Thursday, April 29, 2010

நித்யானந்தா ஆணா, பெண்ணா! பரிசோதிக்க போலீசார் முடிவு?


shockan.blogspot.com
நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்த கர்நாடக சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.



மத உணர்வுகளை புண்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தா போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.



இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்யானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.



போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்யானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்யானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



இதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்யானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. நித்யானந்தாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.



நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிகிறது. இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ராம்நகர் நீதிமன்றத்தில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

No comments:

Post a Comment