Saturday, November 28, 2009

மன்மத குருக்களின் புதுப்புது சி.டி.!

காஞ்சி மன்மத குருக்கள் தேவநாதன்... போலீஸ் கஸ்டடியின் போது கொடுத்த கிளுகிளு வாக்குமூலத்தை நாம் கடந்த நக்கீரன் இதழில் வெளியிட்டிருந்தோம். இந்தக் கட்டுரையைப் படித்த பலரும்... ""கோயிலுக்குப் பிள்ளைக் குட்டிகளோட போவதற்கே பயமாக இருக்கிறது.
இப்படிப்பட்ட மன்மத மிருகத்தின் முகத்திரையைக் கிழிக்கும் நக்கீரனுக்கு நன்றிகள்'' என்ற ரீதியில் கடிதம் மூலமாகவும் போன்மூலமாகவும் தங்கள் மனதைத் திறந்துகொண்டி ருக்கிறார்கள்.அதேநேரம் இந்த மன்மத குருக்கள் விவகாரங்களைத் துருவத் துருவ ஏகப்பட்ட கண்றாவி சி.டி.க் களும்... கிளுகிளுத் தகவல்களும் கிடைத்தபடியே இருக்கிறது.’’தேவநாத குருக்கள் எடுத்த ஒரு சில சி.டி.க்கள்தான் வெளியே தெரியவந்திருக்கிறது. ஆனால் அவன் எடுத்த கண்றாவிப் படங்களின் எண்ணிக்கை அதிகம். அது எல்லாம் தற்போது சி.டி. உலகில் சக்கைபோடு போட்டு... விற்றுக் கொண்டிருக்கிறது’’ என்றபடி... நமது காஞ்சிபுர நண்பர் ஒருவர்.... தேவநாதன் எடுத்த மிகப் பெரிய செக்ஸ் ஆல்பத்தையே நம்மிடம் கொடுத்தார்.
அதைத் திறந்துபார்த்த நாம்... அதிர்ச்சியில் உறைந்தோம்."காமம் இறைவன் கொடுத்த வரம்... அது தவறானது அல்ல' என்றெல்லாம் வாக்குமூலம் கொடுத்த கில்லாடிக் குருக்கள் தேவநாதன்... ஆன்மீகத்தையும் இறைவனையும் கோயிலையும் எந்த அளவுக்கு சிறுமைப்படுத்தியிருக்கிறான் என்பதற்கு... அந்த சி.டி.யில் இருந்த சில வக்கிரக்காட்சிகளே உதாரணம்.
அதில் உள்ள சில காட்சிகள்...
கோயில் கருவறைக்குள் அந்த லேடி புரபசர் நெற்றியில் திருநீறு, குங்குமத்தோடு நிற்கிறார். தேவநாதனைப் பார்த்து குறும்பாய் நாக்கைத் துருத்தும் அவர்... அம்மன் சிலைபோல் ஒரு கையயைத் தூக்கி குருக்களை ஆசிர்வதிப்பது போல் போஸ் கொடுக்கிறார். அவரை லாவகமாக கைகளால் வளைத்து... மூலஸ்தான சிவலிங்கத்தின் அருகிலேயே சுவற்றில் சாய்க்க, கருவறையே பள்ளியறையாகிறது. இதைவிடக் கொடுமை.. சிவலிங்கத்தின் பின்னால் தான் பயன்படுத்திய நிரோத்தை அலட்சியமாய் வீசியெறிகிறான் அந்தக் கேடுகெட்ட குருக்கள்.
அடுத்து கொஞ்சம் தடிமனான பூக்காரப் பெண்மணி கருவறைக்குள் நிற்கிறார். அவளிடமும் மேற்சொன்ன பாணியில் விளையாடுகிறான் தேவநாதன். அப்போது யாரோ அர்ச்சனைக்கு வர... அந்த பெண்மணியைக் கொஞ்சம் ஓரமாக நிறுத்திவிட்டு அதே கையோடு அர்ச்சனைத் தட்டை வாங்கி... அவசரகதியில் பூஜையை முடித்துக் கொடுத்துவிட்டு... மறுபடியும் சல்லாபத்தை உறுத்தலே இல்லாமல் தொடருகிறான்.லாட்ஜ் அறையில் ஒரு தடிமனானப் பெண்ணுடன் ஜலக்கிரீடை, தனது மனைவியுடன் அடிக்கும் கூத்துக்கள் எனக் கண்களைக் கூசும்படி விரிகிறது அந்த டி.வி.டி. இப்படி ஏகப்பட்ட பெண்களை வளைத்து...அவன் எடுத்த படங்கள் அத்தனையும் அவனது வக்கிரத்தின் வெளிப் பாடுகளாக இருக்கிறது.
காஞ்சிபுரம் ராஜவீதியிலேயே இருக்கும் அந்த பிரபல மருத்துவமனையை நடத்தும் டாக்டரின் மனைவி மற்றும் அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு நர்ஸ்... என பலருடன் அவன் சல்லாபிக்கும் புதுப்புது சி.டி.க் காட்சிகள் இன்னும் வந்தபடியே இருக்கிறது.கருவறைக்குள் தேவநாதனுடன் சல்லாபித்த அந்தப் பெண் புரபசர் ஏற்கனவே திருமணமானவர். அவரது கணவரும் கல்லூரி புரபசர்தான். இவர்களுக்கு சின்னவயதுக் குழந்தைகள் இருவர் இருக்கிறார்கள். அதேபோல் தேவநாதனின் இன் னொரு கருவறைப் பார்ட்னரான பூக்காரப் பெண்மணிக்கு... வயதுக்கு வந்த இரண்டு பெண்பிள்ளைகள் உண்டு.
இவரது கணவர் ஒரு தொழுநோயாளி என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் தங்களைக் குறி வைத்ததை அறிந்ததும்... அந்த லேடி புரபசரும் பூக்காரப் பெண்மணியும் குடும்பத்தோடு தங்கள் வீட்டைக் காலி செய்துவிட்டு... தலைமறை வாகிவிட்டார்கள். இந்த வழக்கை விசாரித்து வரும் டி.எஸ்.பி. சமுத்திரக்கனி நம்மிடம்,“""தமிழகத்தையே அதிர வைத்திருக்கிற மிக முக்கியமான வழக்கு இது. குருக்கள் தேவநாத னோடு இன்னும் இருபது பேருக்கு மேல் இந்த வழக்கில் தொடர் புள்ளவர்களாக இருக்கிறார்கள். அத்தனை பேரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்'' என்கிறார் அழுத்தமாக.சொன்னது போலவே... குருக்களின் லீலைகளை வெளியே பரப்பியதாக... செல்போன் ரிப்பேர் கடைக்காரர்களான பாலாஜியையும் செந்திலையும் ஏற்கனவே கைது செய்திருக்கும் போலீஸ்... தற்போது சச்சின் என்பவனையும் கைது பண்ணி "உள்ளே' தள்ளியிருக்கிறது. இந்த சச்சின்தான் குருக்களின் ஆபாச சி.டி.க்களை சென்னைக்கு கொண்டுவந்து... "எக்ஸ்பி டாட் காம்' மற்றும் "டெபோனர் பிளாக்' ஆகிய இணையதளங்களில் அப்லோடு செய்தவனாம்.நம்மிடம் மனம் திறந்து பேசிய காஞ்சிபுரம் மாதவ குருக்கள்...’’"குருக்கள்கள் ஒன்றும் தெய்வப் பிறவி களல்ல.
அவாளும் சராசரி மனுசாதான். அவாளுக்கும் ஆசாபாசங்கள் இருக்கு. எனக்கு தண்ணியடிச்சிட்டு... மாட்டுக்கறி சாப்பிட்டுண்டு... பான்பராக் போட்டபடி கோயில்ல அர்ச்சனை பண்ற அர்ச்சகர்களை நல்லாத் தெரியும். ஏன் கோயில்லயே சரச சல்லாபம் நடத்தறவாளையும் தெரியும். ஆனா..அவாள்லாம் கமுக்கமா நடந்துக்கறா. மண்ணைத் திண்ணாலும் மறைவாத் திண்ண னும்னு சொல்வா. அதை அந்தப் படுபாவி தேவநாதன் மறந் துட்டான். அதனாலதான் இவ்வளவு அசிங்கங்களும். அவனால குருக்கள்னாலே இப்ப கேவலமா பாக்கறா. முதுகுக்குப் பின்னாடி சிரிக்கறா. எங்க வீடுகள்லயும் எங்களைப் பத்தி கேவலமாப் பாக்கறா'' என்கிறார் ஆதங்கமாய்.மன்மத குருக்களை மேலும் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதில் தீவிரம் காட்டிவருகிறது போலீஸ்.
இன்னும் என்னென்ன கிளம்பப்போகிறதோ... மன்மத குருக்கள் விவகாரத்தில்...

No comments:

Post a Comment