Sunday, July 18, 2010

லஞ்சம் வாங்கி சிக்கிய மத்திய அமைச்சரின்...


இரவு 7.30 மணி இராசிபுரம் சுப்ர மணிய நகர் தெருவிளக்கு களின் மங்கிய ஒளியில் மினுக்கிக் கொண்டிருக்கும் அந்த மாடரேட் நகரில் ஓர் அடுக்கு மாடியில் டிப்-டாப் சஃபாரி சூட் பார்ட்டியிடம் சாதாரண உடையில் ஒருவர் பவ்வியமாய்...’"அய்யா நீங்க கேட்ட ஒண்ணரை லட்சத்தை கொண்டாந் திருக்கேன்' என்றார். முகம் மலர்ந்த சஃபாரி வெரிகுட். இத மொதல்லயே கொண்டு வந்திருக்கலாமில்ல... சரி... சரி... இனி கவலைப்படாதே. பணத்தை பி.ஏ. சுப்ரமணிகிட்ட கொடு' என்றார் மிடுக்காக. பணம் கை மாறுகிறது. அடுத்த வினாடி திபுதிபுவென தன் டீமோடு நுழைந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.பெரியசாமி ""போத் ஆர் அரெஸ்ட்'' என்று கர்ஜிக்க... முகம்வெளிறிப் போனார் அந்த சஃபாரி. அவர் வேறு யாருமல்ல; நாமக்கல் டி.எஸ்.பி. சீனிவாசன்.

எதற்காக இந்த கைது? லஞ்ச ஒழிப்பு டீமிடம் கேட்டோம். ""நாகப்பட்டிணம் ஆரோக்கியராஜுக்கு இங்க இருக்கும் கங்கநாயக்கன்பட்டி, புதுப்பட்டியில ரெண்டு கோழி பண்ணைகள் இருக்கு. அதில் சேக் என்பவர் ஒர்க்கிங் பார்ட்னராகியிருக்கார். அவங்களுக்குள் பிரச்சினை ஏற்படுது. அதைத் தொடர்ந்து கடந்த 6-ந்தேதி 85 ஆயிரம் கோழிகளை சேக் தனியா கொண்டுபோக.. அவர்மேல் ஆரோக்கிய ராஜ் கோழிகளைத் திருடியதா புகார் கொடுக்கறார். டி.எஸ்.பி. சீனிவாசன்... இதை கையில் வச்சிக்கிட்டுதான் "உன்னைக் கைது பண்ணாம விட்டுடறேன்'னு முதல்ல ஒரு லட்சமும், பிற்பாடு 7-ந்தேதி 50 ஆயிரமும் கறந்திட்டாரு. அதுக்கப்புறமும் ஒன்றரை லட்சம் வேணும்னு மிரட்டவும்தான் எங்ககிட்ட ஓடிவந்தாரு சேக். திருட்டுப் பூனை யை பிடிச்சிட்டோம்ல'' என்றனர் பெருமிதமாக.

சீனிவாசன் கைது என்றதும் அ.தி. மு.க. கரைவேட்டிகள் அங்கே கூடி பத்திரி கையாளர்களைப் படம் எடுக்கவிடாது தடுத் தனர். "ஒரு காக்கிக்கு இத்தனை கரை வேட்டிகளின் சப்போர்ட் டா?' என்ற போது...

""சசிகலா குடும்ப உறவினர் புலவர் கலியபெருமாள் கண்காணிப்பிலுள்ள 7 மாவட்டத்திலும் சீனிவாசன் சொல்லாமல் ஒரு அணுவும் அசையாது. யாராவது கட்சியில பொறுப்பு கேட்டு போனா கூட மொதல்ல சீனிவாசனை பாருன்னுதான் கலியபெருமாளே சொல்வாரு'' என்கிறார்கள் லோக்கல் புள்ளிகள்.

இப்போது லஞ்சத்துக்காக நீண்ட சீனிவாசனின் கை... சேலம் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறது.

’’""சீனிவாசன் சசிகலா உறவினர் மட்டுமில்லீங்க, முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றின் பெயர் கொண்ட மத்திய அமைச்சரின் உறவினரும் கூட. தி.மு.க. ஆட்சியில் அமைச்சரின் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார். எவ்வளவு தப்பு செஞ்சாலும் தப்பிச்சி வர்ற இவர்... இந்த முறை வசமா மாட்டிக்கிட்டாரு'' என ஒரு ர.ர.வே நம்மிடம் கிசுகிசுத்தார்.

இந்த சீனிவாசன் உத்தமர் காந்தி பெயரில் விருது பெற்றவர் என்பதுதான் தலைகுனியத் தக்க உபரித் தகவல்.

No comments:

Post a Comment