Friday, March 19, 2010

ரஞ்சிதா என் கூட்டாளியா? shockan


ரஞ்சிதா தனது பக்தை என்றும் அவர் தனக்கு செய்திருப்பது சேவை என்றும் புதுப் பேட்டி கொடுத்திருக்கிறார் நித்யானந்தர்.

அந்த சேவையை வீடியோ பதிவு செய்து, ஆசிரமத்தில் நடந்ததை அம்பலப்படுத்திய லெனின் என்கிற ஸ்ரீநித்ய தர்மானந்தா, எப்படிப் பதிவு செய்தோம் என்பதையும் அதில் ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவங்களையும் நம்மிடம் தொடர்ந்து விளக்கத் தொடங்கினார்.

48 மணி நேரப் பதிவுக்குப் பின், கேமராவை எடுத்து வந்து ஓடவிட்டபோது, அதில் ஒரு கட்டத்தில், ரஞ்சிதாவும் நித்யானந்தரும் கேமராவைப் பார்க்கின்ற காட்சியைக் கவனித்ததும் நாங்கள் ரொம்ப ஷாக்கானோம். எவ்வளவு பெரிய எஸ்கேப்? கேமரா பதிவு செய்திருப்பதை நித்யானந்தர் உற்றுக் கவனித்திருந்தால், இந்நேரம் உயிரோடு இருப்போமா? என்பதுதான் எங்களின் அதிர்ச்சிக்கான காரணம்.


நித்யானந்தரை சாதாரண ஆளாக நினைத்துவிடக்கூடாது. அவர் மிகப் பெரிய கிரிமினல். அவருக்கு இருப்பது சாதாரண அறிவல்ல. அந்த அறிவால் அவர் எதையும் கண்டுபிடித்துவிடுவார் என்பது எங்களுக்குத் தெரியும். அவருடைய அறிவாற்றலைப் பற்றி, நாங்கள் வெளியிட்ட புத்தகம் ஒன்றிலேயே குறிப்பிட்டிருக் கிறோம். அதுவும் அவர் சொன்ன தகவல்தான். அவர் அமெரிக்கா போய்விட்டு வந்தார். அப்போது தன்னை அங்கே இருக்கிற டாக்டர்கள் பரிசோதித்ததாகவும், சாதாரண மனிதர்களைவிட அவருடைய மூளைக்கு 6 மடங்கு வேகமும் ஆற்றலும் கொண்டது என்று அவர்கள் சொன்ன தாகவும் தெரிவித்தார். ஆசிரமத்திலிருந்து புத்தகங்கள் வெளியிடும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால், அப்போது வெளி யிடப்பட்ட புத்தகத்தில் இந்த செய்தியைக் குறிப்பிடச் சொன்னார். அப்பறம் என்ன நினைத் தாரோ தெரியவில்லை. இரண்டாம் பதிப்பில் இந்த செய்தி வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நானும் எடுத்துவிட்டேன். 6 மடங்கு அதிக பவர் கொண்ட மூளையையுடைய நித்யானந்தர், நாங்கள் ரகசியமாக வைத்திருந்த வீடியோ இருக்கும் இடத்தைப் பார்த்துவிட்டு, கையை நீட்டி ரஞ்சிதாவிடம், "அது என்ன?' என்று சொல்வது போல லிப் மூவ்மெண்ட் இருந்தது. கேமராவைத்தான் கண்டுபிடித்து விட்டாரோ என்று நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அத்தனை எளிதாக யாரும் கண்டுபிடிக்க முடியாத கேமராவைத்தான் நாங்கள் அந்தப் பொருளுக்குள் வைத்திருந்தோம்.


எப்படிப்பட்ட கேமராவை வைப்பது என்பதற்காக இன்டர்நெட்டில் பல முறை அலசினோம். பெட்ரூமில் தலைக்கு மேல் சுற்றும் ஃபேனில் பொருத்தக்கூடிய கேமராக்கள் பற்றிய விவரங்கள் இருந்தன. என்ன நடக்கிறது என்பதை இது டாப் ஆங்கிளில் அப்படியே பதிவு செய்துவிடும். ட்யூப் லைட்டில் வைக்கக்கூடிய கேமரா பற்றிய விவரமும் இருந்தது. அது மிட் ஷாட்டில் எல்லாவற்றையும் பதிவு செய்யும். கட்டில் பக்கத்திலோ மேஜை மீதோ உள்ள பொம்மைக்குள் வைக்கக்கூடிய அளவிலான கேமராக்களும் இருந்தன. டி.வி.யில் ஸ்டாண்ட் பை லைட் எரியும் பகுதியில் பொருத்தக்கூடிய சைஸிலும் கேமராக்கள் இருப்பதை இன்டர்நெட்டில் பார்த்தோம். இப்படி 240 ஐட்டங்களை ரிசர்ச் செய்து அதன்பிறகுதான் பொருத்தமான கேமராவைத் தேர்வு செய்து, ரகசியமாக ஃபிக்ஸ் செய்தோம். அந்த கேமராவின் விலை 1 லட்ச ரூபாய். கடன் வாங்கித்தான் அந்த கேமராவை வாங்கினோம். இதற்காக கடன் வாங்க வேண்டுமா என்றுகூட எங்களுக்குள் கேள்வி வந்தது. தன்னை நம்பி வந்த எத்தனையோ இளம் பெண்களை சீரழித்த நபரை அம்பலமாக்கினால்தான், தண்டனை கிடைக்கும் என்பதற்காகவே கடன்பட்டு கேமரா வாங்கினோம். அதை மிக ரகசியமாகப் பொருத்தினோம். இந்தளவுக்கு நாங்கள் கவனம் செலுத்தியதற்கு ஒரு காரணம் உண்டு.


பாதுகாப்பு விஷயத்தில் நித்யானந்தர் படுகெட்டி. நாங்களே அவருக்குப் பாதுகாப்பாக பக்கத்தில் இருந் திருக்கிறோம். பல ஊர்களுக்கு அவர் சென்றபோதெல்லாம் அவருடைய பாதுகாப்பில் நாங்கள் ரொம்ப கவனம் செலுத்துவோம். அதைவிட அவர் ரொம்ப கவனமாக இருப் பார். பக்தர்கள் அவருக்கு அன்பாக ஸ்வீட், பழம் எது கொடுத்தாலும் சாப்பிடக்கூடாது என்று தடை விதித்திருந் தோம். தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால் அக்வாஃபீனா தண்ணீர் தான் குடிப்பார். அதுவும், ஒரு முறை பாட்டிலை ஓப்பன் செய்து, ஒரு மடக்கோ இரண்டு மடக்கோ தண்ணீர் குடித்துவிட்டு வைத்தார் என்றால், சிறிது நேரம் கழித்து மறுபடியும் தாகம் எடுக்கும்போது, ஏற்கனவே ஓப்பன் செய்த பாட்டிலிலிருந்து தண்ணீர் குடிக்க மாட்டார். புது பாட்டில்தான் ஓப்பன் செய்யப்படும். சாப்பாடு விஷயத்திலும் சர்வ ஜாக்கிரதையாக இருப்பார். அவருக்கு சமைப்பதற்கென்று 5 பெண்கள் இருப்பார் கள். அவர்களைத் தவிர வேறு யாரும் சமையல்கட்டுக்குள் நுழைய முடியாது. அவர்கள் சமைப்பதையும்கூட கோபிகா அக்கா டேஸ்ட் பார்த்துவிட்டுத்தான், நித்யானந்தருக்குக் கொடுப்பார். ஏனென்றால், சாப்பாட்டில் விஷம் கலந்துவிடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வுதான். ஓஷோ ரஜனீஷ் உள்பட பல சாமியார்களுக்கு சாப்பாட்டில் விஷம் வைக்கப்பட்டு, அது அவர்களின் உடல்நலத்தைப் பாதித்து, மெல்ல மெல்ல மரணத்தில் கொண்டு போய் தள்ளியிருக்கிறது. அதுபோன்ற சூழ்நிலை தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நித்யானந்தர் தன் சாப்பாட்டு விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்தார்.


ஒவ்வொரு விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்கும் நித்யானந்தர் ஆசிரமத்தில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருப்பார்? அங்கே அவருடைய அறையில் ரகசிய கேமராவை வைத்து, அது படம் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், நித்யானந்தர் அதன்பக்கம் திரும்பி, தன்னுடன் இருந்த ரஞ்சிதா விடம், "அங்கே பார்' என்பதுபோல காட்டினால் எப்படி இருக்கும்? நாங்கள் அந்தக் காட்சியை ப்ளேபண்ணி பார்த்ததும், அடுத்ததாக என்ன நடந் தது என்பதை தெரிந்துகொள்ள பதைபதைப்புடன் இருந்தோம். நித்யானந்தர் கைகாட்டியதும், ரஞ்சிதா எழுந்து கேமரா இருக்கும் இடத்திற்கு வருவது தெரிந்தது. ரகசிய கேமரா என்பதால் அதை நாங்கள் வேறொரு பொருளில்தான் மறைத்து வைத்திருந்தோம் (என்ன பொருள் என்பதை இன்னொரு முறை சொல் கிறேன்). அந்தப் பொருள்தான் நித்யானந்தரின் பார்வையை ஈர்த்திருக்கிறது. அவர் அதை சுட்டிக் காட்டியதும், ரஞ்சிதா நெருங்கி வந்து, அது என்ன பொருள் என்று எடுத்துப் பார்த்து, திருப்பி வைக்கிறார். அதன் பின்புறத்தில்தான் கேமராவின் ஸ்ரீட்ண்ல் ஸ்ரீஹழ்க் இருந்தது. நித்யானந்தர் சந்தேகப்பட்டு, இப்படி ஏதாவது செய்யலாம் என்று நாங்கள் யூகித் திருந்ததால், ஸ்ரீட்ண்ல் ஸ்ரீஹழ்க்-க்கு மேலே, மெத்தைக்குள் இருக்கும் பஞ்சைக் கொஞ்சம் வைத்து, ள்ஹச்ங்ற்ஹ் க்ர்ய்'ற் ற்ர்ன்ஸ்ரீட் என ஸ்டிக்கர் ஒட்டி, அதை கவர் செய்திருந்தோம். ரஞ்சிதா அந்தப் பொருளின் பின் பக்கத்தை திருப்பி பிரித்துப்பார்த்து, க்ர்ய்'ற் ற்ர்ன்ஸ்ரீட் என்ற ஸ்டிக்கரைப் பார்த்ததும் அப்படியே விட்டு விட்டார் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. நித்யானந்தர்தான், "மேலும் பிரிக்க வேண்டாம்' என்று சொல்லியிருக்க வேண் டும்.


நித்யானந்தரை அம்பலப்படுத்த நானும் ரஞ்சிதாவும் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாக செய்தி பரப்பப்படுகிறது. எங்கள் திட்டத்தில் ரஞ்சிதாவை எந்தவிதத்திலும் கருவி யாகப் பயன்படுத்தவில்லை. நித்யானந்தருக்கு வைத்த பொறியில் அவராக வந்து சிக்கினார் என்பதுதான் உண்மை. சென்னையில் நடந்த பயிற்சி வகுப்புகளில் ரஞ்சிதா ஆர்வமாக கலந்து கொண்டார். எங்களைப் போலவே நித்யானந்தரின் பிர சங்கத்தில் அவரும் ஈர்க்கப் பட்டார். கடந்த ஒரு வருடகால மாக அவர் ஆசிரமத்திற்கு வந்து செல்வதை நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். எந்தப் பெண்ணையும் அத்தனை எளிதாக தன்னிடம் நெருங்கவிடாதவர் நித்யானந்தர். பல கட்டங் களைத் தாண்ட வேண்டும். அவரிடம் மிகச் சீக்கிரமாக நெருங்கிய ஒரே பெண் ரஞ்சிதாதான். பர்சனல் செகரட்டரி கோபிகாவின் அறையில் தங்கிக் கொண்டு, 3 மாதகாலம்வரை நித்யானந்தர் அறைக்கு சென்று வந்தார். இத்தனை விரைவாக இவர் நெருங்கிவிட்டாரே என்று ஆசிரமத்தில் இருந்த பலரும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். சென்னைக்குச் செல்வதும் பெங்களூருக்குத் திரும்புவதும் ரஞ்சிதாவின் வழக்கமாக இருந்தது. நித்யானந்தரின் பிறந்தநாளை யொட்டி டிசம்பர் கடைசி வாரத்தில் ரஞ்சிதா, ஆசிரமத்திற்கு வந்து தங்குகிறார் என்ற விஷயம் தெரிந்தது. வீடியோ கேமராவில் அவர் சிக்கினால் அது நித்யானந்தரை முழுமையாக அம்பலப்படுத்தும் என்று கணக்கிட்டோம். ரகசிய கேமரா ஷூட் செய்யும் நேரத்தில், ஆசிரமத்தில் உள்ள மற்ற பெண்கள் யாரும் நித்யானந்தரின் அறைக் குள் சென்றுவிடக்கூடாது என கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்.


ரஞ்சிதா ஒரு நடிகை. கடந்த ஒரு வருடமாகத்தான் ஆசிரமத்திற்கு வருகிறார். சந்நியாசமும் வாங்கவில்லை. மற்ற பெண் சந்நியாசிகள் நித்யானந்தருடன் இருக்கும் காட்சிப் பதிவானால், அவர்களின் பெற்றோரும் உறவினரும் பதறிவிடுவார்கள். அந்தப் பெண்களின் சந்நியாச வாழ்வு, குடும்ப வாழ்வு எல்லாம் முடிந்துபோய்விடும். கேமரா வைக்கப்பட்ட நாட்களில் நாங்கள் பதற்றமாகத்தான் இருந்தோம். கடைசி யில், நாங்கள் வேண்டிக் கொண்டது போலவே, மற்ற பெண்கள் யாரும் உள்ளே மாட்டவில்லை. ரஞ்சிதா சிக்கினார். இப்படித்தான் இது படமாக்கப் பட்டதே தவிர, ரஞ்சிதாவுடன் கூட்டணி போட்டுக்கொண்டு பதிவு செய்யவில்லை. ஆனால், என்னென்னவோ செய்தி பரப்புகிறார்கள். நான் ரஞ்சிதாவை அண்ணி என்றுதான் கூப்பிடுவேன் என்று எழுதுகிறார்கள். இது சுத்தப் பொய். அவரை அண்ணி என்று நினைப்பதேகூட அசிங்கம் என்று நினைக் கிறேன். அவரிடம் நான் பேசியதுகூட கிடையாது. அதேநேரத்தில், இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். ரஞ்சிதாவும் பணத்துக்காகவோ, சொத் துக்காகவோ நித்யானந்தருடன் இருந்தார் என்று சொல்லக்கூடாது. நித்யானந்தரின் பக்தையாகவே அவர் வந்தார். அவருக்கு கால் அமுக்கிவிட்ட பெண்கள் எப்படி வீழ்த்தப் பட்டார்களோ அதுபோலத்தான் ரஞ்சிதாவும் வீழ்த்தப்பட்டார்.


எனக்கு கிடைக்கிற தகவல்படி, ரஞ்சிதா இப்பவும் நித்யானந்தர் கண்ட்ரோலில்தான் இருக்கிறார். தனக்கு வேண்டியவர்களிடம் தொடர்புகொண்டு பேசும் ரஞ்சிதா, "அந்த வீடியோவில் என்ன தப்பு இருக்குது? நித்யானந்தர்கூட நான் இருந்தது உண்மைதான்' என்று சொல்வ தாகத் தகவல் எனக்கு வருகிறது. நித்யானந்தரும்தான் தன்னுடன் ரஞ்சிதா இருந்தார் என்பதை லேட்டாக ஒப்புக் கொண்டிருக்கிறாரே! உண்மைகளை ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.


இன்னும் இன்னும் நான் சொல்லப்போகிற ஆசிரம உண்மை களையும்...!


shockan

No comments:

Post a Comment