Friday, April 30, 2010

மாங்கனிக்கு சச்சின் பெயர்


shockan.blogspot.com
லக்னோ, ஏப். 29:சாதனை மன்னர் சச்சின்டெண் டுல்கருக்கு கிரிக்கெட் ரசி கர்களும், நிபுணர்களும் எத்தனையோ பட்டங்களை வழங்கி மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் புதிய வகை மாங்கனிக்கு சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
.
லக்னோவைச் சேர்ந்த கலிபுல்லா கான் என்பவர் புதிய மாங்கனி ரகங்களை உருவாக்குவதில் நிபுணராக கருதப்படுகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட மாங்கனிகளை இவர் உருவாக்கியுள்ளார். தற்போது புதிதாக உருவாக்கியுள்ள மாங்கனிக்கு சச்சின் டெண்டுல்கர் பெயரை இவர் சூட்டியுள்ளார்.

மிகச் சிறந்த 2 இந்திய மாங்கனிகளில் ஒட்டு வீரிய ரகமாக இந்த மாங்கனி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாங்கனி விற்பனைக்கு அல்ல என அவர் அறிவித்துள்ளார். சச்சின் மற்றும் சச்சசினின் நண்பர்கள் மட்டுமே இந்த மாங்கனியை சுவைத்து மகிழலாம் என அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலும் ஒரு புதிய மாங்கனியை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

No comments:

Post a Comment