Wednesday, July 7, 2010

வேலை நிரந்தரமாகுமா? போ.க.குரல்!

shockan.blogspot.com

தொழிலாளர் நல சட்டத்திற்குப் புறம்பாக... எங்களை கொத்தடிமைகளாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்’’ என புகார்க்குரல் எழுப்புகிறார்கள் அவர்கள்.

அவர்கள்?

போக்குவரத்துக் கழக சேமநலத் தொழிலாளர்கள். இவர்களின் ஆதங்கம்தான் என்ன?

“""எங்க பெயர்களைப் போட்றாதீங்க. இருக்கும் இந்த வேலைக்கு ஆபத்தாயிடும். 2008-ல் தமிழகம் முழுதும் ஓட்டுநர், நடத்துனர் பணிக்குத் தேர்வு நடந்தது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த சீனியாரிட்டிப் படிதான் எங்களை செலக்ட் செய்து பணிநியமனமும் செஞ்சாங்க. முதல்ல 240 நாட்களுக்கு தினக்கூலிப் பணியாளரா இருங்க. இதன்பிறகு நிரந்தர ஊழியராக ஆக்கிடுவோம்'னு அப்ப உறுதிகொடுத்திருந்தாங்க. நிரந்தர ஊழியர்களுக்கு தினசரி 450 ரூபா சம்பளம்னா எங்களுக்கு வெறும் 200 ரூபாதான். இதில் லீவுக்கு சம்பளம் கிடையாது. ஓவர்டைம் வேலை யை கட்டாயம் பார்த்தாகணும். இதுக்கு 150 ரூபாதான் கொடுப்பாங்க. அதிகாலை 4 மணிக்கே டெப்போவுக்கு வந்துடணும். மணிக்கு 20 கி.மீ. வேகம்கூட போகாத தகர டப்பா வண்டிகளைத்தான் எங்களுக்கு ஒதுக்குவாங்க. வண்டி பெரும்பாலும் செல்ஃப் எடுக்காது. இருந்தும் பணி நிரந்தர ஆசையில் சலிக்காம ஓட்டுவோம். இந்த லட்சணத்தில் டெப்போவில் இருக்கும் மேனேஜர் போன்றவங்களுக்கு வாராவாரம் பார்ட்டி கொடுத்தாகணும். அதையும் செய்துக் கிட்டுதான் இருக்கோம். இப்படியெல்லாம் வேலை பார்த்தும் எங்க ளை பணி நிரந்தரம் செய்ய மறுக்குறாங்க. கேட்டா... கும்பகோணம் கோட் டம் காரைக்குடி மண்டலத்தில் இருக்கும் 11 கிளைகள்ல வேலை செய்யும் 600-க்கும் மேற்பட்ட எங்களுக்கு... அங்க வேலை செய்யறதுக்கான எந்த ரிக்கார்டும் இல் லைன்னு சொல்றாங்க. எங்களுக்கு அட்டண்டன்ஸும் இல்லை. சம்பளப் பட்டுவாடாவுக்கு வவுச்சரும் கிடையாது. செங்கல் சூளையில் வேலைசெய்யும் கூலித்தொழிலாளிகளைவிட எங்க நிலைமை மோசமா இருக்கு. எங்க எதிர்காலம் என்ன ஆகும்னு தெரியலைங்க. வேலை செய்யறதுக்கான ஆதாரமே இல்லாததால் நாங்க நீதி கேட்டு கோர்ட்டுக்குக்கூட போகமுடியாது'' என்றார்கள் கவலையாக.

சி.ஐ.டி.யூ.வின் மா.செ.வான தோழர் சிவாஜியும் மாவட்ட நிர்வாகி தோழர் பாஸ்கரும் ""240 நாட்கள் வேலை செய்தவங்களை நிரந்தரமாக்கணும் என்பதுதான் விதி. இதை நடைமுறைப் படுத்தாததோடு, ஊழியர்களுக்கான எந்த சலுகைகளும் வழங்காமல் வைத்திருக்கிறார்கள். இது சட்டவிரோதம். இந்த தொழிலாளிகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அவர்களுக்காகப் போராட்டக் களத்தில் நாங்கள் குதிக்க நேரிடும்''’என்கிறார்கள் காட்டமாய்.

மண்டல போக்குவரத்துத்துறை ஜி.எம். பசுபதியோ ""சில டெக்னிக்கல் பிரச்சினைகள் இருக்கு. அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சரிபண்ணி... அவங்களை எல்லாம் நிரந்தரப்படுத்திடுவோம்''’என்று முடித்துக்கொண்டார்.

சேமநலத் தொழிலாளர்களின் பிரச்சினை தீர்க்கப்படுமா?

2200 மாணவர்களின் உயிருக்கு ஆபத்து

shockan.blogspot.com

இரவு-பகல் எந்நேரமும் உயர்மின் அழுத்த அதிர்வுகளால் நடுங்கிக்கொண்டிருக்கிறது இந்தப் பள்ளிக்கூட வளாகமும் பள்ளிக் கட்டடங்களும்.

இரவு நேரத்தில் மின்விபத்து ஏற்பட்டால், இதன் விடுதியில் தங்கியிருக்கும் 1000 மாணவர்களுக் கும் உயிர் ஆபத்து.

பகலில் விபத்து ஏற்பட்டால் இந்தப் பள்ளியில் பயிலும் 2200 மாணவர்களுக்கும் பெரும் ஆபத்து.
மாணவர்களையும் பெற்றோர்களையும் பய முறுத்துவதற்காக இந்தச் செய்தியை சொல்லவில் லை. 2200 மாணவர்களின், ஆசிரியர்களின் உயி ரோடு விளையாடிக் கொண்டிருக்கும் பணம்தின்னிப் பள்ளி நிர்வாகத்தையும் கல்வித்துறையையும் எச்சரிப்பதற்காகவே பதட்டத்தோடு இந்தச் செய்தியை வெளியிடுகிறோம்.

திருச்சி-சென்னை புறவழிச்சாலையில் சமய புரம் அருகில் உள்ளது இந்த எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேசன் பள்ளி. திருச்சி மாவட்டத்தி லேயே முதல்தரமான பள்ளியென்று தின மும் விளம்பரம் கொடுத்தே 4 ஆண்டு களில் 2200 மாணவர்களைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. முதல்தரமான பள்ளி தான். பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண் பெற்றால்தான் +1ல் இங்கே அட்மிஷன் கிடைக்கும். முதல் தரத்தின் ரகசியம் இதுதான். திருச்சியில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் பணக்காரர்களின் குழந்தைகள்தான் இங்கே படிக்கிறார்கள்.

+1ல் அட்மிஷன் பெறுவதற்கு 80 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்டது இந்தப் பள்ளி. சமீ பத்திய நமது செய்தியில் இதை வெளியிட்டிருந் தோம். இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்காக, தன் மகன் சோமசுந்தரத்தை கூட்டிக்கொண்டு போனார் பெரியமிளகுப்பாறை மாணிக்கம்பிள்ளை.

""ஏராளமான வசதிகள் இருக்கும்னு நினைத் துக்கொண்டு போனேன். பள்ளி வளாகத்திற்கு காலடி வைத்ததும் அதிர்ச்சியடைந்தேன். மின் அதிர்வுகள் என் உடம்பை உலுக்கியது. மின் கோபுர ராட்சச இரும்புத்தூண்கள்... அதில் உயர்அழுத்த மின்சார இஎச்டி கம்பிகள்... வகுப் பறைகள் மேலும், விளையாட்டு மைதானத்தின் நடுவிலும், ஹாஸ்டல் கட்டடத்தை ஒட்டியும் தலைக்கு மேல் பயமூட்டும் அந்த மின்கம்பிகள் சென்றுகொண்டிருந்தன. அந்தக் காட்சியைப் பார்த்ததும் குடந்தையில் எரிந்து செத்த 93 குழந்தை களும், ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் மின் கசிவால் கொல்லப்பட்ட 55 பேரும்தான் என் ஞாபகத்திற்கு வந்தார்கள். அவற்றைப்போல பலமடங்கு பாதிப்பு இந்த உயர் அழுத்த மின் கம்பிகளால் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதே... அதனால்தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குப் போட்டோம்'' என்கிறார் மாணிக்கம்பிள்ளை.

மாணிக்கம்பிள்ளை சார்பாக வழக்கைத் தொடர்ந்த வழக்கறிஞர் சக்திவேல் நம்மிடம், ""இந்த ஆபத்தான இடத்தில் இந்தப் பள்ளிக்கூடத்திற்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள்? என்று தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் இயக்குநருக்கும், அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யவில்லை என்று மாவட்ட பள்ளிக் கல்வித் துறைக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி னோம். அதற்கு "அங்குள்ள உயர்மின் அழுத்தக் கோபுரங்களை உடனே அகற்ற வேண்டும் அல்லது பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்' என்று நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக பதிலளித்தார்கள். இதுதான் இவர்கள் லட்சணம்'' என்றார்.

இவர்களது புகாரின் அடிப்படையில் 24.3.10 அன்று லால்குடி கல்வி அலுவலகமும் திருச்சி மெட்ரிக் பள்ளி அலுவலரும் எஸ்.ஆர்.வி. பள்ளியை பார்வையிட்டிருக்கிறார்கள்.

""மின்கோபுரங்கள் அடியில்தான் 2200 மாணவர்களும் தினமும் காலையில் இறைவணக்கம் பாடுகிறார்கள். இந்த மின் கோபுரங்களால், கண்டிப் பாக மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும். இவற்றை உடனே அகற்ற வேண்டும். இல்லையென்றால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கடிதங்களை அனுப்பிவிட்டு தங்கள் பொறுப்பை முடித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த அலுவலர்கள்.

மதுரை உயர்நீதிமன்றமோ ""மின்கோபுரங்களை அல்லது பள்ளியை மாற்ற வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரண்டு வருடமாக இங்கே வேலை செய்து இன்றோ நாளையோ ஓய்வு பெறப்போகும் மாவட்ட கல்வி அதிகாரி சுவாமிநாதனிடம் இதுபற்றிக் கேட்டோம்.

""வழக்கு நடக்குதே... மின்சார வாரியம் தான் கம்பங்களை அகற்றணும்'' என்கிறார் அவர்.

திருச்சி மாவட்ட மின்வாரிய மேற்பார் வைப் பொறியாளர் வெங்கட்ராமனிடம் கேட்டோம்.

""பள்ளிக்கூடம் கட்டி 4 வருடம்தான் ஆகிறது. ஆனால் இந்த மின் கோபுரங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டவை. குறைந்த விலையில் நிலம் கிடைக்கிறதென்று மின்கம்பங்களுக்கு நடுவில் இடத்தை வாங்கிக் கட்டினார்கள். கட்டும்போதே கட்டாதே என்று நாங்கள் நோட்டீஸ் அனுப்பினோம். இப்போது அகற்றுவது ரொம்ப கஷ்டம். பலகோடி ரூபாய் செலவாகும். மாற்று நிலம் வாங்க வேண்டும். எல்லா செலவுகளையும் அந்தப் பள்ளி நிர்வாகம்தான் செய்ய வேண்டும். விபத்து ஏற்படும் முன்பு அரசாங்கம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' -பொறுப்போடு சொன்னார் வெங்கட்ராமன்.

எஸ்.ஆர்.வி. பள்ளி நிர்வாகியை சந்திக்கச் சென்றோம். பள்ளித் தலைமை ஆசிரியர் துரைசிங்கத்தைதான் சந்திக்க முடிந்தது

""இதைப்போய் பெரிசு படுத்தலாமா? இப்படிப்பட்ட செய்தியையெல்லாம் வெளி யிடாதீங்க. என்ன சரியா... ஒண்ணும் ஆகாது. பர்சனலா கூட நாம பேசிக்கலாம். இப்போ தைக்கு செய்தி வரக்கூடாது சரியா?'' -தலைமை ஆசிரியரின் வார்த்தைகள் பள்ளி நிர்வாகத்தின் பணத்தைக் கொண்டு எதையும் சரிக்கட்டி விடலாம் என்ற தோர ணையில் வெளிப்பட்டன.

மற்றதை சரிப்படுத்தி விடலாம்.... ஆனால் 2200 மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்....?

ஆணும் பொண்ணும் பேசினா கல்யாணம்!



shockan.blogspot.com

""என்னது... அந்தப் பொண்ணும் பையனும் பேசிக்கிட்டிருந்தாங்களா? அடிடா தண்டோராவ... கூட்றா பஞ்சாயத்தை... கட்றா தாலியை... இதுதாண்டா என்ற தீர்ப்பு... தீர்ப்பு...'' என்று எக்கோ மைக் இல்லாமலேயே உச்சநீதிமன்ற நீதிபதியைவிட மிக அதிகமான அதிகாரத்தை பெற்றவர்போல் தீர்ப்பைச் சொல்லிவிட்டு... சொம்பில் வெற்றிலைப்பாக்கு எச்சிலை பொளிச் பொளிச் என்று துப்பும் நாட்டாமைகளை இப்போது வரும் புதிய படங்களில்கூட காமெடியர்களாகத்தான் பார்க்க முடிகிறது.

ஆனால், இன்னமும் சில கிராமங்களில் சீரியஸ் நாட்டாமைகளின் சேட்டைகள் சைலன்ட்டாக அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்த்தியது நமக்கு வந்த தகவல்.

மயிலாடுதுறை கமுக்கானிமுட்டம் (செப்பேடுகள் எடுக்கப்பட்டதே) அருகேயுள்ள "அப்பங்குளம்' கிராமத்துக்குச் சென்றோம்.

முதலில் வாய் திறக்கவே பயந்தவர்கள் (வெளியில் பேசினாலே பத்தாயிரம் அபராதமாம்!) "எப்படியோ இந்த செய்தி நக்கீரன் மூலமா வெளியில தெரிஞ்சாலாவது இந்த கிராமத்துக்கு விமோசனம் கிடைக்காதா?' என்ற ஏக்கத்தோடு குமுறலை கொட்டத் தொடங்கினார்கள்.
""இந்த ஊர்ல வசதி வாய்ப்பு உள்ளவங்களா இருந் தாலும் எட்டாவ துக்கு மேல யாரும் படிக்கலைங்க. அதுக் குக் காரணமே பாபு, குமார், சுப்பிரமணி நாட்டாமைன்னு சொல்லிக்கிட்டு அட்டகாசம் பண்ற வங்களாலதான். இதுக் குத் தலைவனே 60 வயசு கண்ணன்ங்கிறவர்தாங்க.

வெளியில போயி படிக்கப்போனா பசங்க-பொண்ணுங்க பேசிக்குவாங்க. இது இந்த நாட்டாமைக் கும்பலின் காதுக்குப் போயிடுச்சுன்னா பெருமாள் கோயிலுக்கிட்ட பஞ்சாயத்தைக் கூட்டி அசிங்கப்படுத்தி அபராதமும் கட்டுறதுமில்லாம அண்ணன்- தங்கச்சி முறைன்னுகூட பார்க்காம கல்யாணம் பண்ணி வெச்சிருவாங்க. இந்த பயத்தி லேயே பிள்ளைங்கள வெளியில அனுப்பி படிக்க வைக்கிற தில்ல'' என்கிறார் உடைந்த குரலில்.

இன்னொரு பெண்மணியோ... ""இது மட்டுமில்லைங்க. கல்யாணம் ஆனவங்க பேசிக்கிட்டா அவ்ளோதான். உடனே தலா 20,000-னு ரெண்டு பேர் வீட்லேயும் அபராதம் விதிக்கிறதோட புளியமரத்துல கட்டிவெச்சு... புளியமர சிம்பாலேயே அடிச் சுக் கொடுமைப்படுத்து வாங்க.

அப்படித்தாங்க சேவை உள்ளத்தோடு செயல்படுற மாலதிங்கிற பெண்ணை ஊராட்சிமன்றத் துணைத் தலைவரா போட்டியில்லாம தேர்ந்தெடுத்தோம். அவங்க ளோட கணவர் வெளிநாட்டுல இருக்காரு. ஊராட்சிமன்ற துணைத்தலைவிங்கிற அடிப்படையில அந்தம்மா வைப் பார்க்க பலர் வருவாங்க. அவங்களையே தப்பு தப்பா சொல்லி... கூட்டத்தைக் கூட்டி அசிங்கப்படுத்தி தண்டனை யும் கொடுக்கப் பார்த்ததுங்க இந்த கண்ணன் தலைமையி லான நாட்டாமைக் கும்பல். அவங்க போலீஸ்ல சொன்ன தால தப்பிச்சுட்டாங்க. ஊராட்சிமன்ற துணைத் தலைவருக்கே இந்த கதின்னா எங்களுக்கு என்ன நிலை?'' என்று வேதனை பெருமூச்சுவிட்டவர் மேலும் சொன்ன ஆதார தகவல்கள் கொந்தளிப்பின் உச்சகட்டத்திற்கே கொண்டு சென்றது.

""கருணாநிதிங்கிற பையனும், பிரேமாங்கிற பொண்ணும் பக்கத்து ஊருக்கு வேலைக்குப் போயிட்டு வரும்போது பேசிக்கிட்டே வந்திருக்காங்க. தாலி கட்ட வெச்சுட்டாங்க. அதே மாதிரி போனமாசம் சத்தியமூர்த்திங்கிற பையன்... மணிமேகலைங் கிற பொண்ணு வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற பைப்ல தண்ணி குடிச்சிருக்கான். அதுக்குள்ள 14 வயசு மணிமேகலையை அந்தப் பையனுக்கு மிரட்டி கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. இதைவிடக் கொடுமை... சின்னத்தம்பிங்கிற பையனுக்கு சித்தி முறை வேணும் கவிதா. இவங்க மாயவரத்துல வேலைக்குப் போயி ஒண்ணா வர்றதால "தொடர்பு' இருக்குன்னு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. அடுத்த வாரம் சுந்தர்-அஞ்சம்மாள்னு 16 வயசுகூட ஆகாத பச்சப்புள்ளைங்களுக்கு இதே மாதிரி மிரட்டல் கல்யாணம் நடக்கப் போகுதுங்க'' என்ற தகவலையும் சொல்ல... அவர்களின் வீட்டைத் தேடிச் சென்றோம்.

சுந்தரின் அம்மா லதா கண்ணீருடன் நம்மிடம்... ""அய்யா... அந்தப் பொண்ணுக்கும் இவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க. அபராதமா ரெண்டு வீட்லயும் சேர்ந்து 40,000 ரூபாய் கிடைக்கும்னு இந்த நாட்டாமை கும்பல் பண்ற சதிங்க. இதோட விட் டானுங்களா? இவனையும் இவனோட ஃப்ரெண்டு மனோவையும் விசாரிச்சு அடிச்சவனுங்க... மனோ ஒரு ஊமைன்னுகூட பார்க் காம அடிச்சு ஆணுறுப்பை வீங்கவெச்சு நாலு நாளா ஆஸ்பத்திரியில இருக்கான். அவன் டிஸ்சார்ஜ் ஆனதும் திரும்பவும் கூட்டம்கூடி... என் பையனுக்கு கல்யாணம் பண்ணிவைக்கப் பாக்குறாங்க'' என்று கதற... அடிபட்ட மனோவின் தாய் சாந்தியும் கதறி அழுகிறார்.

ஊராட்சிமன்ற துணைத்தலைவி மாலதியோ... ""செங்கல்சூளை வெச்சிருக்கேங்க. கல்லு வாங்க வருவாங்க. பஞ்சாயத்து விஷயமாகவும் வருவாங்க. என்னை இப்படி அசிங்கப்படுத்துனதுனால சூளை வேலையும் நின்னுப்போச்சு. இவங்களால பல குழந்தை திருமணங்களும் நடக்குதுங்க'' என்று குற்றம்சாட்டுகிறார் பரிதாபமாக.

இப்படி ஒரு கிராமத்தையே அடக்கி அட்டகாசம் பண்ணும் நாட்டாமை குரூப்பின் தலைவர் கண்ணனிடம் ஏன் இப்படிச் செய்றீங்க? என்றோம். ""அப்படி யெல்லாம் இல்லீங்களே'' என்று முதலில் மறுத்தவரிடம்... முழு விபரங்களைச் சொன்னதும் சைலன்ட்டாக தலை குனிகிறார்... எதுவும் பதில் சொல்ல முடியாமல்.

இந்தக் கொடூர சம்பவங்களைக் குறித்து நாகை மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது... ஒரு நிமிடம் அதிர்ந்து போனவர், ""உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார் உறுதியான குரலில்.

குழந்தை திருமணங்கள் நடத்தி -அதிலும் வருமானம் பார்க்கும் இந்தக் கும்பலை என்ன செய்வது?

படுகொலை பின்னணியில் எம்.எல்.ஏ?

shockan.blogspot.com

அந்தப் பதினைந்து சென்ட் நிலத்தை விலைக்கு வாங்குவதில் ஊர்க்கவுண்டர் ராம ஜெயத்துக்கும் அதே ஊரைச்சேர்ந்த மாதேசுக்கும் போட்டாபோட்டி ஏற்பட்டது. ஊர்க்கவுண்டர் ராமஜெயம் வாங்கிவிட்டார்.

""மாதேஸ்... நான் வாங்கிவிட்டேன்னு கோபப்படாதீங்க. நாளை மறுநாள் அந்த நிலத்தில் பூமி பூஜை போடப்போறோம். மனசுல எதையும் நினைக்காமல் நீங்களும் வரணும்'' -மாதேசுக்கும் அழைப்பு விட்டார்கள் ஊர்க்கவுண்டர் ராமஜெய மும் அவர் மகன் இளையராஜாவும்.

24.6.10 அன்று நடந்த பூமி பூஜைக்கு உறவினர்கள் எல்லாரும் வந்திருந்தனர். மாதேசும் வந்தார். பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்தன. ""தேங்காயை நான் உடைக்கிறேன் கொண்டாங்க... அந்த அரிவாளையும் தாங்க'' -தேங்காயை உடைத்துக் கொடுத்துவிட்டு, கையில் அரிவாளோடு சிரித்தபடி நின்றார் மாதேஸ்.

கற்பூர ஆராதனை நடந்தது. பயபக்தியோடு கண்களை மூடி வணங்கினார்கள் ஊர்க்கவுண்டர் ராமஜெயமும் மகன் இளையராஜாவும். அந்த நேரத்திற்காகவே காத்து நின்றதைப் போல அவர் களுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த மாதேஸ்.... அரிவாளால் ஓங்கி வெட்டினான். மகன் இளையராஜாவின் தலை துண்டானது. ""அய்யோ... மகனே....'' -கீழே விழுந்த மகனின் உடலைத் தாங்கிப் பிடிக்க முயன்ற ஊர்க்கவுண்டரின் பிடரியில் அடுத்த வெட்டு விழுந்தது. அவருடைய தலையும் துண்டானது. பூமிபூஜை நடந்த இடமே அதிர்ந்தது. இருவரையும் பிணமாக்கிய மாதேஸ்... வெட்டிய அரிவாளைப் போட்டுவிட்டு தயாராக நின்ற காருக்குள் தாவி ஏறினான். கார் பறந்தது.

""அந்தக் காருக்குச் சொந்தக்காரர் நம்ம எம்.எல். ஏ.தான்...'' -அங்கே நின்றவர் களில் ஒருவர் அலறினார்.

இந்தக் கொடூரம்... கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டி னம் அருகிலுள்ள பெரியதளிஅள்ளி கிராமத்தில்தான் நடந்தது.

""இந்தப் படுகொலைக்கு மாதேஸ் ஒரு கருவிதான். பின்னணியில் காவேரிப்பட்டினம் எம்.எல்.ஏ. பா.ம.க. மேகநாதன், அ.தி.மு.க. முன்னாள் ஒ.செ.கிருஷ்ணன் மற்றும் கட்டப் பஞ்சாயத்து கும்பல் இருக்கிறது. அதனால் எம்.எல்.ஏ. மேகநாதன் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது போலீஸ்'' என்கிறார்கள் பெரியதளிஅள்ளி ஊர் மக்கள்.

""பெரியதளிஅள்ளி கிராமத்திற்கு ஏரி மீன், மற்றும் தென்பெண்ணை ஆற்று மணல் மூலம் வருடத்திற்கு ஏழெட்டு லட்சம் வருமானம் வருகிறது. இதை எம்.எல்.ஏ. மேகநாதன், அ.தி.மு.க. கிருஷ்ணன், பலராமன், சத்துணவு ராமசாமி ஆகியோர் கூட்டாக பங்கு போட்டுக்கொண்டனர். வருடம் 20 ஆயிரம்தான் வருமானம் என்று பொய் கணக்கு காட்டினார்கள். ஊர்க்கவுண்டர் ராம ஜெயமும் நாங்களும் ஊரைக்கூட்டி அவர்களை நீக்கிவிட்டு, வங்கியில் பணத்தைப் போட்டோம். ஊரைக்கூட்டி கணக்கு கேட்டு அவமானப்படுத்தி விட்டதால்தான் ஊர்க்கவுண்டரையும் அவரது மகனையும் கொலை செய்யக் காரணமாகிவிட் டார்கள்'' என்கிறார்கள் ஊர் பெரியவர்கள்.

எம்.எல்.ஏ. மேகநாதனிடம் இதுபற்றிக் கேட்டோம்.

""சம்பவம் நடந்தபோது நான் ஒரு திருமண விழாவில் இருந்தேன். என் காரில் கொலைகாரன் தப்பிச் சென்ற தாய் கூறுவது சுத்தப்பொய். இந்தக் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்கிறார் எம்.எல்.ஏ.

டோனியின் காதல் கதை!


shockan.blogspot.com

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயம் கவர்ந்த டோனியின் திடீர் திருமணம் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது. தீபிகா படுகோன், லட்சுமிராய், அசின் என்று நடிகைகள் பலருடனும் இணைத்துப் பேசப்பட்ட டோனி கடைசியில் தன் பள்ளித் தோழி சாக்ஷி ராவத்தை திருமணம் செய்திருக்கிறார்.

டோனி படித்த ராஞ்சி டி.ஏ.வி. பள்ளி யில்தான் தன்னு டைய பள்ளிப் படிப் பை முடித்திருக்கிறார் சாக்ஷி. பள்ளிக்காலத் தில் இருவருக்குமிடையே நல்ல நட்பு இருந்தது. ஆனால் இடையில் சில காலம் இருவரிடமும் தொடர்பு இல்லாமல் போனது. 2008-ம் ஆண்டில்தான் இருவரின் நட்பும் புதுப்பிக்கப்பட்டதாம்.

கிரிக்கெட் மேட்ச் ஒன்றுக்காக கொல்கத்தாவில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்கினார் டோனி. அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் கோர்ஸ் படித்த சாக்ஷி அதே தாஜ் ஓட்டலில் ட்ரெயினிங்கில் இருந்தார். அப்போதுதான் இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். அதன் பிறகு எஸ்.எம்.எஸ்.மூலம் இரண்டு பேரின் நட்பும் தொடர்ந்தது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயணத்தின் போதுதான் டோனிக்குள் காதல் சிறகு முளைத்திருக்கிறது. அங்கிருந்த படியே சாக்ஷியிடம் காதலை வெளிப்படுத்த இரண்டு பேரிடமும் பற்றிக்கொண்டது காதல் தீ. ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த பிறகு அவுரங்காபாத்துக்கே போய் சாக்ஷியை சந்தித்திருக்கிறார். தன்னை அடையாளம் தெரியாமல் இருக்க பெரிய தொப்பியை போட்டுக்கொண்டு சாதாரணமாக ரிக்ஷாவில் சாக்ஷியோடு சுற்றியிருக்கிறார்.

சாக்ஷிக்கு டோனி கொடுத்த முதல் காதல் பரிசு என்ன தெரியுமா? ஐஃபோன்! ஆஸ்திரேலியாவில் இருந்து ஆசை, ஆசையாய் வாங்கி வந்திருக்கிறார் கேப்டன். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் உள்ளிட்ட பிரபலங்களின் ஃபேவ ரிட்... டோனியின் நீளமான ஹேர் ஸ்டைல். சாக்ஷியின் சந்தோஷத்திற்காக அதையும் மாற்றிக் கொண்டார் மனிதர். காதல் காலத்தில் டோனியின் உடைகளை தேர்ந்தெடுத்ததும் சாக்ஷிதானாம். விலங்குகளின் மீது கூட கருணை காட்டுபவ ராம் சாக்ஷி ராவத். அவுரங்காபாத் தெரு நாய்களுக் காக தினமும் 100 ரூபாயை செல வழித்திருக்கிறார். சாக்ஷியின் இந்த கருணை குணம்தான் டோனியின் உள்ளத்தை கொள்ளை கொண்டிருக்கிறது. டோனியின் பிறந்த நாளான ஜூலை 7-ம் தேதிக்கு முன்பாக டோனி திருமணம் முடிந்துவிட வேண்டும் என்று ஜோதிடர் கள் சொன்னதும், பெற்றோர்கள் உடல் நலன் உள்ளிட்டவையும் சேர்ந்துதான் ஜூலை 4-ம் தேதியே திருமணத்தை நடத்த வைத்ததாம். சுரேஷ் ரெய்னா, ஆர்.பி.சிங், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா ஆகிய நான்கு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே அழைக்கப் பட்டிருந்தனர். ஒரு காலத்தில் நெருங்கிய நண்பராக இருந்த யுவராஜ்சிங் அழைக்கப்படாதது கிரிக்கெட் வட்டாரத்தில் கவனிக்கப்பட்டது.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமண அறிவிப்பு மீடியாக்களில் வந்து ஏகப்பிரச்சினை ஆனது போல நடிகைகளால் எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்றுதான் டோனி தன் திருமணத்தை இத்தனை ரகசியமாக நடத்தினார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள்.

புலிகேசியான புண்ணாக்கு! -வைகைப்புயல் வடிவேலு!


shockan.blogspot.com

'புள்ளைய பேழவிட்டுப் பாருனு ஊர்ல சொலகம் சொல்வாக வெளிக்கிபோன கொழந்த அதுமேலயே கதக்குனு ஒக்காந்திருச்சுன்னா... 'ம்ஹீக்கும்... இது தேறாது'னு சொல்லுவாங்க. பெட்டக்ஸ்ல ஒட்டிக்கிறாம குந்துனாப்ல தள்ளி ஒக்காந்துச்சுன்னா... புள்ள பொழச்சுக்குமாம். பிள்ளைகளோட ஃப்யூச்சர எதவச்சு கண்டுபுடிச்சிருகாங்கண்டு பாருங்க!

இப்புடித்தான் புள்ளைகளோட ஒவ்வொரு நடவடிக்கையையும் வச்சு பெத்தவக கணிக்கிறாக.

எனக்கு ஏழெட்டு வயசு இருக்கப்ப எங்கம்மா சொல்லுச்சு... ‘"ஏலேய்... எய்யா... நீ பெரிய நடிகரா வருவடா'ன்னுச்சு. அந்தச் சொல்லு இன்னமும் என் நெஞ்சுக்குள்ளயே நிக்குது.

எங்க அப்பாம்மா வெளில போயிருக்கிற போது எங்க குட்டித்தம்பி "ங்ஙொய்'னு அழுதுக்கிட்டுருப்பான். அப்ப நானும், பெரிய தம்பி ஜெகதீசனும் சினிமா காட்டி வௌôடுவம். எங்க குடுச வீடுதான் டூரிங் டாக்கீஸு. எங்கப்பாவோட வெள்ளவேட்டிய தெர மாதிரி கட்டிப்புட்டு... அரிக்கன் லைட்டை தெரைக்குப் பின்னாடி வச்சிட்டு நடுவுல நின்னு நானும் என் தம்பியும் எம்.ஜி.ஆரு, நம்பியாரு மாதிரி கத்திச் சண்ட போடுவம்; நடிப்பம். ‘"புதிய வானம், புதிய பூமி'னு நான் பாட்டும் பாடுவேன். எங்க உருவத்தோட நெழலு வேட்டியில சினிமா மாதிரி தெரியும். அதப்பாத்து அழுகய நிறுத்திப்புட்டு சிரிப்பான் என் தம்பி. ஒருநா நாம் பண்ற இந்த கூத்தப் பாத்துப்புட்டுத்தான் அம்மா சொல்லுச்சு அப்புடி.

போன மாசம் அம்மாவப் பாக்க ஊருக்கு போயிருந்தப்ப சின்னப்புள்ளயில நான் நடிச்சத சொல்லிப்புட்டு.... ‘"வடிவேலு... போடா போடா புண்ணாக்குனு நீ மொத மொத நடிச்சதயும் இப்ப புலிகேசியா நடிச்சதயும் நெனச்சு நெனச்சு பாக்குறேன். ஆத்தாடீ... ரெண்டுக்கும் சம்பந்தமே இல்லப்பா! அந்த வடிவேலு வேறயோ.. இந்த வடிவேலு வேறயோ'னு சொல்லுச்சு.

எனக்கே அந்த ஆச்சரியம் தாங்க முடியல.

புண்ணாக்கு வடிவேலு தண்ணீன்னா... புலிகேசி வடிவேலு எண்ண. ரெண்டும் ஒட்டவே ஒட்டாது.

டி.ராஜேந்தரோட ‘"என் தங்கை கல்யாணி' படத்துல தான் மொதல்ல தல காட்னேன். ஆனாலும்... ராஜ்கிரணோட "என் ராசாவின் மனசில'தான் எனக்கு மொதப் படம். அந்தப்படத்துல நடிக்கும்போது எலும்புந்தோலுமா இருந்தேன். "சின்னக் கவுண்டர்' படத்துல நடிச்சிட்டு... அந்தப் படம் ரிலீஸானதும் தியேட்டர் வாசல்ல போய் நின்னேன். படம் பாத்துட்டு வந்த மக்கள்லாம் என் கேரக்டர குறிப்பிட்டு "யாரோ கெழவன நடிக்கவச்சிருக்காய்ங்க'னு சொல்லிக் கிட்டுப் போனாங்க. எளந்தாரிப் பயல கெழவன்னு சொன்னா கோவந்தான வரும். ஆனா... எனக்கு வரல. குடும்பத் துல கஷ்டம். நல்ல சாப்பாடு கெடயாது. அதான் டொக்கு விழுந்துபோயி இருந் தேன். கழுத்தெலும்புல ரெண்டு பக்கமும் காப்புடி அரிசி போடலாம். அம்புட்டு பள்ளம். ச்சே... இளமையில வறும வர்றது ரொம்ப கொடுமங்க.

எந்த பேக்ரவுண்டும் இல்லாம, பெரிய சப்போட்டு இல்லாம விடாம போராடுனேன். அதுதான் இந்த வாழ்க் கைய குடுத்துருக்கு. இன்னக்கி கன்ன மெல்லாம் சத போட்டுருந்தாலும் தெனமும் கேமரா முன்னாடி நிக்கிம் போது ‘"இதுதாண்டா வடிவேலு ஒனக்கு மொத சான்ஸு. அத விட்றாத... விட்றாத... விட்றாத'னு என்னய புதுமுக மாவே நெனச்சுக்கிறேன்.

"வின்னர்' படத்துல வந்த கைப்புள்ள காமெடிய பாராட்டாதவங்களே கெடையாது. ஆனா.. அந்தப் படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி கால் ஒடைஞ்சு போச்சு. அந்த வலியோடதான் அந்தப் படத்துல நடிச்சேன். உசுரு போற வலி மொகத்துல தெரியாம நடிச்சேன். நான் சில மேட்டர்ல ஏமாத்தப்பட்டு நிக்கிறது ஒங்க எல்லாத்துக்கும் தெரியும். இந்த பிரச்சனை எனக்கு தெரியவந்த சமயத்துல எனக்கு கடுமையான மன உளைச்சல். ‘"ஆதவன்' படத்துக்காக ஷூட்டிங் ஸ்பாட்ல போய் நிக்கிறேன். காமெடி பண்ணணும். ஆனா மனசு பூரா வேதனை. ‘"சார்... இன்னக்கி விட்றுவம். நாளைக்கு வச்சுக்கலாமே'னு கே.எஸ்.ரவிக்குமார் கிட்ட கேக்குறேன்.

"வடிவேலு... பிரச்சனய அப்பறமா பாத்துக்கலாம். மனச ஸ்டெடி பண்ணுங்க. இந்த மாதிரி சமயத்துல கேப் விடக்கூடாது'னு சொன்னார்.

‘"வடிவேலு... நான் ஏர்போர்ட்ல வெய்ட்டிங் ரூம்ல இருந்து பேசுறேன். இங்க டிவியில ஒங்க காமெடி பாத்தேன். ஒடனே போன் பண்ணணும்னு தோணுச்சு. அதான். வடிவேலு... இப்புடியே அடிச்சு மேல..மேல... போய்க்கே இருக்கணும்'னு நக்கீரன் கோபால் அண்ணே போன் பண்ணுச்சு. இப்படியெல்லாம் எம்மேல எல்லாருக்கும் அக்கறை.

எம்புட்டு கஷ்டம்னாலும் காலைல எந்திருச்சதும் காமெடி பண்ணியாகணும் நான். அதுக்காக எப்பவுமே சினிமாவப் பத்தியே பேசிக்கிட்டு, சினிமாவப் பத்தியே சிந்திச்சுக்கிட்டு கெடக்குறேன்.

என்னோட காமெடியில நெனச்சு நெனச்சு சிரிக்க வைக்கிற பல காமெடி காட்சிகள் கார் பயணத் துலதான் உருவாச்சு! அன்னைக்கும் அப்படித்தேங்... கார்ல கண்ணமூடி காமெடி ஸீன திங்க் பண்ணிக்கிட்டே வந்தேன். பசீல வயிறு ‘"கர்ருபுர்ரு'ங்குது.

"ஏய்யா டெய்வரு... வண்டியில ஏதாவது திங்கிறதுக்கு கெடக்கா?'

‘"பின்னாடி இருக்க கவர்ல பாருங் கண்ணே.'

கவர எடுத்து தொழாவுனேன். ஒரே ஒரு ஆப்பிள் இருந்திச்சு. ஆனப்பசிக்கு ஒத்த ஆப்பிளு எப்புடி பத்தும். ஆனாலும் "இது வாவது இருந்துச்சே'னு எடுத்தேன். ஆப்பிள ஆச ஆசயா பாத்தபடி நல்லா தொடக்கிறேன். அதுக்குள்ள வாயில சலுவா ஊருது. காம்ப கடுச்சு துப்பீரலாம்னு கடுச்சேன். ஏதோ ஒரு யோசனையில ஜன்னல் வழியா காம்ப தூக்கிப் போடுறதுக்கு பதிலா... காம்ப கைல எடுத்துக்கிட்டு ஆப்பிள தூக்கி எறிஞ்சுட்டேன்.

‘"ஆஹா... வாய்க்கு எட்டினது வயித்துக்கு எட்டலயே'னு வயித்தெரிச்சலாப் போச்சு.

ஆனாலும் சட்டுனு அதுல ஒரு காமெடி பீஸு மாட்டுச்சுல்ல.

‘"போக்கிரி' படத்துல... ஒருத்தன் வச்சுருக்க லவ் லெட்டர புடுங்கி அதுல உளுந்த வடய வச்சு நசுக்கி எண்ணெய்ய எடுத்துட்டு பேப்பர தூக்கிப் போடுறதுக்குப் பதிலா வடய தூக்கிப் போட்றுவேன். அது இந்த ஆப்பிள் மூலமா கிடைச்ச காமெடிதான்.

சில டைரக்டர்கள் கதை சொல்றப்பவே காமெடியவும் புடிச்சுக் கொண்டாந்துடுவாங்க.

அவுக கொண்டுவர்ற மாவ கைல எடுத்து பிதுக்கிப் பாப்பேன். வழுவழுனு இருந்தா அப்புடியே பலகாரம் சுடுறது தான் நம்ம வேல. நெறுநெறுனு இருந்தா அப்புடியே ஒரல்ல குடுத்து இன்னும் கொஞ்சம் நைஸா ஆட்டியெடுத்து சுட்று வேன்.

மதுரயில நானும், பிரெண்டு முருகேசனும் தியேட்டர் தியேட்டரா போயி படம் பாப்பம். படத்துல ஏதாவது போரடிக்கிற ஸீனு வந்தா... ‘"பருத்திப்பால்... யேய்ய்... முறுக்கு முறுக்கேய்...'னு ரவுசு விடுவோம். நாம நடிக்கிற ஸீன போரடிக்காம செய்யணும்கிற அக்கறையும், கவனமும் எனக்குள்ள இருக்க ரசிகன் வடிவேலு தந்த அனுபவம்தான்.

இப்படி நேசிச்சு பண்றதாலதான் எனக்கு இந்த வாழ்க்க கெடச்சிருக்கு.

அதுதான்... எங்கம்மா சொன்ன மாதிரி "புண்ணாக்க புலிகேசி'யாக் குச்சு. எங்கம்மா சொன்ன சொல்லவே... இந்த தொடருக்கு டைட்டிலா வப்பம்.

நல்லா சொல்றன்யா டீட்டெயிலு!

இந்த நூற்றாண்டின் முதல் நட்சத்திர கிரகணம்!


shockan.blogspot.com
இந்த நூற்றாண்டில் இதுவரை நடந்திராத ஒரு வானியல் அதிசயம் நாளை இரவு நடக்கவுள்ளது.

டெல்டா ஒபிஹூயுச்சி என்ற நட்சத்திரத்தை ரோமா என்ற 50 கி.மீ. விட்டம் கொண்ட ஒரு எரிகல் கடக்கவுள்ளதை பூமியிலிருந்து பார்க்க முடியும். அப்போது நடசத்திரத்தை அந்த எரிகல் மறைக்கவுள்ளதால், நட்சத்திர கிரகணம் ஏற்படவுள்ளது.

இந்த நூற்றாண்டில் இதுவரை பூமியிலிருந்து பார்க்கும் வகையிலான நட்சத்திர கிரகணம் நடந்ததேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் சில நொடிகளே நீடிக்கப் போகும் இந்த வானியல் சம்பவத்தை மத்திய ஐரோப்பா, ஸ்பெயின், கனாரி தீவுகள் உள்ளிட்ட பூமியின் சில பகுதிகளில் இருப்பவர்கள் மட்டும் நாளை இரவு (ஜூலை 8) காண முடியும்.

எரிகற்கள் மிக பயங்கர வேகத்தில் பயணிப்பவை என்பதால் இந்த நிகழ்வு 5 நொடிகள் மட்டுமே நீடிக்கும்.

Tuesday, July 6, 2010

கமலின் மன்மதன் அம்பு படத்தில் நடிக்கும் த்ரிஷா அம்மா!


shockan.blogspot.com

கமலஹாசன் நடிக்கும் மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் நடிக்கிறார். இதன் மூலம் அவரும் நடிகையாகிறார்.

அழகான தாய்க்குலங்களைக் கொண்டுள்ள நடிகைகளில் ஒருவர் த்ரிஷா.

உமா தான் த்ரிஷாவின் கால்ஷீட் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார். மேலும், த்ரிஷாவுடன் வெளியூர் படப்பிடிப்புக்கும் செல்கிறார். அழகாக இருக்கும் அவரை ஏற்கனவே நிறைய பேர் நடிக்க அழைத்துள்ளனர். ஆனால், அவர் மறுத்து விட்டார்.

அன்மையில் சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் மன்மதன் அம்பு பட துவக்க விழா நடந்தது. அதற்கு த்ரிஷாவுடன் உமாவும் வந்திருந்தார். அப்போது மகள் மட்டுமல்லாமல் அம்மாவும் விழாவுக்கு வந்தவர்களை கவர்ந்தார்.

இந்த நிலையில், மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷா அம்மாவுக்கு ஏற்ற கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அவரை நடிக்குமாறு கே.எஸ்.ரவிக்குமார் கேட்டபோது மறுத்த உமா கமல் வற்புறுத்தியதும் ஒத்துக் கொண்டார்.

இந்த படத்தில் கமல் ஜோடியாக நடிக்க நயன்தாரா, த்ரிஷா இடையே கடும் போட்டி நிலவியது. மர்மயோகி படத்தில் த்ரிஷாவை நடிக்க வைப்பதாக கமல் உறுதி அளித்து இருந்தார். ஆனால், அந்த படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷாவை தேர்வு செய்தார். இதனால் தான் கமல் வற்புறுத்தியதும் உமா நடிக்க ஒப்புக்கொண்டார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. உமா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கேயே படமாக்கப்பட உள்ளது. உமாவின் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

எத்தனையோ பேர் நடிப்பு அம்பை உமாவை நோக்கி வீசியும் அவர் படியவில்லை. கடைசியில் மன்மதன் அம்பு வந்துதான் உமாவை நடிப்புக் களத்திற்குக் கொண்டு வந்துள்ளது!

மகன்களுக்கு செக்ஸ் கல்வி-ஸ்பியர்ஸ் ஆர்வம்


shockan.blogspot.com
தனது மகன்கள் வளர ஆரம்பித்துள்ளதாகவும், அவர்களிடம் விரைவில் செக்ஸ் குறித்த விழிப்புணர்வை ஊட்ட ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார் பாப் பாடகி பிரிடனி ஸ்பியர்ஸ்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது குழந்தைள் வளர ஆரம்பித்து விட்டனர். சீன் பிரஸ்டனுக்கு 4 வயதாகிறது. ஜெய்டன் ஜேம்ஸுக்கு 3 வயதாகிறது. அவர்கள் எப்போது என்னைப் பார்த்து, எப்படிம்மா குழந்தை பிறக்கிறது என்று கேட்கப் போகிறார்கள் என்று காத்திருக்கிறேன். அந்தக் கேள்விக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்றும் தயார் நிலையில் இருக்கிறேன்.

இந்த விஷயத்தில் பொறுப்புள்ள தாயாக அவர்களுக்கு தெரிய விரும்புகிறேன்.

எனது குழந்தைகளும் என்னைப் போலவே பொழுதுபோக்குத் துறைக்கு வர வேண்டும் என நான் விரும்பவில்லை. ஒரு வேளை அப்படி அவர்கள் விரும்பினால் அறைக்குள் போட்டு பூட்டி வைத்து விடுவேன். 30 வயதான பிறகுதான் திறந்து விடுவேன் என்று கூறிச் சிரிக்கிறார் ஸ்பியர்ஸ்.

Sunday, July 4, 2010

அதிகமாக ஆசைப்பட்ட பிரகாஷ்ராஜ்... ஆளை மாற்றிய இயக்குனர் ஹரி


shockan.blogspot.com

சூரியாவின் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான ‘சிங்கம்’ படம் கடந்த ஜூன் 28ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படம், சன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தால் உலகமெங்கும் திரையிடப்பட்டது.


கனடாவின் பாக்ஸ் ஆபீசில் 8வது இடமும், இங்கிலாந்தின் பாக்ஸ் ஆபீசில் 21வது இடமும் பெற்ற பெருமைக்குறிய சிங்கம், தற்போது தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட பட்டுள்ளது.


ஜுலை 2 ந் தேதி, சிங்கம் படம் ‘‘யமுடு” என்றப் போரில் ஆந்திராவிலும் கலக்க களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜின் ‘டப்பிங்’ பிரச்சனை திரைவட்டாரத்தில் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி உள்ளது...


சூர்யா-அனுஷ்கா கதாநாயகன், நாயகியாக நடித்த சிங்கம் பாடத்தின் வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். இந்தப் படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ பட நிறுவனம் தயாரித்தது.


படம் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில்... தாயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சிங்கம் படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்படுவது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜிடம் கூறியுள்ளார்.

மேலும், சன் பிக்சர்ஸாரால் உலகமெங்கும் வெளியிடப்பட்டாலும், படத்தின் தெலுங்கு உரிமத்தை மட்டும் தானே பெற்றுள்ளதாகவும் தெரியப்படுத்தியுள்ளார்.

அதற்கு, பிரகாஷ்ராஜ், ‘‘அப்படின்னா உங்களுக்காக, தெலுங்கில் என்னோட ‘டப்பிங்’ பகுதிய சும்மாவே பண்ணித் தாறேன்” என்று நட்புமிகுதியில் கூறியுள்ளார் .

இதனால், சந்தோஷப்பட்ட தயாரிப்பாளரும்பிரகாஷ்ராஜ்,, இயக்குனரும் படம் முடிந்து, பின்னணிக் குரல் பதிவின் போது, பிரகாஷ்ராஜினை அனுகினர். அப்போது, பிரகாஷ்ராஜ் 15லட்சம் கொடுத்தால் தான் டப்பிங் பேசுவேன் என்றுள்ளார்.


அப்படி, அவர் கேட்டதும், என்னடா... இது, சும்மாவே பண்ணித்தாறேன்னு சொன்னவரு, சாதாரண சம்பளத்தை விட இவ்வளவு அதிகமாக கேட்கிறாரே...! என்று அதிர்ந்து போயினர்.

சரி... முதலில் தமிழில் முடித்துவிட்டு, பிறகு தெலுங்கு குறித்து யோசிக்கலாம் என்று நினைத்து தமிழ் குரல் பதிவினை மட்டும் அப்போது முடித்தனர்.


சிங்கம் படமும், வெளியாகி உலகம் எங்கும் வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெலுங்கு டப்பிங் குறித்து மீண்டும் பேசியுள்ளார்.


அதற்கு, படத்தின் வெற்றியைக் கணித்து 25 லட்சம் கேட்டு தனது வில்லத்தனத்தை காட்டியுள்ளார் பிரகாஷ்ராஜ்.







இதனால், வெறுத்துப் போன தயாரிப்பாளர், இது பற்றி இயக்குனர் ஹரியிடம் கூற, பிரகாஷ்ராஜூக்கு பதிலாக வேறொருவரைப் பேச வைத்து படத்தை முடித்துள்ளார் ஹரி.


இதை தொடர்ந்து, பிரகாஷ்ராஜிற்கு ஏதோ பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளது போலும், தயாரிப்பாளரைத் தானே தொடர்பு கொண்டு, 10 லட்சம் தாங்க போதும் என்றாராம்.


அதற்கு, படத்தின் ட்ப்பிங் எல்லாம் முடிந்து, ஜூலை 2ல் படம் தெலுங்கில் வெளியாகப் போவதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறிட.

அடைந்த பிரகாஷ்ராஜ், “எனக்கும், என்னோட குரலுக்கும் தெலுங்கில் தனி மவுசு இருக்கும் போது, எப்படி... நீங்க எனக்குப் பதிலா வேறொருத்தர பேச வைக்கலாம்?” என்று, கோபப்பட்டு தெலுங்கு ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷனில் (மா)’ ஞானவேல்ராஜா மீது புகார் கொடுத்தார்.


இயக்குனர் ஹரியிடம், தொலுங்கு திரைப்பட கலைஞர்கள் சங்கத்தினர்(மா), இவ்விவகாரம் பற்றி கேட்டதற்கு, “இந்தப் படத்தின் தெலுங்கு உரிமம் பெற்றுள்ள தயாரிப்பாளருக்கு, படத்திற்கு தேவையான நடவடிக்கைகளை செயற்படுத்தும் பொறுப்பு உள்ளது.

மேலும், பிரகாஷ்ராஜ் டப்பிங் பேச 25 லட்சம் கேட்டதால் தான், வேறொருவரை பேச வைத்தோம். இது தயாரிப்பாளரின் உரிமை. இதில், தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை” என்றார்.

இந்நிலையில், ‘‘யமுடு” (சிங்கம்) வெளியிடப்பட்டும் விட்டதால்... வில்லன் நடிகரின் இந்த வில்லங்கத்தில்... தொலுங்கு ‘மா’ என்ன முடிவு எடுப்பது என குழப்பத்தில் உள்ளது.

பள்ளித் தோழியை மணந்தார் டோணி


shockan.blogspot.com

டேராடூன் : இந்திய கிரிக்கெட் அணியின்கேப்டன் டோணிக்கும், அவரது பள்ளித் தோழி சாக்ஷி சிங் ராவத்துக்கும் நேற்று இரவு விமரிசையாக திருமணம் நடந்தேறியகது.

இதில் குடும்பத்தினர், உறவினர்கள், மிக நெருங்கிய நண்பர்கள், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சிலர் என கொஞ்சம் பேரே கலந்து கொண்டனர்.

டேராடூனிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஸ்ராந்தி ரிசார்ட்ஸில் திருமணம் நடந்தது. மொத்தமே 60 பேர் வரை கலந்து கொண்டதாக தெரிகிறது.

கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், ஆசிஷ்நெஹ்ரா, ஆர்.பி.சிங், சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், பிசிசிஐ செயலாளருமான சீனிவாசனும் கலந்து கொண்டார்.

சினிமா நடிகர் ஜான் ஆப்ரகாம், இயக்குநர் பாரா கான் ஆகியோரும் வந்திருந்தனர்.

கருப்பு நிற ஷெர்வானியில் டோணியும், சுடிதார் பைஜாமாவில் மணப்பெண்ணும் இருந்தனர். இரவு 8 மணிக்கு கல்யாண நிகச்சிகள் தொடங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

அலங்கரிக்கப்பட்ட குதிரையில் அமர்ந்த டோணி தனது இடத்திலிருந்து மணமகள் தங்கியிருந்த இடத்திற்கு கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் பயணம் செய்து சென்றார்.

திருமணத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீடியாக்காரர்கள் அனுமதிக்கப்படவில்லை.

டோணிக்கு வருகிற 7ம் தேதி 29வது பிறந்த நாளாகும். அன்று மும்பையி்ல் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாக்ஷி உ.பி. மாநிலம் ஒளரங்கபாத்தைச் சேர்ந்தவர். ராஞ்சியில் அவருடைய தந்தை பணியாற்றியபோது டோணி குடும்பத்தினருடன் நட்பு ஏற்பட்டது. டோணியும், சாக்ஷியும், ராஞ்சியில் உள்ள டிஏவி பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் ஜெர்மனி! * பிரேசில் சரிந்தது ஏன்? *சோகத்தில் மீளாத ரசிகர்கள்


shockan.blogspot.com

கேப்டவுன்: உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்னொரு அதிர்ச்சி. நேற்று நடந்த விறுவிறுப்பான காலிறுதியில் ஜெர்மனி அணி, அர்ஜென்டினாவை 4-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது. அபாரமாக ஆடி 2 கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளோஸ், அர்ஜென்டினாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று நடந்த காலிறுதியில் உலக ரேங்கிங் பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணி, அர்ஜென்டினாவை(7வது இடம்) எதிர்கொண்டது. இரு அணிகளுமே முன்னாள் சாம்பியன்கள். தவிர, ஐரோப்பாவின் சிறந்த அணிகள் என்பதால் "பைனல்' போன்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

ஜெர்மனி ஆதிக்கம்:

முதல் பாதியில் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. 3வது நிமிடத்தில் கிடைத்த "பிரீகிக்' வாய்ப்பில் ஸ்கீவன்ஸ்டீகர் பந்தை அடித்தார். அதனை தலையால் முட்டி முல்லர் சூப்பராக கோல் அடிக்க, ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. ஓசில், கெதிரா, டெமிக்லஸ் ஆகியோர் பம்பரமாக சுழன்று ஆட, அர்ஜென்டினா அணி செய்வதறியாமல் திணறிப் போனது. பின் 24வது நிமிடத்தில் முல்லர் பந்தை "பாஸ்' செய்தார். அதனை குளோஸ் அடித்தார். ஆனால், நூலிழையில் விலகிச் சென்றது. 37வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் டெவேஸ் பந்தை கோல் போஸ்டுக்குள் அடித்தார். ஆனால், நடுவர் "ஆப்சைடு' என அறிவிக்க, நொந்து போனாம்ர். 39வது நிமிடத்தில் ஜெர்மனியின் பொடோல்ஸ்கி அடித்த "ஷாட்' இலக்கு தவறி பறந்தது. 44வது நிமிடத்தில் முல்லார் அரிய வாய்ப்பை வீணாக்கினார். முதல் பாதியில் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்று இருந்தது.

மெஸ்சி ஏமாற்றம்:

இரண்டாவது பாதியில் துவக்கத்தில் அர்ஜென்டினா வீரர்கள் போராடினர். ஆனாலும் "பினிஷிங்' இல்லாததால் கோல் அடிக்க இயலவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்சி ஏமாற்றம் அளித்தார்.

கோல் மழை:

இதற்கு பின் ஜெர்மனி கோல் மழை பொழிந்தது. 68வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் "பெனால்டி ஏரியா'வுக்குள் பாய்ந்து சென்றார் பொடோல்ஸ்கி. பின் சுயலநலம் இல்லாமல் பந்தை குளோஸ் இருக்கும் திசையில் அருமையாக "பாஸ்' செய்தார். தன் கண் முன்னே வந்த பந்தை அப்படியே நடந்து சென்றவாறு சுலபமாக குளோஸ் கோல் அடிக்க, ஜெர்மனி 2-0 என முன்னிலை பெற்றது. இந்த அதிர்ச்சியில் இருந்து அர்ஜென்டினா மீள்வதற்குள் அடுத்த தாக்குதலை ஜெர்மனி படை தொடுத்தது. இம்முறை ஸ்கீவன்ஸ்டீகர் "பாஸ்' செய்ய, பிரடரிக் அற்புதமான கோல் அடித்து மைதானத்தில் அப்படியே படுத்து மகிழ்ந்தார். இதையடுத்து ஜெர்மனி 3-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. 89வது நிமிடத்தில் பொடோல்ஸ்கி பந்தை ஓசிலுக்கு "பாஸ்' செய்தார். அதனை பெற்ற குளோஸ் தனது இரண்டாவது கோல் அடித்து அணியின் வெற்றியை <உறுதி செய்தார். இறுதியில் ஜெர்மனி அணி 4-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. மாரடோனா பயிற்சியில் தேறாத அர்ஜென்டினா அணி, பரிதாபமாக வெளியேறியது.

ஆட்ட நாயகன் விருதை ஜெர்மனியின் ஸ்கீவன்ஸ்டீகர் வென்றார்.

அவமானம்:

உலக கோப்பை வென்றால், நிர்வாணமாக ஓட தயார் என சவால் விடுத்தார் பயிற்சியாளர் மாரடோனா. தற்போது அர்ஜென்டினா காலிறுதியுடன் வெளியேறியதால், அந்த நெருக்கடியில் இருந்து தப்பியுள்ளார். மாறாக படுதோல்வி அடைந்த அவமானத்தில் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வார் என தெரிகிறது.

சபாஷ் "ஆக்டோபஸ்'

அர்ஜென்டிம்வுக்கு எதிராக ஜெர்மனி அணி வெற்றி பெறும் என்ற "ஆக்டோபஸ்' கணிப்பு உண்மையாகி உள்ளது.

ஜெர்மனியின் ஓபர்ஹாசினில் கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சியகம் உள்ளது. இங்குள்ள "ஆக்டோபஸ்', கால்பந்து போட்டிகளின் வெற்றியாளரை துல்லியமாக கணிக்கிறது. இம்முறை உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் ஜெர்மனி அணி, ஆஸ்திரேலியா மற்றும் கானாவை வீழ்த்தும் என குறிப்பிட்டது. இதே போல செர்பியாவிடம் தோல்வி அடையும் என்று சுட்டிக் காட்டியது. தவிர, "ரவுண்ட்-16' போட்டியில் இங்கிலாந்தை வென்று, காலிறுதிக்கு முன்னேறும் என்று சரியாக சொன்னது. இதே போல காலிறுதியில் ஜெர்மனி வெற்றி பெறும் என்று கணித்தது. இது தற்போது பலித்துள்ளது.

இரண்டாவது வீரர்

அர்ஜென்டினா அணிக்கு எதிரான காலிறுதியில் விளையாடியதன்மூலம், ஜெர்மனி நட்சத்திர வீரர் மிராஸ்லாவ் குளோஸ், சர்வதேச கால்பந்து அரங்கில் தனது 100வது போட்டியில் பங்கேற்றார். இதுவரை இவர் 100 போட்டியில் விளையாடி 52 கோல் அடித்துள்ளார்.* நேற்றைய போட்டியில் இரண்டு கோல் அடித்த குளோஸ், உலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் 2வது இடத்தை, சகவீரர் ஜெர்டு முல்லருடன் பகிர்ந்து கொண்டார். இருவரும் தலா 14 கோல் அடித்துள்ளனர். முதலிடத்தில் பிரேசிலின் ரொனால்டோ (15 கோல்) உள்ளார்.

200வது கோல்

அர்ஜென்டினாவுக்கு எதிரான நேற்றைய காலிறுதியில், ஜெர்மனியின் தாமஸ் முல்லர் முதல் கோல் அடித்தார். இது உலக கோப்பை கால்பந்து அரங்கில், ஜெர்மனி அணியின் 200வது கோல். இதுவரை 97 போட்டியில் விளையாடியுள்ள ஜெர்மனி அணி, 203 கோல் அடித்து, 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அர்ஜென்டினா (97 போட்டி, 211 கோல்) உள்ளது.
* நேற்று 4 கோல் அடித்த ஜெர்மனி அணி, இம்முறை அதிக கோல் அடித்த அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்தது. இதுவரை 5 போட்டியில் விளையாடிய ஜெர்மனி, 13 கோல் அடித்துள்ளது. இதனை தொடர்ந்து அர்ஜென்டினா (5 போட்டி, 10 கோல்), நெதர்லாந்து, பிரேசில் (தலா 5 போட்டி, தலா 9 கோல்) அணிகள் உள்ளன.

பழிதீர்க்க முடியவில்லை

கடந்த 2006ல் ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை தொடரின் காலிறுதியில், ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதற்கு இம்முறை அர்ஜென்டினா பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் வெளியேறியது.

போராடி வென்றது ஸ்பெயின் *சோகத்துடன் வெளியேறியது பராகுவே

ஜோகனஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து தொடரில், இன்று நடந்த பராகுவேக்கு எதிரான காலிறுதியில், ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. தவிர, சுமார் 60 ஆண்டுகளுக்கு பின், ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதித்துள்ளது. கடைசிவரை போராடிய பராகுவே, சோகத்துடன் வெளியேறியது.

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் <உலக கோப்பை கால்பந்து தொடரின் கடைசி காலிறுதி போட்டி, இன்று நடந்தது. இதில் உலகின் "நம்பர்-2' அணியான ஸ்பெயின், 31வது இடத்திலுள்ள பராகுவே அணியை சந்தித்தது.போட்டியின் முதல் நிமிடத்தில் இருந்தே ஸ்பெயின் அணியினர் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பெரும்பாலும் பந்து, இந்த அணியினர் வசமே இருந்து வந்தது. 41வது நிமிடத்தில் கார்டஜோ, பராகுவே அணிக்கு முதல் கோல் அடித்தார். ஆனால் இது நடுவரால் "ஆப்-சைடு' கோல் என அறிவிக்கப்பட, முதல் பாதி கோல் எதுவுமின்றி சமமாக (0-0) முடிந்தது.

பராகுவே ஏமாற்றம்:

இரண்டாவது பாதியில், 57வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஜெரார்டு பிக்யூ, பராகுவே வீரர் கார்டஜோவை, கையை பிடித்து இழுக்க, நடுவர் "எல்லோ கார்டு' கொடுத்து எச்சரித்தார். தவிர, பராகுவேக்கு "பெனால்டி-கிக்' வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கார்டஜோ அடித்த இந்த பந்தை, ஸ்பெயின் கோல் கீப்பர் இகர் கேசில்லாஸ் அருமையாக தடுக்க, "சூப்பர்' வாய்ப்பு கைவிட்டு போனது.


ஸ்பெயின் சொதப்பல்:

அடுத்த சில நிமிடத்தில் அல்காரஸ், ஸ்பெயினின் டேவிட் வில்லாவை பிடித்து தள்ளிவிட்டு, "எல்லோ கார்டு' பெற்றார். இதற்காக ஸ்பெயினுக்கு "பெனால்டி-கிக்' கிடைத்தது. இதை அலோன்ஸ்கா கோலாக மாற்றினார். ஆனால் சரியான இடத்தில் வைத்து பந்தை அடிக்கவில்லை என நடுவர் மறுத்து, மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். இம்முறை சுதாரித்த பராகுவே கோல் கீப்பர் வில்லர், அலோன்ஸ்கா சொதப்பலாக அடித்த பந்தை அருமையாக தடுத்துவிட்டார்.

வெற்றி கோல்:

போட்டியின் 83வது நிமிடத்தில் ஸ்பெயினின் பெட்ரா, தனக்கு கிடைத்த வாய்ப்பில், பராகுவேயின் கோல் பகுதிக்குள் அடித்தார். ஆனால் பந்து கோல் போஸ்ட்டில் பட்டு திரும்பியது. அப்போது அங்கிருந்த டேவிட் வில்லா, மீண்டும் திருப்பி அடித்தார். ஆனால் இம்முறை பந்து கோல் போஸ்ட்டில் பட்டு, கோலாக மாற, ஸ்பெயின் முன்னிலை பெற்றது. இது டேவிட் வில்லா இத்தொடரில் அடித்த ஐந்தாவது கோல் ஆகும்.

இதை சமன்செய்ய, பராகுவே வீரர்கள் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. ஆட்டநேர ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.

60 ஆண்டு சாதனை:

ஸ்பெயின் அணி கடைசியாக கடந்த 1950ல் பிரேசிலில் நடந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி நான்காவது இடம் பிடித்திருந்தது. தற்போது 60 ஆண்டுகளுக்கு பின், அரையிறுதிக்கு முன்னேறி சாதித்துள்ளது. இதையடுத்து வரும் 7ம் தேதி டர்பனில் நடக்கும் அரையிறுதியில் ஜெர்மனி-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

நிறைவேறாமல் போன ஆசை

பராகுவேயின் முன்னணி மாடல் அழகி லாரிசா ரிகில்ம். தங்கள் அணி பங்கேற்கும் போட்டிகளின் போது "கிளுகிளு' உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்து வந்தார். இம்முறை பராகுவே அணி கோப்பை வென்றால், ஆடை இல்லாமல், பிறந்த மேனியாக முக்கிய தெருக்களில் ஓடத் தயார் என அதிரடியாக அறிவித்து இருந்தார். அதாவது ஆடைக்கு பதில் உடல் முழுவதும் பராகுவே அணியின் வண்ணங்களை "பெயின்ட்' மூலம் தீட்டிக் கொண்டு ஓட தயாராக உள்ளேன் என தெரிவித்து இருந்தார். ஆனால் காலிறுதியில் பராகுவே தோற்று வெளியேறியதால், இவரது ஆசை நிறைவேறாமல் போயுள்ளது.

பிரேசில் சரிந்தது ஏன்? *சோகத்தில் மீளாத ரசிகர்கள்

போர்ட் எலிசபெத்: உலக கோப்பை தொடரில் "கால்பந்து இமயம்' பிரேசில் சரிந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. பயிற்சியாளர் துங்காவின் தவறான தேர்வு முறை, தற்காப்பு பகுதியின் பலவீனம், தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை கையாளாதது போன்றவை பிரேசில் அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் 5 முறை உலக சாம்பியன் பிரேசில் அணி, நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியது. இம்முறை "நம்பர்-1' அணியாக களமிறங்கிய பிரேசில், கோப்பை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காலிறுதியுடன் "குட்பை' சொன்னது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

துங்கா தவறு:

இத்தொடர் துவங்கும் முன் பிரேசில் அணி பயிற்சியாளர் துங்கா சில தவறான முடிவுகளை கையாண்டார். அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த ரெனால்டினோ, அட்ரியானோ, டியாகோ, அலெக்சாண்ட்ரோ பாடோ, மார்சிலோ போன்ற வீரர்களை தேர்வு செய்ய மறுத்தார். சூழ்நிலைக்கு ஏற்ப ஆடும் ஆற்றல் படைத்த இவர்களை நீக்கியது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. குறைந்தபட்சம் ரொனால்டினோவுக்கு வாய்ப்பு அளிக்கும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஒழுக்கம் தான் முக்கியம் என்று கூறி, அவரை சேர்க்க மறுத்தார். விளைவு...? முன்னணி வீரர்கள் இல்லாத பிரேசில் அணி, நெதர்லாந்தை சமாளிக்க முடியவில்லை.

தற்காப்பு பலவீனம்:

தவிர, பிரேசில் அணி வழக்கமாக தாக்குதல் பாணியிலான ஆட்டத்துக்கு தான் முக்கியத்துவம் அளிக்கும். இது துங்கா வந்த பிறகு தலைகீழாக மாறியது. தற்காப்பு பகுதியை பலப்படுத்தினார். ஆனால், முக்கியமான காலிறுதியில் பலமாக கருதப்பட்ட தற்காப்பு பகுதியே பலவீனமாக மாறியது. பிலிப் மெலோ "சேம்சைடு' கோல் அடித்தார். கோல்கீப்பர் ஜூலியோ சீசரும் மோசமாக செயல்பட்டார்.

கடந்த 1994ல் கேப்டனாக இருந்து அணிக்கு கோப்பை பெற்று தந்த துங்கா, இம்முறை தனது தவறான உத்திகளால், அணியின் கோப்பை கனவை தகர்த்து விட்டார்.

ரசிகர்கள் சோகம்:

வழக்கமாக "சம்பா' நடனத்துடன் வெற்றியை கொண்டாடும் பிரேசில் ரசிகர்கள், இம்முறை உலக கோப்பை தொடரில் இருந்து தங்களது அணி வெளியேறியதும் அதிர்ச்சியில் உறைந்தனர். தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் கடும் சோகத்தில் காணப்பட்டனர். பாலோ காமா என்ற ரசிகர் கூறுகையில்,"" எல்லாம் முடிந்து விட்டது. எதையும் நம்ப முடியவில்லை. வீரர்கள் எங்களை ஏமாற்றி விட்டனர். சோகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை,''என்றார்.

விலகுகிறார் துங்கா

தோல்விக்கு முழு பொறுப்பேற்று பிரேசில் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து துங்கா விலகுகிறார். இது குறித்து அவர் கூறுகையில்,""மிகவும் கவலையாக இருக்கிறது. யாரும் தோற்பதற்காக விளையாடுவதில்லை. அணியின் பயிற்சியாளர் என்ற முறையில் தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன்,''என்றார்.

இனி சொந்த மண்ணில்...

கடந்த 2002ல் கோப்பை வென்ற பிரேசில் அணி, 2006ல் காலிறுதியுடன் நடையை கட்டியது. இம்முறையும் காலிறுதியுடன் வெளியேறியுள்ளது. இனி 2014ல் பிரேசிலில் நடக்க உள்ள 20வது உலக கோப்பை தொடரில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரசிகர் தற்கொலை

பிரேசில் தோல்வியை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹெய்தி நாட்டை சேர்ந்த 18 வயதான இவர், பிரேசில் வெளியேறிய விரக்தியில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட இவர், ஓடும் கார் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

Saturday, July 3, 2010

யுத்தம் 67 -நக்கீரன் கோபால்


shockan.blogspot.com

ஒரு பெரும் திட்டத்தோடு போலீசார் செயல்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அதனை எதிர்கொள்ளும் வகையில் நாமும் நமது வழக்கறிஞர் டீமும் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தோம். என் நினைவுகள் 9 நாட்களும் எதிர்கொண்ட விசாரணை யுத்தத்தை நினைத்துப் பார்த்தது.

டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் அத்தனை இன்ஸ்பெக்டர்களும் விசாரணைக்காக குவிந்திருந்ததற்கு காரணம், நக்கீரனை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான். ராஜ்குமார் கடத்தப்பட்டது தொடர்பான விசாரணைக்காகத்தான் கோபி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த வழக்கின் விசாரணை அதிகாரி, லட்சுமணசாமி. ஆனால், அவரோடு இன்ஸ்பெக்டர்கள் சிவசுப்ரமணியம், மணிரத்னம் ஆகியோரும் விசாரணை யில் உடனிருந்தனர். இவர்கள் போதா தென்று கோபால்சாமி, கோவிந்த ராஜன் ஆகிய இன்ஸ்பெக்டர்களும் அடிக்கடி விசாரித்தனர். சம்பந்தமே யில்லாமல் இன்ஸ்பெக்டர் மோகன் நிவாசும் வந்து சென்றார்.

எதற்காக இத்தனை இன்ஸ்பெக் டர்கள்? இவர்கள் பொறுப்பில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் வீரப்பன் தொடர்பான வழக்குகள் பதிவாகியிருக் கின்றன. ராஜ்குமார் கடத்தல் வழக்கில் சிக்க வைப்பதற்கான பொய்சாட்சியங்கள் எதுவும் சரிப்படாவிட்டால், வீரப் பன் மேல் போடப்பட்டுள்ள மற்ற வழக்குகளில் என்னை கைது செய்தாக வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். ஏற்கனவே, தம்பி சிவ சுப்ரமணியன் மீது இப்படித்தான் வீரப்பன் தொடர்பான ஒவ்வொரு வழக்கையும் போட்டு, அவரை சிறையிலிருந்து வெளியே வர முடியாமல் செய்வதில் கர்நாடக-தமிழகப் போலீசார் கைகோர்த்து செயல்பட்டுக் கொண்டிருந்தார் கள். சிவாவைப் போலவே என்னையும் சிறைக்கம்பிகளுக் குப் பின்னால் தள்ள முடியுமா என்றுதான் இத்தனை இன்ஸ்பெக்டர்கள் சுற்றி நின்று விசாரித்தார்கள். 9 நாட்கள் விசாரணையைக் கடந்த நிலையில், 10-ஆம் நாள் விசாரணை முடிவில் என்னைக் கைது செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எல்லாத் தரப்பிலும் இருந்தது.

போலீசாரின் திட்டம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனென்றால், அவர்கள் சட்டத்தின்படி விசாரணையை நடத்தவில்லை. மேலிடத்திலிருந்து வரும் உத்தரவின்படிதான் விசாரணையின் போக்கு போய்க் கொண்டிருந்தது. ஒவ்வொன்றையும் நாம் சட்டரீதியாக எதிர்கொண்டு வந்தோம். ஒவ்வொரு நாள் விசாரணையையும் அபிடவிட்டாக கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தோம். அதுபோலவே, சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை முழுமையாக கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஆலோ சனையும் நமது வழக்கறிஞர்கள் தரப்பில் நடந்தது.

ஈரோட்டில் ஒரு வழக்கறி ஞர் டீமும், சென்னையில் தம்பி காமராஜ், அட்வகேட் பெருமாள், தம்பி சிவக்குமார் ஆகியோர் அடங்கிய டீம் சீனியர் கே.எஸ். ஸிடமும் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவிடமும் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தது.

""ராஜ்குமார் அப்டக்ஷன் கேஸை சி.பி.ஐ. விசாரிக்கணும்னு சுப்ரீம்கோர்ட்டில் ஃபைல் பண்ணியிருக்கோமே.. அந்த கேஸில் இந்த வீடியோ ஆதாரத்தை ஒப்படைக்கணும்னு கேட்டு பெட்டிஷன் போடலாம்'' அது தான் சரியாக இருக்கும்.

-வழக்கறிஞர்கள் தரப் பில் இப்படியொரு ஆலோசனை நடந்தது. அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 29-ந் தேதி யுடன் 10 நாள் விசாரணை முடிகிறது. அன்றைக்கு சனிக்கிழமை என்பதால், முதல்நாளே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி விசா ரணையின் கடைசிநாளில் என்னைக் கைது செய்ய போலீசார் சதித்திட்டம் தீட்டினால், இந்த மனு மீதான விசாரணையின்போது, போலீசாரின் நடவடிக்கைகள் பற்றி முறையிடுவதற்கும் நம் வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தினர். ஆனால், வழக்கு விசாரணையை அடுத்த 3-ந் தேதிக்கு தள்ளிவைத்துவிட்டது சுப்ரீம் கோர்ட். சட்டரீதியான நமது போராட்டத்திற்கு நீதிமன்றத்தின் கதவு, சனிக்கிழமையில் திறக்கவில்லை. போலீசாரோ சட்டத்திற்குப் புறம்பாக எப்படிக் கைது செய்து, எங்கே கொண்டு செல்லலாம் என்று இரண்டு, மூன்று வேன்களை நிறுத்தி கதவுகளைத் திறந்து வைத்திருந்தார்கள்.

வழக்கறிஞர் ப.பா.மோகன் ரொம்பவும் பதட்டமாக இருந்தார். ஏதோ ஒரு திட்டத்தோடு போலீசார் இருக்கிறார்கள் என்பதை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரோடு அவரது ஜூனியர்கள் சோமசுந்தரம் உள்ளிட்டவர்களும் இருந்தார்கள்.

""சார்... 9 நாளும் விசாரணையை பார்த்லி தாச்சு. நாளைக்கு நான் போய்ப் பார்க்கிறேன். என்ன சூழல்ங்கிறதை சிக்னல் மூலமா உணர்த்துறேன்'' என்றேன்.

""என்ன சிக்னல்?''

""சரியா பனிரெண்டரை மணிக்கு நான் ஜூஸ் கேட்டு எழுந்து நிற்பேன்.''

""நின்னா?''

""தலைவலியாவும் டயர்டாவும் இருக்கு. அதற்கு ஏதாவது தெம்பா சாப்பிட ணும். ஜூஸ் வேணும்னு கேட்பேன். அவங்க போய் வாங்கிட்டு வருவதை ஒத்துக்க மாட்டேன். நம்ம டிரைவர் மோகனைக் கூப்பிடச் சொல்வேன்.''

""சரி...''

""அப்படி நான் எழுந்து நின்று, மோகனைக் கூப்பிட்டால், உள்ளே எந்தப் பிரச்சினையும் இல்லைன்னு அர்த்தம். இதுதான் என்னோட சிக்னல். ஒருவேளை, அந்த டயத்துக்கு நான் எழுந்து நிற்கலைன்னா, வேற விதமான சூழல் இருக்குன்னு நீங்க புரிஞ்சுக்கிட்டு, சட்டரீதியா என்ன நடவடிக்கைகளை எடுக்கணுமோ அதைச் செய்யுங்க.''

""இது நல்ல ஐடியாதான்'' என்றார் ப.பா.மோகன்.

""சிக்னல் சரியாகவே இருந்தால், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன'' என்ற கேள்வி வந்தது.

""அப்பவும் நாம போலீஸை முழுசா நம்பிட முடியாதுங்க சார்... எச்சரிக்கையாகத்தான் இருக்க ணும். வெளியிலே கோபி நண்பர் நடுமச்சியின் ஸ்ரீபாலாஜி மெட்டல்ஸ்ங்கிற கம்பெனி உள்ளே மூணு கார் வெயிட் பண்ணணும். ஒரு கார் கோயம்புத்தூர் ரூட் டுல போகணும். இன்னொரு கார் மதுரைக்கு. மூணாவது கார், பவானி வழியா சென்னைக்குப் போகணும். எந்தக் காரில் போறேன்ங்கிறது போலீசுக்குத் தெரியக் கூடாது. அவங்க குழம்பிடுவாங்க. ஃபாலோ பண்ணுறது கஷ்டம். நான் எந்த ரூட்டிலாவது போயிடுவேன்.''

""இது நல்ல ஐடியாதான்'' என்றனர். நமது ஈரோடு முகவர் பெரியசாமி ஒரு கார், கோவை முகவர் வெங்கடாச்சலம் ஒரு கார், அப்பாவோட கார் என 3 கார்களும் ஏற்பாடாயின.

29-ந் தேதி. பதட்டம் நிரம்பிய எதிர்பார்ப்போடு அன்றைய பொழுது விடிந்தது. எது நடந்தாலும் எதிர் கொள்வது என்ற மனதிடத்துடன் நான் விசாரணைக்குத் தயாராகிக் கொண்டி ருந்தேன். சி.பி.சி.ஐ.டி அலுவலக வளாகத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள், நக்கீரன் வாசகர்கள், நமது நலன் விரும்பிகள் காலையிலேயே காத்திருந்தார்கள். கோபியில் நிலவிய பதட்டம், சென்னை அலுவலகத்திலும் தொடர்ந்தபடியே இருந்தது.

""நான் பெரம்பலூரிலேயிருந்து வாசகர் பேசுறேங்க. ஆசிரியரை இன்னைக்கு கைது செய்யப் போறதா சொல்லிக்கிறாங்க. அப்படிங்களா? இந்த அநியாயத்தை சும்மா விடக் கூடாதுங்க. நாங்க எப்பவும் நக்கீரன் பக்கம்தான் நிற்போம்.''

""ஹலோ.. நக்கீரன் ஆபீசுங்களா, நான் பழனியிலிருந்து பேசுறேன். ஏதாவது நியூஸ் உண்டுங்களா?''

""என்ன நியூஸ்?''

""ஆசிரியரைப் பற்றி..''

""அவர் கோபியில் இருக்காருங்க.''

""நிருபரு சிவசுப்ரமணியத்தை அரெஸ்ட் செஞ்சதுபோல, நம்ம ஆசிரியரையும் செய்யப்போறதா பேசிக்கிட்டாங்க. அதுதாங்க கேட்டேன்.''

""அப்படி எந்த தகவலும் இல்லீங்க.''

-சென்னையிலிருந்தும் வெளியூரிலிருந் தும் போன்கால்கள் வந்தபடியே இருக்க, வாசகர்களுக்கு நக்கீரன் தம்பிகள் தைரிய மூட்டும் பதிலைச் சொல்லிக் கொண்டிருந் தார்கள்.

கோபி சி.பி.சி.ஐ.டி அலுவலக வாசல். முன்பக்கம், பின்பக்கம் என்று எல்லா பக்கங் களிலும் முன்பு சொன்னது போல் போலீஸ் வேன் நிற்கிறது. ரொம்பவும் எதிர்பார்ப்போடு பத்திரிகை நண்பர்கள் காத்திருந்தார்கள். தினமணி குமார், தினகரன் கணேசன், தினமலர் சம்பத்-ரமணி, தினத்தந்தி விஸ்வநாதன், காலைக்கதிர் தேவராஜ், மாலைமலர் ராகவன், சன் டி.வி. சிவா எல்லோரும் எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள். தினமும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு வந்துவிடும் நமது ஈரோடு முகவர் பெரியசாமி, கோபி முகவர் தேவராஜ் இருவரும் ஒருவித கலக்கத்தோடு இருந்தார்கள். என்ன நடக்குமோ என்கிற பதட்டம் நம் மீது அக்கறை கொண்ட எல்லோருக்கும் இருந்ததால்தான் அந்தப் பதட்டம்.

சென்னை அலுவலகத்திலும் அதே நிலைமை தான். அலுவலகத்தில் உள்ள தம்பிகள் போன் செய்து, என்ன நிலவரம் என்று தம்பி ஜீவாவிடம் கேட்க அவர் சும்மா இல்லாம, போலீஸ் ஜீப்புகள் தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதையும், போலீசார் வழக்கத்தைவிட அதிகமாகக் குவிக்கப்பட்டிருப்பதையும் சொல்ல, பதட்டம் இன்னும் அதிகமானது. போலீஸ் உயரதிகாரிகளின் அலுவலகங்களிலிருந்து கசிந்த தகவல்களும் என்னைக் கைது செய்யப் போவதாகவே கசிந்தன.

சி.பி.சி.ஐ.டி அலுவலக வாசலில் இருந்த நக்கீரன் தம்பிகள், சக பத்திரிகையாளர்கள், நம் மீது அக்கறை கொண்டவர்கள் அனைவரிடமும், வெற்றி என்பது போல விரலால் சிக்னல் கொடுத்துவிட்டு விசா ரணைக்காக உள்ளே போகிறேன். வெளியே நமது அட்வகேட் ப.பா.மோகன் படுடென்ஷனாக இருக் கிறார். சி.பி.சி.ஐ.டி ஆபீஸ் கேட்டை பிடித்து ஆட்டியபடி, போலீசாரிடம் கடும்வாக்குவாதம் செய்து ரணகளப்படுத்திக்கொண்டிருந்தார்.

அலுவலகத்திற்குள் பி.பி. (அரசு வழக்கறிஞர்) ஒருவர் இருந்ததுதான் அவரது ஆவேசத்திற்கு காரணம். போலீஸ் விசாரணை நடக்கும் இடத்தில் அரசு வக்கீல் ஏன் நுழைந்தார். அப்படியென்றால், அவர்கள் போடும் திட்டம் என்ன?

-யுத்தம் தொடரும்

ஜெயலலிதா டீ!


shockan.blogspot.com

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்த அடுத்த நாள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் கலைஞரிடம் பத்திரிகை நிருபர் ஒருவர்... "கொடநாட்டில் விதிமுறைகளை மீறி டீ எஸ்டேட் கட்டப்படுவதாக தகவல் வெளியாகிறதே, அதற்கேனும் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?' என்று அந்த நிருபர் கேட்ட கேள்வியில் உண்மை இருக்கிறதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஊரக வளர்ச்சி இயக்குநர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்திருக்கிறார்.

இதையடுத்து கொடநாடு தேயிலை எஸ்டேட்டில் ஜெ. தரப்பின் பயங்கர கெடுபிடி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. கொடநாடு டீ எஸ்டேட்டில் ஜெ. தரப்பு விதி முறைகளை மீறிக் கட்டிக் கொண்டிருக்கும் தகவல் உண்மைதானா என விசாரணையில் இறங்கி தடைகள் பல தாண்டி ஜெ. டீ தொழிற் சாலையில் நாம் எடுத்த படங்களை எடுத்துக் கொண்டு கொடநாடு தி.மு.க. ஊராட்சிமன்றத் தலைவரான பொன்தோஸிடம் காட்டினோம்.

""ஆமாம்... இதுதான் புதிதாய் கட்டப் படும் டீ தொழிற்சாலை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொடநாடு மேலாளர் நடராஜன் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக் கும் கொடநாடு தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் 1500 சதுர அடி அளவில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி கோரி விண்ணப்பித் திருந்தார். 1500 சதுர அடிக்குள் கட்டிடம் கட்ட யார் அனுமதி கேட்டாலும் கொடுக்க வேண்டிய கடமை ஊராட்சிமன்றத் தலைவருக்கு இருப்பதால் அனுமதி கொடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அதற்கடுத்த சில நாட்களிலும் அதற்கடுத்த மாதங்களிலும் தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலேயே வெவ்வேறு இடங்களில் 1500 சதுர அடி அளவுள்ள 3 கட்டிடங்களுக்கு தனித்தனியாக அனுமதி கோரி கொடநாடு தரப்பிலிருந்து விண்ணப்பிக்கப் பட்டதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த நான்கு கட்டி டங்களும் வெவ்வேறு இடங்களில் கட்டப்படுவதாய் சொல்லி அனுமதிகளை வாங்கிக்கொண்ட அவர்கள் ஏற்கனவே இருந்த அந்த அனுமதிகளை ஒரே கட்டிடமாக தேயிலை தொழிற்சாலையை விரிவு படுத்திக் கட்டுவதாக தகவல் வந்தது.

நீலகிரி மாவட்டம் மலைப் பிரதேசம் என்பதால் ஒருசேர இந்தளவுக்கு தொழிற்சாலைகளைக் கட்டுவதென்றால் தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் அனுமதியும், வனத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, புவி தொழில்நுட்பத்துறை போன்ற துறைகளிடமும் தொழிற்சாலை கட்ட ஆட்சேபம் இல்லை என்று அனுமதி வாங்க வேண்டும். அதோடு அம்மாதிரியான தொழிற்சாலைகளுக்கு த்ரிபிள் ஏ கமிட்டி மற்றும் மலைப்பகுதி பாதுகாப்பு அதிகாரத் திடமும் அனுமதி வாங்க வேண்டும்.

ஆனால் இது மாதிரியான அனுமதிகள் எதையும் வாங்காமல் தொழிற்சாலை கட்டுவது குறித்து விளக்கமளிக்குமாறு 21-11-2009 அன்றே கொடநாடுக் கும் கொடநாடு எஸ்டேட் பங்குதாரர் களான ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் நான் கடிதம் அனுப்பினேன். கொடநாடு எஸ்டேட்டுக்கு ஆய்வு செய்ய சென்றேன். ஆனால் ஜெயலலிதாவும், சசிகலாவும், கொடநாடு எஸ்டேட்டும் பதில் தராமல் நான் அனுப்பிய கடிதத்தைத் திருப்பி அனுப்பியது போலவே கொடநாடு எஸ்டேட்டிற்குள் என்னை நுழைய விடாமல் திருப்பி அனுப்பியது. அதனால் 22-12-09 அன்றே 4 கட்டிடங்களுக்கு கொ டுக்கப்பட்ட அனுமதியை நான் ரத்து செய்து ஆர்டரும் போட்டுவிட்டேன்.

அதற்குப் பின்னால் கொஞ்ச காலம் கட்டிட வேலைகளை நிறுத்தி வைத்திருந்த அவர்கள் பின்னால் கட்டத் தொடங்கினர். இப்போது கிடைத்த தகவல், அவர்கள் மேலும் நான்கு கட்டிடங்களை எந்தவித அனுமதியும் இன்றி கட்டிக்கொண்டி ருக்கிறார்கள் என்பதுதான். நிச்சயம் கலைஞர் அமைத்திருக்கும் விசாரணைக் கமிஷன் மேலும் கொடநாடு எஸ்டேட்டில் நடக்கும் அநியாயங்களை வெளிக்கொண்டு வரும்'' என்கிறார் உறுதியாய்.

கொடநாடு தேயிலைத் தொழிற் சாலையிலிருந்து தயாரிக்கப்படும் டீத் தூள்கள் கொடநாடு டீத்தூள் என்ற பெயரில் பாக்கெட் செய்யப்பட்டு லோக்கலில்-குன்னூரில் மட்டும் விநியோகம் செய்வதோடு எக்ஸ்போர்ட்டும் செய்யப் படுகிறதாம்.

ஆனால் ஜெயலலிதாவோ "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தொடர் நோக்கில்தான் கொடநாட்டில் இருக்கும் லோக்கல் தி.மு.க.காரர்களையும் லோக்கல் தி.மு.க. அமைச்சரையும் வைத்து எனக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற வகையில்தான் பல அவதூறு பிரச்சாரங்களைப் பரப்பிக்கொண்டிருக் கிறார் கருணாநிதி.

உண்மை என்னவென்றால் கொடநாடு எஸ்டேட்டில் மண் சுவரிலான 142 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொழிற் சாலை ஒன்று முற்றிலும் சிதிலமடைந்து கிடக்கும் நிலையில் இருக்கிறது. அதனால் அங்கு பணி புரியும் தொழி லாளர்களின் உயி ருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நல் நோக்கத்திற்காகவே தொழிற்சாலையை புதுப்பிக்கும் பணி கள்தான் நடந்து கொண்டிருக்கின்றன.

சட்டத்திற்கு உட்பட்டு சம்பந் தப்பட்ட அதிகாரி களிடம் முறையான அனுமதி வாங்கித் தான் பழைய தொழிற்சாலையை செப்பனிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் முறையாக நடக்கும் செப்பனிடும் பணிகள் குறித்து விசாரணை செய்ய ஓர் அதிகாரியை கருணாநிதி நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது' என்று மறுப்பு தெரிவித்திருக்கிற நிலையில்... புதிய கட்டிடம் கட்ட கொடநாட்டிலிருந்து அனுமதி கோரிய விண்ணப்பமும், பொன்தோஸ் 4 கட்டிடங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தர விட்ட ஆர்டர் காப்பியையும் வாசகர்களின் பார்வைக்கு நக்கீரன் வைக்கின்றது.

இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். கொடநாட்டுக்கு ஆய்வு செய்ய வருவதையொட்டி பலத்த எதிர்பார்ப்புகள் கொடநாடு முழுக்க பெய்யும் மழையையும் பொருட்படுத்தாது எதிர்பார்த்து நிற்கின்றன. ஆனால் வேண்டுமென்றே இப்படியானப் பொய்களைப் புனைந்து ஆய்வு செய்ய வரும் ஆய்வுக்குழுவை அனுமதிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்க முயற்சி செய்துகொண்டிருக்கிறதாம் கார்டன் தரப்பு.

அமைச்சர்கள் பாஸா? பெயிலா? முதல்வர் விசாரணை!


shockan.blogspot.com

""ஹலோ தலைவரே... செம் மொழி மாநாடு நிறைவடைஞ்சு ஒரு வாரம் ஆகப்போகுது. ஆனாலும், அதன் பிரம்மாண்டம் ஏற்படுத்திய தாக்கம் உலகத்தின் பல பகுதிகளிலும் வாழும் தமிழர்களிடம் இன்னும் குறையவில்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், பிறமாநிலங்களில் இருக்கும் தமிழர்கள், மாநாட்டுக்கு வர முடியாமல் போன தமிழறிஞர்கள் எல்லோரும் கலைஞரை நேரிலும் போனிலும் கடிதத்திலும் தொடர்புகொண்டு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்லிக் கிட்டிருக்காங்க.''

""கலைஞரும் படுவேகமா பழைய சட்டமன்றத்தில் செம்மொழி நூலகத்தை அமைக்கும் பணியைத் தொடங்கிட்டாரே... தமிழின் வளர்ச்சிக்காக மாநாட்டில் அவர் அறிவித்த அறிவிப்பு களும் விறுவிறுன்னு நிறைவேறும்னு எதிர்பார்க்கலாம்.''

""மாநாட்டின் நிறைவு விழாவுக்குத் தலைமை வகித்த பிரணாப் முகர்ஜி, 3-ந் தேதியன்னைக்கு கும்பகோணத்தில் மூப்பனார் சிலையைத் திறந்து வைப்பதற்காக வர்றாரு. இதுசம்பந்தமா டெல்லி யில் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள்கிட்டே பேசுறப்ப, செம்மொழி மாநாடு ரொம்ப நல்லா இருந்தது. பொதுமக்கள் இப்படி ஆர்வமா வருவாங்கன்னு எதிர்பார்க்க லை. இப்ப தேர்தல் நடத்தினா நல்ல ரிசல்ட் கிடைக்கும். நல்லவேளை... பிரைம் மினிஸ்டர் வெளிநாட்டில் இருந்ததால, நானும் டெல்லியை விட்டுப் போவது சரியா இருக்காதுன்னு நினைச்சு மாநாட்டுக்குப் போகாம இருந்திடலாமான்னு நினைச்சேன். டி.ஆர். பாலுதான் மேடத்துக்கிட்டே வலியுறுத்திப் பேசினார். அதற்கப்புறம்தான் வந்தேன். நான் வந்தது நல்லதா போச்சு. இல்லேன்னா ஒரு பெரிய ஃபங்ஷனை மிஸ் பண்ணியிருப் பேன். மாநாட்டு வெற்றியையும் தேர்தல் பற்றியும் மேடத்துக்கிட்டேயும் பேசியிருக்கேன்னு சொன்னாராம்.''

""தேர்தல் சம்பந்தமான பேச்சு எல்லா பக்கமும் அதிகமாகிக்கிட்டிருக்குப்பா.''

""தலைமைச் செயலகத்திலும் அதே பேச்சுதாங்க தலைவரே... ஒவ்வொரு அமைச்சகமும் இந்த நாலாண்டுகளில் என்ன செய்திருக் குன்னு ஜூலை 2-வது வாரத்தி லிருந்து துறைரீதியா ஆய்வு செய்ய கலைஞர் ரெடியாயிட்டார். அதனால, அமைச்சர்கள் இப்பவே டென்ஷனாயிட்டாங்க. தங்களோட துறை அதிகாரிகள்கிட்டே, நம்ம டிபார்ட் மெண்ட் சார்பா என்னென்ன செய்திருக்கோம்னு புள்ளிவிவரம் எடுங்கன்னு விரட்டிக்கிட்டிருக்காங்க. முதல்வர் நடத்தப்போற ஆய்வில் பாஸாகாத மந்திரிகளுக்கு வரும் தேர்தலில் எம்.எல்.ஏ சீட்டே கிடைக்காதுங்கிறதுதான் இப்போ இருக்கிற நிலைமையாம். அமைச்சர்களெல்லாம் இந்த டென்ஷனில் இருந்தால், துணை முதல்வருக்கு வேறொரு டென்ஷன்.''

""அவருக்கு என்ன டென்ஷன்?''

""அவர் லண்டன் போவதற்குத் திட்டமிட்டிருந்தார். ஆய்வுப் பணிகளை முதல்வர் தொடங்குவதால், தனது துறைகளின் ஆய்வு எப்போது நடக்கும்னு தெரியாத நிலையில், பயணத்தை உறுதி செய்யாமல் இருக்கிறார். மத்திய அமைச்சர் அழகிரி 3-ந் தேதி தயாளு அம்மாளுடன் அமெரிக்காவுக்குப் போறார். மருத்துவ சிகிச்சைக்காக இந்தப் பயணமாம்.''

""பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து 5-ந் தேதி எதிர்க் கட்சிகள் நடத்தும் பந்த்தில் விஜயகாந்த் கலந்துக்கணும்னு கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் வெளிப்படையா அழைப்பு விடுத்தாரே... என்ன ரியாக்ஷன்?''

""இதுவரைக்கும் எந்த பதிலும் விஜயகாந்த் தரப்பிலி ருந்து வரலை. கொடநாட்டில் இருக்கிற ஜெ, கடைசி நேரத்தில் சென்னைக்கு கிளம்பி வந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்க லாம்னு அ.தி.மு.க கூட்டணியில் பேச்சு நிலவுது. ஜெ கலந்துகொள் ளும் நிலையில், தே.மு.தி.க தரப்பி லிருந்து யாராவது ஒரு பிரதிநிதி கலந்துக்கிட்டா அது கூட்டணிக் கான அச்சாரமா இருக்கும்ங்கிற கணக்கோடு கம்யூனிஸ்ட் தோழர் களும், அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தே.மு.தி.க தரப்பிடம் தொடர்ந்து பேசிக் கிட்டிருக்காங்க.''

""தே.மு.தி.க கட்சிக்குள்ளே என்ன பேச்சு நிலவுது?''

""கட்சியின் மா.செ.க்களெல்லாம் விஜயகாந்த்கிட்டே, "அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் எங்ககிட்டே ரொம்ப ஃப்ரீயா பேசுறாங்க கேப்டன். கூட்டணி முடிவாயிடிச்சின்னு சொல்றாங்க. போராட்டத்தில் கலந்துகொள்ளணும்னு கூப்பிடுறாங்க. என்ன பதில் சொல்றது?'ன்னு கேட்டிருக்காங்க. செம டென்ஷனான விஜயகாந்த், கூட்டணி பற்றி அவங்களோ நீங்களோ என்ன முடிவு பண்ணுறது? நான்தான் முடிவெடுக்கணும்னு தன் கட்சி மா.செ.க்களுக்கு டோஸ்விட்ட விஜயகாந்த், வேறு தேதியில் போராட்டம் நடத்தலாமான்னு ஆலோசனை நடத்திக்கிட்டிருக்கிறார். ஆனாலும் அவருக்கு அ.தி.மு.க தலைவர்கள்கிட்டேயிருந்தும் கம்யூனிஸ்ட் தோழர்கள்கிட்டே யிருந்தும் அழைப்பு வந்துக்கிட்டேதான் இருக்குது.''

""விடுதலைச்சிறுத்தைகளுக்கும் அ.தி.மு.க தரப்பிலிருந்து அழைப்புகள் வருதாமே?''

""அ.தி.மு.க கூட்டணி வலுவா இருக்கணும்னா வட மாவட்டங்களில் தே.மு.தி.க.வும் சிறுத்தைகளும் இருந்தால் நல்லதுன்னு தோட்டத்தில் ஆலோசனை நடந்திருக்குது. பா.ம.கவை கூட்டணியில் சேர்த்து 30, 35 சீட்டுகள் கொடுப்பதற் குப் பதிலா, சிறுத்தைகளுக்கு அதிகபட்சம் 15 சீட் கொடுத்தால் போதும்ங்கிறதும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டிருக் குது. திருமாவை அ.தி.மு.க கூட்டணிக்குக் கொண்டுவர தஞ்சா வூர் பிரமுகர் ஒருத்தர் பேசிப் பார்த்ததா அ.தி.மு.க வட்டாரம் சொல்லுது.''

""காங்கிரசில் நைனா சுதர்சனம் மறைந்தது பெரிய இழப் புங்கிறதை கட்சிக்காரர்கள் ஒவ்வொரு நாளும் பேசிக்கிட்டி ருக்காங்க. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களோ நைனா வகித்து வந்த சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்குக் கடும் போட்டி போடுறாங்களாமே?''

""இந்த ஆட்சிக்காலத்திற்கு இன்னும் ஒரேயொரு சட்டமன்றக் கூட்டத்தொடர்தான் மிச்சமிருக்குது. அதுவும் 10 நாள்தான் நடக்கும். ஆனாலும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் தீவிரமா காய் நகர்த்திக்கிட்டிருக்காங்க. என்ன காரணம்னா, இந்தப் பதவி இருந்தால் சட்டமன்ற-பார்லிமெண்ட் கமிட்டிகளில் பங்கெடுக்கலாம். தேர்தல் கூட்டணி தொடர்பா மேலிடம் நடத்துற ஆலோசனைக் கூட்டத் தில் கலந்துக்கலாம். தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் கட்சியின் பிரதிநிதியா கலந்துக்க முடியும். இந்தத் தகுதியெல் லாம் இருப்பதால்தான் நைனா இடத்துக்கு அத்தனைப் போட்டி.''

""யார் யார் களத்தில் நிற்கிறாங்க?''

""சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான பீட்டர் அல்போன்ஸ், சிறுபான்மை இனத்தவர்ங்கிற முறையிலும் கட்சியில் சீனியர், நல்ல பேச்சாளர்ங்கிற முறையிலும் தலைவர் பதவி தனக்கு தரப்படணும்னு மூவ் பண்ணுறார். இன்னொரு சீனியரான யசோதா, பெண் எம்.எல்.ஏங்கிற முறையிலும் தலித்துங்கிற முறையிலும் மூவ் பண்ணுறார். காங்கிரசின் ஓட்டு வங்கியே தலித் மக்கள்தான்ங்கிறதால அந்த சமுதா யத்தைச் சேர்ந்த தன்னைப் பிரதிநிதித் துவப்படுத்தணும்னு சொல்றார். திருவாடா னை கே.ஆர்.ராமசாமி, வாசன் ஆதர வாளர். இவர் 5 முறை எம்.எல்.ஏ. என்ற தகுதியோடு ப.சி. மூலமாகவும் மூவ் பண்ணுறார். வாசன்-ப.சி. ரெண்டுபேர் ஆதரவும் தனக்கு பதவியைப் பெற்றுத் தரும்ங்கிறது இவரோட கணக்கு. அதோடு, வேலூர் ஞானசேகரனும் சீனியர்ங்கிற முறையில் நைனா வகித்த இடத்துக்குப் போட்டி போடுறார். மேலிடம் என்ன முடி வெடுக்கப் போகுதுங்கிறதை எல்லோரும் ரொம்ப எதிர்பார்த்துக் கிட்டிருக்காங்க.''

""பா.ஜ.கவின் அத்வானி ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்திருக்காரே?''

""செம்மொழி மாநாட்டின்போதே அவர் தமிழ்நாட்டுக்கு விசிட் அடிக்க இருந்ததையும், இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருக்கிற அவருக்கு போதிய செக்யூரிட்டி களைப் போடுவதில் சிரமங்கள் இருக் கும்னு சொல்லப்பட்டதால , மாநாடு முடிந்ததும் வந்தார். ராமேஸ்வரம் கோயி லுக்கு வரும் பக்தர்களுக்கு இரண்டு காரணங்கள்தான் இருக்கும். ஒன்று, வேண்டுதல். இன்னொன்று, மனநிறைவு.''

""அத்வானி ஏன் வந்தாராம்?''

""வாரணாசியில் அவரோட ஜாத கத்தைப் பார்த்த ஜோசி யர்கள், இந்த ஜாதகத் தின்படி உயர்பதவிக்கு வரும் வாய்ப்பு உங்களுக்கு இல்லைன்னு சொல்லிட் டாங்களாம். அதாவது, பிரதமர் பதவிக்கு சான்ஸ் இல்லைங்கிறதுதான் அர்த்தம். இதையடுத்து, இந்தியாவில் புகழ்பெற்ற 9 சிவன் கோயில்களுக் குப் போக முடிவெடுத் திருக்கிறார் அத்வானி. காசியில் வழிபட்டு, கங்கை நீரை எடுத்துக்கிட்டு ராமேஸ்வரம் வந்தவர், துணைப் பிரதமர் பதவி வரை தன்னை அரசியலில் உயர்த் தியதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தி, மன நிறைவு அடைந்திருக்கிறார். அதோடு, அரசியலில் கால் வைக்கும் தன் மகள் பிரதிபாவுக்கு நல்ல எதிர்காலம் அமையணும்ங்கிற வேண்டுதலோடு ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு பூஜையும் செய் திருக்கிறார்.''

""கலைஞருக்கு கோயில் கட்டி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறாரே வேலூர் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி? பெரியார் குருகுலத்தில் வளர்ந்த கலைஞருக்கே கோயிலா?''

""இதே கேள்வியைத்தான் குடியாத்தம் பக்கத்தில் உள்ள சாமிரெட்டிபள்ளியில் கோயில் கட்டியிருக்கும் கிருஷ்ணமூர்த்திகிட்டே கேட்டேன். அவரோ, எங்க பஞ்சாயத்திலே 8 பேருக்கு ஹார்ட் அட்டாக் வந்து போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தோம். 2 லட்ச ரூபாய் கட்டவேண்டியிருந்திச்சி. அந்தளவுக்கு அவங்களுக்கு வசதியில்லை. அவங்களை கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்து ஆபரேஷன் செய்ததால் இப்ப நல்லபடியா இருக்காங்க. டிஸ்சார்ஜானதும் என்கிட்டே வந்து, நீங்கதான் கடவுள்னு காலில் விழுந்தாங்க. அவங்க நல்லா இருக்கிறதுக்கு காரணம் கலைஞர்தானே.. அப்ப அவர்தானே கடவுள்? அதனால தான் அவருக்கு கோயில் கட்டினேன்னு விளக்கம் சொல்றாரு. கோயில் கட்டி சிலை வைத்து கடவுளாக்கு வதைவிட, செய்த நன்றியை மறக்காம வாழ்ற மனிதத்தன்மை உயர்ந்தது.''

234 தொகுதி எந்தக் கட்சிக்கு செல்வாக்கு? நக்கீரன் தேர்தல் கள ஆய்வு முடிவுகள்!




shockan.blogspot.com

தமிழக அரசியல் களம், சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கிவிட்டது. இருக்கிற கூட்டணியை வலிமைப்படுத்தவும், புதிய கூட்டணி அமைக்கவுமான காய் நகர்த்தல்கள் ரகசியமாக நடந்துகொண்டிருக்கின்றன. செம்மொழி மாநாடு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு போராட்டம் எல்லாவற்றிலுமே தேர்தல் கணக்கு அடங்கியிருக்கிறது என்பதுதான் அரசியல் வல்லுநர்களின் பார்வை. 2011 மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடந்தாலும் அதற்கு முன்பாகவே நடந்தாலும் எதிர்கொள்வதற்கான வியூகங்களில் ஆளுந்தரப்பும் எதிர்த்தரப்பும் தயாராகவே இருக்கின்றன என்பதுதான் தற்போதைய நிலைமை.

தேர்தல் களத்தில் பாய்ச்சலோடு முன் செல்வதே நக்கீரனின் வழக்கம். கள நிலவரம் எப்படியிருக்கிறதென நக்கீரன் தரும் தகவல்களே நம்பகத்தன்மையானவை என்பது தமிழக வாக்காளர்கள்-அரசியல்வாதிகள்-நக்கீரன் வாசகர்கள் ஆகியோரின் மனதில் பதிந்துள்ள உண்மை. கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் நக்கீரனின் செய்திகளும் சர்வேக்களும் இதையே நிரூபித்தன. மீண்டும் அந்த நம்பகத்தன்மையை உறுதி செய்யும் விதத்தில் தேர்தல் களத்தில் இறங்கி யிருக்கிறது நக்கீரன்.

2006 மே மாதம் தொடங்கி, கடந்த 50 மாதங்களாக நடந்து வரும் தி.மு.க ஆட்சி மீதான மக்களின் மதிப்பீடு, எதிர்க் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்த மக்களின் கண்ணோட்டம், கூட்டணிகளின் போக்கு, தலைவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, கட்சிகளின் நிலை என அனைத்துக் கோணங்களிலும் நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வின் முடிவுகள், வரும் தேர்தலில் தமிழக மக்கள் எப்படித் தீர்ப்பளிக்கப் போகிறார்கள் என்பதற்கான முன்னோட் டம்.

ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளை ஆய்வின் வசதிக்காக, மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளின் தன்மையின் அடிப்படையில் 9 மண்ட லங்களாகப் பிரித்துக்கொண்டோம்.

1.சென்னை, 2.வேலூர், 3.கடலூர், 4.சேலம், 5.கோவை, 6.திருச்சி, 7.தஞ்சை, 8.மதுரை 9.திருநெல்வேலி ஆகிய 9 மண்டலங்களில் நடத்தப்பட்ட கள ஆய்வுகள் ஒவ்வொரு மண்டலமாக, இந்த இதழ் முதல் வெளிவருகிறது. 9 மண்டலங்களின் ஆய்வு முடிவுகளும் வெளியானபின், 10-வது இதழில் தமிழகத் தேர்தல் களத்தின் முழு நிலவரமும் வெளியிடப்படும்.





நக்கீரன் வாசகர்கள் ஒவ்வொரு வரும் வாக்காளர்கள் என்பதால், தங்கள் மதிப்புமிக்க வாக்குரிமையைப் பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்க, இந்தக் கள ஆய்வுகள் மிகவும் கைகொடுக்கும்.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் கள நிலவரத்தை முந்தைய தேர்தல்கள் தொடர்பான வரலாற்றுப்பார்வையுடன் துல்லியமாகத் தரப் போகும் இந்த இதழ்களை தேர்தல் வரையிலும் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டால், தேர்தல் நேரத்திலான விவாதங்கள், முடிவுகள் ஆகியவற் றுக்குத் துணையாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நக்கீரனின் தேர்தல் களப் பாய்ச்சல் தொடங்கி விட்டது. இந்த இதழில்...


சென்னை மண்டலம்!




சென்னை மண்டலத்தில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், ராயபுரம், கொளத்தூர், திரு.வி.க நகர், வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம்- திரு வல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கம், சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல், அம்பத்தூர் என 24 சட்டமன்றத் தொகுதிகள் அடங்குகின்றன.

இந்த மண்டலத்தில் ஒவ் வொரு கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் உள்ள செல் வாக்கினை வரைபடம் வாயி லாகக் காணவும்

தி.மு.க.வின் கோட்டை என ஒரு காலத்தில் பெயர் பெற்றி ருந்த சென்னை மாநகரத்தில் உள்ள 14 தொகுதிகளில் கடந்த 2006 தேர்தலின் போது தி.மு.க கூட்டணியும் அ.தி.மு.க கூட்டணியும் சம அளவிலான இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. 2009 எம்.பி தேர்தலில் தென்சென்னை நாடாளு மன்றத் தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெற்றது.

எனவே இந்தத் தேர்தலிலும் இருதரப்பும் சமபலத்துடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்குமான வாக்கு சதவீதத்தில் 5% மட்டுமே இடைவெளி இருப்பது கவனத்திற்குரியது.

அ.தி.மு.க கூட்டணி யில் தே.மு.தி.க இணைந் தால் அந்த அணி, சென்னை மண்டலத்தில் தி.மு.க.வை முந்தக்கூடிய வாய்ப்பிருப்பதையே நமது கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பா.ம.கவின் செல்வாக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி யில் மட்டும் கணிசமாகத் தெரிகிறது. அதே நேரத்தில், தமிழகத்தில் பரவலான செல்வாக்கு இல்லாத பா.ஜ.க.வுக்கு சென்னையில் 4% வாக்குகள் உள்ளதை நமது ஆய்வில் காண முடிந்தது. காங்கிரசுக்கு மாற்றான தேசிய கட்சி என்ற அளவிலும், இந்துத்வா மீது விருப்பம் கொண்டவர்களாலும் பா.ஜ.க.வுக்கு சென்னை மண்டலத்தில் இந்த செல்வாக்கு கிடைத்துள்ளது. கம்யூனிஸ்ட்டுகளின் 3% வாக்குகளில் சி.பி.எம்., சி.பி.ஐ. இரு கட்சிகளும் அடங்கும்.

தமிழகத்தின் மற்ற மண்டலத்தைப் போலவே சென்னை மண்டலத்து வாக்காளர்களிடமும் முக்கிய பிரச் சினையாக இருப்பது விலைவாசி உயர்வுதான். கூடுதல் சுமைகளாக, அறிவிக்கப்படாமல் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, போதியளவிலான வேலை வாய்ப்புகள் உருவாகாதது, போக்கு வரத்து நெருக்கடி, ஆளுந்தரப்பு கவுன் சிலர்களின் மிரட்டல்கள், அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடுகள் உள்ளிட்டவையும் சேர்ந்துள்ளன.

மழைநீர் சேகரிப்பு, வீராணம் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை அ.தி.மு.கவினர் தங்கள் ஆட்சியின் சாதனைகளாக இப்போதும் சென்னை மக்களிடம் நெஞ்சு நிமிர்த்தித் தெரிவிக்கின்றனர். தி.மு.க அரசின் கடல்நீர் குடிநீர்த் திட்டம் நிறைவேறியபிறகுதான் ஆளுந்தரப் பால் இதற்கு பதில் சொல்ல முடியும்.

போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலங்கள், சுற்றுச்சாலைகள், சென்னையையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெருகியுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கார் தொழிற்சாலைகள் ஆகியவை தி.மு.க அரசின் சாதனைகளாக முன்வைக்கப்படுகின்றன.

அரசின் இலவச திட்டங்களும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான தனி கவனிப்பும் பெண்களிடம் தி.மு.கவுக்கான செல்வாக்கை உயர்த்தியிருந்தாலும், விலைவாசி உயர்வு-மின் வெட்டு ஆகியவை அவர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளன.

ஜாதி-மத கணக்குகள் சென்னையில் பெரிய தாக்கத்தை உண்டாக்குவதில்லை என்றாலும் முஸ்லிம்கள், மீனவர்கள், நாடார்கள், வன்னியர் கள், பிராமணர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின ரின் வாக்குகள் சில தொகுதிகளின் குறிப்பிட்ட பகுதிகளில் முக்கிய பங்காற்றுகின்றன.

தற்போதைய கள நிலவரத்தின்படி, சென்னை மண்டலத்தில் இரண்டு கழகங்களுக்கு மிடையிலான போட்டியில் தி.மு.க தரப்பு தனது மூக்கை முன்னே நீட்டி முந்துவதுபோல இருந் தாலும், தே.மு.தி.க எடுக்கப்போகும் முடிவு, தேர்தலுக்கு முன்பாக தி.மு.க அரசு சென்னை யின் மீது செலுத்தும் கவனம் இவற்றின் அடிப் படையில்தான் வெற்றி-தோல்வி அமையும்.

-(வரும் இதழில் வேலூர் மண்டலம்)

முதல்வரின் அணுகுமுறை!


இந்தியாவில் எந்த முதல்வரும் தலைமைச் செயலகத்துக்கு எல்லா வேலை நாட்களிலும் வருவ தில்லை. கலைஞர் மட்டும் தான் தவறாமல் வருகிறார். சில வேளைகளில், ஞாயிற் றுக்கிழமை போன்ற விடு முறை நாட்களிலும் தனது உடல்நலக்குறைவைப் பொ ருட்படுத்தாமல் தலைமைச் செயலகம் வருகிறார்.


ஒரு மாதத்தில் சரா சரியாக 20 நாட்கள் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அரசின் செயல் பாடுகளை மக்களிடம் தெரி விக்கிறார். கட்சிக்காரர்கள், அமைச்சரவை சகாக்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர் கள், பத்திரிகையாளர்கள், முதலீட்டாளர்கள், பல் வேறு சங்கத்தினர், திரைப் படத்துறையினர் உள் ளிட்டோர் முதல்வரிடம் அப்பாயிண்ட்மெண்ட் பெற்று சந்திக்க முடிகிறது. முந்தைய அரசுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, ஆட்சித் தலைமையை எளிமையாக அணுகமுடி வது இந்த அரசுக்கான சாதக அம்சங்களில் ஒன் றாக இருக்கிறது என்பதை கள நிலவரத்தில் அறிய முடிகிறது.



அதே நேரத்தில், முதல்வருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறை வினால் அவரால் மற்ற மாவட்டங் களுக்கு நேரில் செல்ல முடியவில்லை என்பது அர சுக்கும் கட்சியின் தேர்தல் கணக்கிற்கும் இழப்புதான்.



முதல்வரின் சார்பாக துணை முதல்வர் பல மாவட்டங்களுக்குத் தொ டர்ந்து சென்று கொண்டிருந்தாலும் , முதல்வரின் வருகை என்ற தேவை நீடித்திருப் பதை தமிழகத்தின் பல பகுதிகளி லும் பரவ லாகக் காண முடிந்தது.






தமிழகம் தழுவிய அளவில் நகரங்களிலும் கிராமங்களிலும் முக்கிய கட்சிகளின் செல்வாக்கு சராசரியாக எந்த அளவில் இருக்கிறது என்பதை வரைபடம் காட்டுகிறது.

நகரப் பகுதிகளில் உள்ள படித்தவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், தொழி லாளர்கள், தொழில்முனைவோர் ஆகி யோரிடம் தி.மு.க.வுக்கு நல்ல செல்வாக்கு நீடிக்கிறது.

இங்கு தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்குமான இடை வெளி கூடுதலாகவே உள்ளது. அதேநேரத்தில், கிராமப் புறங்களில் தி.மு.கவைவிட அ.தி.மு.க சற்று கூடுதல் பலத்துடன் உள்ளது. எனினும், இலவச திட்டங்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான சலுகைகள் உள்ளிட்டவற்றால் அ.தி.மு.கவின் பழைய பலத்தை கிராமப்புறத்தில் தி.மு.க குறைத் துள்ளது என்பதை ஆய்வில் அறிய முடிகிறது.

விவசாயத்தின் மோசமான நிலைமை, சிறுதொழில்துறைக் கான பாதிப்பு, விலைவாசி உயர்வு இவைகளை தி.மு.க அரசு கையாளப் போகும் விதத்தைப் பொ றுத்தே கிராமங் களில் அ.தி.மு.க- தி.மு.க இரண்டுக்கு மான இடைவெளி கூடுவதும் குறைவதும் அமையும்.

நகரங்களை விட கிராமங்களில் கூடுதல் செல்வாக்கு பெற்றி ருக்கும் கட்சிகளின் வரிசையில் பா.ம.க, தே.மு.தி.க ஆகியவை அமைகின்றன.

கம்யூனிஸ்ட்டுகள் இரு பகுதிகளிலும் ஒரேயளவிலான வாக்குகளைக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வைப் போல கிராமங்களைவிட நகரப்பகுதியில் கூடுதல் வாக்குகளைக் கொண்டிருக் கிறது அதன் தோழமைக் கட்சியான காங்கிரஸ்.


மக்களை வாட்டும் விலைவாசி உயர்வு!



விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்துவதில் தி.மு.க அரசு தோல்வி யடைந்துள்ளது என்பதை நமது கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் வழங்கப்படும் பொருட்கள் , நிலைமையை ஓரளவே சமாளிக்கின்றன.

பொது விநியோகத் திட்டத்தால் நடுத்தர மக்களில் ஒரு பகுதியினர் விலைவாசி உயர்விலிருந்து தப்பினாலும், அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்கள் மோசமான விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள னர்.


இடதுசாரி அமைப்புகளுடன் சேர்ந்து தற்போது போராட்டங்களை முன்னெடுக்கும் அ.தி.மு.கவுடன் விஜயகாந்த்தும் சேர்ந்து விலைவாசி உயர்வுக்கு மத்திய-மாநில அரசுகள் தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்தால், கிராமப்புறங்களில் அ.தி. மு.கவின் வாக்குபலத்தை இந்தப் பிரச்சாரம் கணிசமாக உயர்த்தும் வாய்ப்பு உள்ளது.


அதனால் தி.மு.க மிகக் கடுமையான போட்டியை சந்திக்கும். மத்திய அரசின் தொடர்ச்சியான பெட்ரோலிய பொருட் கள் மீதான விலை உயர்வு நடவடிக் கைகள் மாநிலத்தில் உள்ள தி.மு.க அரசுக்கு நெருக்கடியை உருவாக்கி யிருப்பதை மக்களின் மனநிலையிலிருந்து அறிய முடிகிறது

என்மேல் சாமிக்கு இஷ்டம்'' உளறிய நித்ய பிரீத்தானந்தா!



shockan.blogspot.com
""தன்னை யோக் கியராகக் காட்டிக் கொள்ள விரும்பும் நித்யானந்தா... அதற்கு என் செல்ல மகள்களை பகடைக் காயாக உருட்டப் பார்க்கிறார். அவரால் வசியம் செய்யப்பட்ட என் மகள்களை அவரிடமிருந்து எப்படி மீட்கப்போகிறேனோ தெரியவில்லை''’என கண்ணீர் வடிக்கிறார் ஒரு அப்பாவி அப்பா.

அவரது பரிதவிப்பைப் பார்க்கும் முன் ஒரு சின்ன சம்பவம்.

கடந்த 30-ந் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த கிருஷ்ணேஸ்வரி, சித்ரேஸ்வரி என்ற இரண்டு இளம்வயது சகோதரிகள் “""ரஞ்சிதா சி.டி. தொடர்பாக நித்யானந்தா மீது சில குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது.. எங்கள் அப்பா எங்களை ஆசிரமத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். எங்களுக்கு திருமணம் செய்துவைக்கவும் முயல் கிறார். இதனால் மீண்டும் நாங்கள் ஆசிரமத்திற்கே செல்ல ஆயத்த மானோம். ஆனால் எங்கள் அப்பா வோ... ஆசிரமத்திற்குப் போனால், நித்யானந்தா எங்களைக் கடத்திவிட்ட தாக போலீஸில் புகார் தருவேன் என்று மிரட்டுகிறார். எனவே... நாங்கள் ஆசிரமத்திற்கு சென்றபின் இது தொடர் பாக எங்கள் குடும்பத்தினர் நித்யா னந்தா மீது புகார் கொடுத்தால்... அதை போலீஸ் பொருட்படுத்தக்கூடாது. ரஞ்சிதா சி.டி.யை நாங்கள் நம்ப வில்லை'' என்று ஒரு மனுவைக் கொடுத்து பரபரப்பூட்டினர்.

இதைக் கண்டு திகைத்த காக்கிகள் சிலர் ""ரஞ்சிதா வுடன் நித்யானந்தா இருக்கும் படங் கள் உண்மை யானவை என்று நிரூ பணமாகி விட்டது. அவர் மீதான செக்ஸ் புகார் களுக்கும் ஆதாரம் இருக்கிறது. எனவே பெற்றோர் சொல்கிறபடி நடந்துகொள்ளுங்கள்''’என அவர் களுக்கு அறிவுரை கூறினர். எனினும்... “எடுத்த முடிவில் இருந்து நாங்கள் மாறமாட்டோம்’ என்று அந்தப் பெண்கள் உறுதியாகச் சொல்லிவிட்டனர்.

இந்த இரண்டு இளம்பெண்களும் குடும்பத்தை உதறிவிட்டு மீண்டும் நித்யானந்தாவையே சரணடையத் துடித்துக்கொண்டிருக்கும் நிலையில்... இவர்களின் குடும்பத்தினர் மன நிலையை அறிய குமரி மாவட்டம் தோவாளைக்கே சென்றோம்.

அங்கு இல்லத்தார் தெருவில் இருக்கும் அவர்கள் வீட்டிற்குப் போனபோது... அப்பாக்காரரான சிவபாலன் சோகமயமாய் இருந்தார். வீட்டுச் சுவர்களில் தொங்கிய சாமி படங்கள் குடும்பத்தினரின் பக்தியைச் சொன்னது. தொண்டையை செருமியபடி பேச ஆரம்பித்த சிவபாலன் “""கால்நடை மருத்துவ ஆய்வாளரா பணியாற்றி மூணு வருசத்துக்கு முன்னதான் ஓய்வு பெற்றேன். எங்களுக்கு ரெண்டே ரெண்டு பொம்ப ளைப் பிள்ளைங்க மட்டும்தான். அதுகமேல உயிரையே வச்ச நான்... நல்லா படிக்கவைக்கணும்னு ஆசைப்பட் டேன். என் ரெண்டு மகள்களுமே எம்.ஏ. முடிச்சிட்டு... எம்.பில், பிஹெச்.டின்னு நான் நினைச்ச மாதிரி படிக்க ஆரம்பிச்சாங்க. இந்த நேரத்தில் சென்னையில் டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச் அஸிஸ்டெண்ட் இன்ஜினியராக இருக்கும் என் தம்பி கண்ணன், நித்யானந்தாக்கிட்ட பழக்கமாகி விஸ்வரூபானந்தான்னு பேரை மாத்திக்கிட் டார். அவர்தான் நித்யானந்தா பத்தி என் பிள்ளைகள்ட்ட சொல்லி.. விரைவில் வெளிநாட்டில் அவர் ஆசிரமம் திறக்கப்போறார். அதை நீங்க ரெண்டுபேருமே நிர்வாகம் பண்ணலாம். வாழ்க்கையிலும் செட்டிலாயிடலாம்னு ஆசைகாட்டி... அவங்களை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டார். அங்க போனதும் எங்க மகள்களின் போக்கே மாறிடிச்சி.

ரெண்டு வருஷத்துக்கு முன்ன இதே தெருவில் நாங்க கட்டிய மாயாண்டி சாமி கோயிலுக்கு நித்யானந்தாவை எங்க பிள்ளைகள் அழைச்சிக்கிட்டு வந்தாங்க. வர்றதுக்கு முன்னயே... நித்யானந்தா தங்க ஏ.ஸி. ரூம் வேணும்னு சொன்னாங்க. சாமியாருக்கு எதுக்கு ஏ.ஸி. ரூம்னு உறுத்தல் ஏற்பட்டாலும் எங்க பிள்ளைகளுக்காக ஏற்பாடு செஞ்சேன். அங்க மூணுநாள் தங்கியிருந்த நித்யானந்தா... எங்களுக்கு சொந்தமான தென்னந்தோப்பு, பூந்தோட்டம் உள்ளிட்ட சொத்துக்களை ஆசிரமத்துக்கு கொடுக்கும்படி சொல்ல... எங்க பிள்ளைகளும் சாமி சொல்றமாதிரி செய்யுங்கன்னு நச்சரிச்சாங்க. நான் பிடிகொடுக்கலை.

எங்க பிள்ளைகளின் போக்கை நினைக்க நினைக்க மன அழுத்தத்துக்கு ஆளானேன். ரஞ்சிதா சி.டி. வெளியானப்போ... பார்த்தீங்களா உங்க சாமியார் லட்சணத்தைன்னு திட்டிட்டு பிள்ளைகளை வீட்டுக்கு கொண்டுவந்துட்டேன். இதுநாள்வரை அமைதியா இருந்த என் பிள்ளைகளை.... அந்த நித்யானந்தா மறுபடியும் ஆசிரமத்திற்கு கூப்பிட்டிருக்கார். அதனால பிள்ளைகளும் பயந்துபோய்க் கிளம்புதுங்க. தன்னை யோக்கியராக் காட்டிக்க என் பிள்ளை களை அந்த நித்யானந்தா பகடைக்காயா உருட்டப்பாக்குறாருங்க''’என்றார் கண்ணீர் வடிய.

இந்த இரண்டு இளம்பெண்களின் பாட்டியான கிருஷ்ணகுமாரியோ, ""கடவுளை விட்டுட்டு மனுசனை கும்பிட லாமாய்யா... என் பேத்திகள் இந்த சாமியார் பத்தி சொன்னப்பவே... சாமியார் பசங்களை நம்பக் கூடாதுன்னு சொல்லிப் பார்த்தேன்யா... அதுக கேட்கலை. அந்த நித்யானந்தா இங்க வந்தப்ப கவனிச்சேன். நடவடிக்கையே சரியா இல்லை. சதா பொம்பளைப் பிள்ளைகளோட ஒட்டி உரசிக்கிட்டு இருக்கிறவனா சாமியார்? சொகுசு வாழ்க்கை சாமியா ருக்கு எதுக்கு? சத்தியமாச் சொல் றேன்... ஆசிரமத்துக்கு போன என் பேத்திகளை அந்த நித்யானந்தா நாச மாக்கிட்டான்யா. என் பேத்திகளை சின்ன வயசில் இருந்து தூக்கி வளர்த்தவய்யா நான். அப்படிப்பட்ட நான் சொல்றேன்யா... அதுக உடம்பில் தெரிஞ்ச மாற்றத்தை வச்சே சொல் றேன்... சின்ன வயசுப் பிள்ளைகளான இதுகளுக்கு நல்லது கெட்டது தெரி யலை. அந்த அளவுக்கு அவன் வசியம் பண்ணிவச்சிருக்கான். சாமியார் பயலால் சீரழிஞ்ச அந்தப் பிள்ளைகள் இனி எங்களுக்குத் தேவையில்லைய்யா'' என்கிறார் ஆண்டு அனுபவித்த அந்த மூதாட்டி உடைந்து போன குரலில்.

எனினும் சிவபாலனின் மனைவி லட்சுமி... ""என் இரண்டு மகள்களும் இல்லாமல் வீடு திரும்பமாட்டேன்'' என்று போராடிவருகிறார்.

பாட்டி கிருஷ்ணகுமாரியின் குற்றச்சாட்டு குறித்து நித்யானந்தா ஆசிரம வட்டாரத்திலேயே நாம் விசா ரித்தபோது... ""இவர்களில் மூத்தவரான கிருஷ்ணேஸ்வரி என்ற நித்ய பிரீத் தானந்தா... "நானும் சாமியும் ரொம்ப குளோஸா பழகறோம். என்மேல் அவருக்கு இஷ்டமான இஷ்டம்'னு சிலபேர்ட்ட அடிக்கடி சொல்ல.. இது சாமி காதுக்குப் போயிடுச்சு. உடனே பிரீத்தானந்தாவைக் கூப்பிட்டு... "நீ என்ன லூஸா? கண்டதையும் உளறிக் கிட்டு இருக்கியா'ன்னு சாமி கடுமை யாத் திட்டிக் கண்டிச்சார். அப்ப அந்தப் பொண்ணு அழுத அழுகை எங்களுக்குத்தான் தெரியும். வேறென்ன சொல்ல?''’என் றார்கள் பலரும்.

நித்யானந்தா குறித்த சர்ச்சை அலைகள்... இப் போதைக்கு ஓயாது போ லிருக்கிறது.

விவேக் ஓபராய்க்கு பாதுகாப்பு வாபஸ்


shockan.blogspot.com

பாலிவுட் பிரபலங்கள் விவேக் ஓபராய், கரன் ஜோகர் உள்ளிட்ட 54 வி.ஐ.பி.,க்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை மகாராஷ்டிரா அரசு வாபஸ் பெற்றுள்ளது. ஷாருக்கான் உள்ளிட்ட 24 வி.ஐ.பி.,க்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.




மகாராஷ்டிராவில் மாநில அரசின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், சில வி.ஐ.பி.,க்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாத நிலையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும், சிலருக்கு தேவைக்கு அதிகமான பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும் பேசப்பட்டது.



இதையடுத்து, பாலிவுட் பிரபலங்கள் விவேக் ஓபராய், கரன் ஜோகர், பைரோஸ் நடியத்வாலா, ஹிமேஷ் ரெஷ்மானியா, ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடியின் மகன் ருசிர், மகள் ஆலியா, ராகுல் மகாஜன் ஆகியோர் உட்பட 54 வி.ஐ.பி.,க்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை வாபஸ் பெறுவது என, முடிவு செய்யப்பட்டது.



மேலும், ஷாருக் கானுக்கு இதுவரை தினமும் நான்கு போலீசார், பாதுகாப்பு அளித்து வந்தனர். இனிமேல், ஒரு போலீஸ்காரர் மட்டுமே ஷாருக் கானின் பாதுகாப்பை கவனித்துக் கொள்வார்.



லலித் மோடியின் மனைவி மினாள், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் குடும்பத்தினர், பிரபல வக்கீல் மஜீத் மேனன் மற்றும் அரசியல்வாதிகள் நவாப் மாலிக், சுரேஷ் பிரபு உள்ளிட்ட 24 வி.ஐ.பி.,க்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட தகவல் வெளியானதும், சில வி.ஐ.பி.,க்கள், தங்களுக்கு மிரட்டல் தொடர்வதாகவும், இதனால், பாதுகாப்பை வாபஸ் பெறும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Thursday, July 1, 2010

தீபாவளிக்கு 'எந்திரன்':3000 தியேட்டர்களில் ரிலீஸ்!


shockan.blogspot.com

தீபாவளிக்கு 'எந்திரன்' ரிலீஸ்: உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் எந்திரன் படம் தீபாவளிக்கு விருந்து படைக்க தயாராகி விட்டது. உலகம் முழுவதும் 3000 தியேட்டர்களில் படத்தை திரையிடத் திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக நேரடியாக தயாரிக்கும் படம் ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன். ஷங்கர் இயக்கியுள்ளார். படம் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளதாம்.

படம் எப்போது ரிலீஸாகும் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில் பட ரிலீ்ஸ் குறித்த சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்படி வருகிற தீபாவளி திருநாளுக்கு படம் திரைக்கு வருகிறது. இதுவரை படத்திற்கான செலவு ரூ.190 கோடியைத் தாண்டியுள்ளதாம்.

தமிழகத்தில் 500 தியேட்டர்களில் படத்தை திரையிடவுள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 3000 தியேட்டர்களில் எந்திரன் படம் திரையிடப்படவுள்ளதாம்.

மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக செய்யவுள்ளனர். மேலும், சென்னையிலும் ஆடியோ ரிலீஸ் இருக்குமாம்.

படத்திற்குப் பிரமாண்டமான எதிர்பார்ப்பு உள்ளதால் அதற்கேற்ற வகையில் விளம்பரமும் இன்ன பிறவும் இருக்கும் என தெரிகிறது.

அடிமைச் சங்கிலி அறுப்போம்...! -கவிஞர் தணிகைச்செல்வன்


shockan.blogspot.com


கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், காவியக் கவிஞர் வாலி தலைமையில் "தமிழுக்கும் அமுதென்று பேர்' என்கிற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

கவியரங்கத்தை கவிஞர் மு.மேத்தா தொடங்கி வைத்தார். தொடர்ந்து கவிஞர்கள் பழனிபாரதி, பா.விஜய், தணிகைச் செல்வன், இளம்பிறை, உமாமகேஸ்வரி, தமிழ்தாசன் உள்ளிட்டோர் தங்கள் கவிதைகளை வாசித்தனர்.

ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு கோணத்தில் வாசித்த நிலையில், ஈழத்தைப் பற்றி அதிகம் பேசிய தணிகைச்செல்வனின் கவிதை வரிகள், திரண்டிருந்த மக்களிடம் உணர்வு தாக்கத்தை ஏற்படுத்தின.

அவரது கவிதையிலிருந்து...



முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய

வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி

கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ...!

பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம்

முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ...!




கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற

வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வேர்க்கலையோ...!

ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோறுக்கும்

இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரை காண்கிலையோ...!




அய்யோ உலகே ! அய்யகோ பேருலகே !

பொய்யோ உலகசபை ? புனைவுகளோ சபைவிதிகள் ?




கையேந்தி வந்தாரை கரமேந்தி காத்த இனம்

கையேந்துதல் காண்கிலையோ கஞ்சிக்கும் கருணைக்கும்.




எல்லாம் இழந்தோம் இழப்பதற்கு ஏதுமில்லை...

கணவனை இழந்ததாலே கண்ணகி சீற்றம் நியாயம்

துணியதனை இழந்ததாலே துரோபதி சபதம் நியாயம்

தனதுமண் இழந்ததாலே தருமனின் யுத்தம் நியாயம்

அனைத்தையும் இழந்த எங்கள் ஆவேசம் நியாயம் ! நியாயம் !




தாக்குண்டால் புழுக்கள்கூட தரைவிட்டுத் துள்ளும் , கழுகு

தூக்கிடும் குஞ்சிகாக்க துடித்தெழும் கோழி; சிங்கம்

மூர்க்கமாய் தாக்கும்போது முயல்கூட எதிர்த்து நிற்கும்...




சாக்கடைப் கொசுக்களா நாம் ? சரித்திர சக்கரங்கள் !


சரித்திரம் சுழலும்போதும் சமுத்திரம் குமுறும்போதும்

பொறுத்தவன் பொங்கும்போதும் புயல்காற்று சீறும்போதும்

பறித்தவன் ஆதிக்கத்தைப் பசித்தவன் எதிர்க்கும்போதும்

மறித்தவன் வென்றதுண்டா ? மறுத்தவன் நின்றதுண்டா?




புவியோடி படர்ந்திருக்கும் நவகோடி தமிழினமே !

நீ , இழக்கப்போவது அடிமைச் சங்கிலிகளைத்தான்-

பெறப்போவதோ ஒரு பேருலகம் ! ஒரு பொன்னுலகம் !

அதுதான் தமிழுலகம்...!

நான் உயிருடன் இருக்கிறேன் - நமீதா


shockan.blogspot.com
நடிகை நமீதா இன்று ஹைதராபாத் ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. இது வெறும் வதந்தி என்று நமீதாவே மறுத்துள்ளார்.



மும்பை ஆம்பிவேலியில் உள்ள தனது வீட்டில் இருந்து செய்தியாளர்களை தொடர்பு கொண்ட அவர், ‘’நான் தற்கொலை செய்துகொள்ளவில்லை.

அதற்கு சாட்சிதான் நான் இப்போது உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.




அவர் மேலும், ‘’நான் உயிருடன் இருக்கிறேன். நலமாக இருக்கிறேன். தற்கொலை செய்துகொண்டதாக ஏன் தான் இப்படி வதந்தி பரப்புகிறார்களோ தெரியவில்லை’’என்று கூறியுள்ளார்.

Wednesday, June 30, 2010

ஆசிரம பிஸினஸ்! ரஞ்சிதா-நித்யானந்தா பேட்டி பின்னணி!



shockan.blogspot.com

""நித்யானந்தாவோடு வீடியோவில் அகப்பட்ட நடிகை ரஞ்சிதா, தன்னோட அனுபவங் களை புத்தகமா எழுதுவேன்னு சென்னையில் பேட்டி கொடுத் திருக்காரே?''

""அதேநாளில், பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவும் பேட்டி கொடுத்திருக்கிறார். பாப் தலை முடியோடு ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் வித்தி யாசமான கெட்டப்பில் பேட்டி கொடுத்த ரஞ்சிதா, நித்யானந்தா சாமி தொடர்பா கடந்த 6 மாதத்தில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அதனால ஏற்பட்ட அவலங்கள், மன உளைச்சல்கள் இதையெல்லாம் நான் எதிர்கொண்ட விதம் இதையெல்லாம் விவரித்து ஒரு புத்தகம் எழுதப்போறேன். இந்தப் புத்தகம் தனிப்பட்ட பிரச் சினைகளில் சிக்கித் தவிக்கிறவங்களுக்கு உதவுற வகையில் என்னோட புத்தகம் இருக் கும். இது சம்பந்தமா சில பதிப்பகங்களோடு நான் பேசிக்கிட்டிருக்கேன்'னு சொன்னார்.''

""பிடதியில் நித்யானந்தர் என்ன சொன்னார்?''

""நடிகையோடு இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் என்னோட ஆன்மீக பயணத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தலை. மார்ச் மாதம் முதல் என்னோட ஆசிரமத்தில் உள்ள பெண்கள்கிட்டே சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினாங்க. ஆனா ஒரு பெண்கூட எனக்கெதிரா இதுவரை புகார் செய்யலைன்னு நித்யானந்தர் பேட்டி கொடுத்தார்.''

""இன்னமும் இவங்க இரண்டுபேரும் வீடியோ காட்சிகளில் இருப்பது தாங்கள்தான்னு ஒத்துக்கலையே... அந்த உண்மையை ஒப்புக் கொள்ளாமல் அனுபவங்களை புத்தகமா எழுதினா எப்படி பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறவங்களுக்கு உதவுமாம்?''

""தலைவரே... நித்யானந்தர் விசா ரிக்கப்பட்டபோது, ரஞ்சிதாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகலை. ஆனா, இரண்டுபேரும் இன்னமும் தொடர்பில் தான் இருக்காங்க. ஆசிரமத்தோட பேரு ரிப்பேராயிடிச்சி. தன்னோட நிகழ்ச்சி களில் 23 லட்சம் பெண்கள் பங்கேற்றதா நித்யானந்தா பேட்டியிலே சொல்லியிருக் கிறார். ஆனா, இப்ப அவர் ஆசிரமத் துக்கு 23 பெண்கள் கூட வர்றதில்லை. அவரால பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களோட நிலைமையை ஏற்கனவே நம்ம நக்கீரன்கிட்டே சொல்லியிருக் காங்க. வெளிப்படையா புகார் கொடுத்தால் தங்களோட எதிர் காலம் பாதிக்கப்படும்ங்கிற பயம் அந்தப் பெண்களிடம் இருக்குது. அதேபோல, பாதிக்கப்பட்ட பெண் களோட பெற்றோரும் நித்யா னந்தர் மேலே சரியான கோபத் தில் இருக்காங்க. ஆனா, புகார் சொன்னா குடும்பத்துக்கு அவமானம் வருமேன்னு யோசிக்கிறாங்க.''

""பாதிக்கப்பட்டவங்க அவமானத்திற்குப் பயப்படுவதுதான் நித்யானந்தருக்கு இன்னைக்கு வரைக்கும் சாதகமா இருக்குது.''

""ரஞ்சிதாவும் தனக்கு வேண்டியவங்ககிட்டே நித்யானந்தர் மூலமா ஏற்பட்ட பாதிப்புகளை சொல்லி புலம்புறாராம். ஒரு பிரபல டைரக்டரும் பிரபல நடிகரும் ரஞ்சிதாகிட்டே அடிக்கடிப் பேசிக்கிட்டிருக்காங்க. அவங்ககிட்டே ரஞ்சிதா, கல்யாணமாகியும் எனக்கு குழந்தை இல்லை. மெடிடேஷன், ஹீலிங் தெரபி மூலமா நித்யானந்தரிடம் சிகிச்சை கிடைக்கும்னு போனேன். அவரோ நானே கடவுள்னும், என்னோடு நீ இருந்தால் கடவுளின் குழந்தை உனக்குள்ளே உருவாகும்னும் சொல்லி சாய்ச்சிட்டாருன்னு புலம்பியிருக்கிறார்.
இப்ப வீடியோ விவகாரம், விசாரணை, ஜெயில்னு பிரச்சினை அடுத்தடுத்த கட்டத்துக்குப் போனதால நித்யானந்தர் ஆசிரமத்திலும் கூட்டமில்லை. நடிகை ரஞ்சிதாவுக்கும் நடிக்க சான்ஸ் இல்லை. இரண்டு தரப்புமே ரீ-என்ட்ரிக்கு முயற்சி பண்ணுது. பிசினஸை மீண்டும் பிக்-அப் பண்ணணும்னா இமேஜை டெவலப் பண்ணணும். அதற்கான வேலைகள்தான் இரண்டு தரப்பிலும் இப்ப நடந்துக்கிட்டிருக்குது.''