Sunday, July 18, 2010

கொலைகார டாக்டர்கள்!

கொலைகார டாக்டர்கள்!


போலி டாக்டர்களை அரசு ஒரு பக்கம் தீவிரமாகக் களையெடுத்துவரும் நிலையில்... இன்னொரு பக்கம் ஒரு சில அரசு டாக்டர்களை எதிர்த்து அங்கங்கே பொதுமக்கள் ஆவேசப் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக் கிறார்கள்.

சம்பவம்-1 :

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன் பொதுமக்கள் ஆவேசத்துடன் திரண்டிருக்க.. என்ன... ஏது என்று விசாரித்தோம். அப்போது கண்ணீரும் கம்பலையுமாகக் காட்சியளித்த சாந்தி ""நல்லா இருந்த என் வீட்டுக்காரர் ராமு... திடீர்னு ஜுரம் வர்றமாதிரி உடம்பு அனத்துதுன்னு சொன்னார். உடனே அவரை இங்க அழைச்சிக்கிட்டு வந்தேன். ரொம்ப அலட்சியமா எங்களைப் பார்த்த ஒரு நர்ஸ்... என் வீட்டுக்காரருக்கு ஒரு ஊசியைபோட்டு மூலையில் உட்காரவச்சிட்டுப் போனாங்க. கொஞ்ச நேரத்தில் அவருக்கு கைகால்கள் இழுக்க ஆரம்பிச்சிடிச்சி.. ஓடிப்போய் டாக்டர்களைத் தேடினா யாரும் இல்லை. அங்க இருந்த நர்ஸோ செல்போன்ல பேசறதிலேயே மும்முரமா இருந்தாங்க. அவங்களைக் கூப்பிட்டதுக்கு... "உன் புருஷந்தான் அதிசயமா? எல்லாரையும்தான் நாங்க பார்க்கணும். நல்ல டிரீட்மெண்ட் வேணும்னா பிரைவேட் ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டியதுதானே'ன்னு ரொம்ப அலட்சியமா சொன்னாங்க. அவங்க வந்து பாக்கறதுக்குள்ள என் வீட்டுக்காரரோட உயிர் போயிடுச்சிங்க''’என்றார் கதறலாய். அங்கிருந்த அவரது உறவினர்களும் பொதுமக்களும் “""அரசு மருத்துவமனை வியாபார ஸ்பாட்டா மாறிடிச்சி. காசு இருந்தாத்தான் மதிக்கிறாங்க. ஏழைகள்னா அவங்களுக்கு இளக்காரமா இருக்கு. அந்த நர்ஸோட அலட்சியத்தால்தான் ராமுவின் உயிர் போயிருக்கு. அதனால் அவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்''’என்றார்கள் காட்டமாய். மருத்துவமனை வட்டாரமோ துறை ரீதியான விசாரணை நடத்தப்பட இருக்கிறது என்கிறது.

சம்பவம்-2 :

தஞ்சைமாவட்டம் பெரப்படியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரின் 13 வயது மகள் பரணி 8-ஆம் வகுப்பு படித்து வந்தாள். அவளுக்கு தொண்டையில் கட்டி ஒன்று தோன்ற.. மகளை நாச்சியார்கோயி லில் இருக்கும் டாக்டர் அருள்மணியிடம் அழைத்துச்சென்றார். பிறகு? செல்வ ராஜே கண்ணீருடன் விவரிக்கிறார்...

""தொண்டையில் இருக்கும் கட்டியை ஆபரேசன் பண்ணி எடுத்துடலாம். அதுக்கு 20 ஆயிரம் ரூபா செலவாகும்னு டாக்டர் அருள்மணி சொன் னார். அவ்வளவு பணம் புரட்ட... வசதி இல்லைங்க, கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் பண்ணிக்கி றோம்னு சொன்னேன். அதுக்கு அவர்... "நீ கும்ப கோணம் ஜி.ஹெச்.சுக்குதானே வரணும். அங்கயும் நான்தான் ஆப ரேசன் பண்ணனும்'னு மிரட்ட லாச் சொன்னார் காசு இல்லாத குத்தத்துக்கு என்ன பண்றதுன்னு... கும்ப கோணம் ஜி.ஹெச்.சுக்கு எங்க பரணியைக் கூட்டிட்டுப்போனேன். அங்க இருந்த அருள் மணி டாக்டர்... ஆபரேசன் தியேட்டர் வாசல்ல வச்சி... "கடைசியாக் கேட்கறேன். ஒரு பத்தாயிரம் ரூபாயாவது கொடு. உன் பிள்ளையை குணமாக்கிடறேன்'னு சொன்னார். என் கிட்ட பணமில்லை சாமின்னு சொன்னேன். ரொம்பக் கோபமா ஆப ரேசன் தியேட்டருக்குள்ளே போன டாக்டர்... அடுத்த பத்தாவது நிமிசம் என் பொண்ணைக் கொன்னுட்டார். கேட்டதுக்கு ஆபரேசன் பெயிலியர்னு சொல்றார். என் மகளைக் கொன்ன டாக் டரை கூண்டில் ஏற்றாமல் விடமாட்டேன்''’என்கிறார் கதறிய படியே. உறவினர்களோ கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள்.

சம்பவம்-3 :

புதுக்கோட்டை ஜி.ஹெச்.வாசலில் பரபரப்பான பரபரப்பு. ஒரு பெண்மணியின் சவத்தை வாசலில் கிடத்தியிருந்தனர். அது குறித்து நாம் விசாரித்தபோது... ""எங்க பெரியம்மா செல்லாயி... 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்த்துக்கிட்டு இருக்கும் போது மயக்கமா இருக்கும்னு சொன்னாங்க. இங்க கூட்டி வந்தோம். டாக்டர் ஒரு ஊசியப் போட்டுட்டு நீங்க போகலாம் னார். எங்க பெரியம்மாவோ... "எனக்கு உடம்பு சரியா இல்லை. ஒருநாள் பெட்ல இருக்கேன்'னு சொல்ல... "அதெல்லாம் வேணாம் நீங்க கிளம்புங்க'ன்னு டாக்டர் வலுக்கட்டாயமா எங்களைத் துரத்திவிட்டுட்டார். பஸ்ஸ்டாண்டுக்கு வந்ததும், மறுபடியும் மயக்கமா இருக்குன்னு எங்க பெரியம்மா சொல்ல.. மீண்டும் ஆட்டோ பிடிச்சி ஆஸ்பத்திரிக்கு வந்தோம். இங்க வந்தா டாக்டர் இல்லை. இங்க இருக்கும் நர்ஸ் டாக்டர்ட்ட போன்ல யோசனை கேட்டுட்டு ஒரு ஊசியைப் போட்டாங்க. அவ்வளவுதான் ரெண்டே நிமிசத்தில் எங்க பெரியம்மாவின் உயிர் போயிடுச் சிங்க''’என்றார் செல்லையா பெருகிவழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே.

இந்த அலட்சிய மர ணங்கள் குறித்து பேராசிரி யர் முரளிதரன் இப்படி சொல்கிறார் ""அரசு டாக் டர்கள் தனியா கிளினிக் வச்சுக்கிட்டு பெரும்பா லான நேரம் அங்கேயே இருக்காங்க. அவங்களுக்கு பதில் நர்ஸ்கள் டிரீட் மெண்ட் கொடுக்கறாங்க. இந்த நிலையால்தான் மரணங்கள் அதிகமாகுது. இன்னும் சில டாக்டர்கள் ஆஸ்பத்திரி பக்கமே தலைவச்சிப் படுக்குறதில்லை. என்னைக்காவது ஒரு நாள் போய் கையெழுத்து மட்டும் போட்டுட்டு வந்திடுவாங்க. நாகை மாவட்டம் வில்லிய நல்லூர், தஞ்சை மாவட்ட கீழக்காட்டூர், பந்தநல்லூர் போன்ற ஊர்களுக்குப் போய்ப் பாருங்க. அங்க இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் எல்லாம் எல்லா நேரத்திலும் பூட்டியே கிடக்கும். டாக்டர் களைக் கண்காணிச்சி... அவங் களை தனியார் மருத்துவமனை நடத்தறதைத் தடுத்தாதான் நிலைமை சீராகும். இல் லைன்னா... அலட்சிய மரணங் கள் தொடர் கதையாத்தான் இருக்கும்'' அவரது குரலில் கவலை வழிந்தது..

கொடுமைக்கார டாக் டர்களை சுகாதாரத்துறை கவனிக்குமா?

No comments:

Post a Comment