Thursday, May 27, 2010

இப்படியும் கணவனா? ஒரு மனைவியின் கண்ணீர்...



shockan.blogspot.com
""ஹலோ நக்கீரன்தானுங்களே. எனக்குக் கிடைத்த கசப்பான வாழ்க்கை இனி எந்தப் பெண்ணுக்கும் கிடைக்கக்கூடாதுங்க. அது நக்கீரன் மூலமாகத்தான் போய் சேரணும்'' என்று தரங்கம்பாடி அருகே உள்ள செம்பனார்கோயில் பாரதி என்கிற பெண்ணிடமிருந்து போன் வர... நாமும் அவரை சந்தித்தோம்.

கனத்த மனதோடு பேச ஆரம்பித்தவர் கண்ணீரோடே துவங்கினார். ""நான் பொருளாதாரம் பாடத்தில பி.எச்.டி. படிச்சிக்கிட்டு இருந்தேன். என்னோட அப்பா அருள்தாஸ் போலீஸ்காரருங்க. அவருக்குத் தெரிஞ்சவர் மூலமாக தஞ்சாவூரில் எஸ்.ஐ. ஆக இருந்த சந்திரனின் மகன் விஜயகுமாருக்கு என்ன பேசி முடிச்சிட்டாங்க. 2007 செப்டம்பர் 16-ந்தேதி தஞ்சை தீர்க்கசுமங்கலி மகாலில் எங்களுக்கு திருமணம் சிறப்பா நடந்தது. அப்பவே அவருக்கு கல்யாணத்துல நாட்டமில்லை.

அவரோட அம்மாவோட கட்டாயத்தால நகைக்கும், பணத்துக்கும்தான் கல்யாணம்னு பின்னாடிதான் தெளிவா தெரிஞ்சது. கல்யாணமான மறுநாளே அம்மாவ பார்த்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனவர் திரும்பி வரலை. போனவர காணோமேன்னு தேடி தஞ்சாவூர் போனா, அவரோட அம்மா... "எங்க பையன் உடனே வெளிநாடு போகணும்னு போன் வந்துச்சி, அதான் உங்களுக்கு செய்தி சொல்ல முடியல'ன்னு சொன்னாங்க. எங்கப்பா கடுப்பாகி, "என்னம்மா கல்யாணமாகி 3 மாசம் கழிச்சி போவான்னு சொன்னீங்க. எம்பொண்ணு கூட ஒரு இரவுக் கூட வாழாம போயிட்டான்'னு கோபப்பட்டுப் பேசினாரு. சரி, நடந்தது நடந்திடுச்சின்னு சமாதானமாகி, என்ன தஞ்சாவூர்ல மாமியா வீட்லயே விட்டுட்டு போயிட்டாங்க.

அதுலயிருந்து மாமியா, நாத்தனா ரோட கொடுமை தாங்கல. ஆறுதலுக்கு யாருமே இல்லாத அனாதை போல ஆகிட்டேன். அவரிடமிருந்து போன் வரும். என்ன எடுக்க விட மாட்டாங்க. சரி, நாமளாவது லெட்டர் போடலாம்னு எழுதி பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட கொடுத்து அனுப்ப சொன்னேன். அந்த லெட்டர அப்படியே அம்மா வுக்கு திருப்பி அனுப்பிட்டாரு. மாமியா அந்த லெட்டர பார்த்ததும் பத்திரகாளியா மாறி "இனிமே அவனோட நெனப்பு உனக்கு வந்துச்சி, சிலிண்டர் தான் வெடிக்கும்'னு மிரட்டினாங்க. எங்க வீட்டுக்கு சொல்லலாம்னா போனை லாக் பண்ணிடுவாங்க. வெளியே போகாம ரூம்லயும் போட்டு பூட்டிடுவாங்க.

எனக்கு நடக்குற கொடுமைய பக்கத்து வீட்டுக்காரங்க மூலமா தெரிஞ்சிக்கிட்ட என்னோட அப்பா, அம்மா அவங்கள சத்தம் போட்டுட்டு என்னை அழைச்சிட்டுப் போயிட் டாங்க. ஒன்றரை வருடம் கழிச்சி திரும்பி அவரு ஊருக்கு வந்தாரு. எங்களுக்கு சொல்லவே இல்ல. வந்து 20 நாள் கழிச்சிதான் தெரிஞ்சது. அப்பா, அம்மாவோட போனேன். வர்ற செய்தி தெரிஞ்சிக்கிட்டு காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதிச்சி ஓடிட்டாரு. எங்க அப்பாவிற்கு ஆத்திரம் தாங்கலை. தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கம்ப்ளைண்ட் கொடுத்தோம். அவங்களும் எங்கள அலட்சியப்படுத்தி அலைக்கழிச்சாங்க. கடைசியா பேச்சுவார்த்தை நடத்தி தனிக்குடித்தனம் போனா சரியாகிடும்னு தனிக்குடித்தனம் வச்சாங்க. அங்க...'' என்றவரின் உடம்பு நடுங்க அடுத்து பேச்சு வர மறுத்து விட்டது. துணிச்சலை ஏற்படுத்தி மீண்டும் பேச வைத்தோம்.

""தனிக்குடித்தனம் போன பிறகு நானா வலுக்கட்டாயமாக ஆசையா கட்டிப்பிடிப்பேன். முத்தம் கொடுப்பேன். அவரோ, ஏதாவது காரணம் காட்டி சண்டை போட்டுட்டு வீட்டை விட்டு போயிடுவாரு. சில நேரம் அவரு இருக்கும்போதே குளிச்சிட்டு வந்து அரை நிர்வாணத்தோட வெட்கத்த விட்டு எத்தனை யோ நாளு நின்னுருக்கேன், நடக்கல. பொறு மைக்கும் அளவு உண்டுங்க. நானா அவருக்கிட்ட துணிஞ்சி கேட்டேன். "உண்மையிலேயே நீ ஆம்பிளைதானா, உனக்கு ஆண்மை இருக்கா, கல்யாணமாகி 3 வருடமாகுது. நடக்க வேண்டிய சாந்தி முகூர்த்தம் கூட நடக்கல. உனக்கு உணர்ச்சியிருக்கா இல்லையான்னு தெரியலன்னு சத்தம் போட்டேன். அதோட போனவர், நாளு நாள் வீட்டுப்பக்கமே வரல, இத எங்க வீட்டுல சொன்னா செத்தே போயிடுவாங்கன்னு சொல்லாம மறைச்சிட்டேன்.

ஐந்தாவது நாள் இரவு 2 மணிக்கு மேல வந்தாரு. நான் எதுவும் கேட்கல. அதுலேயிருந்து நான் தூங்கின பிறகு வருவாரு. முழிச்சிக்கிறதுக்கு முன்னாடியே போயிடுவாரு. இன்னக்கி ரெண்டுல ஒண்ணத் தெரிஞ்சிக்கணும்னு முழிச்சிருந்தேன். வந்தார், நானும் தயாரானேன். அவரை வலுக்கட்டாயமாக... அடி உதைய வாங்கிக்கிட்டு நிர்வாணப்படுத்திப் பார்த்ததுமே என்னோட இருதயமே வெடிக்கிற மாதிரி ஆகிடுச்சி. அவருக்கு உணர்ச்சி தன்மையே இல்லங்க. நான் அவர கட்டிப்பிடிக்கும் போது செல்ஃபோன்ல படம் பிடிச்சிட்டாரு. ஏன்னு கேட்டேன்.

"இனிமே எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தே இந்த படத்த வெளி உலகத்திற்கு அனுப்பிடுவேன்'னு மிரட்டினான். நான் வலுக்கட்டாயமா அதப்பிடுங்க முயற்சி செஞ்சப்ப சிலிண்டர் கனெக்ஷனை பிடுங்கிவிட்டு ரூமை பூட்டிட்டான். தஞ்சை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அவனோ "என்னோட மனைவி அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறா, அதுக்கு நீங்கதான் ஒரு முடிவு கட்டணும்'னு கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கான். அத ஏத்துக்கிட்டு, "இனிமே உன்னோட புருஷனுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுக்கக்கூடாது, உன்னோட உயிருக்கு எந்த ஆபத்து ஏற்பட்டாலும் நீயே பொறுப்புன்னு எழுதிக் கொடு'ன்னு எழுதி வாங் கிட்டாங்க. அங்கயும் நீதியில்ல. பணம்தான் பேசுது'' என்றார் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே.

பாரதியின் தந்தை அருள்தாசிடம் பேசினோம். ""எங்களோட பவுனுக்கும், அவனுக்கு கன்னி கழிக்கணும்னும்தாங்க என் புள்ளையை பலியாக்கிட்டாங்க. போலீஸ்காரனான எனக்கே இந்த கதின்னா?'' என்று சொல்லும் போது அவரின் கண் கலங்கியது.

விஜயகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டோம். அவரோ ""நானா அவள ஏமாத்தினேன், அவதான் என்னை புடிக்கலன்னு போயிட்டா. போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்தா... அங்க போயி கேளுங்க'' என்று முன்னுக்குப் பின் முரணாக பேசி லைனை துண்டித்தார்.

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கேட்டோம். ""அந்த கேசா...'' என்று இழுத்தவர்கள், ""ஆமாங்க! அந்தப் பொண்ணு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்திருக்கு. அதனாலதான் கண்டிச்சி அனுப்பி னோம். மூன்று வருடமா முதல் இரவு நடக்க லன்னா சும்மாவா இருக்கிறது. வேற வழிய தேடிக்க ணும்ல'' என்றனர் விஜயகுமாருக்கு ஆதரவாக.

No comments:

Post a Comment