடா போலாம்'னு திரும்புனா.... சால்னா கடக் காரரு ஒறஞ்சு போயி ஒக்காந்துருக்காரு. தட்டு நெறய்யா மல போல மகராசன் சுண்டல குவுச்சு வச்சிருந்தாரு. நிமிஷத்துல அதக் காணாம். பலகா மேல நாலு சுண்டலு... கல்லாக்குள்ள கைப்புடி சுண்டலு விழுந்து கெடக்கு. தட்டு தரயில கெடக்கு. எங்களுக்குன்னா வயிறு வலிச்சுப் போச்சு சிரிப்புல. ஒரு வழியா சிரிப்ப அடக்கிக்கிட்டு கிட்டக்க போனம்.

"எண்ணேங்...'

"என்னாடா ணொண்ணேங்...'னு எந்திரிச்சாரு. கண்ணெல்லாம் கலங்கிப் போயி இருந்துச்சு அவருக்கு.

"ஆஹா... இதுக்குமேல இங்ஙன இருக்க வேணாம்'னு கௌம்புனோம்.

ஒரு வழியா என்ன நடந்துச்சுனு யூகிச்சவரு "வக்கால்லி'னு ஆரம்புச்சு பேசுனாரு பாருங்க பேச்சு. கொஞ்சநஞ்ச மாவா பேசுனாருங்கிறீக. ஆம்பள நாயி, பொம்பள நாயி, அந்த நாயப் பெத்த நாயி, நாய வளத்தவிங்கனு போய் அந்தத் தெருவுல குடியிருக்கவங்க, இந்தத் தெரு வுல குடியிருக்கவங்கனு சகட்டு மேனிக்கி வஞ்சு தீத்தாரு.

"ஏண்டா வடிவேலு... தெருக்காரங் களையெல்லாம் ஏண்டா வையுறாரு?'னு கேட்டான் பிரெண்டு.

"கடய காலிபண்ணதுல வீட்டு நாய்க ரெண்டு மூனு இருந்துச்சு. வளத் தவய்ங்கள வஞ்சாரு. தெருநாயி தெருவு லயே வளருது. அதான் தெருக்காரவங் களயெல்லாம் திட்றாரு போல'னு நான் சொன்னேன். நான் குடிகாரனா சில படங்கள்ல நடிச்சிருந்தாலும் ‘"மாயி' படத்துல சாராயக்கடயில போயி லோலாயித்தனம் பண்ணுவேன்.

சால்னாகட கெழவி அப்பத்தேன் ஊதுபத்தி கொளுத்தி ஏவாரத்த நடத்தும். நான் போயி கெழவிகளோட பேத்திகள கையப்புடிச்சு இழுத்து வம்பு பண்ணி கடயில இருக்க பொருளயெல்லாம் அள்ளி எறிஞ்சிருவேன். கடசியில கோவை சரளா வந்து என்னய அட்டாக் பண்ணதும் அடுச்ச போதயெல்லாம் எறங்கி அப்பாவியா நிப்பேன். இந்த ஸீன எடுக்குறப்ப ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த எக்ஸ்பீரியன்ஸ சொல்லட்டா...

யப்பா... யப்பா... அதச் சொல்ற துக்கு முன்னாடி... மறந்தாலும் மறந்து போயிரும். அதனால ரயில்ல நான் பாத்த ஒரு போதை கிராக்கி மேட்ற சொல்லிப் புடுறேன்.

நான் நடிக்க வந்த ஆரம்ப காலங்கள்ல மதுரயிலருந்து ட்ரெயின் ஏறி தாம்பரத்துல எறங்கிருவேன். அங்கருந்து எலக்ட்ரிக் ரயில்ல கோடம்பாக்கம் வந்து எறங்கிருவேன். இப்புடி ஒரு தடவ எலக்ட்ரிக் ரயில்ல வரும்போது...

"எக்ஸ்கியூஸ் மீ' அப்டின்னு சொல்லிக்கிட்டு ஒருத்தரு ரயி லுக்குள்ள வந் தாரு. பாக்க பக்கா டீசண்டு. புல்கேண்ட புல்லா எறக்கிவுட்டு பேண்டுக்குள்ள சட்டயவுட்டு தொரகணக்கா வந்தாரு. செத்தநேரந்தேங் அந்த டீசண்டெல்லாம். சரக்க போட்டுட்டு ரயில்ல ஏறியிருக்காரு. இப்ப சரக்கு அவருக் குள்ள ஏறுது. அங்கிட்டும் இங்கிட்டும் பெனாத்துறாரு.

ரெண்டு மூணு ஸ்டேஷன் தாண்டீருச்சு.

ட்ரெயினுக்குள்ள ஒக்காந்திருந்தவுக நாலஞ்சிபேரு அடுத்த ஸ்டேஷன்ல எறங்கணு மேன்னு எந்திரிச்சி முன்னாடி வாராக. நின் னுக்கிட்டிருந்த நாலஞ்சிபேரு அந்த சீட்ட புடிக்க குறுக்கப் போறாக. ஓடுற ரயிலுக்குள்ள இப்புடி பரபரப்பா அங்கிட்டும் இங்கிட்டும் போயிட்டிருக்கவும் போத ஆசாமிக்கி ஸ்டே ஷன் வந்திடுச்சின்னு ஷாக்காயிருச்சுபோல.

அந்த மனுசன் என்னா செஞ்சாரு தெரியுமா?

"வெண்ணெய்ங்க ஸ்டேஷன் வந்தா சொல்லமாட்டாய்ங்க'ன்னு சொல்லிக்கிட்டே ஓடுற ரயில்ல இருந்து எறங்கிட்டாரு. "அய்யய் யோ...'ன்னு ஒரு சத்தம்.

என்ன பண்ணமுடியும்? அடுத்த ஸ்டேஷன்ல ரயில் நின்னதும் "சார்... சார்.. இந்த மாதிரிக்கு இந்த மாதிரி... இப்படி ஆயிப்போச்சு'ன்னு வெவரத்தச் சொல்லிட்டு வந்தோம்.

இப்புடி என் வாழ்க்கையில நெறையா குடிகாரர்களப் பாத்திருக் கேன். போத ஒண்ணுதான்னாலும் ஒவ் வொரு மனுசனும் செய்ற அலம்பலு ஒவ்வொரு விதமாத்தான் இருக்கும்.

இப்படி கண்ல காங்கிற போத கிராக்கிகட்டருந்து நெறைய விசயங் கள எடுத்திருக்கேன்.

"மாயி' படத்துல வர்ற சாராயக் கட சலம்பல சொல்லட்டா...

(சொல்லுவம்ல)

No comments:

Post a Comment