Saturday, March 27, 2010

"என்னிடம் நித்யானந்தா காட்டிய வித்தை'' இளம்பெண்ணின்...



shockan.blogspot.com


பிரம்மச்சர்யம் போதித்துக் கொண்டு நித்திய கல்யாணம் அனு பவித்து வந்த நித்யானந்தாவின் காவி உடை பாவங்களை ‘"நக்கீரனி'ல் தொடர்ந்து சொல்லி வரும் தர்மானந்தா ‘நித்யானந்தாவால் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் சீரழிக்கப்பட்டதாக சொல்லி யிருந்தார்.


ஆசிரமத்தில் தங்கியிருந்த இளம் பெண்களின் பெற்றோர்களெல்லாம் இதனால் பதறிப் போய் தங்கள் பிள்ளைகளை துருவித் துருவி விசாரித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் சொன்னவை பெத்த வயிறுகளில் அமிலத்தை வார்த்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.


நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தன் பெயர் வேண்டாம் என்கிற வேண்டு கோளோடு தீராத கண்ணீரோடும், ஆறாத மனக்காயத்தோடும் நித்யானந் தாவால் தனக்கு நேர்ந்த கதியைச் சொன்னார்.


""சென்னைதான் எனக்கு. 1985-ல் பிறந்தேன். சாஃப்ட்வேர் இஞ்ஜினியரிங் கில் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸானவள். என்னைப் பத்தி நானே பெருமையா சொல்லிக்கக் கூடதுன்னாலும் சொல் றேன்... நான் ரொம்ப அழகா இருப் பேன். காலேஜ்ல படிக்கிற பீரியட்லயே... நித்யானந்தர் போதிச்சு வந்த பிரம்மச் சர்ய விரதம் என்னை அட்ராக்ட் பண்ணியது. என் வீட்டில் அப்பா, அம்மா, நான், அக்கா, தம்பி இருக்கோம். பருவ வயசுக்கே உரிய செக்ஸ், காதல் உணர்ச்சி எனக்கும் இருந்திச்சு. படிக்கும் போதே பல பசங்க என் அழகில் மயங்கி என்கிட்ட ப்ரப்போஸ் பண் ணாங்க. ஆனா யாரையும் அக்ஸப்ட் பண்ணிக்கல. "யாரோ ஒருத்தனை கல்யாணம் பண்ணிக் கிட்டு, குழந்தை குட்டிகளை பெத்துக்கிட்டு வழக்கமான வாழ்க்கை வாழ எனக்குப் பிடிக்கலை.


எனக்கு கல்யாணம் பண்ணிவைக்க வரன் தேட ஆரம்பிச்சப்போ....


"எனக்கு மேரேஜ்ல இஷ்டமில்லை'னு அம்மா கிட்ட சொன்னேன். "‘ஏண்டீ?'"புடிக்கலை.'"


அதான் ஏன்?'‘"அதான்.. புடிக்கலை'-


இப்படி எங்களுக்குள்ள வாக்கு வாதம். நைட் சாப்பிடாமலே படுத் திட்டேன்.


மறுநாள் ஸண்டே. எல்லாரும் வீட்ல இருந்தோம். அப்பா சட்டுனு கோபப் படுறவர்தான். ஆனாலும் நிதானமா கேட்டார்.


"யாரையாவது லவ் பண்றியா? அவனையே கல்யாணம் பண்ணிக்க!'யோசிக்காம சொன்னேன்... ‘"நான் சந்நியாசம் வாங்கப் போறேன்'.


வீட்டில் எல்லாருக்கும் அதிர்ச்சி.


நித்யானந்தரைப் பத்தி சொல்லி அவரோட பெங்க ளூரு ஆசிரமத்தில் தங்கி ஆன்மிக சேவை செய்ய விருப்பதையும், அதில் ஒரு வேளை என்னால் முழு மையா ஈடுபட முடிய லேன்னா திரும்பி வர்ற தாவும் படாதபாடு பட்டு அவங்களை கன் வின்ஸ் பண்ணினேன்.


"மனித வரலாற்றி லேயே இந்தக் காலத்து மனிதனின் மனம்தான் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மனதோடு நேரடியாக சம்பந்தப்பட்ட சூட்சும சரீரம் நவீன மனிதனுக்கு மிகவும் பாதிக்கப்பட்டி ருக்கிறது. சூட்சும சரீரம் ஆரோக்கியம் அடையாத வரை ஸ்தூல சரீரத்தில் ஆரோக்கியத்தை எதிர்பார்க்க முடியாது.


ஆணுக்குள் பெண் உண்டு. பெண்ணுக்குள் ஆண் உண்டு. இதுதான் அர்ந்தநாரீஸ்வரர் தத்துவம். ஆனால் மனித வாழ்வில் ஆணுக்குள் இருக்கும் பெண் தன்மை வாய்ந்த அழுகை, இரக்கம் போன்றவை கட்டுப்படுத்தியே வைக்கப் பட்டிருக்கு. பெண்ணுக்குள் இருக்கும் வீரம், விவேகம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால்தான் தனக்குள்ளே பெண்ணை வைத்துக் கொண்டு வேறு பெண்ணை ஆண் தேடுகிறான். தனக்குள்ளேயே ஆணை வைத்துக்கொண்டு இன்னொரு ஆணை பெண் தேடுகிறாள். உனக்குள் இருக்கும் ஆண் தன்மைகளை நீ வெளியே கொண்டுவந்தால் நீ எந்த ஆணையும் சாராமல் வாழலாம்'


இப்படி சாமியார் செய்த பிரசங்கம் எனக்கு வியப்பைத் தரவே... முழுமனதோடு சந்நியாசத்துக்கு கிளம்பினேன்.


நித்யானந்தாவின் வார்த்தைகள் என்னை மூளைச் சலவை செய்திருந்த தால் பெத்தவங்களோட பேச்சு என் காதில் விழவே இல்லை. இப்போது நான் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறேன்.


பிடதி ஆசிரமத்தில் நான் சந்நியாசி யாக வாழ்க்கையைத் தொடங்கி தியானம் உள்ளிட்ட பயிற்சி வகுப்பு களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும் வேலைகளை செய்து வந்தேன். நித்யானந்தாவின் பயிற்சி வகுப்புகளில் "இன்னர் அவேக் னிங் புரோக்ராம்' என்பது மிக பிரசித்தம். ‘


பிடதி ஆசிரமத்தில் கடந்த நவம்பர் 2009-ல் சுமார் இரண்டாயிரம் பேர்கள் அமர்ந்து தியானம் செய்ற மெகா ஹால் கட்டி முடிக்கப் பட்டது. இந்த ஹாலுக்கு ராஜ சபா என்று பெயர். இந்த ஹாலில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்துவார் நித்யானந்தா.


இந்த மெடிடேஷனின் முக்கிய கட்டம் என்பது ‘"அன் கிளச்' என்பதாகும். அதாவது வாகனத்தில் கியர் போடாமல் நியூட்ரலில் இருக்குமே... அப்படியான நிலை.


எதிரே அமர்ந்திருக்கும் அனைவரையும் கண்களை மூடச் சொல்லுவார் சாமியார். எல்லாருடைய கண்களிலும் நாங்கள் உட்பட ஆசிரம சேவகர்கள் சேர்ந்து வெள்ளைத் துணியால் கண்களை கட்டிவிடுவோம்.


‘தியான சூத்திர மந்திரங்களை சொல் கிறேன். "உன் மனதில் தோன்றும் காட்சிகளை மறந்து அடுத்தடுத்த காட்சியை பார். இப்படி தொடர்ந்து செய். எண்ணங்களும் காட்சி களும் நிற்க ஆரம்பிக்கும். பின் நின்றே விடும். அதன் பின் ஆனந்தம் பொங்கும்' எனச் சொல்வார். அதன்படி எல்லோரும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தியானப் பயிற்சியை மேற்கொள்வார்கள். அப் போது சாமியார் ரெஸ்ட் எடுப்பதற் காக போவார். மேடை ஓரத்திலேயே சாமியாருக்கு ஓய்வறை உண்டு. ரஞ்சிதாவும், சாமியாரும் இருந்த அறையை பார்த்தீங்கள்ல. அதே போன்ற அறைதான் அது. சினிமா ரெகார்டிங் தியேட்டர்களில் இருப்பது போன்ற, சத்தம் வெளியே கேட்காத சவுண்ட் ஃபுரூப் சுவர்கள் கொண்ட ஆடம்பரமான அறை.


அன்றைக்கு... கண்களை கட்டியபடி எல்லோரும் ‘"அன் கிளச்' பயிற்சியில் இருக்க... சாமியார் ரெஸ்ட்டுக்காக அறைக்குள் போனார். அப்போது கோபிகா என்னை கூப்பிட்டு ‘"சாமி உன்னை வரச் சொல்றார். கால் அமுக்கி விடணு மாம்' என்றார்.


நானும் உள் ளே போனேன். ரஞ்சிதா போல் தான் நானும் சாமியாரின் கால்களை பிடித்துவிட்டேன். அப் போது படுக்கையிலிருந்து எழுந்த சாமியார் என்னோட உள்ளங்கையை தன்னோட கையால் அழுத்தமாகப் பிடித்தார். அது அவரோட வழக்கம்தான் என்றாலும் கையை அழுந்தப் பிடித்தபடி என் மார்புப் பகுதியை வெறித்துப்பார்த்தார். எனக்கு சங்கடமாக இருந்தது. கையை விடுவித்துக் கொள்ள முடியாதபடி மேலும் அழுத்திய சாமியார் "நான் இப்ப உன்னையும், உன் உடம்பையும் ஸ்கேன் பண்ணப் போறேன்' என்றவர் சிறிது நேரம் கண்களை மூடித்திறந்து... ‘"உனக்கு மூலாதாரப் பிரச்சினை இருக்கு. அதனால் உனக்கு செக்ஸ் கனவுகள் அதிகம் வருது. அந்த காம ஆசையின் விளைவாக நீ ஆசிரமத்தில் இருக்கும் ஒருவனை மனதுக்குள் விரும்புகிறாய். அந்த சாதாரண மானவ னிடம் உன்னை இழந்து உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக் கொள்ளாதே! அது தப்பு' எனச் சொல்லியபடி என்னை கட்டிப்பிடித்தார். அது வழக்கமான கட்டிப் பிடிப்பாக இல்லை. அவர் நெஞ்சில் என் மார்புகள் அழுந்திப் பதிகிற அளவிற்கு இறுக்கமாக கட்டிப்பிடித்து ‘"ம்ம்ம்ம்' என நீள மாக பெருமூச்சு விட்டபடி என்னை வாசம் பிடித்தார்.


திடுக்கிட்டுப் போன நான் சடாரென அவரிடமிருந்து விலகினேன். அதற்குள் வெளியே தியான நேரம் முடிந்ததால் என்னை ஏற இறங்க பார்த்த சாமியார் "நீ கிளம்பு' என்றார்.


நான் வெளியில் வந்தேன்.


அன்று மாலை!


மறுபடியும் சாமி என்னை அழைத்தார். தட்டவோ... அங்கிருந்து தப்பவோ முடியாதே? சாமியாரிடம் எதையாவது சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்து உள்ளே போனேன். கால் நீட்டி படுத்திருந்த சாமியார் மெஸ்மரிஸம் செய்வது போல் என் கண்களையே பார்த்தார்.


"நான் கடவுள். நீ என்னோட கலந்தால் என்னுடைய பவர் உனக்கும் கிடைக்கும். நீ எதற்காக ஆசிரமத்திற்கு வந்தாய்?


'"ஞானம் பெறுவதற்காக.'


‘"ஞானம் என்பது என்ன? உடலை விட்டு சக்தியை வெளியேற்றி விட்டு அலைந்து திரிந்து திரும்ப உடலுக்குள் வருதல்.


கூடுவிட்டு கூடு பாய்தல். என்னுடன் நீ கூடினால் அந்த வித்தை உடனே உனக்கும் கிடைக்கும்' என்றார்.நான் செய்வதறியாது மெய்மறந்து நின்றேன்.


என்னை இழுத்து அணைத்து மார்புகளை வெறியோடு தீண்டினார்.


"ஐஸ் க்ரீம் சாப்பிடு' என்றபடி அவரின் தொடைக்குள் என்னை புதைத் தார்.


இப்போதும் நான் செத்து புதைக்கப்பட்ட ஒரு நடை பிணம் போலத்தான் இருக்கிறேன்....''


சொல்லிவிட்டு கதறி அழத் தொடங்கினார் அந்தப் பெண்


நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணும் தன் கண்ணீர் கதையை சொல்லத் தொடங்கினார்.


""நித்யானந்தாவுக்கு அமெரிக்காவி லும் ஆசிரமம் இருப்பது உங்களுக்கு தெரியும். அமெரிக்க பக்தர்களுக்கு சாமியார் என்ன கத்துக் கொடுத்தாரோ? ஆனால்... அமெரிக்க இளைஞர்-இளைஞி களிடம் இப்போது ஃபேஷனாக இருக்கும் "குக்கீஸ்' என்பதை சாமியார் கத்துக்கிட்டு வந்து என்னைப்போல பல பெண்களின் கழுத்தறுத்துவிட்டார்.''


"“அதென்னம்மா குக்கீஸ்?' என நாம் கேட்டோம்.


‘""சொல்ல சங்கடமா இருக்கு.


இருந்தாலும் போலிச் சாமியாரின் முகத்திரையை கிழிக்கிறதுக்காக அதைச் சொல்றேன்'' என்றார்.குக்கீஸ்........


(வரும் இதழில்)

No comments:

Post a Comment