Wednesday, July 28, 2010

நள்ளிரவில் நடந்த நரபலி! - தமிழக ஷாக்!





காதலனைப் பழி வாங்க... அவரது மகனான சிறுவன் ஆதித்யாவைத் துடிக்கத் துடிக்கக் கொன்று.. தமிழகத்தையே திகிலில் உறையவைத்த பூவரசியின் விவகாரம் அடங்குவதற்குள்....

ஒன்றேகால் வயதுப் பிஞ்சுக் குழந்தையைக் கொடூரமாக நரபலி கொடுத்து எல்லோரையும் பதற வைத்திருக்கிறான் அயோக்கிய மந்திரவாதி அப்துல் கபூர்.

மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியைச்சேர்ந்த சிரின் பாத்திமா, தனது ஒன்றேகால் வயது மகன் யூசுப்பைக் காணவில்லை என மதுரை தல்லாகுளம் காக்கிகளிடம் புகார்கொடுத்துப் பதறினார். எப்படி குழந்தை காணாமல் போனது என நாம் அவரை விசாரித்தபோது...“""மூணு வருசத்துக்கு முன்ன எனக்குக் கல்யாணம் ஆச்சுங்க. நல்லபடியா போன எங்க வாழ்க்கைல மூணு மாசத்துக்கு முன்ன விபத்துவடிவில் சோதனை. என் வீட்டுக்காரர் கவுஸ் பாட்சா... வாகன விபத்தில் சிக்கி... என்னையும் என் பிள்ளையையும் தவிக்க விட்டுட்டு போய்ச்சேர்ந்துட்டார். அதிலிருந்து தூக்கம் இல்லை. நிம்மதி இல்லை. சரியா சாப்பிடக் கூட முடியறதில்லை. எப்பவும் என் வீட்டுக்காரர் நினைவா அழுதுக்கிட்டே இருந்தேன். இதைப்பார்த்த என் மாமியார்தான்... கோரிப்பாளையம் தர்ஹாவில் வியாழக்கிழமைல தங்கி துவா செஞ்சா... மன நிம்மதி கிடைக்கும்னு சொன்னாங்க. அதனால் தர்ஹாவுக்கு அன்னைக்குக் குழந்தை யோடப் போனேன். அங்க 200 குடும்பத்துக்கு மேல தங்கி யிருந்தாங்க. அன்னைக்கு இரவு தர்ஹாவில் அசந்து தூங்கினேன். நடு சாமத்தில் விழிச்சி என் பிள்ளைக்குப் பால்கொடுத்துட்டு மறுபடியும் தூங்கிட்டேன். விடிகாலை 5 மணிக்கு எழுந்து பார்த்தப்ப என் குழந்தையைக் காணோம்ங்க. நான் பிள்ளையைத் தேடிக் கதறி துடிச்சதைப் பார்த்து ஆளாளுக்குத் தேட ஆரம்பிச்சாங்க. இருந்தும் பிள்ளை கிடைக்கலீங்க. எனக்கு என் பிள்ளை வேணும்''’என்றார் கண்ணீருடன். ஆனால் அந்தக் குழந்தைதான் படுகொடூரமாக நரபலி கொடுக்கப்பட்டி ருக்கிறது.

மந்திரவாதி அப்துல் கபூரைப் பிடித்தது எப்படி?

தல்லாகுளம் இன்ஸ் பெக்டர் சிதம்பர முருகேசன் விவரிக்கிறார்.... ""2-ந் தேதி அதிகாலை குழந்தை காணாமல் போயிருக்கு. பல இடங்கள் லயும் தேடிப்பார்த்துட்டு... எங்கக்கிட்ட அன்னைக்கு மதியம் புகார் கொடுத்தாங்க. நாங்க அந்த தர்ஹாவுக்குப் போய் கேட்டை மூடச்சொல்லிட்டு... அங்க தங்கியிருந்தவங்களை லெட்ஜரை வச்சி சரி பார்த்தோம். அப்ப காயல்பட்டின முகவரி கொடுத்திருந்த அப்துல் கபூரும் அவனோடு இருந்த ரமீலாவும் மிஸ் ஆனதைத் தெரிஞ்சிக்கிட்டு... காயல்பட்டினம் போனோம். அவன் ஊரைவிட்டு போயே 10 வருசமாச்சேன்னு சொன்னாங்க. அங்க ரெண்டுநாள் தங்கி விசாரிச்சப்ப.. மாறி மாறி தர்ஹாக்கள்ல தங்கறது அவன் வழக்கம்னு தெரிஞ்சிது. பில்லி சூன்யம், மந்திர மாயம் செய்றதுதான் அவன் தொழிலாம். ஏற்கனவே கட்டிய மனைவி இவனை விட்டுப்போன நிலையில்... இந்த ரமீலாவை செட் டப்பா வைச்சிக்கிட்டிருக்கான். இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு... எங்க எஸ்.ஐ. தர்மலிங்கம் தலைமையிலான டீம் தர்ஹா தர்ஹாவா போய் சலிச்சி... திருச்செந்தூர் அருகே இருக்கும் கல்லாமொழி தர்ஹாவில் இருந்த அப்துல் கபூரை மடக்கியது. எனக்கு எதுவுமே தெரியாதுன்னு மழுப்பினான். ஸ்டேஷனுக்குத் தூக்கிவந்து விசாரிச்சோம். அப்பதான் குழந்தையைத் தேடாதீங்க. அதைக் கொன்னுட்டேன்னு அசால்டா சொல்றான். கொஞ்சம் கூட அவனுக்கு பயமோ குற்ற உணர்வோ இல்லை. எதுக்குடா கொன்னேன்னு கேட்டா... "ரமீலா வுக்கு அடிக்கடி சொகமில்லாமப் போவுது. அது சரியாகணும்னா ஒரு தலைச்சன் குழந்தையை நரபலி கொடுக்கணும்னு எனக்குள் அசரீரி சொன்னது'ன்னு சொல்றான். அந்தப் பச்சைக் குழந்தையை... பதைக்கப் பதைக்க கொன்னுருக்கான் அந்த அயோக்கியன்''’ என்கிறார் வருத்தத்தோடு.

சிறுவன் யூசுப்பை கடத்தி நரபலி கொடுத்தது எப்படி? போலீஸ் விசாரணை யில் இருந்த மந்திரவாதி அப்துல் கபூரிடமே கேட்டோம். அலட்டிக் கொள்ளாமல் நம்மிடம் எல்லாவற்றையும் அவன் ஒப்பிக்க ஆரம்பித்தவன்...

""நரபலிக்குத் தோதா ஒரு ஆண் தலைச்சன் குழந்தையைக் கொஞ்சநாளாத் தேடிக்கிட்டு இருந்தேன். அன்னைக்கு கோரிப்பாளையம் தர்ஹாவில் தங்கியிருந் தப்ப... குழந்தையோடு அங்க வந்த பாத்திமாக்கிட்ட பேச்சுக்கொடுத்தேன். அப்ப பாத்திமாவின் கணவன் செத்துப் போனதையும்.. அந்த ஆண் குழந்தை, தலைச்சன் குழந்தை என்பதையும் தெரிஞ்சிக்கிட்டு... இதுதான் நரபலிக்குத் தோதான குழந்தைன்னு தீர்மானிச்சேன். மறுநாள் அதிகாலை குழந்தையைத் தூக்கிட்டு நேரா காயல்பட்டினம் அருகில் இருக்கும் ஏரலுக்குப் போய் ஒரு லாட்ஜில் தங்கினேன். அந்தக் குழந்தை அம்மாட்ட போகணும்னு அழுதுக்கிட்டே இருந்தது. ஆண்டவனை மனசில் நினைச்சி துவா பண்ணிட்டு... நரபலிக்கு ரெடியானேன். பையன் பயந்துபோய் முரண்டுபிடிச்சான். ரமீலா... அவன் கை, காலை இறுக்கிப் பிடிச்சதும்.. நான் கழுத்தை கரகரன்னு அறுத்தேன். ரத்தம் பீய்ச்சிக்கிட்டு அடிக்க... அதை இரும்பு ஊதுபத்திக் குழாயில் கொஞ்சம் பிடிச்சிக்கிட்டேன். குழந்தையின் துடிப்பு அடங்கியதும்... அதன் கழுத்தை யும் உடலையும் தனித்தனியா ஆக்கி... ரெண்டையும் தனித்தனி தூக்குச்சட்டியில் போட்டு எடுத்துக்கிட்டேன். அப்புறம் நேரா ஏர்வாடி காட்டுப் பள்ளி தர்ஹாவுக்குப் போனேன். அங்க சேர்மன் தோப்பில் ஒரு குடிசை வீட்டை, 200 ரூபா மாச வாடகைக்கு எடுத்தேன். தர்ஹாவுக்கு வர்றவங் களுக்காக இங்க நிறைய குடிசை போட்டிருக்காங்க.

அந்த குடிசை வீட்டுக் குள்... அந்தக் குழந்தையின் உடலை வச்சி... ஊதுபத்தி கொளுத்தி... மந்திரம் சொல்லி... பூஜை பண்ணி னேன். பிறகு அங்கேயே குழிதோண்டி உடலைப் பொதைச்சேன். அப்புறம் தலை இருந்த தூக்குச் சட்டிக்குள் தாயத்து, தகடு, குர்ரான் புத்தகமெல்லாம் உள்ளே வச்சி... வாளிக்குள் சிமெண்ட் பூச்சு மூலம்... மூடியை டைட் பண்ணி னேன். அப்பதான் வாடை வராது. பிறகு துக்குச் சட்டியை ஒரு பையில் வச்சி எடுத்துக்கிட்டு பஸ் ஏறி... கல்லாமொழி தர்ஹாவுக்குப் போனேன். அங்க இரவு 8 மணிக் கெல்லாம் நடமாட்டம் அடங்கிடும். தர்ஹா பக் கத்தில் இருக்கும் கடற் கரைக்கு நள்ளிரவில் அந்தத் தூக்குச் சட்டியுடன் ரமீலாவோட போனேன். கடல் ஓரத்தில் ரமீலாவை உட்காரவச்சி.. அவள் தலை யில்... குழந்தையின் ரத் தத்தை தெளிச்சி... காளி படத்தை வச்சி பூஜை பண்ணினேன். அப்புறம் கடலோரம் குழிதோண்டி அந்தத் தலையையும் புதைச் சிட்டு... தலையை வெட்டிய கத்தியை கடல்ல வீசிட்டு.. கை, காலை கழுவிக்கிட்டு வந்துட்டேன். இப்படி செஞ்சா நோய்நொடி யெல்லாம் அண்டாது. மந்திர சக்தியும் கிடைக் கும்''’என்று அழுத்தமாய்ச் சொல்லி வெடவெடக்க வைத்தான்.

மந்திரவாதி அப்துல் கபூரை விசாரித்த காக் கிகள் அத்தனை பேரும் பேய றைந்த மாதிரி ஆகிவிட்டார்கள். அவனை அழைத்துக் கொண்டு ஏர்வாடிக்குப் போன காக்கிகள்... குழந்தை யின் உடல் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டினர். அப்போது காளியின் படம் உட்பட மந்திரித்த பொருட் களும் வெளியே வந்தன. இதே போல் கல்லாமொழியில் புதைக்கப் பட்ட தலையைத் தோண்டியபோதும் மந்திரித்த பொருட்கள் கிடைத்தன. புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் காட்டப்போன மந்திரவாதி அப்துல் கபூரையும் ரமீலா பீவியையும் கண்ட பொதுமக்கள்... அவர்களைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என கொந்தளிக்க... போலீஸ் படாத பாடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தியது.

மந்திரவாதியின் கள்ளக் காதலியான ரமீலா பீவியோ ""தலையைத் துண்டிச்சிக் கொன்னா தான் அது கொலை. கழுத்தை அறுத்தா அது கொலையில்லை. ரத்தம் வெளியேறி.. அந்தப் பையனாத்தான் செத்தான்'' என்று நெஞ்ச ழுத்தத்தோடு. சொல்லியபடியே இருக்க.. இருவரையும் ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்தார்கள் காக்கிகள்.

குழந்தை உயிரோடு கிடைத்துவிடும் என்று ஆசையோடு காத்திருந்த பாத்திமா...’"ஐய்யோ மகனே நீயும் என்னை விட்டுட்டுப் போய்ட்டியா?'’ என கதறித் துடித்துகொண்டிருக் கிறார்.

இந்த நரபலிக்கொலை... ஏற்படுத்திய அதிர்ச்சி அலை கள்... பலரையும் பாதித்திருக் கிறது.

No comments:

Post a Comment