Saturday, October 24, 2009

ஜெயலட்சுமியாகும் செல்வலட்சுமி!


மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு அனுப்பியிருக் கும் அந்தப் புகார் கடிதத்தில், ""என் குடும்பத்தை பழிவாங்கும் நோக்கத்தில் போலீசார் மதுகடத்தல் வழக்குப் போட்டிருப்பதுடன், விசாரணை என்ற பெயரில் என் மனைவியை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று கற்பழித்துள்ளனர்'' எனத் தெரிவித்து அதிர வைத்திருக்கிறார் அரசு விரைவு போக்குவரத்துக்கழக டிரைவராகப் பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்ட ரவிச்சந்திரன்.கடந்த 96-2001 தி.மு.க ஆட்சியின்போது அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜிடம் டிரைவராக இருந்த ரவிச் சந்திரன், 2006-ல் தி.மு.க ஆட்சி வந்தபிறகு, அமைச்சர் தமிழரசி யின் கார் டிரைவரானார். அவரது மனைவி, செல்வ லட்சுமி. கலப்புத் திருமணம். மதுரைப் பகுதியில் கட்சி நிகழ்ச்சிகளில் முன்னிலைப் படுத்திக்கொள்வார் ரவிச் சந்திரன். தன் வீட்டில் நடந்த காதணி விழாவை தடபுடலாக போஸ்டர் ஒட்டி நடத்தியவர். அமைச்சர் தமிழரசி யிடமிருந்து மது ரை மாநகராட்சி மண்டலத் தலை வர் இசக்கிமுத்து வின் டிரைவ ரானார் ரவிச் சந்திரன். ஆனால், ரெகார்டுபடி, அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் திருவனந்தபுரம் டெப்போ வில்தான் வேலை.""மூணு வருசமாவே எங்க வாழ்க்கை நிம்மதியா இல்லீங்க'' என கண்ணீரைத் துடைத்தபடி பேசத் தொடங்கினார் ரவிச்சந்திரனின் மனைவி செல்வலட்சுமி. ""என் பக்கத்துவீட்டு ஜெயஸ்ரீ காலேஜ் புரபசர். அவருக்கும் ஊமச்சிக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைக்கதிரவனுக்கும் தொடர்பிருந்தது. இதில் 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஜெயஸ்ரீயிடம் வாங்கியிருந்தார் இன்ஸ்பெக்டர். அதை திருப்பிக்கேட்டப்ப தகராறு வந்திருக்குது. என்கிட்டே ஜெயஸ்ரீ சொல்ல, என் ஆலோசனைப்படி அப்போதைய எஸ்.பி அன்புகிட்டே புகார் கொடுத்தார் ஜெயஸ்ரீ. கலைக்கதிரவனை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. நான்தான் சஸ்பெண்ட்டுக்கு காரணம்னு நினைச்சு எங்க குடும்பத்தையே பழிவாங்க ஆரம்பிச் சிட்டார் கலைக்கதிரவன். இதிலே என்ன கொடு மைன்னா, இன்ஸ்பெக்டரும் ஜெயஸ்ரீயும் மறுபடியும் நெருக்கமாயிட்டாங்க.அங்கே இங்கே ஆளைப் பிடிச்சி, மேலூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டராயிட்டாரு கலைக்கதிரவன். 2006 அக்டோபர் 3-ந் தேதி யன்னைக்கு என் புருசன் மேலே மது கடத்தல் வழக்குப்போட்டு போலீஸ்காரங்க இழுத்துட்டுப் போயிட்டாங்க. திரு வனந்தபுரத்திலே இருந்ததால, அங்கி ருந்து வரும்போது கலைக்கதிரவன் உள்ளிட்ட போ லீஸ்காரங்க கேட்குற சரக்கை வாங்கிட்டு வருவாராம். உதவியா செய்யப்போனதை வச்சே அவர் மேலே கேஸ் போட்டுட்டாங்க. அதோடு, என்னையும் நைட்டோட நைட்டா ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போயிட் டாங்க. போலீஸ்காரர் பால்ராஜ், வீரணன், பிணவேந்தன் மூணு பேரும் விசா ரணைங்கிற பேரில் எனக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தாங்க. நான் கதறியும் விடவே யில்லை. அதிகாரிகள் சொல்ற மாதிரி அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக் கலைன்னா உன் புருசனை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்னுடு வோம்னு சொல்லி மிரட்டியே அவங்க தேவையைத் தீர்த்துக்கிட்டாங்க. மது கடத்தியதா பொய் வழக்குப் போட்டு என்னை திருச்சி ஜெயிலிலும் அவரை மதுரையிலும் அடைச்சாங்க. ஆதார மில்லாததால 15 நாளில் விடுதலை ஆயிட்டோம். அரசு ஊழியரான என் புருசன் ஜெயிலுக்குப் போன செய்தி பேப்பரில் வந்ததால, அவரை டிஸ்மிஸ் பண் ணிட்டாங்க. டிரான்ஸ்போர்ட் எம்.டி, அந்த இன்ஸ்பெக்டர் பேச்சைக் கேட்டு நடந்துக்கிட்டாரு. அதுக்கப்புறமும் போலீசால் அடிக்கடி டார்ச்சர்தான். என் புருசனை கைது செய்து அழைச் சிட்டுப்போயிடுவாங்க. நடுராத்திரியில எங்க வீட்டு சுவரேறி குதிச்சு உள்ளே வந்து என்னையும் ஸ்டேஷனுக்கு தூக் கிட்டுப்போய் அவங்க இஷ்டத்துக்கு டார்ச்சர் பண்ணுவாங்க. பெரிய அதிகாரிக கூப்பிட்டா உடனே வரணும். இல்லேன்னா பொய் கேசுதான்னு ஓப்பனா மிரட்டுவாங்க.எங்க வீட்டிலே உள்ள பொருள்களையெல்லாம் அள்ளிக் கிட்டுப் போயிடுவாங்க. என் புருசன் மேலே குண்டாஸ் போட்டாங்க. என்னையும் திரும்ப ஜெயிலில் அடைச்சாங்க. இதையெல்லாம் முதல்வர் அலுவலகம் வரை புகாரா அனுப்பி னோம். மனிதஉரிமை ஆணையம், டி.ஜி.பி. அலுவலகம் எல்லா இடத்துக்கும் புகார் அனுப்பியும் போலீஸ் மேலே நடவடிக்கை இல்லை. நான் ஜெயிலில் இருந் தப்ப, சிவகாசி ஜெயலட்சுமியும் அதே ஜெயிலில் இருந்தாங்க. என்கிட்டே நல்ல தோழியா பழகினாங்க. இனி நான் நிம்மதியா வாழணும்னா ஜெயலட்சுமி மாதிரி போலீசை எதிர்த்துப் போராட ணும்னு முடிவு பண்ணிட்டேன்'' என்றார் அழுத்தமாக.அவரது கணவர் ரவிச்சந்திரன் நம்மிடம், ""நட்புக்கு சரக்கு வாங்கிக் கொடுத்ததோட வினை. எங்க குடும்ப மானமும் போய், என் மனைவியோட கற்பும் பறி போயிடிச்சி. இதை சும்மாவிடமாட் டேன். ஜெயலட்சுமி பாணியில் அம்பலப் படுத்தியே தீருவோம். முதல்வருக்கும் அழகிரி யண்ணனுக்கும் புகார் அனுப்பியிருக்கோம்'' என்றார். பகீர் குற்றச்சாட்டுகள் குறித்து இன்ஸ் பெக்டர் கலைக்கதிரவனிடம் கேட்டோம். ""ரவிச்சந்திரன் மது கடத்தியது உண்மைதான். அது சம்பந்தமா ஊமச்சிக்குளம் ஸ்டேஷனில் வழக்கு இருக்குது. மனைவியை வச்சும் மது கடத்துவதாலதான் அவங்க மேலேயும் வழக்குப் போட்டோம். எல்லாவற்றையும் ஆதாரத்தோடு நிரூபிப்போம்'' என்றார். மதுரை போலீஸ் வட்டாரமோ, ""மந்திரி டிரைவராக இருந்தப்பவே மது கடத்தியதாலதான் ரவிச்சந்திரனை மாநக ராட்சிக்குத் துரத்தினாங்க. வெளிமாநில சரக் கோடு, போலி லேபிளில் சரக்கு தயாரிச்சும் விற்கிறாங்க. இதையெல்லாம் மறைக்கத்தான் கற்பழிப்பு, செக்ஸ் கொடுமைன்னு திசை திருப்புறாங்க'' என்கிறது.சிவகாசி ஜெயலட்சுமி வழியில் செயல் படுவேன் என்கிற செல்வலட்சுமி, சிவகாசி பட்டாசா, புஸ்வாணமா? பரபரப்பாகி யிருக்கிறது மதுரை

No comments:

Post a Comment