Wednesday, October 28, 2009

ஜோடியாக மேடை ஏறிய நயன்தாரா பிரபுதேவா!: கோபத்தின் உச்சியில் ரமலத்!

விஜய், நயன்தாரா நடிப்பில் வில்லு படத்தை பிரபு தேவா கடந்த ஆண்டு இயக்கினார். அப்போது பிரபுதேவா, நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து பல இடங்களுக்கு இருவரும் ஒன்றாக சென்று வந்தனர். நயன்தாராவுடனான காதல் எனது சொந்த விஷயம். அதைப்பற்றி பேச விரும்பவில்லை என பிரபுதேவா கூறி வந்தார்.
இதற்கிடையே பிரபுதேவாவின் பெயரை தனது கையில் பச்சை குத்தி பரபரப்பு ஏற்படுத்தினார் நயன்தாரா. அவரை காதலிப்பதையும் அவர் மறுக்கவில்லை. சமீபத்தில் பிரபுதேவா, நயன்தாரா துபாய்க்கு சென்றனர். அங்கு பணிபுரியும் தனது சகோதரரிடம் பிரபுதேவாவை நயன் அறிமுகம் செய்து வைத்தார். போக்கிரி படத்தின் இந்தி ரீமேக்கான வான்டட் படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டனர்.
படம் முடிந்ததும், இருவரும் ஜோடியாக வெளியே வந்தார்கள். உடனே அவர்களை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டார்கள்.
இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்களா? என்றும், திருமணத்துக்குப்பின் நடிப்பீர்களா?'' என்றும் நயன்தாராவிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.
நோ கமெண்ட்ஸ் என்று நயன்தாராவும், பிரபுதேவாவும் சேர்ந்து பதில் அளித்தார்கள்.
இதைத்தொடர்ந்து மும்பை பத்திரிகைகள், நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றும், திருமணத்துக்குப்பின், நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் என்றும் செய்திகள் வெளியிட்டிருந்தன.
பிரபுதேவா நயனதாராவின் கள்ளக்காதல், திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழக மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இவர்களது காதலால் பிரபுதேவாவின் மனைவி ரமலத் தனது இரு குழந்தைகளுடன் கலங்கிப் போய் நிற்கிறார். பிரபுதேவாவை திருத்த அவரது குடும்பத்தினர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் எடுத்த முயற்சிகள் பலனற்றுப் போய் விட்டன.
முதலில் பிரபுதேவாவின் மனைவி ரமலத் நயனதாராவைக் குற்றம் சாட்டிப் பேசினார். எங்காவது பிரபுதேவாவுடன் இணைத்துப் பார்த்தால் அடிப்பேன் என்றும் ஆவேசமாக கூறினார். இதையடுத்து ரமலத் யார் என்னை அடிக்க என்று கோபப்பட்டார் நயனதாரா. இதற்குப் பதிலளித்த ரமலத், நயனதாராவின் இந்த திமிர் பேச்சுக்கு என் தமிழ்நாட்டு தாய்மார்களும், சகோதரிகளும், மாதர் சங்கங்களும் தக்க பதில் கொடுப்பார்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நயன்தாராவைக் கல்யாணம் செய்து கொள்ள தன்னிடமே அனுமதி கேட்டு நிற்பதாக பிரபுதேவா குறித்து கண்ணீர் கூறியுள்ளார் ரமலத். எனது உயிரைப் பற்றிக் கூட அவருக்கு கவலை இல்லை. நயனதாராவை மணந்து கொள்ள நான் அனுமதி தர வேண்டும் என்று என்னிடமே கேட்கிறார் என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
பிரபுதேவா மனைவி ரம்லத் எங்கு பார்த்தாலும் நயன்தாராவை அடிப்பேன் என்றதால் சென்னையில் சந்திப்பதை இருவரும் தவிர்க்கின்றனர். நயன்தாரா இங்கு வந்தாலும் ஒரு நாள் மட்டுமே யாருக்கும் தெரியாமல் தங்கிவிட்டு திருவனந்தபுரம் பறந்து விடுகிறார். ஐதராபாத்தில் நட்சத்திர ஓட்டலில் ஒரே அறையில் இருவரும் தங்குவதாக திரையுலகில் கிசுகிசுக்கிறது. இந்தியில் பிரபுதேவா இயக்க உள்ள மோஸ்ட் வாண்டட் படத்தில் சல்மான்கான் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் முடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த ஸ்டைல் சினிமா விருது வழங்கும் விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்று ரசிகர்களை ஓ போட வைத்தனர். அங்குள்ள நவோட்டல் நட்சத்திர ஓட்டலில் இவ்விழா நடத்தப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு கிடைத்தது. சிவாஜி படத்தில் டான்ஸ் அமைத்ததற்காக பிரபுதேவாவுக்கு சிறந்த டான்ஸ் மாஸ்டருக்கான விருது கிடைத்தது. தமிழில் சிறந்த நடிகராக தனுஷ் (பொல்லாதவன்), சிறந்த நடிகையாக ஸ்ரேயா (சிவாஜி) ஆகியோரும் விருது பெற்றனர். விழாவுக்கு நயன்தாரா வும், பிரபுதேவாவும் ஜோடியாக வந்தனர். அருகருகே உட்கார்ந்து சிரித்து சிரித்து பேசினர். விழாவில் பங்கேற்ற இதர நடிகர் நடிகைகளும் ரசிகர்களும் இவர்களையே கவனித்தனர். நயன்தாரா அதை பொருட்படுத்தவே இல்லை. விருது அறிவிக்கப்பட்டதும் இரண்டு பேரும் ஜோடியாக மேடை ஏறி விருதுகளை வாங்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். பிரபுதேவா மனைவி ரம்லத்துக்கு இவ்விஷயம் தெரிந்து அதிர்ச்சியாகியுள்ளார். எச்சரித்தும் இருவரும் சேர்ந்து சுற்றுவது ரம்லத்துக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment