Tuesday, July 13, 2010

விஜய் படத்துக்கு எதிர்ப்பு: தியேட்டர் அதிபர்கள் முடிவு


தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம், சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு, சங்க தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரோகிணி ஆர்.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.



கூட்டத்தில் விஜய் நடித்த குருவி, வில்லு, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சுறா ஆகிய 5 படங்கள் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த படங்களுக்காக திரையரங்க உரிமையாளர்கள் கொடுத்த பணத்தில், 35 சதவீத தொகையை விஜய் திருப்பி தர வேண்டும் என்று ஏற்கனவே கேட்டு இருந்தோம். இதுவரை விஜய் திருப்பி தரவில்லை. அவர் நஷ்ட ஈடு தொகையை தரும் வரை, அவருடைய படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




* கோவையில், மிக சிறப்பான முறையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி முடித்துள்ள தமிழக முதல் அமைச்சர் கருணாநிதிக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறோம்.



* தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ராம.நாராயணன் மற்றும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.



* தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளராக இருந்த பழனியப்ப செட்டியாரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவருக்கு பதில் புதிய பொருளாளராக டாக்டர் ஹரி கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



மேற்கண்டவாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

“விஜய் அண்ணவையும், சூர்யா அண்ணாவையும் வரச்சொல்லுங்கள் அக்கா”


இலங்கை பிரச்சனையில், என்மீது வேண்டும் என்றே சர்ச்சையை கிளப்புகிறவர்களைப்பற்றி எனக்கு கவலை இல்லை, என்று அசின் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலை காரணமாக, தென்னிந்தியத் திரைப்பட கூட்டமைப்பு, நடிகர், நடிகைகள் யாரும் இலங்கைகு செல்ல கூடாது என தடை விதித்திருந்தது.



இந்நிலையில், நடிகை அசின் ‘ரெடி’ என்ற இந்திப் படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ளார். இதனால், தமிழ்த்திரையுலகில் பெரும் சர்ர்ச்சை நிலவிவருகிறது.


தென்னிந்தியத் திரைப்பட கூட்டமைப்பு விதித்திருந்த தடையை மீறி, இலங்கைச் சென்ற அசின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி கூறியுள்ளார்.

இதற்கு பதில் கூறும் விதமாக, அசின் அளித்துள்ள பேட்டியில்,


நன் இலங்கைச் சென்றது, அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல. என் வேலைக்காக தான் நான் இல்ங்கை சென்றேன். ‘ரெடி’நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டப் படம்.அந்தப் படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் நாத்தியது என் கையில் இல்லை. அது, தயாரிப்பாளரும், டைரக்டரும் முடிவு செய்த விஷயம்.




இலங்கை சென்றபின், அங்குள்ள தமிழர்கள் படும் துயரங்களை கேட்டறிந்து, அவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தேன்.தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியும், விடுதலைப் புலிகள் அதிகம் இருந்த இடமுமான யாழ்ப்பாணத்திற்கு தைரியமாக சென்றேன்.



கடந்த 32 வருடங்களாக அந்தப் பகுதிக்கு எந்த ஒரு முக்கிய பிரமுகரும் செல்லவில்லை. ஆனால், ஒரு பெண்ணாக இருந்தும் நான் துணிச்சலாக போனேன்.


யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் நோயினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பார்த்து கண்கலங்கினேன்.அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.

அதன் மூலம் இலவச கண்சிச்சை நடத்தி, 300க்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு என் சொந்த செலவில் ஆபரேஷன் நட்த்தினேன். இந்தியாவில் இருந்து கண் மருத்துவத்தில் புகழ்பெற்ற 5 மருத்துவர்களை என் சொந்த செலவில் வரவழைத்து இந்தகண்சிகிச்சை முகாமை நடத்தினேன்.


ஒரு நோயாளிக்கான லென்சின் விலை 5000 ரூபாய். நான் 10,000 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டு இருக்கிறேன்.


இப்படி, இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்வது தவறா? என் மீது எதற்காக நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? நான் இலங்கைத் தமிழர்களுக்கு உதவியதற்காகவா?.


இலஙகையில் நடந்த போரில், பெற்றோரை இழந்த ஒருவயது முதல் 16 வயது வரை உள்ள 150 பெண்களை தத்தெடுத்து இருக்கிறேன். இது தவறா?.


என்மீது வேண்டும் என்றே சர்ச்சையை கிளப்பி விடுகிறார்கள். தமிழ் நாட்டில் இருந்து கொண்டே சும்ம பேசுவதை விட, அறிக்கை விடுவதை விட இலங்கைக்கு வந்து இங்குள்ள தமிழர்களுக்கு உதவலாமே.


யாழ்ப்பாணத்தில் உள்ள, தமிழர்கள், “அக்கா தமிழ்நாட்டில் இருந்து யாரும் எங்களை பார்க்க வராதது ஏன்” என்று கேட்கிறார்கள்.

மேலும் அவர்கள், “விஜய் அண்ணவையும், சூர்யா அண்ணாவையும் வரச்சொல்லுங்கள் அக்கா” என்றும் கேட்கிறார்கள்.



ஒரு சிலர் என்மீது வேண்டும் என்றே சர்ச்சையை கிளப்பி விடுகிறார்கள்.அது பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு சரி என்று தோன்றியதைத் தான் நான் செய்கிறேன்” என்று அசின் கூறினார்.

Monday, July 12, 2010

மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி!


shockan.blogspot.com

பெங்களூர்: பெங்களூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து செக்ஸ் வழக்கில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா மீண்டும் சொற்பொழிவாற்றினார். அவரிடம் நடிகை மாளவிகா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று பயபக்தியுடன் வணங்கினார்.

நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவுக்கு செய்த 'சேவை'க் காட்சிகள் வீடியோ மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள். இதில்நித்தியானந்தாவை கர்நாடக போலீஸார் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்துப் பிடித்து பெங்களூர் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். ரஞ்சிதா இன்னும் தலைமறைவாகவே இருக்கிறார்.

சிறையில் அடைக்கப்பட்ட நித்தியானந்தா பின்னர் ஜாமீனில் விடுதலையானார். அவர் போதனை செய்யக்கூடாது என்பதுஉள்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்த நிபந்தனைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் தளர்த்தியது. இதையடுத்து மீண்டும் போதனைப் பாதைக்குத் திரும்பி விட்டார் நித்தியானந்தா.

கிட்டத்தட்ட 80 நாட்களுக்குப் பின்னர் முதல் முறையாகஅவர் போதனையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுமாலை பிடுதியில் உள்ள தனது ஆசிரமத்தில் சிஷ்யர்கள், பக்தர்களிடையே நி்த்தியானந்தா பேசினார்.

தனது செக்ஸ் மோசடி தொடர்பான செய்திகள் குறித்தும் கோபத்துடன் குறிப்பிட்டார் நித்தியானந்தா.

அப்போது அவர் பேசுகையில், இணையதள வரலாற்றிலேயே, பெரும் நெரிசல் ஏற்பட்டு இணையதள இணைப்புகள் ஸ்தம்பித்தது வரலாற்றில் இரண்டு முறைதான். முதலில் மைக்கேல் ஜாக்சன் மறைந்தபோது. இரண்டாவது நித்தியானந்தா சுவாமிகள் விவகாரத்தில்.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. மைக்கேல் ஜாக்சன் ஆடினார், பாடினார், உலக மக்களை கேளிக்கைப்படுத்தினார். இன்னும் என்னவெல்லாமோ செய்தார். ஆனால் நான் என்ன செய்தேன். இப்படிப்பட்ட களேபரத்திற்கு நான் பொருத்தமானவன் இல்லையே? என்ற நித்தியானந்தா தனது சிறை அனுபவத்தையும் விவரிக்கத் தவறவில்லை.

சிறைக்குள் போய் ஞானோதயம் பெறுவது என்பது பெருமைக்குரிய விஷயமல்ல. அங்கு போய்தான் ஞானோதயம் பெற வேண்டும் என்று இல்லை. அங்கு போகாமலேயே ஞானோதயம் பெறமுடியும். அதை நான் உங்களுக்கு கற்றுத் தருகிறேன்.

இந்த நாட்களில் எனக்கு என்னவெல்லாமோ பட்டம் கொடுத்துள்ளனர். அவற்றுக்கும் எனக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. சிலர் என்னை நித்தி என்று கூட சுருக்கி கூப்பிட ஆரம்பித்து விட்டனர். அதுகுறித்தும் நான் கவலைப்படவில்லை.

எனது பக்தர்கள் அகிம்சை வழியில் செயல்பட்டதால் தான் என்னால் வெற்றி பெற முடிந்தது. அகிம்சை வழியை பின்பற்றினால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

ஒருவருக்கு நீதி சொல்லும் அதிகாரம் இருந்தாலும் கடவுளின் தீர்ப்பே இறுதியானது. கடவுளின் முடிவுக்கு யாரும் தீர்ப்பு சொல்ல முடியாது.

நீதிபதிகள் கடவுளாக முடியாது. நீ துன்பப்படும் போது உடனே மற்றவர்கனை எதிரியாக பார்க்க கூடாது. பகைமையில் இருந்து சுதந்திரம் பெறுவதே உயர்ந்த சுதந்திரம், கண்ணுக்கு கண்ணை எடுக்க வேண்டும் என்று விரும்பினால் ஒட்டு மொத்த உலகமே குருடாகி விடும் துன்பம் வாழ்க்கையில் வரும் போது அதை வெற்றிகரமாக எதிர் கொள்ள வேண்டும் என்றார் நித்தியானந்தா.

ஃப்ரீடம் என்ற தலைப்பில் நேற்று பேசினார் நித்தியானந்தா. நேற்று நடந்த இந்த ஆன்மீக சொற்பொழிவைக் கேட்க பலரும் வந்து குவிந்திருந்தனர். அவர்களில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடல் புகழ் நடிகை மாளவிகாவும் ஒருவர்.
Read: In English
நித்தியானந்தா பேசி முடித்ததும் அவரதுகாலில் விழுந்து பயபக்தியுடன் ஆசி பெற்றார் மாளவிகா.

முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியோ, சங்கோஜமோ, வெட்கமோ, கூச்சமோ இல்லாமல், படு இயல்பாக காணப்பட்டார் நித்தியானந்தா.

ஜெர்மனியின் முல்லருக்கு 2 விருதுகள்


shockan.blogspot.com

ஜெர்மனியின் இளம் வீரர் தாமஸ் முல்லருக்கு நேற்று இரண்டு விருதுகள் கிடைத்தன. சிறந்த இளம் வீரருக்கான விருது மற்றும் கோல்டன் பூட் விருது ஆகியவற்றை அவர் தட்டிச் சென்றார்.

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து விருதுகள் அறிவிக்கப்பட்டன.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கும் இந்த விருதுகளுக்குக் கடும் போட்டி நிலவி வந்தது. ஜெர்மனியின் குளோஸ், ஸ்பெயினின் வில்லா உள்ளிட்ட சிலர் இந்த விருதுகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

சிறந்த வீரர் டியகோ போர்லான்

சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை உருகுவே வீரர் டியகோ போர்லான் தட்டி்ச் சென்றார். உருகுவேயின் சிறப்பான ஆட்டத்திற்கு போர்லானின் பங்கு மிகப் பெரியது. இந்தத் தொடரில் இவர் ஐந்து கோல்களை அடித்திருந்தார்.

2வது இடம் நெதர்லாந்தின் ஸ்னீடருக்கும், 3வது இடம் ஸ்பெயினின் டேவிட் வில்லாவுக்கும் கிடைத்தது.

அதிக கோல்கள் அடித்தவர் தாமஸ் முல்லர்

அதிக கோல்கள் அடித்த வீரராக ஜெர்மனியின் தாமஸ் முல்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடரில் அவர் ஐந்து கோல்கள் அடித்திருந்தார். இதுதவிர 3 கோல்கள் கிடைக்கவும் இவர் காரணமாக இருந்தார்.

இதன் காரணமாக டேவிட் வில்லா, ஸ்னீடரை முந்திக் கொண்டு விருதை தட்டிச் சென்றார். இந்த இருவரும் கூட தலா ஐந்து கோல்களைப் போட்டிருந்தனர். இருப்பினும் தத்தமது அணிகளுக்கு தலா ஒரு கோல் கிடைக்க மட்டுமே இவர்கள் உதவியாக இருந்ததால், முல்லருக்கு விருது கிடைத்தது.

சிறந்த கோல்கீப்பர் இகர் கேசில்லாஸ்

சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் கிளவ் விருதை தட்டிச்சென்றார் ஸ்பெயின் கோல்கீப்பர் இகர் கேசில்லாஸ். இந்தத் தொடரில் ஸ்பெயின் அணி 2 கோல்களை மட்டுமே வாங்கியது. இந்த சிறப்புக்கு இகர் கேசில்லாஸின் சிறப்பான செயல்பாடே காரணம்.

சுவிட்சர்லாந்திடம் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது ஸ்பெயின். இதனால் கேசில்லாஸ் விமர்சனத்துக்குள்ளானார். ஆனால் அடுத்து வந்த அத்தனை போட்டிகளிலும் ஸ்பெயின் பிரமாதமாக ஜெயித்தது. ஒரு கோல் கூட ஸ்பெயினுக்கு எதிராக விழாமல் அட்டகாசமாக கீப்பிங்கை செய்தார் இகர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த இளம் வீரர் தாமஸ் முல்லர்

சிறந்த இளம் வீரருக்கான விருதும் ஜெர்மனியின் முல்லருக்கே கிடைத்தது. ஜெர்மனி அணி 3வது இடம் வரை வந்ததற்கு முல்லரின் ஆட்டமே முக்கிய காரணம். இந்தத் தொடர் முழுவதும் முல்லர் படு விறுவிறுப்பான ஆட்டத்தைக் காட்டி அசத்தியிருந்தார்.

நேர்மையான ஆட்டம் தந்த அணி ஸ்பெயின்

சிறந்த ஃபேர்பிளே விருது ஸ்பெயின் அணிககே கிடைத்தது.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் இனியஸ்டா

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்பெயினின் ஆன்டிரஸ் இனியஸ்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் போட்ட கோல்தான் ஸ்பெயினுக்கு கோப்பையை வாங்கித் தந்தது என்பதால் இந்தப் பரிசு.

Sunday, July 11, 2010

அர்த்தமுள்ள இந்துமதம் கொடுத்த கண்ணதாசன் மகள் விசாலி கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்


shockan.blogspot.com

மதுரை: மறைந்த கவியரசு கண்ணதாசனின் மகளான விசாலி கண்ணதாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார்.

கவியரசு கண்ணதாசனின் மகள் விசாலி. தந்தை வழியில் கவிதை எழுதுபவர், நல்ல பேச்சாளர். திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு டிவியில் நிகழ்ச்சி ஒன்றையும் வழங்கினார்.

இந்த நிலையில் விசாலி திடீரென கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள குட் ஷெப்பர்டு ஆலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒயின், அப்பம் பெற்று கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளாராம் விசாலி. மேலும், தனது பெயரையும் ஜெனீபர் என மாற்றிக் கொண்டுள்ளார்.

அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர் கண்ணதாசன். இந்த நிலையில் அவரது மகள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை புரோக்கர்களாக மாற்றிய கல்வி...


shockan.blogspot.com
கல்வி நிலையங்கள் வணிக நிறுவனங்களாக மாறிவருகின்றன என தொடர்ந்து கல்வியாளர்கள் கவலைக்குரல் கொடுத்து வந்ததை நிரூபிக்கும் விதத்தில் அமைந் திருக்கிறது கல்லூரி மாணவர் நிர்பே குமார் சிங் கொலைச் சம்பவம்!

சென்னை மதுரவாய லில் உள்ள டாக்டர் எம்.ஜி. ஆர். நிகர்நிலைப் பல் கலைக்கழகத்தில் என்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிர்பே குமார் சிங். கடந்த 5-ம் தேதி இரவு நீலாங்கரை யில் உள்ள நண்பர் அணிஸ் குமார் வீட்டிற்கு போய்விட்டு மற்றொரு நண்பர் பங்கஜ் குமாருடன் மதுரவாயலுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் அவர்களை விரட்டிய கும்பல் பாலவாக்கத்தில் நிர்பே குமாரையும், பங்கஜ் குமாரையும் உருட்டுக்கட்டையாலும், இரும்பு ராடாலும் கடுமையாக தாக்கியது. இந்த திடீர் தாக்குதலில் நிர்பே குமார் சம்பவ இடத்திலேயே இறந்துவிட... பங்கஜ்குமார் சீரியசாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவர்களை தாக்கியதாக செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. கைது செய்யப்பட்டவர்கள் அத்தனை பேரும் வட இந்திய மாணவர்கள்தான்.

""கைதான மாணவர்களின் வாக்கு மூலத்தால்தான் பல உண்மைகள் வெளிச் சத்துக்கு வந்தன. சென்னையில் உள்ள பெரும்பாலான டீம்டு யூனிவர்சிட்டிகளில் பீகார், ஜார்கண்ட், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துதான் பாதிக்கும் மேலான மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மணிப்பூர் மாநிலங்களில் இருந்தும் இப்போது மாணவர்களை பிடிக்க ஆரம்பித்திருக் கிறார்கள். அந்த மாநிலங்களில் என்ஜினி யரிங் கல்லூரிகள் குறைவாக இருப்பதால் அவர்களும் இங்கு வர ஆர்வம் காண்பிக் கிறார்கள். எத்தனை மாணவர்களை வேண்டு மானாலும் சேர்த்துக்கொள்ளும் வசதி இருப்பதால் ஒரே நிறுவனத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் வரை சேர்க்கப்படுகிறார்கள். வட இந்திய மாணவர்களை சேர்க்க அந்தந்த மாநில மொழி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்த கல்லூரி நிர்வாகம் இப்போது தங்களிடம் படிக்கும் சீனியர் மாணவர்களையே புரோக்கர்களாக்கி விட்டன.

5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை டொனேஷனாக கொடுத்த மாணவனும் தான் கொடுத்த பணத்தை கமிஷனாகவே சம்பாதித்து விடலாம் என்று நினைக்கிறான். ஒரு சீட்டுக்கு 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை கமிஷன் கிடைக்கிறது. நிர்பே குமாரும் தான் படிக்கும் எம்.ஜி.ஆர். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்க சில மாணவர்களை கேன்வாஸ் செய்து வைத்திருந்தார். அந்த மாணவர்களை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் சேர்த்து விட்டார் அங்கே படிக்கும் சுமன். மாணவர்கள் சேர்க்கை விஷயத்தில் இரண்டு தரப்புக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்திருக்கிறது. அது இப்போது கொலை வரை போயிருக்கிறது’’ என கொலைப் பின்னணியை விவரித் தார்கள் அதிகாரிகள்.

""தரமான மாணவர்களை உருவாக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் தறுதலை மாணவர்களாக அவர்களை மாற்றிக்கொண்டிருக்கின்றன'' என கொதிக்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழகத் தலைவர் கனகராஜ். “ ""ஆராய்ச்சி படிப்புக்கு போக வேண்டிய மாணவர்களை புரோக்கர்களாக்கி வருகிறார் கள் கல்வி வியாபாரிகள். சில கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களை தலைமை புரோக்கர்களாக்கி மாணவர் களை அவர்களின் சீரிய தலைமையின் கீழ் செயல்பட வைக்கின்றன. பொறியியல் கல்வியை கொடுக்கும் நிறுவனங்களைப் பார்த்து இப்போது தனியார் சுயநிதி கலைக்கல்லூரிகளும் இந்த செயலில் இறங்கி விட்டன. கோவை அரசுக்கல்லூரி கவுன்சிலிங்கிற்கு வருகிற மாணவர்களை கேட்டிற்கு அருகிலேயே நின்று மடக்குகிறார்கள். பிட் நோட்டீஸ் எல்லாம் வைத்துக் கொண்டு அங்கே நிற்கும் தனியார் கல்லூரி ஆசிரியரும், மாணவர்களும் வெளிப்படையாக பிசினஸ் பேசுகிறார்கள். கையோடு கமிஷன் தொகையை வாங்கிக்கொள் கிறார்கள்.

இதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை ஆன் டியுட்டியில் அனுப்புவதோடு, மாணவர்களுக்கும் ஃபிரீ அட்டெண்டன்ஸ் போடுகிறார்கள். கல்வி வணிகமாவதை இப்போதாவது தடுப்பதற்கான முயற்சிகளை அரசுகள் எடுக்க வேண்டும்''’’ என்கிறார் கனகராஜ்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான டாக்டர் கலா நிதி, “""புரோக்கர்களாக மாறு கிறார்களே... கொலை செய் கிறார்களே என்று மாணவர்கள் மீது கோபப்படுவதை விட இதற்கு காரணமான அமைப்புகள் மீதுதான் கோபம் கொள்ள வேண்டும். நிகர்நிலைப் பல்கலைக் கழகங் களாக இருக்கின்ற நிறுவனங்கள் அடிப் படையில் லாப நோக் கில்லாத டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலமே இதனை நடத்துகின்றனர். இந்த டிரஸ்ட் ஆரம்பித்த நோக்கத்தில் இருந்து மாறி நடந்தால் அதனை அரசே ஏற்று நடத்தலாம் என்கிறது இந்தியன் டிரஸ்ட் ஆக்ட். அதே போல டிரஸ்ட்டின் வருமானத்தை சம்பந்தப்பட்ட துறை கண்காணிக்க வேண்டும். நிகர்நிலை அந்தஸ்து தருகிற யூ.ஜி.சி. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது ஆக்ஷன் எடுக்க முடியும். ஆனால் எந்த அமைப்புமே நடவடிக்கை எடுப்பதில்லை.

சமீபத்தில் கைதான கேதன் தேசாய் எத்தனை கோடி வைத்திருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த மட்டத்தில் இருந்து பணம் வாங்க ஆரம்பித்தால் நிர்வாகங்களுக்கு எப்படி பயம் வரும்? இங்கே நிகர்நிலைப்பல்கலைக் கழகம் நடத்தும் ஒரு நிர்வாகியின் வக்கீல்தான் அமைச்சர் கபில்சிபல். அந்த நிறுவனத்தின் மீதான புகார்களை எப்படி விசாரிப்பார்கள்? 10 லட்சம், 12 லட்சம் என்று பொறியியல் சீட்டுகளை கூறு போட்டு விற்கும் நிலையை கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள். சமூகத்திற்கு பச்சை துரோகம் செய்கிறார்கள் பொறுப்பில் இருப்பவர்கள். யார் எல்லாம் நடவடிக்கை எடுக்கலாமோ அவர்கள் தூங்குகிறார்கள்.

6 மாதத்துக்கு ஒரு முறை திடீர் ஆய்வுகள் நடந்தால்தானே நிர்வாகங்களுக்கு கொஞ்சமாவது பயம் இருக்கும்? உயர் பொறுப்பில் இருப்பவருக்கு கோடிகளை கொட்டிக் கொடுக்கும் நிர்வாகங்கள் அதை எடுப்பதற்கு 40 மாணவர்களை புரோக்கர்களாக்கத்தான் செய்வார்கள்.

கொள்ளை அடிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு கடிவாளமாவது போடாவிட்டால் உயர்கல்வியின் நிலை மேலும் மோசமாகிவிடும். அரசுகள்தான் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்''’என்று அழுத்தமாக பேசுகிறார் டாக்டர் கலாநிதி.

""நிர்பே குமார் சிங் கொலைக்கு பிறகு வட இந்திய மாணவர்களை கண்காணிக்கத் தொடங்கி இருக்கிறது காவல்துறை. வெளிப்படையாக பிசினஸ் பேசிக் கொண்டிருக்கும் மாணவ புரோக்கர்கள் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் கூறுகிறார் சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்.

சிறையில் செக்ஸ் டார்ச்சர்!



shockan.blogspot.com

கோவை ரயில்வே நிலையத்தில் கத்தி முனையில் ரமேஷ்பாபு என்ற பயணியிடமிருந்து 1400 ரூபாயை பிடுங்கிக்கொண்டதாக ரயில்வே போலீஸாரால் 2007-ம் வருடம் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவன்தான் கைதி விஷ்ணுவர்த்தன். அந்த விஷ்ணுவர்த்தனை 29-06-10-ந் தேதி அன்று மத்திய சிறைச் சாலையிலிருந்து அழைத்து வந்த போலீஸார் கோவை 2-வது நீதிமன்ற வளாகத்துக்குள் நீதிபதி கோமதிநாயகம் முன்பு அவனை ஆஜர்படுத்திய போது...

""அய்யா... ஜெயிலுக்குள்ள எங்களை வார்டனுக ரொம்பவே கொடுமைப்படுத்தறாங்கய்யா. போன தடவை எங்கண்ணன் மனு போட்டுப் பார்க்க வந்தபோது 2000 ரூபாய் எனக்குக் கொடுக்க வந்தாரு. அந்தப் பணத்த எங்கிட்ட கொடுக்கறதுக்காக வார்டன்க 400 ரூபாய் லஞ்சம் வாங்கினதுக்கப்புறம் தான் எங்கிட்ட 2000 ரூபாயக் கொண்டு வந்து கொடுத்தாங்க. ஆனா இப்ப கோர்ட்டுல ஆஜர்படுத்த கொண்டு வர்றதுக்கு முன்னால எங்கிட்ட இருந்த 2000 ரூபாயைக் கேட்டு கன்னா பின்னான்னு அடிச்சு காயப்படுத்திட் டாங்க'' என்று சட்டையைக் கழற்றி காயங்களை அழுதுகொண்டே காட்டி யவன்... ""அய்யா உங்ககிட்ட இதையெல் லாம் சொன்னா "திரும்பவும் ஜெயிலுக்குத்தான் வரோணும்... கொன்னுபோடுவோம்'னு மிரட்டறாங்கய்யா'' என்று அவன் சொல்ல... அதிர்ந்துபோன நீதிபதி, கைதி விஷ்ணுவர்த்தனை ஜி.ஹெச்.சில் அட்மிட் செய்யும்படி சொன்னார்.

அதேநாளில் சிறைச்சாலையில் கைதிகள் மனுநாள். ""எங்களுக்கு தரம் குறைவான சாப்பாட்டையே போடுகிறார்கள். வார்டன்கள் எங்களிடம் பணம் கேட்டு சித்திரவதை செய்கிறார்கள்'' என்று சில கைதிகள் புகார் செய்த அன்றைய மாலைதான் புகார் கொடுத்த சிலரை வார்டன்கள் புரட்டி எடுத்திருக்கிறார்கள். கைதிகள் தாக்கப்பட்ட விஷயம் அறிந்து மற்ற கைதிகள் உண்ணாவிரதமிருக்க...


அதற்குப்பின் நடந்த சம்பவங்களை சிறையில் உள்ள நம் காக்கி சோர்ஸ்களிடம் கேட்டோம். ""புதிதாய் கோவை ஜெயில் சூப்பிரண்ட்டாய் இன்சார்ஜ் எடுத்திருக்கும் சேலம் ஜெயில் சூப்பிரண்ட்டான பழனி வந்ததற்குப் பிறகுதான் தரமற்ற உணவு கைதிகளுக்குப் போடப்பட்டது. இதை எதிர்த்துப் பேசிய கைதி பிரகாஷ் என்பவனை சில போலீஸ்காரர் களும் வார்டன்களும் சேர்ந்து பாவம்... செமத்தை யாய் அடித்துவிட்டார்கள். ஆனால் அவன் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்தான் என்று மூச்சுப் பேச்சற்றுக் கிடந்த அவனை ஜி.ஹெச்.சில் கொண்டுபோய் சேர்த்தார் கள்'' என்கிறார்கள் காக்கிகள்.

சேலம் சிறைச்சாலையில் கூட அனைத்துக் கைதிகளும் உண் ணாவிரதமிருக்கிறார் கள் என்ற தகவலைத் தொடர்ந்து என்ன பிரச்சினை என்று அலசினோம். சேலம் சிறையில் இருந்து காக்கிகளின் துணை யோடே நம்மைத் தொடர்புகொண்டு பேசிய கைதிகள் முனு சாமி (5662), ராஜ ராஜசோழன் (4456) ஆகிய இருவரும் ""உண்மையாலுமே ரொம்ப மட்டமான சாப்பாட்டையும், குழம்பையும் ஊத்தி சாப்புடச் சொல்றாங்க. எப்படிங்க சாப்புட முடியும்னு பழனி எஸ்.பி.கிட்ட நாங்க ரெண்டு பேரும் கேட்டதுக்காக அப்படி அடிக்கிறாங்க சார். சாப்பாட்டுல பிளேட துண்டு துண்டா உடைச்சுப் போட்டு இப்ப சாப்புடுன்னு சொல்றாங்க. ஏற்கனவே எதிர்த்துப் பேசினவங்கள கண்ணு மண்ணு தெரியாம அடிச்சு இந்த ஜெயிலுக்குள்ளயே இறந்து போயிருக்காங்க. இந்த எஸ்.பி. பழனிகிட்டயிருந்து முடிஞ்சா எங்கள காப்பாத்துங்க சார்'' என்று விசும்பல் ஒலியை எழுப்பிய இருவரின் குரலும் அவசர அவசரமாய் கட்டாகிப்போனது.

இதற்கடுத்த நாளே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மகளிர் சிறையிலிருந்து கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக வெளியே கொண்டு வரப்பட்ட மைதிலி என்ற பெண் தன்னுடைய சேலையை அவிழ்த்தெறிந்துவிட்டு ""ஜெயிலுங்கிறது எதுக்கு? குற்றம் செஞ்சவங்க திருந்தற இடம்ங்கறாங்க. ஆனா நிச்சயமா இல்லை. கஞ்சா வித்த வழக்குல என்னை கைது செஞ்ச போலீஸ்காரங்க இப்ப உள்ளுக்குள்ளேயே என்னை கஞ்சா விக்கச் சொல்றாங்க. முடியாதுன்னு மறுத்ததுக்கு சரியா சாப்பாடு போடாம தண்டிக்கிறாங்க. என்னைப் பாக்கறதுக்காக வந்த எங்கம்மா மேல கஞ்சா வித்ததா பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டாங்க'' என்றவளிடம்... "சரிம்மா அதுக்காக இப்படி அரைகுறையா பப்ளிக்ல நிக்கிறது சரியா?' என்றோம். ""உள்ளுக்குள்ள எங்கள நிர்வாணமாவே நிறுத்தி அங்க இங்கன்னு போலீஸ்காரங்க கை வைக்கறாங்க சார். அதை செல்போன்ல வேற படம் புடிச்சுட்டு "வெளிய போய் சொன்னீனா நெட்ல போட்டுவுட்ருவோம்'னு மிரட்டறாங்க. இவுங்கள்லாம் போலீஸ்காரங்களா சார்....? மனசும் உடம்பும் உடைஞ்சுப்போய்தான் இப்படி நின்னுட்டிருக்கேன்'' என்றவள் அப்படியே தரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

இந்தச் சம்பவங்களைக் கேட்டு கொதித் துப்போயிருக்கும் கோவை வழக்கறிஞர் கலை யரசன்... ""ஏற்கனவே 2005-ல் இதே ஜெயில் சூப் பிரண்ட்டான பழனி மீது கைதிகளை துன் புறுத்தியதாக வழக்குப் போடப்பட்டிருக்கிறது. இதை கருத்திற்கொண்டு சரியான முறையில் நீதித்துறை விசாரணை செய்தால் உண்மைகள் வெளிப்படும்'' என்கிறார் கோபமாய்.

இதையொட்டி ஜெயில் சூப்பிரண்ட் பழனியிடம் பேச எவ்வளவோ முயன்றும் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால் கோவை சிறைத்துறை டிஐ.ஜி. கோவிந்தராஜ னிடம் பேசினோம். ""ஜெயில் சூப்பிரண்ட் பழனி மீது கூறப்படுபவை நூற்றுக்கு நூறு இட்டுக் கட்டப்பட்ட பொய்கள்தான். எஸ்.பி. பழனி, கைதிகளுக்கு பீடி சப்ளை செய்யும் போலீஸ்காரர்கள் மீது கூட நடவடிக்கை எடுத்த ஸ்ட்ரிக்ட் ஆபீசர். பிரகாஷ் என்ற கைதிகூட பீடி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் மரத்தின் மீது ஏறி தூக்குப் போட முயன்றான். சேலம் சிறையில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று... கைதிகள் சுகமாய் வாழ அல்ல சிறைச்சாலை. அவர்கள் திருந்தி வாழ்வதற்காகவே'' என்று ஜெயில் சூப்பிரண்டு பழனி மீதான புகார்களை உறுதியாய் மறுக் கிறார்.

இந்நிலையில் சிறையில் நடந்த சம்பவம் குறித்து அறிய மாவட்ட கூடுதல் நீதிபதி சதீஷ்குமார் தலைமையிலான குழு கோவை சிறைச்சாலைக்குள் சென்று கைதிகளிடம் நடந்த சம்பவங்களைக் கேட்டிருக்கிறது.

அந்தக் குழு சேலம் சிறைக்குள் நுழையுமே யானால்... போலீஸிடமிருந்து கைதிகள் முனுசாமியையும் ராஜராஜ சோழனையும் கூடவே மைதிலி போன்ற பெண்களின் மானத்தையும் ஒருசேரக் காப்பாற்றலாம்.

யுத்தம் 69 -நக்கீரன் கோபால்


இன்ஸ்பெக்டர் கோபால்சாமி கட்டுக் கட்டாக ஃபைல் களைத் தூக்கிக்கொண்டு வந்தார். அந்த ஃபைல்களை என் முன் இருந்த மேஜையில் வைத்தார். என் முகத்தை மறைக்கும் அளவுக்கு இருந்தது ஃபைல்களின் மொத்த உயரம். டி.எஸ்.பி. முகத்தில் லேசான புன்னகை. அவர்தான் கந்தவேலு கொலை வழக்கின் விசாரணை அதிகாரி.

மாணவன் பக்தவத்சலத்துக்கு முன்பாக வீரப்பனால் கொல்லப்பட்டவர் கந்தவேலு. பக்தவத்சலம் கொலை வழக்கு பற்றி நம்மிடம் தேவையில்லாமல் போலீசார் துருவித் துருவி விசாரித்தார்கள். ஆனால், என்னை சிக்கவைப்பதற்கான எந்தப் பிடிமானமும் கிடைக்காததால், கந்தவேலு விவகாரம் சம்பந்தமான ஃபைல்களை திடுமெனக் கொண்டு வந்தார்கள்.

""கந்தவேலை ஏன் கொன்னான்?'' -டி.எஸ்.பி. நாகராஜன் கேட்டார்.

""யாரு...''

""வீரப்பன்....'' -டி.எஸ்.பி.

""ஏன் கொன்னான்னு வீரப்பன்ட்டதாங்க கேட்கணும். ஏன்ட்ட கேட்டா...'' என்றேன்.

கேள்வியின் தொனி மாறியிருந்தது. பக்தவத்சலம் கொலை வழக்கு விசாரணையின் போது, நக்கீரன் மீதே கொலைப்பழி சுமத்துவதுபோல கேள்விகள் இருந்தன. கந்தவேலு பற்றி விசாரிக்கும்போது, அப்படியே மாற்றி எடக்கு மடக்கா கேள்வி....

போலீஸ் இன்பார்மர் என்பதுதான் கந்தவேலு மீது வீரப்பனுக்கு இருந்த சந்தேகம்னு டேப்புல சொல்லியிருந்தான்.. வீரப்பனின் வலதுகரமாக இருந்தவன் பேபிவீரப்பன். உறவினனான அவன் அடிக்கடி வீரப்பனிடம் சண்டை போட்டுக்கொண்டு, காட்டுக்குள்ளேயே இன்னொரு பகுதிக்குப்போய், தனியாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பான். கொஞ்ச நாள் கழித்து, சமாதான மாகித் திரும்பி வருவான். வீரப்பன் மீண்டும் தன்னுடன் சேர்த்துக்கொள் வான். இது அடிக்கடி நடக்கும்.



வீரப்பனைப் போலவே பேபி வீரப்பனையும் போலீஸ் பொறி வைத்துத் தேடிக்கொண்டிருந்தது. இந்த நிலைமையில்தான் வீரப்பனிடம் கோபித்துக்கொண்டு பேபி மீண்டும் தனியாக காட்டில் சுற்றிக் கொண் டிருக்கிறான் என்பதை போலீசார் மோப்பம் பிடித் திருக்கிறார்கள். தனியாக இருக்கும் பேபியைத் தீர்த் துக் கட்டும் அசைன்மென்ட் டை இன்ஃபார்மரான கந்த வேலுவிடம் ஒப்படைத்தார் களாம். கொடுத்த அசைன்மென்ட்டை சரியாக நிறைவேற்றி முக்கிய தளபதியான பேபி வீரப்பனின் கதையை முடித்தது கந்தவேலுதான் என்று வீரப்பனை நம்ப வைத்துள்ள னர். இந்தத் தகவல் வீரப்பனுக்குத் தெரியவந்ததும் அவன் தன் ஆட்கள் மூலம் நயமாகப் பேசி, கந்தவேலுவை தன் இடத் துக்கு அழைத்து வர ஏற்பாடு செய்திருக் கிறான். வந்ததும், கந்தவேலுவை அடித்து, கைகளைப் பின்புறமாகக் கட்டி, மண்டியிட வைத்து என்ன நடந்தது என விசாரித்திருக் கிறான் வீரப்பன். கடைசியில் சேத்துக்குளி கோவிந்தனிடம், கந்தவேலுவை சுட்டுக்கொல் லச் சொல்ல, அதை அப்படியே புகைப்படமாக பக்தவத்சலம் கொண்டு சென்ற கேமராவால் படம் பிடித்தும் விசாரணையை டேப்பில் பதிவு செய்தும் உள்ளனர். கந்தவேலுவை கட்டிப்போட்டு விசாரிப்பது தொடர்பான படங்களும் ஆடியோ கேசட்டும் நக்கீரனுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அவைகளை பார்த்தும் கேட்டும் அதிர்ச்சியடைந்தோம்.

வீரப்பன் மீண்டும் மிருகமாகிவிட்டான் என்பதை மக்களுக்கு அம்பலப்படுத்தும் விதத்தில், ""வீரப்பன் கோர்ட்டில் விசாரணை- ஆள்காட்டிக்கு மரண தண்டனை'' என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். காட்டுக்குள் புதைந் திருந்த உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்காகத்தான் கந்தவேலு வழக்கில் நக்கீரனையும் விசாரிக்கத் தொடங்கியது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். அதாவது கொடுமையை வெளியில் கொண்டு வந்ததற்கு பரிசுதான் இது.

""எப்போதும் அப்படித்தானே...'' ஆன்மீகப் போர்வை போர்த்திக்கொண்ட நித்யானந்தர், நடிகை ரஞ்சிதாவுடன் மோன நிலையில் இருந்ததை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது நக்கீரன். ஆன்மீகம் என்ற பெயரில் நித்யானந்தர் செய்த அக்கிரமத்தைப் பற்றிப் பேசாமல் இதையெல்லாம் பத்திரிகை யில் வெளியிடலாமா? கூடாதா? என்று விவா தங்கள் நடப்பதைப்போலத்தான், கந்தவேலு வை சுட்டுக்கொன்ற வீரப்பன் தரப்பை பிடிக்க வழியில்லாமல், அதனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த நக்கீரனுக்கு விசா ரணைக் குடைச்சல் கொடுத்தது போலீஸ்.

கந்தவேலு கொலை பற்றிய ஆடியோவும் ஃபோட்டோவும் நக்கீரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடியாக போலீசாரிடம் ஒப்படைத்து தகவல் தெரி வித்தோம். மடியில் கனம் இருந்தால்தானே, வழியில் பயப்படவேண்டும். ஃபைல்களை அடுக்கிவைத்துக்கொண்டு போலீசார் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர்களைவிட வேகமாக என்னிடமிருந்து பதில் வெளிப்பட்டது. அடுக்கிவைக்கப் பட்ட ஃபைல்கள் சரிவதுபோல, அவர்களின் பொய்க்குற்றச்சாட்டுகள் சரிந்தன. இந்தப் பொய் வழக்கை வைத்தும் கைதுக்கான வலையைப் பின்ன முடியாது என்பதை போலீசார் புரிந்து கொண்டார்கள். டி.எஸ்.பி. உள்பட எந்த அதிகாரியின் முகத்திலும் ஈயாடவில்லை. இறுக்கமாக இருந்தார்கள்.

சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தின் வாசலில் என்னை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் அத்தனை பேர் முகத்திலும் பதட்டம். அது மகிழ்ச்சியாக மாறப் போகிறதா, சோகமாகப் போகிறதா என்பதைத் தீர்மானிப்பதற்காக கடிகாரத்தின் முள் சுழன்று கொண்டிருந்தது.

சரியாக 3 மணி.


விசாரணை முடிவடையும் நேரம். வழக்கம்போல் கையெழுத்துப் போட்ட நான், விருட்டென எழுந்தேன். போலீசாரின் உத்தரவுக்காக காத்திருக்காமல் வாசலை நோக்கி அடியெடுத்துவைத்தேன். வெளியி லிருந்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்த நமது அட்வகேட் ப.பா.மோகன், கேட்டைத் தள்ளிவிட்டு ஓடி வந்தார். அவர் பின்னால் இருந்த நக்கீரன் தம்பிகளிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் உற்சாக குரல்.

உள்ளே வந்த ப.பா.மோகன், ""பி.பி. வந்தாரா? என்ன செஞ்சார்? உங்ககிட்டே ஏதாவது கேட்டாரா?'' -கேள்விகளை அடுக்கியபடியே இருந்தார். சார்.. ""பி.பி. இங்கே வந்து, உள்ளே உள்ள ரூமில் அதிகாரிகளோடு பேசிக்கிட்டிருந்தார். என்கிட்டே எதுவும் கேட்கலை.''

அதானே.. என்பதுபோல அவரது பார்வை இருந்தது. சட்டத் திற்குப் புறம்பான எந்த ஒன்றையும் அனுமதிப்பதில்லை என்பதில் அவர் கருப்புக் கோட் அணிந்த போராளி. அதனால்தான் அத்தனை சத்தியாவேசத்துடன் கேட்டார். நமக்காக வாதாடும், இல்லை போராடும் வழக்கறிஞர்கள் அனைவரும் இதே வகைதான்.

விசாரணை முடிந்து நான் வெளியே வருகிறேன். முதலில் கண்ணில் பட்டது அப்பாவின் டிரைவர் கணேசன். அந்தத் தம்பி கண்ணில்தான் எத்தனைப் பரவசம். அதையடுத்து, தம்பிகள் மோகன், ஜீவா, குண்டு பூபதி, முகவர்கள் தேவராஜ், பெரியசாமி, ஜூனியர் வழக்கறிஞர்கள் அனைவ ரையும் பார்க்கிறேன். எல்லோரிடமும் அதே பரவசம். பகலில் நட்சத்திரங் கள் மின்னுவதுபோல அப்படியொரு பிரகாசம் எல்லோர் முகத்திலும். பத்திரிகை சகோதரர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்.

10 நாளும் செய்தி சேகரிப்பி லும் அதை வெளியிடுவதிலும் அவர்கள் காட்டிய அக்கறை மனதி லேயே நின்றது. நன்றி சொன்னேன். அவர்கள் கைகுலுக்கினார்கள். உடனடியாக நம் அலுவலகத்திற்கு போன் செய்து, தம்பிகளிடம் பேசினேன். "அண்ணே...வெற்றி... வெற்றி..' என்ற குரல்கள் தம்பி களிடமிருந்து தொடர்ந்து கேட்டது.

சி.பி.சி.ஐ.டி அலுவலகத் தைச் சுற்றிலும் போலீஸ் வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. நடுமச்சி கம்பெனியிலிருந்து புறப்பட்ட அந்த 3 கார்களில் ஒன்று மதுரைக் கும் மற்றொன்று கோவைக்கும் கிளம்ப, பவானிக்குப் புறப்பட்ட வண்டியில் யாருக்கும் தெரியாத வகையில் நான், வழக்கறிஞர் ப.பா.மோகன், ஜீவா, குண்டு பூபதி ஆகியோர் புறப்பட்டோம்.

பவானியில் ப.பா.மோகன் சார் வீட்டில்தான் மதிய சாப்பாடு. அவரது துணைவியார் வினி அக்கா சாப்பாட்டை ரெடியாக வைத்திருந்தார். ""அக்கா.. சாப்பாட்டைப் போடுங்க'' என்றேன். நல்ல சோறு. பொறுக்கச் சாப்பிட்டேன். விசாரணை நடந்த நாட்களில் இப்படி பொறுமையாகவும் நிறைவாகவும் சாப்பிட்டதில்லை.

அங்கிருந்து புறப்படும்போது, அப்பாவிடமிருந்து போன். அவர் குரலில் அத்தனை தெம்பு தெரிந்தது. தம்பிகள் காமராஜ், குரு, பெருசு, சுரேஷ், லெனின், பிரான்சிஸ், ஆனந்த், கௌரி, சந்திரமோகன், பிரகாஷ், இளையர் மற்றும் அலுவலகத்திலுள்ள அனைத்து தம்பிகளும் லைனில் வந்தார்கள். போலீசாரின் பிடியில் சிக்காமல் நக்கீரன் மீண்டது பற்றி பிரஸ்ஸில் பேசிக்கொள்வதைத் தெரிவித்தார்கள். தம்பி லெனினுடைய அப்பா கோவிந்தராஜன் திருவாரூரிலிருந்து பேசினார். ஐயா சின்னக்குத்தூசி, தோழர் நல்லகண்ணு, சங்கொலி ஆசிரியர் க.திருநாவுக்கரசு வாழ்த்துச் சொன்னார்கள்.

எழுத்தாளரும் இயக்குநருமான திருவாரூர்பாபுவின் அப்பா இரா.விஸ்வ நாதன் தொடர்புகொண்டு, வெற்றிகரமாக விசாரணையை எதிர்கொண்டதற்கு வாழ்த்தும், நெருக்கடியான விசாரணை நாட்களுக்காக வருத்தமும் தெரிவித்தார். எல்லாத் தரப்பிலிருந்தும் போன்கால்கள் வந்தபடியே இருந்தன. பயண வழியெங்கும் பேசியபடியே வந்தேன்.

இரவு 3 மணி. சென்னை.

வீட்டுக்கு வருகிறேன். என்னைப் பார்த்ததும் அம்மா அழறாங்க.

""உன்னை இவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்காங்களே...'' -அவரது கண்ணீர் நிற்கவில்லை.

நான் அம்மாவை சமாதானப்படுத்தினேன். ""உண்மை நம்ம பக்கம் இருக்கு. அதனாலதான் அவங்களால எதுவும் செய்யமுடியல. நாம ஜெயிக்கணும்னு எவ்வளவோ நல்லவங்க வேண்டிக்கிறாங்கம்மா. யாரும் நம்மள ஒண்ணும் செய்ய முடியாது.''

அம்மா சமாதானமாக வெகுநேரமானது.

30-ந் தேதி. காலை 9.30 மணி.

ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அலுவலகம். 10 மணியாகும்போது, விசாரணைக்குப் போவது போன்ற பிரமை. என்னை நானே அதிலிருந்து விடுவித்துக்கொண்டு, தம்பிகளை அழைத்து விசாரணை நாட்களில் நடந்ததை விவரித்துக் கொண்டிருந்தேன்.

மதியம் 3 மணி. விசாரணை முடிந்து கிளம்புவது போன்ற பிரமை. போலீசின் நெருக்குதல் என்பது இயல்பு வாழ்க்கையை எந்தளவுக்கு பாதிக்கிறது என்பது பற்றி எத்தனையோ செய்திக் கட்டுரைகளை நக்கீரன் வெளியிட்டிருக்கிறது.

அதன் அனுபவப்பூர்வமான கசப்புணர்வுகளை நான் அப்போது உணர்ந்துகொண்டிருந்தேன்.

தம்பி காமராஜ் பரபரப்பாக என் அறைக்கு வந்தார்.

""அண்ணே... வைகோவை பொடாவில் கைது செய்ய எல்லா ஏற்பாடுகளையும் அரசாங்கம் ரகசியமா செய்துக்கிட்டிருக்குது. ஜெயலலிதாகிட்டேயிருந்து அறிவிப்பு வரப்போகுது ...''

உலக கோப்பை சொல்லும் உண்மை!


shockan.blogspot.com

""ஹலோ தலைவரே... .... உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் நெதர் லாந்தும் ஸ்பெயினும் மோதுவதால் உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உண்டாகியிருக்குது.''

""ஆமாப்பா... கால்பந்து ஜாம்ப வான்களான பிரேசில், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளெல்லாம் ரொம்ப சீக்கிரமா போட்டியிலிருந்து வெளியேறி விட, ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினாவும் ஜெர்மனியிடம் காலிறுதியில் பரிதாபமாகத் தோற்று வெளியேறிடிச்சி. நட்சத்திர வீரர்களான ரூனி, காகா, மெஸ்ஸி, போர்ச்சுகல் ரொனால்டோ உள்பட யாருமே இந்த டோர்னமென்ட்டில் சரியா ஜொலிக்கலை.''

""தலைவரே... இந்த டோர்னமென்ட்டில் தனி நபரோட திறமையைவிட டீம் ஒர்க்தான் ஜெயித்துக்கிட்டிருக்குது. அதற்கு சரியான உதாரணம், ஜெர்மனியும் ஸ்பெயினும் மோதிய அரையிறுதிப்போட்டிதான். அர்ஜென்டினாவுக்கு எதிரா 4 கோல் போட்ட ஜெர்மனி, ஸ்பெயினுக்கெதிரா ஒரு கோல்கூட போடமுடியாமல் தோற்றுப் போனது. அதற்கு காரணம், ஸ்பெயினோட டீம் ஒர்க்தான். இந்த அறையிறுதிப் போட்டியை டி.வி.யிலும் நேரடியாகவும் பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்களும் இதைத்தான் சொல்றாங்க. தன்னால்தான் கோல் விழணும்ங்கிற ஈகோ எதுவுமில்லாம, பந்தை ஒருத்தருக்கொருத்தர் பாஸ் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. யாருக்கு வாய்ப்பு இருக்குதோ அவங்ககிட்டே பந்தை தட்டிவிட்டு, கோல் போடும் முயற்சி நடந்தது. அதனாலதான் 70-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியால் வலிமையான ஜெர்மனியை எதிர்த்து கோல் போட முடிந்தது. அதுபோலவே, ஜெர்மனி வீரர்கள் கோல் போட முடியாதபடி ஸ்பெயின் வீரர்கள் ஒற்றுமையா தடுப்பாட்டம் ஆடினாங்க. இந்த டீம் ஒர்க்தான் ஸ்பெயினின் வெற்றி ரகசியம். அதேபோல இறுதிப்போட்டிக்குத் தேர்வாகியிருக்கும் இன்னொரு அணியான நெதர்லாண்ட்ஸின் வெற்றிக்குக் காரணமும் டீம் ஒர்க்தான்.''

""இது விளையாட்டுக்கு மட்டுமில்லப்பா.. எல்லா முயற்சிகளுக்கும் பொருந்தும். இதுதான் உலகக் கோப்பை கால்பந்து போட்டி சொல்லும் உண்மை. 11-ந் தேதி நள்ளிரவு நடக்கப்போகிற இறுதிப் போட்டியை பார்க்க உலகமே கண்விழிச் சிருக்கப் போகுது. இறுதிப் போட்டியில் மேலும் இரு அணிகளில் எது ஜெயிக்கும் என்ற பெட்டிங் செம சூடாக போய்க் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இந்த பெட்டிங் தொகை 1000 கோடி ரூபாயைத் தாண்டுகிறதாம்.''

""விளையாட்டுக் களத்தைவிடவும் தேர்தல் களம் ரொம்ப விறுவிறுப்பானது. சென்னைக்கு வந்து தேர்தல் ஆணையத்தின் கண்காட்சியைத் தொடங்கிவைத்த தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, தமிழக சட்டமன்றத் தேர்தலை எந்த நேரமும் நடத்துவதற்குத் தயாரா இருக்கோம்னு சொன்னார். முன்கூட்டியே தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராகி விட்டதுன்னுதான் அமைச்சர்கள்கிட்டேயும் அதிகாரிகள்கிட்டேயும் பேச்சு இருக்குது. எல்லாக் கட்சி எம்.எல்.ஏக்களும் சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரும்ங்கிற எதிர்பார்ப் பில்தான் இருக்காங்க.''

""முடிவெடுக்க வேண்டியவரான முதல்வர் என்ன மனநிலையில் இருக்காராம்?''

""அவரும் தேர்தல் பற்றித்தான் தீவிரமா யோசித்துக்கிட்டிருக்கிறார். எம்.எல்.ஏ. தேர்தலைப் பற்றியல்ல. எம்.எல்.சி. தேர்தலைப் பற்றி. மேலவை கூட்டம் நடைபெறப்போகும் இடத்தைப் பார்வையிடுவது, நியமன உறுப்பினர்களா யார் யாரைப் போடுவது, ஆசிரியர்- பட்டதாரி தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் எப்போது முடியும்ங்கிறது பற்றிய விவரங்களைச் சேகரிப்பதுன்னு மேலவை தொடர்பான அத்தனை விஷயங்களிலும் கவனம் செலுத்திக் கிட்டிருக்கிறார். 2010-ஆம் ஆண்டு முடிவதற்குள் ளாக மேலவை மீண்டும் உருவாக்கப்பட ணும்ங்கிறதில் கலைஞர் தீவிரமா இருக்கிறார்.''

""மேலவை அமைக் கப்பட்ட பிறகு, 2011 மே மாதத்தில் வரவேண்டிய பொதுத்தேர்தலை முன் கூட்டியே நடத்துறதுக்கு வாய்ப்பிருக்குதா?''

""முன்கூட்டியே தேர்தல் நடத்தணும்னு மாநில அரசு கோரினால், அதை தேர்தல் கமிஷன் ஏத்துக்கிட்டு தேர்தல் தேதியை ஃபிக்ஸ் பண்ணனும். இப்ப தலைமை தேர்தல் ஆணையரா இருக்கிற நவீன் சாவ்லா விரைவில் ரிடையர்டாகப் போகிறார். அவரோட இடத்திற்கு வர விருக்கும் குரோஷி, சென்னையில் கொடுத்த பேட்டியில், தமிழகத்தில் ஓட்டுக்கு அதிகப் பணம் தரப்படுது. அதை தடுக்கும் நடவடிக் கைகளில் ஈடுபடுவோம்னு சொல்லியிருந்தார். தேர்தல் தேதியை நிர்ணயிப்பது உள்பட எல்லா அதிகாரமும், தமிழக சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் குரோஷி கையில்தான் இருக்கும். முன்கூட்டியே தேர்தலை நடத்தி னால் தேர்தல் கமிஷனின் ஒத்துழைப்பு எந்தளவில் இருக்கும்ங்கிற சந்தேகம் இருப்ப தால, எதற்கு ரிஸ்க்குன்னு ஆட்சித்தலைமை நினைக்குது.''

""விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனோட தாயார் பார்வதியம்மாள் எப்ப விசா கேட்டு விண்ணப்பித்தாலும் அவருக்கு உடனடியா விசா கொடுக்கணும்னு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டிருக்கு தே... பார்வதியம்மாளின் உடல்நிலை இப்ப எப்படி இருக்குதாம்?''

""கடந்த சில நாட்களா அவரோட உடல்நிலை ரொம்ப சீரியஸா இருப்பதா வல்வெட்டித்துறை ஆஸ்பத்திரியிலிருந்து தகவல்கள் கசியுது. பார்வதியம்மாளை கவனித்துக்கொள்ளும் முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கத்துக்கிட்டே பேசினேங்க தலைவரே... .. திட உணவு எதையும் பார்வதி யம்மாளின் உடல் ஏற்க மறுக்குதுன்னும், திரவ உணவைக்கூட சாப்பிடுவதற்கு ரொம்ப சிரமப்படுறாருன்னும் சொன்னார். படுக்கையிலிருந்து எழுந்து உட்காரக்கூட முடியாத நிலையில் இருக்கும் பார்வதியம்மாளுக்கு, சிறுநீரகங்கள் வீங்கியிருப்பதா டாக்டருங்க சொல்றாங்களாம். வயிற்றில் புண் இருப்பதால் எந்த உணவு கொடுத்தாலும் வலி ஏற்படுதாம். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்துக்கிட்டிருந்தாலும், இந்த நெருக்கடியான நேரத்தில் தன்னோட உறவினர்களெல்லாம் கூட இல்லையேங்கிற மன உளைச்சலும் பார்வதியம்மாளோட உடல்நிலையை மோசமாக்கிக்கிட்டே போகுதாம்.''

""சென்னை ஹைகோர்ட்தான் விசா கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்குதே.. தமிழகத்துக்கு அழைச்சிக்கிட்டு வரலாமே?''

""அது பற்றியும் சிவாஜிலிங்கத்துக் கிட்டே கேட்டேங்க தலைவரே.. .. கனடாவிலிருக்கும் பார்வதியம்மாளின் மகளும் பிரபாகரனின் சகோதரியுமான வினோதினிக்கு தகவலைத் தெரிவித்திருப்ப தாகவும் அவர்கிட்டேயிருந்து வரும் பதிலை யடுத்துதான் இந்தியாகிட்டே மறுபடியும் விசா கேட்டு விண்ணப்பிக்கிறது பற்றி நாங்க முடிவெடுக்க முடியும்னு சொல்றார்.''

""தமிழ்நாட்டுத் தகவல்கள்?''

""தலைமைச் செயலக வட்டாரத்திலிருந்து ஒரு தகவல் சொல்றேன்.. செய்தித் துறையில் 12 பி.ஆர்.ஓ.க்களுக்கான இடங்கள் காலியா இருக்குது. ஏ.பி.ஆர்.ஓ.க்களில் சீனியாரிட்டிப்படி லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அதில் 12 பேருக்கு பி.ஆர்.ஓ. புரமோஷன் கொடுக்கப்பட்டிருக்குது. இப்படி புரமோஷன் பெற்றவர்களில் முதல்வர் அலுவலக ஏ.பி.ஆர்.ஓ.க்கள் 3 பேரும் அடக்கம். அதில் 2 பேர் செய்ற அலப்பரை தான் தலைமைச் செயலகத்தில் இப்ப பரபரப்பு டாக். புரமோஷன் விதிப்படி இவங்க வெளியிடங்களுக்குப் போகணும். ஆனா, சி.எம். அலுவலகத்திலேயே பி.ஆர்.ஓ.வா டேரா போட காய் நகர்த்திக் கிட்டிருக்காங்க. அதுமட்டுமில்லீங்க தலைவரே.. .. முதல்வர் அலுவலகத்திற்கான 4 ஏ.பி.ஆர்.ஓ போஸ்டிங்கை கேன்சல் செய்துட்டு, பி.ஆர்.ஓ. சீட்டை இரண்டாக உருவாக்கி, 2 பேரும் அதை ஆக்கிரமிக்கவும் காய் நகர்த்துறாங்களாம்.''

""இவங்க இவ்வளவு ஸ்பீடா செயல் படுவதற்கு என்ன பின்னணியாம்?''

""துணை முதல்வர் குடும்பத்தினர் பெயரைச் சொல்லிக்கிட்டுத்தான் இந்த இரண்டு பேரும் ஆட்டம் போடுறதா தலைமைச்செயலக அலுவலர்கள் சொல்றாங்க. பொதுவா, ஏ.பி.ஆர். ஓ. போஸ்டிங்கை கட்சிக்காரர்களுக்கு கொடுப்பது வழக்கம். அதையெல்லாம் கேன்சல் செய்தால், கட்சிக்காரங்களுக்கு கிடைக்குற வாய்ப்பு பறிபோகும். துணை முதல்வரின் குடும்பத் தினர் பெயரைச் சொல்லியே கட்சிக்காரர் களுக்கு வேட்டு வைக்கும் இந்த இரண்டு பூனைகளுக்கும் யார் மணி கட்டுறதுன்னு தெரியாம தலைமைச் செயலக வட்டாரம் தவிச்சிக்கிட்டிருக்குது.''

""சட்டமன்ற ஏரியா பற்றி சொன்னே... நாடாளுமன்ற பக்கம் போவோம். மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்னாடி மத்திய அமைச்சரவையில் மாற்றம் நிச்சயம்னும், தமிழகத்தைச் சேர்ந்த மந்திரிகளின் இலா காக்களும் மாறும்னும் டி.வி.யிலும் பேப்பரிலும் செய்திகள் வந்துக் கிட்டே இருக்குதே..''

""நேஷனல் மீடியாக்களில் இது சம்பந்தமான டிஸ்கஷன்தான் சீரியஸா ஓடிக்கிட்டிருக்குது. ராம்விலாஸ் பாஸ்வானும் அஜீத் சிங்கும் மந்திரிகளாகப் போ றாங்கன்னு செய்திகள் வந்தது. எனக்கு அப்படிப்பட்ட ஐடியாவே இல்லைன்னு பாஸ்வான் சொல் லிட்டார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அமைச்சர் ஆ.ராசா வின் இலாகாவை மாற்ற பிரதமர் முடிவு செய்து விட்டாருங்கிறதுதான் சேனல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பும் தகவல். மூப்பனார் சிலை திறப்பு விழாவுக்காக தமிழகம் வந்த பிரணாப் முகர்ஜி இது சம்பந்தமா கலைஞர் கிட்டே பேசி சமாதானப்படுத்திட்ட தாகவும்கூட சேனல்கள் ஒளிபரப்பின. அப்படி எதுவும் பேசப்படலை. ஆ.ராசாவின் இலாகாவை மாற்றுவதுங்கிற ஐடியா பிரதமருக்கோ சோனியாவுக்கோ இல் லைங்கிறதுதான் டெல்லியின் உண்மை யான நிலவரம். ஐ.பி.எல். சர்ச்சையால் பதவி விலகிய சசிதரூரின் இடத்துக்குப் போட்டி நிலவுது. அதைப் பிடிப்பதற்கு ஜெயந்திநடராஜன் ரொம்ப தீவிரமா மூவ் பண்ணுறார்.''

""7-ந் தேதி நடக்கவிருந்த பா.ம.க பொதுக்குழு, 9-ந் தேதிக்குத் தள்ளிப் போனதோட பின்னணி என்ன?''

""நாம ஏற்கனவே சொன்னது போல, அன்புமணி சிபாரிசு செய்கிறவர் களைத்தான் கட்சிப் பொறுப்பு களில் நியமிக்கிறாங்க. 6 மாவட்டங்களில் அதற்கான வேலைகள் முடியாமல் இருந் தது. அதை முடித்துவிட்டு பொதுக்குழுவைக் கூட்ட லாம்னு பா.ம.க தலைமை முடிவு செய்ததாலதான் இரண்டு நாள் தள்ளிப் போனது. கிளை அமைப்பு களில் எந்த மாற்றமும் வேண்டாம்னும், நகர-ஒன்றிய- மாவட்ட நிர்வாகத்தில் அன்புமணி சொல்கிறவர்களை நியமனம் செய்யணும்ங்கிறது தான் ராமதாஸின் முடிவு. கட்சியில் அன்புமணியின் முடிவுகளுக்கு எதிரா இருக் கக்கூடியவர் காடுவெட்டி குரு. அதனால, குரு ஏரியாவில் அவர் சொன்ன ஆட்களையே பொறுப்பாளரா போட்டுட்டாங்க.''

""அடுத்த மேட்டர்?''

""இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனியின் அவசரக் கல்யாணத்துக்கு என்ன காரணம்னு நம்ம நக்கீர னில் தெளிவா எழுதி யிருந்தாங்க. அதன் பின்னணியில் யார் இருந்தாங்க என்கிற விவ ரத்தை தெரிஞ்சுக்கிட் டேங்க தலைவரே.. .. தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஸ்து வெங்கட்ங்கிற வர்தான் பின்னணியில் இருந்திருக்கிறார். இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாச னோட ஆஸ்தான ஜோசியர். ஐ.பி.எல். ட்வென்ட்டி ட்வென்ட்டி போட்டியின் போது டோனி தலைமையி லான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டர், பவுலிங் ஆர்டரையெல்லாம் வாஸ்துப்படி இவர்தான் முடிவு செஞ்சாராம். அவராலதான் சென்னை சூப்பர்கிங்ஸ் கப் வாங்கியதா அதன் ஓனர் சீனிவாசன் நம்புறார். இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்கள் பலரும் இப்ப வாஸ்து வெங்கட்டை மொய்ச்சிக்கிட்டி ருக்காங்க. அவர்தான் டோனியின் எதிர்காலத்தைக் கணிச்சி, உடனடியா கல்யாணம் பண்ணணும்னு தேதி குறிச்சிக் கொடுத்திருக்கிறார். அதன்படியே கல்யாணம் நடந்திருக்குது.''

""நான் ஒரு தகவல் சொல்றேன்... கொடநாட்டிலிருந்து சென்னைக்கு ரிட்டர்ன் ஆயிட்டார் ஜெ. ஆனா, கோவையில் செம் மொழி மாநாடு தொடங்கிய ஜூன் 23-ந் தேதியன்னைக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கார் மூலம் கொடநாட்டுக்குப் போய் ஜெ.வை சந்தித்ததாக வும், கூட்டணி தொடர்பான பூர்வாங்க பேச்சுகளைத் தொடங்கிட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பலமான ரூமர்.''

மிஸ்டு கால்!



விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய வீடு இருக்கும் வல்வெட்டித்துறை பகுதியில் எம்.ஜி.ஆரின் சிலை இருந்தது. யுத்தத்துக்குப் பிறகு, இந்த இடத்தை ஆக்கிரமித்த சிங்கள ராணுவத்தினர், இந்த கைதானே புலிகளுக்கு பணம் கொடுத்தது என்று எம்.ஜி.ஆர். சிலையின் வலது கையை உடைத்தனர். தற்போது ராஜபக்சே அரசுக்கு எதிராக ஜெ.விடமிருந்து அறிக்கை வெளியானதும், முழுசிலையையும் உடைத்துப் போட்டுவிட்டதாம் வெறிகொண்ட சிங்கள ராணுவம்.



இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டிற்கு வேதாரண்யத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் 8-ந்தேதி பலியானார். நமது கடலோரக் காவல்படையோ, ""தமிழக மீனவர்கள் நம் எல்லையைத் தாண்டி, இலங்கை பகுதிக்குச் சென்று விடுகிறார்கள். அவர்களை இலங்கைப் படை சுடுகிறது. சுடவேண்டாம் என்று பலமுறை வலியுறுத்தியும் இலங்கை கடற்படை கேட்பதில்லை'' என்கிறது. இலங்கை எல்லையைத் தாண்டி சிங்கள மீனவர்கள் நமது எல்லைக்கு வரு வதும் அடிக்கடி நடக்கிறது. அப்படி வருபவர்களை கோர்ட்டில்தான் நமது படையினர் ஒப்படைக்கிறார்கள். சுட்டுக் கொல்வதில்லை. இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு கலைஞர் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், தி.மு.க. சார்பில் 10-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் மேலும் 42 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க் கைக்கு அனுமதியளித்திருக்கிறது அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில். இக்கவுன்சிலின் நெறிமுறைகளுக்குட்படாமலிருந்த இக்கல்லூரிகள், உயர்நீதி மன்றம் சென்று உத்தரவு பெற்றதால், கவுன்சிலில் உள்ள உறுப்பினர்கள், இக்கல்லூரிகளின் நிர்வாகிகளை வியாழனன்று டெல்லிக்கு வரவழைத்து, ஆவணங்களை சரிபார்த்து அனுமதியளித்திருக்கிறார்கள். ""கவுன்சிலில் இருப்ப வர்கள் 4பேர்தான். அவர்கள் தமிழகத்திற்கு வந்திருக்கலாம். கல்லூரி நிர்வா கத்தினர் கோர்ட்டுக்கு சென்றதால் கடுப்பாகி, அத்தனை நிர்வாகிகளையும் டெல்லிக்கு இழுத்தடித்து விட்டார்கள்'' என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

Saturday, July 10, 2010

திரிஷா கொடுத்த கவர்ச்சி விருந்து!


shockan.blogspot.com
இந்தியில் அக்ஷய்குமார் ஜோடியாக நடிக்கும் “காட்டா மீட்டா” படத்திலும் கமலுடன் நடிக்கும் “மன்மதன் அம்பு” படத்திலும் இதுவரை இல்லாத அளவு கவர்ச்சியாக தோன்றுகிறாராம் திரிஷா.
அத்துடன் “மேக்சிம்” என்ற ஆங்கில பத்திரிகைக்கும் வயிறு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது :

தென் இந்திய நடிகைகளுக்கு கவர்ச்சியை விட அழகு கூடுதலாக இருக்கும். புடவை மாடர்ன் டிரெஸ் எல்லாம் பொருந்தும். இந்திப்படங்களில் தென்னிந்திய நடிகைகள் நிறைய பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஏற்கனவே பாப்புலராக உள்ள நடிகைகள் இந்தி திரையுலகுக்கு வருவது எளிதாக உள்ளது. பொதுவாக காதல் காட்சிகளில் நடிப்பது என்பது கஷ்டமானது. படப்பிடிப்பு நடக்கும்போது சுற்றி நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் முன்னால் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது சுலபமானது அல்ல. எனவே தான் காதல் சீன்களில் நடிப்பதற்கு நான் ஒரு எல்லை வைத்து இருக்கிறேன்.

பிரியதர்ஷன்தான் என்னை இந்திக்கு கொண்டு வந்தார். “லேசா லேசா” படத்தில் என்னை அறிமுகம் செய்த வரும் அவர்தான். அக்ஷய்குமார் ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கவர்ச்சி நடிகைகளாக கருதுவது கரீனாகபூரையும், ஏஞ்சலினா ஜோடியையும்தான். ரஜினியும் கமலும் வெவ்வேறு துருவத்தில் திறமையானவர்கள். கமல் ஆரம்பத்தில் கடுமையாக தெரிவார். பழகியதும் ரொம்ப சகஜமாக ஆகி விடுவார். ரஜினி மக்களின் அபிமான கலைஞர் என்று கூறியுள்ளார்.

உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம். (படங்கள் இணைப்பு)

நேற்று முன்தினம் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர். இங்கு இன்னும் மறுமம் நிலவுகிறது. சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன.





Friday, July 9, 2010

நள்ளிரவு பூஜை! அலறும் மக்கள்!


திகில் கலந்த பதட்டத்தில் மூழ்கியிருக்கிறது மருங்காபுரி. அங்கிருக்கும் அய்யாவு குளத்தை நோக்கி சுத்துப்பட்டு கிராம மக்கள் உட்பட பலரும் கவலை முகத்தோடு சாரிசாரி யாகப் படையெடுக்க... ஊர் முழுக்க இறுக்கமான இறுக்கம். அப்படி என்னதான் நடக்கிறது அங்கே?

திருச்சியில் இருந்து துவரங்குறிச்சி செல் லும் வழியில் இருக்கும் ஊர்தான் மருங்காபுரி. இந்தப் பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் ஜமீன்தார் குடும்பங்களின் கட்டுப்பாட்டின் கீழ் 16 கோயில் குளங்கள் இருக்கின்றன. இந்த ஜமீன்தார் குடும்பங்களை முன்னிலைப்படுத்திதான்... இந்தக் கோயில்களின் திருவிழாக்கள் நடப்பது வழக்கம்.

இந்தக் கோயில்களின் வரிசையில் இருக் கும் பகவதியம்மன் கோயிலும் இந்தக் கோயிலுக் கான அய்யாவு குளமும்... மகேஷ் ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இத்தகைய அய்யாவு குளத்தை நோக்கித்தான் மக்களின் கவலையான படையெடுப்பு.

நாமும் அய்யாவு குளத்துக்குச் சென்றோம். தண்ணீர் இன்றி வறண்டிருந்த இந்தக் குளத்தின் மையத்தில் ஒரு குடிநீர்க் கிணறு. அதன் அருகே ஒரு மனிதத் தலை உருவம் செய்துவைக்கப்பட்டு... அதற்கு பூ, பழம், பொறிகடலை, எலுமிச்சை போன்றவை வைத்து பூஜை நடத்தப்பட்டிருந்தது. அதன் அருகே மனித உருவம் ஒன்று காகிதத்தில் ரத்தத்தால் வரையப் பட்டு... திகில் எஃபெக்ட் கூட்டப்பட்டிருந்தது.

""யாருக்கும் தெரியாம நள்ளி ரவில் பூஜை நடத்தியிருக்காங்க. எங்க ஊர்ப் பெண்கள் அதி காலை 5 மணிக்கு வழக்கம் போல் தண்ணீர் எடுக்க இங்க வந்திருக் காங்க. அவங்கதான் இந்த மனிதத் தலை உருவத்தையும் அதுக்கு பூஜை நடத்தப்பட்டிருப்பதையும் பார்த்துட்டு... பதறிப்போய்... ஊருக்குள்ள ஓடிவந்து சொன் னாங்க. அதுக்குப் பிறகுதான் பூஜை விஷயமே எங்களுக்கு தெரியவந்தது. எங்க ஊருக்கு ஏதோ கெட்டது நடக்கப்போவுதுன்னு தெரியுது. மன செல்லாம் படபடன்னு அடிசிச்கிது''’என்று பரபரப்பாக சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.


நம்மிடம் திகில் விலகாமல் பேசிய சங்கர் கணேஷ், ""இது ரொம்ப சக்திவாய்ந்த குளம்ங்க. இந்தக் குளத்தில் இருக்கும் கிணத்துத் தண்ணீர் தான் எங்களுக்குத் தாய்ப்பால் மாதிரி. எங்களுக்கு குழாய்த் தண்ணீர் இருந்தாக் கூட இந்தக் குளத் துத் தண்ணியைத்தான் குடிப்போம். இதில்தான் சமைப்போம். இது காலா காலமா இப்படிதான். இந்தக் கிணத்துக்கிட்ட இப்ப யாரோ ஏதோ மர்மமா நள்ளிரவில் பூஜை பண்ணியிருக்காங்க. அதனால் இந்தக் கிணத்து நீரே ரத்தமா மாறிக்கிட்டு இருக்கு. தண்ணியோட நிறத்தைப் பார்த்தீங்களா?''’என்று லேசாக ’செம்புலப் பெயல் நீர்போல் தெரிந்த தண்ணீரைக் காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட விக்னேஷ் என்ற சிறுவன், ""அண்ணே.. பாப்பாத்தியக்காவுக்கு சாமி வந்துச்சுல்ல.. அதையும் சொல்லுண்ணே'' என் றான் தவிப்பாக.

""நீ சின்னபிள்ளைடா... நாங்க விபரமா சொல்றோம்'' -என்று அவனை ஓரம்கட்டிவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்த போதையம்மாளும் அழகம்மாளும்... ’""இந்த அய்யாவுகுளத்தைச் சுத்தி பகவதியம்மன், மீனாட்சி சுந்தரம், தொட்டதச்சி பாப்பாத்தி அம்மன்னு ஐந்து சாமிகள் இருக்கு. இதுகளுக்கு பங்குனி மாசத் திருவிழாவை ஏக சிறப்பா நடத்துவோம். 20 ஆயிரம் பேருக்கு மேல காப்புகட்டி, இந்தக்குளத் தில் குளிச்சி, அலகு குத்திக்கிட்டு போறதே கண்கொள்ளாக் காட்சி.. இதைப் பொறுக்க முடியாமதான் எங்க பகவதியம்மனைக் கடத்தப் பாக்குறாங்க''’என்றார் துயரம் பொங்க.

பகவதியம்மனைக் கடத்தப்பாக்குறாங் களா? யார் சொன்னது?’ என கிறு கிறுத்துப்போய் நாம் கேட்க... ஆறு முகம் என்பவரோ ""மூணு கி.மீ.தூரத் தில் இருக்கும் வண்ணாங்குளத்தில் நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தூர்வாரும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. அப்ப பாப்பாத் திங்கிற பொண்ணுக்கு திடீர்னு அருள்வந்து டுச்சி. அப்ப... அது... "என்னை திருச்சிக்கார சாமியார் ஒருத்தன் மூணு வருஷத்துக்கு முன்பே கடத்தப் பார்த் தான். அப்ப அவன் மனைவி செத்துப்போன தால் பாதியில் ஓடிட்டான், இப்ப அவன் மீண்டும் என்னை கடத்திக்கிட்டுப்போக வந்திருக்கான். முதல் கட்டமா ஊரின் எல்லைத் தெய்வங்களை மந்திரத்தால் கட்டிவச்சிட்டான். இப்ப என்னைக் கடத்த நள்ளிரவு பூஜையெல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டான். அதனால் நான் மொட்டைமலை யில் இருக்கும் என் அண்ணன் அருணகிரி மலை யாண்டியிடம் சென்றுவிட்டேன்'னு அருள்வாக்கு சொல்லி சாமியாடிச்சி. அதனால்தான் ஊரே இப்ப திகில்ல இருக்கு. பகவதியம்மனை கடத்தாமத் தடுக்க... எங்க ஜமீன்தார் இப்ப தீவிர முயற்சியில் இருக்கார்''’என்று மேலும் தலைக்குள் விர்ர்ர்ரை உண்டாக்கினார்.

அடுத்து ஜமீன்தார் மகேஷை... அவரது பங்களாவில் சந்தித்தோம். முதலில் பேச மறுத்தவர்... பின் வாய்திறந்தார். ""நாங்க ஒருவித திகிலில் இருக் கோம். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண... வழக்கமா நாங்க குறிகேட்கும் சாமியார்கிட்ட ரெண்டுபேரை அனுப்பிவச்சேன். அப்பதான் பாப்பாத்திங்கிற பொண்ணு மேல சாமி வந்திருக்குன்னு சொன்னாங்க. நான் அங்க ஓடிப்போய்... "நீ உண்மையான சாமின்னா... நான் குறிகேட்க யார்யாரை அனுப்பிவச்சேன்னு அவங்க பேரைச்சொல்ல முடியுமா'ன்னு கேட்டேன். கரெக்டா அவங்க பேரைச் சொல்லிடிச்சி. அப்ப பகவதியம்மன்தான் வந்திருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு பரிகாரம் கேட்டேன். அது சொன்னபடி பூசாரி மூர்த்தி மூலம் பரிகாரத்தையும் பண்ணப்போறேன்''’என்றார் ஜமீன்தார்.

அடுத்து நாம் ஆஜரானது பூசாரி மூர்த்தியிடம். பூசாரியோ ""இதெல்லாம் ஆன்மீக ரகசியம். இருந் தாலும் சொல்றேன். குளத்தில் இருக்கும் மாந்திரப் பொருட்களையெல்லாம் எடுத்து... மாந்திரீகக் கட்டுக்களை அவிழ்த்து முதல்ல காவல் தெய்வங்களை விடுதலை செய்வோம். அப்புறம் அந்த மாந்திரப் பொருட்களையெல்லாம் தகனம் பண்ணி, மதுரை கள்ளழகர் கோயிலின் 18-ம் படிக்கட்டில் வைத்து... கரைத்து தீர்த்தம் ஆக்கி... அதை எடுத்துவந்து ஒவ்வொரு வீட்டு முன்னயும் பக்தியோடு தெளிச்சி... ஊரை சுத்தப்படுத்துவோம். பிறகு சாமியை யாரும் கடத்தாதபடி காப்புக் கட்டுவோம்''’என்றார் கண்களை மூடியபடி.

மக்களும் நம்பிக்கை யோடு காத்திருக்கிறார்கள்.

துரத்திய தோழர்கள்! சிக்காத விஜயகாந்த்! ஒதுங்கிய ஜெ.!


shockan.blogspot.com

""ஹலோ தலைவரே... .... பெட்ரோல் விலை உயர்ந்தால் எல்லா விலையும் உயர்ந்திடும். மக்கள் தலை யில்தான் சுமை ஏறும். அதனால்தான் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து 5-ந் தேதி நாடுமுழுக்க பொதுவேலை நிறுத்தம் நடந்தது.''

""பா.ஜ.க ஒரு பக்கமும், இடதுசாரிகள் இன்னொரு பக்கமும் அணி அமைத்து ஒரே நாளில் நடத்திய வேலை நிறுத்தப்போராட்டம் இந்தியா முழுக்க மக்கள் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டிருந்தாலும், தமிழ்நாட் டில் அது தேர்தல் பிரச்சினையா தெரிந்ததைக் கவனித்தியா?''

""கவனிச்சேங்க தலைவரே.. ... தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரா ஒரு வலுவான அணி உருவாகியிருப்பதை இந்த வேலைநிறுத்தம் மூலம் காட்டணும்ங்கிறதில் அ.தி.மு.க.வைவிட கம்யூ னிஸ்ட்டுகள் அதிக அக்கறையோடு செயல்பட்டாங்க. இதற்காக சி.பி.எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும், சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் தா.பாண்டியனும் போட்டி போட்டுக்கிட்டு விஜயகாந்த்தை ஞாயிற்றுக் கிழமை வரைக்கும் தொடர்புகொள்ளும் முயற்சியிலே இருந்தாங்க. ஆனா, விஜயகாந்த் இவங்களோட லைனுக்கே வரலை.''

""சில மாதங்களுக்கு முன்னாடி நடந்த அகில இந்திய வேலை நிறுத்தத்தின்போதுகூட எதிர்க்கட்சிகளோடு விஜயகாந்த் கை கோர்க்கலையே?''

""அந்த சமயத்தில், தே.மு.தி.க.வையும் சேர்த்துக் கிட்டுப் போராட்டம் நடத்துவோம்னு ஜெ.கிட் டே தோழர்கள் சொன் னப்ப, அதெல்லாம் வேண்டாம்னு ஜெ பட் டெனச் சொல்லிட்டார். அதனால இந்த முறை ஜெ.வின் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டு போகாமல், தோழர்களே விஜயகாந்த்தை தொடர்பு கொள்ள முயற்சித்தாங்க. பிடிக்க முடியலை. ஆனாலும் அவங்க விட்டுடலை. விஜயகாந்த்தோடு யார், யார் பேசிக்கிட்டிருக்காங் களோ அவங்க மூலமா தொடர்பு கொள்ளலாம்னு முயற்சி எடுத்தாங்க. அப்படியும் விஜயகாந்த்தைப் பிடிக்க முடியலை. ரொம்ப அப்செட்டான தோழர்கள், இப்பவே இப்படின்னா, நாளைக்கு அதிகாரத்துக்கு வந்துட்டா எப்படி இவரைத் தொடர்புகொள்ள முடியும்னு தங்களுக்குள்ளே பேசிக்கிட்டாங்க.''

""வேலைநிறுத்தத்தில் தே.மு.தி.க கடைசிவரை கலந்துக்கலையே... விஜயகாந்த்தோட வியூகம் என்ன?''

""அவரைப் பொறுத்தவரைக்கும் இப்போதைக்கு அ.தி.மு.கவோடோ அதனோடு கூட்டணியில் இருக்கிற கட்சிகளோடோ கைகோர்த்து போராட்டம் நடத்துவதா இல்லை. எந்த அணியில் தே.மு.தி.க இடம்பெறப்போகுதுங்கிறதை தேர்தல் நேரத்தில் முடிவு பண்ணிக்கலாம்னும் அதுவரைக் கும் எந்தப் பக்கம்னு காட்டிக்க வேணாம்ங்கிறது தான் விஜயகாந்த்தோட முடிவு. பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு இதையெல்லாம் எதிர்த்து தே.மு.தி.க சார்பில் தனியா ஒரு தேதியில் போராட்டம் நடத்தலாமான்னு தன் கட்சி நிர்வாகிகளோடு விஜயகாந்த் ஆலோசனை செய்துக்கிட்டிருக்கிறார்.''

""எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வே வேகம் காட்டலையே?''

""தீவிரம் காட்ட வேணாம்ங்கிறது கொடநாட்டிலிருந்து கட்சிக்காரர்களுக்கு கிடைத்த இன்ஸ்ட்ரக்ஷன். மறியல் போராட்டம் நடத்தி யாரும் கைதாக வேண்டியதில்லைன்னு சொல்லப் பட்டதால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒதுங்கியே இருந்தார்கள். ஜூலை 13-ந் தேதி. செம்மொழி மாநாடு நடந்த கோவையில் ஜெ தலைமையில் அ.தி.மு.க நடத்தும் போராட்டத்தில் கட்சிக்காரர்கள் பெருமளவில் கலந்துக்கணும்ங்கிற வியூகத்தோடு போராட்ட ஏற்பாடுகள் நடந்துக்கிட்டிருக்குது.''

""செம்மொழி மாநாடுன்னு சொன்னதும், மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றுவது தொடர்பா முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம்தான் ஞாபகத்துக்கு வருதுப்பா.. என்ன ஆலோசிக்கப்பட்டதாம்?''


""முதல்வர் தலைமையில் மாநில அளவில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும் கலந்துக்கிட்டார். அவர் பொதுவா, ஆலோசனைக்கூட்டங்களுக்கு வரமாட்டார். இந்தக் கூட்டத்தையும் அவர் தவிர்க்கப் பார்த்தார். ஆனா, கலைஞர்தான் வரச்சொல்லி வலியுறுத்தினாராம். கனிமொழியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கிட்டார். தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதற்கான சட்டமுன்வடிவைக் கொண்டுவருவது பற்றித்தான் முக்கியமா ஆலோசிக்கப்பட்டிருக்குது.''

""மாநாட்டு முடிவுகளில் முக்கியமான முடிவும் இதுதானே?''

""இதில் பல சட்டச் சிக்கல்கள் இருப்பதை ஆலோசனையின்போது சுட்டிக்காட்டியிருக்காங்க. ஏற்கனவே, பட்டதாரிகளே இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் முதல்முறையாக கல்லூரியில் சேரும்போது அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் கொடுத்து இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியபோது, அதை எதிர்த்து சிலர் கோர்ட்டுக்குப் போய் தடை வாங்கிட்டாங்க. அதுபோல, தமிழில் படித்தவர் களுக்கு வேலையில் முன்னுரிமைங்கிற சட்டத்திற் கும் கோர்ட்டுக்குப் போய் தடை வாங்கக்கூடும்ங் கிறதால, எந்த சிக்கலும் தடையும் இல்லாமல் சட்டத்தை நிறைவேற்றுவது எப்படின்னு முதல் கட்ட ஆலோசனை நடந்திருக்குது.''

""நம்ம நக்கீரன் ஏற்கனவே சொன்னபடி ஜூலை 3-ந் தேதி கலைஞரை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்தாரே... என்ன ஆலோசனை நடந்ததாம்?''


""ஆலோசனை நடப்பதற்கு முதல்நாளே, வட இந்திய மீடியாக்களெல்லாம் பிரணாப் முகர்ஜியின் விசிட் ரகசியம்னு வழக்கம்போல் பரபரப்பை உண்டாக்கிடிச்சி. மத்திய அமைச்சரவையில் இலாகா மாற்றம் நடக்கப்போவதாகவும், தகவல்-தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் இலாகாவை மாற்ற பிரதமர் முடிவெடுத்து விட்டதால, கலைஞரை சந்தித்து கன்வின்ஸ் செய்வதற்காகத் தான் பிரணாப் முகர்ஜி வர்றாருன்னும் 2-ந் தேதி முழுக்க பரபரப்பு கிளப்பப்பட்டது.''
""கலைஞரும் பிரணாப் முகர்ஜியும் உண்மையில் என்ன பேசினாங்களாம்?''

""நம்ம நக்கீரன் முன்கூட்டியே சொன்ன சப்ஜெக்ட்டில் தான் பேச்சு தொடங்கியிருக்குது. அதாவது, செம்மொழி மாநாட்டில் கலந்துக்கிட்டதுக்காக பிரணாப்புக்கு கலைஞர் நன்றி சொல்ல, பிரணாப்போ.. மாநாட்டில் கலந்துக்கிட்டது எனக்கு கிடைத்த பாக்கியம். கலந்துக் காம போயிருந்தா ஒரு நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணியிருப் பேன்னு சொல்லி யிருக்கிறார். பொது வான அரசியல் நிலைமைகளையும் இரண்டுபேரும் பேசியிருக்காங்க. அதற்கப்புறமா, சாதிவாரி கணக் கெடுப்பு பற்றி பேச்சு வந்திருக்குது. இந்த விஷயத்தை தள்ளிப்போட லாமாங்கிறதுதான் காங்கிரசோட நிலை. அதனால, கலைஞரை கன்வின்ஸ் செய்யும் தொனியில் பிரணாப் பேச, கணக்கெடுப்புத் தேவைன்னு உறுதியா சொல்லிட் டாராம் கலைஞர்.''

""ம்...''

""அதுபோலவே, மாநில அரசு களிடம் உள்ள வரிபோடும் உரிமையை மத்திய அரசு கையில் எடுப்பதற்கு தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் ஏற்கனவே கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அந்தப் பிரச்சினையிலும் மத்திய அரசின் நிலைக்கு சாதகமா பிரணாப் முகர்ஜி பேசிய போதும், கலைஞர் பிடிகொடுக்கலையாம்.''

""நான் ஒரு தகவல் சொல்றேன். கொடநாடு டீ ஃபேக்டரி, ஹெலிபேடு எனத் தொடர்ச்சியாக சிக்கல்கள் ஏற்பட்டு வர்றதால, அங்கே இருக்கும் முனியப்பர் கோயிலில் கிடாவெட்டி, 500 பேருக்கு சாப்பாடு போடப்பட்டிருக்குது. சாப்பிட்டவங்களுக் கெல்லாம் ஸ்வீட், வாழைப்பழம்னு சைவ அயிட்டங்களை ஜெ.வே பரிமாறினாராம்.''

மிஸ்டு கால்!



பா.ம.க.வின் மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்ட- ஒன்றிய நிர்வாகிகளில் பெருமளவில் மாற்றம் நடைபெறவுள்ளது. அன்புமணி சிபாரிசில் அதிகம் பேர் புதிய பொறுப்புக்கு வரவிருப்பதால், 7-ந் தேதி நடைபெறவிருக்கும் மாநிலப் பொதுக் குழுவை பதட்டத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இப்போது கட்சிப் பொறுப்புகளில் இருக்கும் பா.ம.க.வினர்.

பகுஜன் சமாஜ்கட்சி மாநிலத் தலைவரான எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய தலைவராக ஆம்ஸ்ட்ராங் நியமிக்கப்பட்டிருக்கிறார். தி.மு.க.வின் ஆலோசனைப்படிதான் எம்.எல்.ஏ பதவியை செல்வம் ராஜினாமா செய்யவில்லை என்றும், மேலவை தீர்மானத்தில் ஆதரவாக வாக்களித்தார் என்றும், ப.சி. மூலமாக காங்கிரசில் சேர முயற்சிக்கிறார் என்றும் செல்வப்பெருந்தகை மீது கட்சித்தலைமையிடம் ஆம்ஸ்ட்ராங் சுமத்திய 3 குற்றச்சாட்டு களே நீக்கத்திற்கு காரணம் என்கிறார்கள் கட்சியினர். செல்வப் பெருந்தகையோ, நான் ஏற்கனவே கட்சியின் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கிவிட்டேன். இப்போது பெயருக்கு நடவடிக்கை என அறிவித்துள்ளார்கள் என்கிறார்.

தி.க.தலைவர் கி.வீரமணியின் வீட்டில் நின்ற கார் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக பெரியார் தி.க.வைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியார் தி.க.வைச் சேர்ந்த திருவாரூர் தங்கராசுவின் கார் சில நாட்களுக்கு முன் தாக்கப் பட்டதற்கு பதிலடியாகத்தான் வீரமணியின் கார் தாக்கப் பட்டதாம்.

ஐந்து நாட்களுக்கும் மேலாக, தன் அலுவலகத்திற்குள் நுழைய முடியாமல் இருக்கிறார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ராமநாதன். காரணம், பதிவாளர் ரத்தினசபாபதிக்கும் இன்ஜினியரிங் கல்லூரி டீனுக்கும் பதவி காலத்திற்குப் பிறகும் தொடர்ந்து பணி நீட்டிப்பு கொடுத்து வந்தார். இதனால் முறைப்படி பொறுப்புக்கு வர வேண்டியவர்கள் பாதிக்கப்படவே, பல்கலையின் ஆசிரியர்கள் ஊழியர்களின் 7 சங்கங்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு போராட்டம் நடத்தி துணைவேந்தரின் அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

வேலூர் மண்டலம்! 36 தொகுதி! எந்த கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு?




தமிழகத்தின் அரசியல் சூழலும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அது எப்படி எதிரொலிக்கும் என்பதையும் கடந்த இதழ் முதல் வெளியிட்டு வருகிறது உங்கள் நக்கீரன். வாசகர்களிடமும் அரசியல் மட்டத் திலும் பெரும் தாக்கத்தை உருவாக்கியிருக்கும் இந்த கள ஆய்வுகள், தமிழகத்தை 9 மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்தின் நிலவரத்தையும் வழங்கி வருகிறது. கடந்த இதழில் சென்னை மண்டலத்திற் குட்பட்ட 24 தொகுதிகளில் கட்சிகளின் நிலவரம், மக்களின் மனநிலை, முடிவுகளை மாற்றக்கூடிய அடிப்படை பிரச்சினைகள் ஆகியவை வெளியிடப் பட்டன. அத்துடன், மாநிலம் தழுவிய அளவில் நகரங்களிலும் கிராமங்களிலும் ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதையும் தெளிவாக அளித்திருந்தோம். இந்த இதழில்....


வேலூர் மண்டலம்




பழைய வடாற்காடு மாவட்டமே வேலூர் மண்டலத்தின் பிரதான பகுதியாகும். அத்துடன், காஞ்சி மாவட்டத்தின் ஒரு பகுதியும் இம்மண்டலத்திற்குள் வருகிறது. குறிப்பாக, பாலாற்றுப் பாசனப் பகுதிக்குட்பட்ட பகுதிகளே இந்த மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர் ஆகிய 6 நாடாளுமன்றத் தொகுதிகள் இதனுள் அடங்குகின்றன. இந்த 6 நாடாளுமன்றத் தொகுதி களுக்குட்பட்ட செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், செங்கல்பட்டு, உத்திரமேரூர், காஞ்சிபுரம், கும்மிடிப் பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், அரக்கோணம், திருத்தணி, காட்பாடி, சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம், திருவண்ணாமலை, கீழ்ப் பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி, செஞ்சி, மயிலம், வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 36 சட்டமன்றத் தொகுதிகளும் வேலூர் மண்டலத்திற்குள் வருகின்றன.

இந்த மண்டலத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்கு பலம், வரைபடத்தின் வாயிலாக விளக்கப்பட்டுள்ளது.

வேலூர் மண்டலத்திற்குள் அடங்கிய வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களி லும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதி யிலும் கிராமப்புறங்கள் அதிகமிருந்தும் இங்கு அ.தி.மு.க.வைவிட தி.மு.க பலம் மிகுந்ததாக உள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசும் குறிப்பிடத்தக்க செல்வாக்குடன் திகழ்கிறது. தி.மு.க.வின் இந்த செல்வாக்கிற்கு காரணம், ஆட்சியின் திட்டங்களும் தி.மு.க வின் மாவட்டப் புள்ளிகளின் தனிப்பட்ட செல்வாக்கும்தான் என்கிறார்கள் வேலூர் மண்டல அரசியல்வாதிகள். அ.தி.மு.க.வின் பலம் வாய்ந்த தலைகளெல்லாம் சோர்வடைந் திருப்பதாகக் கூறும் அவர்கள், திருவண்ணா மலையில் மட்டும் அ.தி.மு.க.வில் 20 கோஷ்டி கள் இருக்கிறது என்கிறார்கள். அ.தி.மு.க.வை பலப்படுத்தும் முயற்சி களை அதன் தலைமை ஒழுங்காக ஒருங்கிணைக்கவில்லை என்ற வருத்தம் அக்கட்சிக்காரர்களிடமே இருப்பதை கள ஆய்வின் போது காண முடிந்தது.

இந்த மண்டலத்தில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வன்னியர் சமுதாயத்தினரின் வாக்கு பலமே முன்னணியில் உள்ளது. எனினும் பா.ம.க.வின் வாக்குபலம் ஒற்றை இலக்க சதவீதத்திலேயே இருப்பது கள ஆய்வில் ஆச்சரியமளித்த தகவலாகும். வேலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில தொகுதிகளில் பா.ம.க வலிமையாக உள்ளது. அதே நேரத்தில், திருவண்ணா மலை மாவட்டத்தைப் பொறுத்தவரை வன்னியர்கள் மிகுந்துள்ள பகுதிகளில் 70 சதவீதத்தினர் தி.மு.க ஆதர வாளர்களாக உள்ளார்கள். கிராமப்புறங்களில் பா.ம.க.வை வளர்ப்பது என்கிற அக்கட்சியின் புதிய திட்டம் சரிவர நடைமுறைப்படுத்தப்பட்டால் , கட்சியின் வளர்ச்சி நிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். பா.ம.க இருக்கும் கூட்டணியே வெற்றிக்கூட்டணி என்று அக்கட்சித் தலைமை முந்தைய தேர்தல்களில் சொல்லி வந்த நிலைமை தற்போது இல்லை என்பதே கள நிலவரம்.

வன்னியர் சமுதாயத்தினருக்கு அடுத்தபடியாக அதிகமாக இருப்பவர்கள் தலித் மக்கள். காங்கிரசுக்கும் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க.வுக்கும் வலு வான வாக்கு வங்கியாக இருந்த தலித் மக்களின் அரசியல் நிலைப்பாடு தற்போது பெருமளவு மாறியிருப்பதைக் காண முடிகிறது. விடுதலைச் சிறுத்தைகளின் கொடி தலித் பகுதிகளில் பறக்கிறது என்றாலும், இப்பகுதிகளில் புதிய செல்வாக்குப் பெற்றிருக்கும் கட்சியாக தே.மு.தி.க விளங்கு கிறது. குறிப்பாக, கிராமப் புற-தலித் பெண்களிடம் தே.மு. தி.க.வின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

இம்மண்டலத்தில் மூன்றாவது முக்கிய சக்தியாக விளங்குவது, முஸ்லிம் சமுதாயத்தினரின் வாக்குகள். குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் பலம் வாய்ந்துள்ள சிறுபான்மையினரின் வாக்குகளில் பெரும்பாலானவை தி.மு.க ஆதரவு நிலையிலேயே உள்ளன. அ.தி.மு.க கூட் டணி சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படும் தொகுதி களில் மட்டுமே இந்த வாக்குகளில் மாற்றம் ஏற்படும் வாய்ப் புள்ளது.

இங்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை முதலியார் சமுதாயம் கொண்டிருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ் இந்த மூன்று கட்சி களுக்கும் இவர்களின் வாக்குகள் பிரிகின்றன. இவற்றில் தி.மு.க.வும் அ.தி.மு.கவும் இந்த வாக்குகளைப் பெறுவதில் சமபலத்துடன் இருக் கின்றன.

வேலூர் மண்டலம் விவசாயம், தொழில் இரண்டையும் சார்ந்த பகுதியாகும். பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகட்டும் முயற்சியைத் தடுப்பதில் தி.மு.க அரசு முனைப்பாகச் செயல் படவில்லை என்கிற விவசாயிகளின் கருத்தும், அதற்கு ஆதரவான எதிர்க் கட்சிகளின் போராட்டமும் ஆளுங்கட்சிக்கும் கூட் டணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. அதுபோலவே, பாலாற்றின் வயிற்றைச் சுரண்டு வதுபோல வாரி எடுக்கப்படும் மணல் விவகாரம் இன்றைய- முந்தைய ஆளுங்கட்சிகள் இரண்டுக்குமே விவசாய மக்களிடம் எதிர்ப்பான மன நிலையை உருவாக்கியுள்ளது.

ராணிப்பேட்டை தொழிற்பேட்டை, ஆம்பூர் தோல் தொழிற்சாலை உள் ளிட்டவற்றின் கழிவுகள் பாலாற்றுப் படுகையில்தான் கலக்கின்றன. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள் ளது. இந்த சுற்றுச்சூழல் சிக்கலைக்களைவதற்கு உறுதியான நடவடிக்கை எதையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்ற அதிருப்தி பொதுமக்களிடம் உள்ளது.

திருப்பத்தூர், நாட் ராம்பள்ளி, வாணியம்பாடி ஆகியவற்றை உள்ளடக்கிய தனி மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அ.தி.முக. ஆட்சியின்போது இந்த கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க, இப்போது இந்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் விட்டதும் ஆளுந்தரப்புக்கு எதி ரானதாக இருக்கிறது.

திருவண்ணா மலை மாவட்ட செங்கம் பகுதி பூ விவசாயிகள் ஒரு சென்ட் தொழிற்சாலை அமைக்கும் கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். பட்டுக்குப் பெயர் பெற்ற ஆரணியின் நெசவாளர்கள், நசிந்து வரும் தங்களின் தொழிலை மேம்படுத்தும் வகையில் ஜவுளிப்பூங்கா ஒன்று அமைக்கவேண்டும் எனக் கோரி வருகிறார்கள்.

நிறைவேற்றப்படாத இந்த கோரிக்கைகள் குறித்து பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. உள்பட எந்தக் கட்சியும் பெரியளவில் குரல் எழுப்பாதது, ஆளுந் தரப்புக்கு பாதகமில்லாத சூழலை உருவாக்கி யுள்ளது.

திருவண்ணாமலையில் மருத்துவக்கல்லூரி, ஆரணியில் அரசு பொறியியல் கல்லூரி, கலசபாக்கத்தில் பாலி டெக்னிக் போன்றவற்றை தி.மு.க தரப்பு தனது சாதனைகளாக முன்னிறுத்து வதையும் அவை மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருப்பதையும் காண முடிகிறது.

-வேலூர் மண்டலத்தின் தற்போதைய நிலவரப்படி தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி பலமான நிலையில் உள் ளது.

அ.தி.மு.க உள்கட்சிக் குழப்பங்களால் பழைய பலத்தை இழந்துள்ளது. பா.ம.க தன் பழைய செல்வாக்கைப் பெற அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இம்மண்டலத்தின் 36 தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் ஆளுங்கட்சிக்கு சாதகமான நிலையை காண முடிகிறது.

(-வரும் இதழில் கடலூர் மண்டலம்)


அரசின் நிர்வாகத் திறமை!





இந்தியாவில் உள்ள மாநில அரசுகளிலேயே சிறந்த முறையில் செயல்படும் அரசுகளில் தமிழக அரசு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. அதற்கான முழு பொறுப்பும் முதல்வர் பொறுப்பில் உள்ள கலைஞரையே சாரும் என்கிறார்கள் தேசிய அளவிலான ஆய்வாளர்கள். 86 வயதிலும் குறையாத ஞாபக சக்தி, அதி நுட்பமான நிர்வாகத்திறமை, கடுமையான உழைப்பு, மக்கள் நலத் திட்டங்களுக்கான அர்ப்பணிப்பு, நேர்மையும் கடமையுணர்ச்சியும் கொண்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட முதல்வரின் திறமையே அரசு எந்திரத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்கு காரணம் என இவர்கள் தெரிவிக்கிறார்கள்.



பொதுமக்களிடமும் இதே கருத்தை நமது கள ஆய்வின் போது காண முடிந்ததுடன், ஊடகங்களும்கூட தமிழக அரசு நிர்வாகம் பற்றி ஒட்டுமொத்தமாக பெரியளவிலான குறைகளை இந்த 4 ஆண்டுகளில் முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





தமிழகம் தழுவிய அளவில் மூன்று முக்கிய மதங்களைச் சார்ந்த வாக்காளர்கள் எந்தெந்த கட்சிகளை ஆதரிக்கிறார்கள் என்பதை இந்த வரைபடங்கள் காட்டு கின்றன.



இந்து மதத்தைச் சேர்ந்த வாக்காளர்களில் 34% பேர் அ.தி.மு.கவையும் 32% பேர் தி.மு.கவையும் ஆதரிக் கிறார்கள். குறைந்த இடை வெளியில் அ.தி.மு.க முன்னிற்க காரணம், அதன் தலைமைதான். மென்மையான இந்துத்வா என்கிற அடையாளம் ஜெ.வுக்கு இருக்கிறது. இந்து அமைப்பு களின் நம்பிக்கைக்குரியவராக அவர் இருக்கிறார். ஜெயலலிதாவின் தனிப்பட்ட பக்தி மார்க்கமும் இந்த வாக்குபலத்திற்கு ஒரு காரணமாகும்.



தி.மு.க தலைமை மீதான நெடுநாளைய நாத்திக முத்திரையும் எப்போதும் சிறுபான்மை யினருக்கு ஆதரவாகவே தி.மு.க இருக்கும் என்கிற கருத்தும் இந்து மத வாக்கு பலத்தில் தி.மு.கவை சிறிதளவு பின்தங்க வைத்துள்ளது. எனினும், இந்து மத வாக்காளர்களை அ.தி.மு.க. அளவுக்கு நெருக்கமாகப் பெறுவதில் தி.மு.க பல படிகள் முன்னேறியிருப்பதை ஆய்வில் அறிய முடிகிறது. காங்கிரசும் தே.மு.தி.க வும் இந்துமத வாக்குகளைப் பெறுவதில் சம அளவிலான பலத்தைப் பெற்றுள்ளன.



இஸ்லாமியர் வாக்குகளில் 61% தி.மு.க பக்கமே இருப்பது, அக்கட்சிக்கு பெரிய பலம். அ.தி.மு.கவோ அதில் 5-ல் ஒரு பங்கு பலத்தையே பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இஸ்லாமியரின் வாக்குகளைப் பெறுவதில் காங்கிரசுக்கும் அடுத்தபடியாக அ.தி.மு.க இருப்பதற்கு காரணம், அ.தி.மு.க தலைமை மென்மையான இந்துத்வா என்கிற அடை யாளமேயாகும். எந்த நேரத்திலும் இந்துத்வா அமைப்புகளோடு ஜெ கைகோர்ப்பார் என்ற பயம் இஸ்லாமியர்களிடம் உள்ளது. முஸ்லிம்கள் மீது தி.மு.க அரசு காட்டும் அக்கறை, தனி இடஒதுக்கீடு ஆகியவை தி.மு.கவுக்கு இஸ்லாமிய வாக்குவங்கியை உறுதிப்படுத்தியுள்ளது.


அரசியல் ரீதியாக வளர்ந்து மனித நேய மக்கள் கட்சி (த.மு.மு.க) உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் தங்கள் சமுதாயத்து வாக்காளர்களை ஈர்ப்பதில் முன்னேற்ற மடைந்து வருகின்றன என்பதை கள ஆய்வுகள் காட்டுகின்றன. பழைய இஸ்லாமிய கட்சி களைவிட, புதிய அமைப்புகளுக்கு இளைஞர்கள் மற்றும் பெண்களின் செல்வாக்கு நல்ல அளவில் உள்ளது. தே.மு.தி.க.. "பா.ம.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரியளவில் இஸ்லாமிய வாக்குகளைக் கவரவில்லை.


மதமாற்றத் தடைச் சட்டத்தின் காரணமாக அ.தி.மு.க.வுக்கு எதிராக கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்ட மனநிலை இன்றளவிலும் பெரிய மாறுதலை அடையவில்லை என்பதையே களத்தின் நிலவரம் தெரிவிக்கிறது. அ.தி.மு.க வெறும் 18% கிறிஸ்தவர்களின் வாக்குகளைக் கவர, தி.மு.க வுக்கு 54% வாக்குகள் கிடைக் கின்றன. அ.தி.மு.கவுக்கு இணையாக, தி.மு.க கூட்டணி யில் உள்ள காங்கிரசும் 18% வாக்குகளைப் பெறுகிறது. தே.மு.தி.கவுக்கு 3% ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது. கன்னியா குமரி , திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவ வாக்கு வங்கியில் கம்யூனிஸ்ட்டு களுக்கு பங்கு கிடைக்கிறது.


பெரும்பான்மை சமுதாயமான இந்து மதத்தினரின் வாக்குககளை அ.தி.மு.க.வும் தி.மு.கவும் நெருக்கமாகப் பங்கிட்டுக் கொள்ள, சிறுபான்மையினர் வாக்குகளை அதிகளவில் அறுவடை செய்யும் நிலை யில் தி.மு.க அணி உள்ளது.


வளரும் பெரும்தொழில்கள், முடங்கும் சிறுதொழில்கள்!



தி.மு.க ஆட்சிக்கு வந்த 50 மாதங்களில் தொழில் துறையில் தமிழகம் பிரம்மாண்டமான வளர்ச்சியைக் கண்டுள்ளது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். வெளிநாட்டு மோட்டார் வாகனத் தொழில் கம்பெனிகள் இந்தியாவில் விரும்பித் தேர்ந்தெடுக்கும் மாநிலமாக தமிழகம் மாறி யுள்ளது. இதனால் கார் உற்பத்தி மட்டுமின்றி, அதன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற் சாலைகளும் தமிழகத்தில் பெருகியுள்ளன. இதுபோலவே தகவல்தொழில்நுட்பத்துறை (ஐ.டி) தமிழகத்தில் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. திறமையான தொழிலாளர்கள், ஆதரவுக்கரம் நீட்டும் ஆட்சி யாளர்கள், உதவி செய்யும் அதிகார எந்திரம், எளிதில் அணுகக்கூடிய ஆட்சித்தலைமை, பெருகிவரும் 4 வழிச்சாலைகள், விமானநிலையம்-துறைமுகம் உள்ளிட்ட வசதிகள் இவை யாவும் பெருந்தொழில்களைத் தொடங்குவோருக்கு வாய்ப்பாக அமைந்துள்ளன.



சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கப்படுகின்ற அளவுக்கு தமிழகத்தின் மற்ற பகுதிகளில் தொழில்வாய்ப்புகள் உருவாகவில்லை என்கிற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, சிறுநகரங்களில் பாரம்பரியமாக நடைபெற்றுவந்த சிறுதொழில்களின் வளர்ச்சிக்கு அரசு ஊக்கமளிக்கவில்லை என்ற கோபம் சிறுதொழில் முதலீட்டாளர்களிடம் உள்ளது. அவர்களின் முதல் பிரச்சினை, மின்தடை. இதனால் சிறுதொழில்கூடங்களில் உற்பத்தி பெருமளவு பாதிக்கப் பட்டு, நாள்கூலி தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைமை உருவாகியுள்ளது. தீப்பெட்டி, விசைத்தறி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள், ஆபரணங்கள், தொழிற்கருவிகள் உள்ளிட்ட பலவகையான சிறுதொழில்களும் கடந்த 4 ஆண்டுகளில் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. வரிச்சலுகை போன்ற அரசாங்க ஆதரவும் சிறுதொழில்களுக்கு உரிய முறையில் கிடைக்கவில்லை.

ஸ்பெயின் வகுத்த வியூகம்!


shockan.blogspot.com
கால்பந்து ஆட்டம் உணர்வுகளால் நிரம்பியது. ஆனந்தமும் துக்கமும் வந்து வந்து போகும். ஸ்பெயின் இப்போது ஆனந்த உணர்வில் மிதந்துகொண்டிருக்கிறது. இந்த ஆனந்தம் வெறும் அதிர்ஷ்டத்தால் வந்துவிடவில்லை. அதற்குப் பின்னால் அவர்களது மிகப் பெரிய உழைப்பும் கண்டுபிடிப்பும் இருக்கின்றன.

வலுவான தற்காப்பு ஆட்டம், ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டம் ஆகிய இரண்டுமே ஸ்பெயின் அணியின் பலம். ஆனால் இந்த இரண்டையும் செயல்படுத்துவதில் ஒரு அடிப்படையான தத்துவத்தைக் கொண்டே ஸ்பெயின் அணி இந்தக் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ஆடி வருகிறது. அதுதான் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உத்தி.

"பந்து உனது கட்டுப்பாட்டில் இருந்தால் வெற்றி உன்னைத் தேடிவரும்' என்பதுதான் ஸ்பெயின் கால்பந்து அணி வீரர்கள் ஆடுகளத்தில் இயங்குவதற்காக வகுத்துக் கொண்டிருக்கும் கோட்பாடு. ஆனால், பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

மைதானத்தில் இந்த உத்தியைச் செயல்படுத்துவதற்குப் பல திறன்கள் தேவை. குறுகிய தூரத்தில் அடுத்தவருக்குப் பந்தைக் கடத்துதல், வியூகம் அமைத்தபடியே முன்னோக்கி நகர்வது போன்றவை இதற்கு மிகவும் அவசியம். இவை ஸ்பெயினுக்கு அத்துப்படி. இந்த உலகக் கோப்பை போட்டியில், ஸ்பெயினைத் தவிர வேறு எந்த அணிக்கும் பந்தைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மந்திரம் தெரியவில்லை என கால்பந்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், ஒரேயொரு கோல் அடித்து ஸ்பெயின் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரேயொரு கோல்தான் என்பதால் அது ஒன்றும் பெரிய வெற்றியில்லை என்று கூறிவிட முடியாது. உண்மையில், இந்த வெற்றி ஸ்பெயினின் பிரத்யேகத் திறமைக்கும் திட்டமிடலுக்கும் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். ஆர்ஜென்டினாவை 4 கோல் அடித்து வெற்றி பெற்ற அணியா இது என்று ஜெர்மனியைப் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த நாட்டு வீரர்களை முடக்கிப் போட்டது, ஸ்பெயின் வீரர்களின் ஆட்டம்.

ஸ்பெயினின் நடுக்கள மற்றும் முன்கள வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே ஆட்டம் முழுவதும் இருந்தது. சேவி, இனியெஸ்டா, பெட்ரோ ரொட்ரிகோ, அலோன்சோ ஆகியோர்தான் எந்த வழியாக, எந்த நேரத்தில் எதிரணியின் பாதுகாப்பு அரணைத் தகர்ப்பது என்பதை முடிவு செய்தார்கள். அதற்கேற்றபடி மற்ற முன்கள வீரர்களை தொடர்ச்சியாக நகரச் செய்வதும், எதிரணியினர் ஊகிக்க முடியாத அளவுக்கு திடீர் தாக்குதல் நடத்துவதும்தான் ஸ்பெயினின் உத்தியாக இருந்தது.

உண்மையில் ஸ்பெயினின் பந்து கடத்தும், மற்றும் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறன்களைக் கண்டு ஜெர்மனி வீரர்களே அதிர்ச்சியாகி நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆட்டம் முடிந்த பிறகு ஜெர்மன் பயிற்சியாளரும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தப் பாணி ஆட்டத்தை வேறு நாடுகள் காப்பியடிப்பதெல்லாம் அத்தனை எளிதானதல்ல என்பதையும் அனைவரும் அறிவார்கள்.

அதே நேரத்தில், பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமே வெற்றியைப் பெற்றுத் தந்துவிடாது. யார் அதிக நேரம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்பதைக் கொண்டு வெற்றி தீர்மானிக்கப்படுவதில்லை. எத்தனை கோல் அடிக்கப்பட்டது என்பதுதான் முக்கியம். பந்தைக் கடத்திக் கொண்டுபோய் கோல் போட முடியாமல் போனால் தோற்றுப் போக வேண்டியதுதான்.

இதற்கு நல்ல உதாரணம் ஜெர்மனி - ஆர்ஜென்டினா இடையிலான காலிறுதி ஆட்டம். இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டினாவசம்தான் பந்து அதிக நேரம் இருந்தது. ஆனால், ஜெர்மன் தடுப்பாட்டக்காரர்களை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெர்மனியின் திடீர் தாக்குதல் ஆட்டத்தையும் தடுக்க முடியவில்லை. அதனால்தான் அவர்கள் அவமானகரமாகத் தோற்றார்கள். ஸ்பெயினுக்கும் இந்த நிலைமைதான் ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த அணி வீரர்கள் பந்தைக் கடத்திச் சென்று கடைசிவரை கோல் எதுவும் அடிக்கவில்லை. அவர்கள் பந்தைக் கடத்தி ஜெர்மனியின் கோல் நோக்கி வந்தபோதெல்லாம், வலைக்கு மேல்புறத்திலும் இரு பக்கங்களிலும்தான் பந்து சென்றது. ஆனால், பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உத்தி வேறு வகையில் ஸ்பெயினுக்கு உதவியது.

முற்பாதி ஆட்டத்தின் போதும், பிற்பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கும் வரையிலும் பெரும்பான்மை நேரத்தில் ஸ்பெயின் வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் பந்தை வைத்திருந்தார்கள். எப்போதும் ஜெர்மனியின் கோல் கம்பத்தைச் சுற்றியே பந்து வந்து கொண்டிருந்தது போன்ற நிலைமை உருவாக்கப்பட்டது.

தற்காப்பு ஆட்டத்திலேயே ஜெர்மனி வீரர்கள் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டியிருந்தது. இதனால், தங்களது பாணி ஆட்டத்தை அவர்களால் வெளிப்படுத்த முடியாமலேயே போனது. இப்படி எதிரணியை முடக்குவதில்தான் ஸ்பெயினின் "பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்' உத்தியின் வெற்றி அடங்கியிருக்கிறது.

இந்த ஆட்டத் திறன்களெல்லாம் கிளப் ஆட்டங்களில் பரிசோதனை செய்யப்பட்டவைதான் என்றாலும் ஸ்பெயின் மட்டும்தான் இதனைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஸ்பெயின் வீரர்களைக் கேட்டால், எங்களுக்கு "வேறு எந்த வகையாகவும் ஆடத் தெரியாது' என்கிறார்கள் மிக அடக்கமாக. அப்படியென்றால், இறுதிப் போட்டியிலும் இதை எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது.

Wednesday, July 7, 2010

'வாழ்க..' டோணிக்கு லட்சுமி ராய் வாழ்த்து!

shockan.blogspot.com

டோணியும், சாக்ஷியும் காதலித்து வந்தது எனக்கு முன்பே தெரியும். எனவே அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சிதான். அவர்களை வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் டோணியுடன் இணைத்துப் பேசப்பட்ட நடிகை லட்சுமி ராய்.

டோணியுடன் பலரை இணைத்துப் பேசினர். அதில் ரொம்பவே பேசப்பட்டவர் லட்சுமி ராய். இருவரும் திருமணம் செய்து கொள்வர்கள் என்றெல்லாம் கூட பேசப்பட்டது. ஆனால் அதை லட்சுமி ராய் உறுதியாக மறுக்கவில்லை. மாறாக,நாங்கள் நண்பர்கள் என்று மட்டும் கூறி வந்தார்.

இந்த நிலையில் தடாலடியாக டோணிக்கு கல்யாணமாகி விட்டது. இதுகுறித்து லட்சுமி ராயிடம் கேட்டபோது, டோணியை வாழ்த்துவதாக கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், சாக்ஷியை டோணியை ஏற்கனவே காதலித்து வந்தது எனக்குத் தெரியும். எனவே அவர்களின் கல்யாணம் எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது. தனது காதலை டோணி வெளிப்படுத்தாமல் வைத்திருந்தார்.

நாங்கள் நண்பர்களாகத்தான் பழகினோம். அதை அப்போதும் கூறினேன். இப்போதும் கூறுகிறேன். அப்போது அதை யாரும் நம்பவில்லை. இப்போது நம்புவார்கள் என நம்புகிறேன் என்றார் லட்சுமி ராய்.

ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் படமெடுத்த ஐரோப்பிய செயற்கைக்கோள்


shockan.blogspot.com

ஐரோப்பிய விண்வெளி ஆராச்சி மையத்தின் பிளாங்க் கனல்சா என்ற செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள தொலைநோக்கி, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஒரே புகைப்படமாக எடுத்துள்ளது.

ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரே புகைப்படமாக நமக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த புகைப்படத்தின் மூலம் பிரபஞ்சம், நடத்திரங்கள், கோள்கள், தாதுக்கள், உயிர்கள் உருவானது குறித்த ஆய்வுகள் மேலும் மேம்படும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 'பிங் பேங்' எனப்படும் பேரண்ட வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் உருவானது.

அப்போது உருவான ஒளியி்ன் மிச்சத்தையும் இந்த செயற்கைக் கோள் படம் பிடித்துள்ளது. இந்தப் படத்தின் நடுப் பகுதியில் காணப்படும் வெள்ளை நிற ஒளிக் கோடு நமது சூரிய குடும்பம் அடங்கிய பால்வெளி மண்டலத்தில் (Milky Way galaxy) இருந்து வெளியாகும் கதிர்வீச்சாகும்.

படத்தின் இரு ஓரங்களிலும் காணப்படும் ஒளி, 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பேரண்ட வெடிப்பில்போது உருவான முதல் ஒளியின் மிச்சமாகும்.

இந்தப் படம் நமக்குக் காட்டுவது பிங்-பேங் வெடிப்பைத் தொடர்ந்து பரவிய தூசி, வாயு மண்டலங்களின் கதிர்வீச்சு தான். இந்தக் கதிர்வீ்ச்சைத் தான் பிளாங்க் செயற்கைக் கோளில் உள்ள மைக்ரோவேவ் தொலைநோக்கி தனது இன்ப்ரா-ரெட் (Infra red) லென்ஸ் மூலம் படம் பிடித்துள்ளது.

இந்த முழுப் படமும் இன்ப்ரா ரெட் கதி்ர்வீச்சை 9 அலைவரிசைகளாகப் படம்பிடித்து ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதாகும்.

கடந்த ஆண்டு ஏவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் செயற்கைக்கோள் நேற்று இந்தப் படத்தை எடுத்தது.

இந்தப் புகைப்படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமத்தின் அறிவியல், ரோபோட்டிக் பிரிவு இயக்குநர் டேவிட் செளத்உட் கூறுகையில், இந்தப் படம் நமது பிரபஞ்சம் குறித்தும், அது உருவான விதம், நட்சத்திரக் கூட்டங்களின் பிறப்பு, பிங் பேங் விட்டுச்சென்ற வெப்பத்தின் அளவு உள்ளிட்டவற்றை கணிக்க உதவும் என்றார்.

விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள பிளாங்க் செயற்கைக்கோள் 2012ம் ஆண்டு வரை செயல்படும். அதற்குள் பிரபஞ்சத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து இதேபோன்ற மேலும் நான்கு புகைப்படங்களை அது அனுப்பவுள்ளது.

யுத்தம் 68 -நக்கீரன் கோபால்


shockan.blogspot.com
ராஜ்குமார் கடத்தல் வழக்கு, பக்தவத்சலம் கொலை வழக்கு என பலவற்றையும் விசாரித்தும், நக்கீரன் மீது என்ன குற்றம் சாட்டலாம் என்ற யோசனைதான் அவர்களிடம் இருந்தது. அதனால்தான், என்னை விசாரித்த அறைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு அறையில் அரசு வழக் கறிஞரும் போலீஸ் உயரதிகாரிகளும் உட் கார்ந்து, அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். 9 நாட்கள் விசாரித்தும் எந்தப் பிடியும் கிடைக்கவில்லை என்பதால் டி.எஸ்.பி. நாகராஜனின் முகம் தொங்கிப் போயிருந்தது. அந்த அறையிலிருந்து எழுந்து, என்னை விசாரித்த இடத்திற்கு வந்தார் டி.எஸ்.பி.

அப்போது இன்ஸ் பெக்டர் லட்சுமணசாமி, ""நாகப்பா ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார் தெரியுமா?'' என்றார்.

""என்ன?'' என்றபடியே வந்தார் டி.எஸ்.பி.

அவர்கள் குறிப்பிட்ட நாகப்பா என்பவர், ராஜ்குமாரோடு சேர்த்து வீரப்பனால் கடத்தப் பட்டவர்களில் ஒருவர். உதவி டைரக்டர். ராஜ்குமாரையும் அவரது உறவினர்களையும் தாளவாடி பகுதியில் வீரப்பனும் அவன் ஆட்களும் கடத்தியபோது, அய்யாவுக்கு உதவியாக நானும் வருகிறேன் என்று வீரப்பன் ஆட்களிடம் தானாகவே பணயக்கைதியானவர். பிறகு, காட்டிலிருந்து தப்பித்து வந்துவிட்டார். அவரைப் பற்றித்தான் இன்ஸ்பெக்டர் லட்சுமணசாமி சொல்லிக்கொண்டிருந்தார்.

""ஏன் கஷ்டப்படுறார்?'' -டி.எஸ்.பி. கேட்டார்.

ராஜ்குமாரோட ஆட்கள் கர்நாடகாவில் அவரை ரூமில் போட்டு பூட்டிவைத்து அடிச்சிக்கிட்டிருக்காங்களாம். அவரை ஏன் அடிச்சிக்கிட்டிருக்காங்கன்னு தெரியல. "கோபால் சொன்னாதான் தெரியும்' என்று இன்ஸ்பெக்டர் மீண்டும் என்னைக் குறிவைத்து வார்த்தைகளை எறிந்தார்.

நான் அமைதியாக இருந்தேன்.

""கோபால்தான் இங்கே இருக் காரே... நாகப்பாவை இங்கே கூட்டிக் கிட்டு வந்துட்டா, என்ன விவரம்னு சொல்லிடப்போறாரு'' என்றார் டி.எஸ்.பி.

""எப்படி கர்நாடகாவுக்கு நாம போய், ராஜ்குமார் ஆட்கள்கிட்டே யிருந்து காப்பாத்திட்டு வர முடியும்? அது பெரிய ரெஸ்க்யூ ஆபரேஷன். அப்படியே தூக்கிட்டு வந்தாலும், நாகப்பா பேசுவாரான்னு தெரியாது. ஏன்னா அவருக்கு கோபால்னாலே பயம்.''

மீண்டும் என்னை நோக்கியே பொறி வைக்கப்பட்டது. நான் அமைதியாக இருந்தேன்.

""என்ன சொல்றீங்க கோபால்?'' -டி.எஸ்.பி. என்னைக் கிளறிப் பார்த்தார். நாகப்பாவிடம் நக்கீரனுக்கெதிராக 100 பக் கங்களுக்கு போலீசார் எழுதி வாங்கியிருப்பதாக நமக்கு ஏற்கனவே தகவல் வந்திருந்தது. காட்டிலிருந்து நாகப்பா தப்பிச் சென்ற பிறகு, உயர்நீதிமன்றத்தில் ஒரு அஃபிடவிட் தாக்கல் செய்திருந்தார். அதன் நீதிமன்ற சான்றிட்ட நகலை நாம் வாங்கியிருந்தோம்.
கடைசி நாளில் சமர்ப்பிக்கச் சொல்லி நம்மிடம் கேட்டிருந்த ஆவணங்களை தம்பிகள் ரெடிபண்ணிக் கொண்டிருந்த போது, இந்த அஃபிடவிட்டையும் அனுப்பி வைக்கும்படி தம்பி சிவக்குமாரிடம் சொல்லி யிருந்தேன். அது நமது தரப்பில்தான் இருந் தது. நாகப்பா விவகாரத்தை நக்கீரனுக்கு எதிராகத் திருப்புவதற்கு போலீசார் தீவிரமாக இருந்த நேரத்தில், நான் டி.எஸ்.பி.யிடம், ""ஒரு நிமிடம் நான் பேசலாமா?'' என்றேன்.

""என்ன விஷயம்?''

""நாகப்பா சம்பந்தப்பட்ட விஷயம் ஒன்று எங்ககிட்டே இருக்கு.''

""என்ன அது?''

""ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த அஃபிடவிட்.''

""எங்கே இருக்கு?''

""வெளியிலே தம்பி ஜீவான்னு ஒருத்தர் இருக்கிறார். அவர்கிட்டே ஒரு கவர் இருக்குது. உங்க ஆட்களை அனுப்பி வாங்கிட்டு வரச்சொல் லுங்க. நான் இங்கேயிருந்து கை காட்டுறேன். தம்பி ஜீவா அந்தக் கவரைக் கொடுப்பார். அந்த அஃபிடவிட்டில் எல்லா உண்மைகளும் இருக்குது.''
""கோபால்... எங்ககிட்டேயும் ராஜ்குமார் கடத்தல் சம்பவம் தொடர்பா நிறைய விஷயங்கள் இருக்குது. நாங்களும் ஸ்டேட்மெண்ட் வாங்கியிருக்கோம்'' என்றார் டி.எஸ்.பி.

""சார்... ஹைகோர்ட்டில் அஃபிடவிட் தாக்கல் செய்திருக்கும்போது, அதற்கு எதிரா ஒரு ஸ்டேட் மெண்ட் வாங்கினா ஒண்ணுக்கும் உதவாது என்பது உங்களுக்குத் தெரியாதது இல்லை.''

நான் சொன்னதும் டி.எஸ்.பி. யோசித்தார். தம்பி ஜீவாவிடமிருந்து கவரை வாங்கச் சொல்லி விட்டு, பி.பி. மற்றும் உயரதிகாரிகள் இருந்த அறைக்குச் சென்றுவிட்டார்.

வெளியில் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. என்னுடைய சிக்னல் எப்போது கிடைக்கும் என்பதை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். போலீசோ வேறு எந்த விதத்தில் நம்மை முடக்கிப் போடலாம் என்று யோசித்தது.

ஒவ்வொரு அதிகாரியாக உள்ளே வருவதும் போவதுமாக இருந்தார்கள். "செந்தாமரைக் கண்ணன்னு ஒரு அதிகாரி வருவார். உங்களை விசாரிப்பார்' என்று மிரட்டல் தொனியில் ஒரு இன்ஸ்பெக்டர் சொன்னார். ஒருவன் கட்டைச் சுவரில் உட்கார்ந்துகொண்டு அந்த வழியில் வருவோர் போவோரையெல்லாம் மிரட்டிக் கொண்டிருந்தானாம். பலரும் அவனுக்குப் பயந்து, கப்பத்தை அவன் பக்கத்தில் போய் வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். காசில்லாமல் வந்த ஒருவர் மட்டும், அவன்கிட்டே போய், "உனக்கு நான் எதற்கு பணம் கொடுக்கணும். தரலேன்னா என்ன பண்ணுவே?' என்று கேட்க, அப்போது அந்த கட்டைச்சுவரில் உட்கார்ந்திருந்தவன் எழுந் திருக்க முயன்றிருக்கிறான். ஆனால் அவனுக்கு கால் இல்லை. எழுந்திருக்க முடியலை. தனக்கு கால் இல்லை என்பதைக் காட்டிக் கொள்ளாமலேயே, இத்தனை நாளும் வருவோர் போவோரையெல்லாம் மிரட்டிக்கொண் டிருந்தவனின் நிலைமை யைப் போலத்தான் போலீசின் நிலைமை யும் இருந்தது.

நக்கீரனுக்கு எதிராக அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதனால் வெறுமனே மிரட்டிப் பார்த்தார்கள். உயரதிகாரி வந்து விசாரிப்பார் என்றார்கள். கையில் காசில்லாத மனிதரைப்போல நம்மிடமும் எந்த வில்லங்கமும் இல்லை. அதனால், "உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள்' என்பதுபோல போலீசிடம், "நீங்க என்ன வேணும்னாலும் செய்துக்குங்க' என் றோம். கால் இல்லாத நபர் போன்ற போலீசுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. இதுதான் நிஜ நிலவரம். இதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மிரட்டல்கள் தொடர்ந்துகொண்டி ருப்பதைப் புரிந்துகொண்டேன்.
பகல் 12.30 மணி. சிக்னல் காட்ட வேண்டிய டயம் வந்தது.

""சார்... எனக்கு ரொம்ப டயர்டா இருக்குது. ஒரு ஜூஸ் வேணும்'' என்றேன்.

இன்ஸ்பெக்டர் தன் பக்கத்தில் இருந்த எஸ்.ஐ.யைக் கூப்பிட்டார். ""அவர் என்ன ஜூஸ் கேட்கிறாரோ வாங்கிட்டு வாங்க'' என்றார்.

நான் குறுக்கிட்டேன்.

""உங்க ஆட்களை நான் எப்படி நம்புறது? எங்க தம்பிங்க வெளி யில இருக்காங்க. அவங்களை கூப்பிட்டு வாங்கிட்டு வரச்சொல்லுங்க.''

"நான் இப்படிச் சொல்வேன்' என்பதை போலீசார் எதிர்பார்க்கலை. ""எங்க போலீசை நீங்க நம்பலைன்னா, உங்க ஆட்களை நாங்க எப்படி நம்ப முடியும்?'' -இன்ஸ்பெக்டர் கேட்டார்.

""அப்படின்னா, டாக்டரை வரச்சொல்லுங்க சார். எங்க ஆள் வாங்கிட்டு வர ஜூஸை அவர் டேஸ்ட் பண்ணிட்டு அப்புறம் எனக்கு கொடுக் கட்டும்.''

கொஞ்ச நேரம் யோசித்த போலீசார், பிறகு ஒப்புக்கொண்டார்கள். தம்பி மோகனைக் கூப்பிடச் சொன்னேன். போலீசார் வெளியே போய், மோகனை அழைத்து வந்தார்கள். நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதை அவர் கவனித்த படி இருந்தார்.

போலீசாருக்குத் தெரியாதபடி, தலையைத் தடவுவதுபோல செய்துவிட்டு, அரெஸ்ட் எதுவுமில்லை என்பதன் அடையாளமாக, கையை அசைத்துக்காட்டினேன். மோகன் புரிந்து கொண்டதும், எனக்கு ஜூஸ் வாங்கி வரச் சொன் னேன். அவர் வெளியே சென்றபோது, என் சிக்னலின் அர்த்தமும் வெளியில் காத்திருந்தவர் களுக்குச் சென்றுவிட்டது. அவர்கள் சந்தோஷ மாகப் பேசிக்கொள்வதை தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது.

ஜூஸ் வந்தது. டாக்டரும் வந்திருந்தார். அவர் அதை டெஸ்ட் செய்து பார்த்த பிறகு, நான் ஜூஸ் குடித்தேன். டி.எஸ்.பி. நாகராஜ னோ, என்ன கேஸை என் மீது போடுவது என்று தெரியாமல் தண்ணி குடித்துக்கொண்டி ருந்தார். பி.பி.யிடமும் உயரதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தியும் அவருக்கு சரியாக எதுவும் பிடிபடவில்லை. கடுகடுவென எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தார். 9 நாள் விசாரணை நடத்தியும் எல்லாம் ஃபெயிலியர்... மேலிடத்திற்கு என்ன சொல்வது என்பதுதான் அவரது கவலை என்று நான் யூகித்துக் கொண்டேன். ரொம்பவும் டென்ஷனாக அவர் வெளியே வந்தார்.

நேரம் நெருங்குது. இந்த விசா ரணை சனியன் இதோட முடிஞ்சு கிளம் பப் போறோம்ங்கற சின்ன சந்தோஷத்துல இருந்தேன் நான்.

அப்போது...

-யுத்தம் தொடரும்


அப்படியா?


வீடு கட்டுவதற்காக அரசு கொடுத்த நிலத்தில் பெரிய திரை தரப்பு இன்னும் வேலையை ஆரம்பிக்கவில்லை. சின்னத்திரையோ மலேசிய நாட்டு நிறுவனத்தின் துணையோடு கட்டிட வேலையைத் தொடங்கிவிட்டது. சின்னத்திரைக்கான ஏரியாவில் பட்டனை அழுத்தி விரைவில் வீடுகளைத் திறந்து வைக்கப் போகி றாராம் நிலம் கொடுத்த தலைவர். சின்னத் திரையின் வேகம் பெரியதிரை சங் கத் தலைவர்களை அப்செட் டாக்கியுள்ளதாம்.