Sunday, October 25, 2009

வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்


இளைய தளபதி விஜய் இதுவரை சினிமாவில் வேட்டையாடுவதில் வல்லவராக இருந்து வந்தார். தீபாவளியோ, பொங்கலோ குறித்த நேரத்தில் அவரது படங்கள் திரைக்கும் வரும் அளவிற்கு அவரது திட்டமிடல் இருந்தது.
ஒரு படத்தில் நடித்து முடித்ததுமே அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்து விடுவார் விஜய். முந்தைய படம் திரைக்கு வருவதற்குள் அடுத்த படம் பாதி முடிவடைந்திருக்கும். இந்த திட்டமிடல் வேட்டைக்காரன் வரை தொடர்ந்தது.
அதனால்தான் வேட்டைக்காரன் படம் முடிந்ததும் சுறா படத்தில் கவனத்தை திருப்பிவிட்டார். ஆனால் இப்போது முழுக்கவனத்தையும் சுறாவில் செலுத்தமுடியாமல் செய்கிறது வேட்டைக்காரன். இப்படம் இன்னமும் ரிலீசாகாமல் இருப்பதுதான் இதற்கு காரணம்.
சுறாவை வேக வேகமாக முடித்தாலும் வேட்டைக்காரன் படத்திற்கு பிறகுதானே ரிலீஸ் செய்ய முடியும் என்பதால் விஜய் அப்செட்.
துவண்டு போயிருந்த மார்க்கெட்டை சன் பிக்சர்ஸ் விளம்பரம் தூக்கி நிறுத்தும் என்று நம்பித்தான் வேட்டைக்காரனை வெளியிடும் உரிமையை சன் பிக்சர்ஸுக்கு கொடுக்க சம்மதித்தார் விஜய். எப்போது வெளியிடுவோம் என்ற தகவலையே சொல்லாமல் சன் பிக்சர்ஸ் தரப்பு இழுத்தடிப்பதால் நொந்து போயிருக்கிறார்.
படம் துவங்கியது முதல் அப்படம் திரைக்கு வரும் வரை விஜய் வேட்டை என்ற நிலை இப்பொது மாறிவிட்டது. இதுவரை வெளிவந்த அவரது படங்களின் சென்னை ஏரியா உரிமையை அவர்தான் வாங்குவார். அதுதான் அவரது அக்ரிமெண்ட். ஆனால் சன் பிக்சர்ஸில் அது முடியாது என்பதால் விஜய் வேட்டையாட முடியாமல் முதலில் வலுவிழந்தார்.
விஜய் மகன் இந்த படத்தில்தான் முதன் முதலாக தலை காட்டி உள்ளார். ஒரு பாட்டுக்கு ஆடியிருக்கிறார். அவர் ஆடிய ராசிதான் இப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்று பலரும் பேசுவது விஜய் காதுக்கு எட்ட ரொம்பவே அப்செட்டில் இருக்கிறார்.
வேட்டைக்காரன் இவருக்கு 49 வது படம். அடுத்து வரும் சுறா 50 வது படம். 49 முடியாமல் 50க்குள் எப்படி அடியெடுத்து வைக்க முடியும் என்ற குழப்பத்தில் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறார் விஜய். சன் தரப்பின் இழுத்தடிப்புக்கு திட்டமிட அரசியல் சதி என்கிறார்கள்.
இப்போதைக்கு அரசியல் இல்லை என்று விஜய் அறிவித்தாலும் ராகுல்காந்தியை சந்தித்ததன் விளைவுதான் இந்த அரசியல் சதி என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
வேட்டையாட முடியாத விஜய்யால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். விஜய்யோ வேட்டைக்காரனை பொறுத்தவரை வாய் திறக்க முடியாமல் அவதிப்படுபவராக இருக்கிறார்

No comments:

Post a Comment