Wednesday, April 28, 2010

குண்டுப் பையனைக் காதலிக்கும் ஒல்லி...


shockan.blogspot.com
கே. வேணுகோபால் வழங்க, சஹானா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் பி. ராம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படம்- "விநாயகா'. தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த "விநாயகடு' என்ற படத்தின் ரீமேக்கான இப்படத்தை, விஜய்க்கு "லவ் டுடே' என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கி, தொடர்ந்து "துள்ளித் திரிந்த காலம்', "காதல் சுகமானது', "ஆரியா' போன்ற படங்களை இயக்கிய பாலசேகரன் இயக்குகிறார்.

"விநாயகா' படத்தில் புதுமுகம் கிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்கிறார். பையா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த சோனியா, இப்படத்தில் கதாநாயகியாக அறிமுக மாகிறார். மற்றொரு நாயகியாக பூனம்கவுர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். மற்றும் கிளி, சின்ராசு, சத்யா கிருஷ்ணா ஆகியோரும் நடிக்கிறார் கள்.

கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினி யராக இருக்கும் கதாநாயகன், சாட்டிங் செய்யும்போது, சென்னை யில் உள்ள ஒரு இளம் பெண் அறிமுகமாகிறார். சாட்டிங்கிலேயே இருவரும் நட்பாகி, ஒருவரை யொருவர் பார்த்துக் கொள்ளாமலே நாளடைவில் காதலர்களாகிறார்கள். முகம் தெரியாத தன் காதலியைத் தேடி கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு வருகிறார் கதாநாயகன்.

இருவரும் ஏற்கெனவே திட்ட மிட்டபடி குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க வருகிறார்கள். படு குண் டான கதாநாயகனைக் கண்டதும் அதிர்ச்சியடைகிறார் கதாநாயகி. அது மட்டுமல்ல; இத்தனை நாட்கள் சாட்டில் உரையாடி யதும், காதலித்ததும் தான் இல்லை என்றும்; அவளது தோழி என்றும் அவனிடம் பொய் சொல்கிறாள். அதைக் கேட்டு அப்ஸெட் டாகும் கதாநாயகன் தன் காதலில் வெற்றி அடைந்தானா, இல் லையா என்பதே "விநாயகா' படத்தின் கதை.

இப்படத்தின் கதைப்படி கதாநாய கன் மற்றவர்களை விட படு குண்டாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சுமார் 90 கிலோ எடையுள்ள கிருஷ் ணன் என்பவரை தேடிக் கண்டுபிடித்து இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பாலசேகரன்.

"உண்மையான காதலுக்கு உருவம் முக்கியமில்லை; உள்ளம்தான் முக்கியம்' என்ற கருத்தை மையப் படுத்தி "விநாயகா' திரைப்படம் உருவாகிறது.

No comments:

Post a Comment