Thursday, April 29, 2010

திருமாவளவன் கார் மீது தாக்குதல்: தப்பினார் திருமா


shockan.blogspot.com

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்ற கார் மீது ஒரு கும்பல் தாக்கியதில், காரின் கண்ணாடிகள் சேதம் அடைந்தது. இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்பாடாமல் தப்பினார்.



திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இரவு 9.30 மணிக்கு விழா முடிந்ததும், 10 மணிக்கு மேல் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கொடியேற்று விழாவுக்கு திருமாவளவன் சென்று கொண்டிருந்தார்.



அப்போது ஊரின் (பரவாக்கோட்டை) எல்லையிலேயே திருமாவளவன் மற்றும் அவருடன் வந்த கார்களை ஒரு கும்பல் தாக்கியது.



இதில் திருமாவளவனின் கார் கண்ணாடிகள் உடைந்தன. அவர் கார் பின்னால் வந்த 4 கார்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதில் பலர் காயம் அடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றவுடன் திருமாவளவன் கொடியேற்று விழாவில் பங்கேற்காமல் சென்றுவிட்டார். இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருமாவளவனின் கார் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment