Tuesday, April 6, 2010

தமன்னா காதலிக்கிறார்.... : கார்த்தி நேரடி பதில்


கார்த்தி- தமன்னா நடித்த பையா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்விருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இன்று கார்த்தி சென்னை ரெசிடன்சி டவரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.


பையா பட சந்தோசத்தில் இருப்பதாக குறிப்பிட்ட கார்த்தியிடம் அடுத்து அமீர்,செல்வா, லிங்குசாமி மூவரும் கால்ஷீட் கேட்டால் யாருக்கு கால்ஷீட் கொடுப்பீங்க?’என்று கேட்டதும்,

‘’பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் படங்களுக்காக நிறைய டைம் எடுத்துக்கிட்டேன். பையா அப்படியில்லை.


வாய்ப்புகள் நிறைய வருகின்றன. அதனால் அந்த படங்களையெல்லாம் நடித்து முடித்துவிட்டுத்தான் ரிஸ்க் கேரக்டரில் நடிப்பேன். அதனால் இப்போதைக்கு அமீர், செல்வராகவன் படங்கள் நடிக்க மாட்டேன். எனது அடுத்த கால்ஷீட் லிங்குசாமிக்குத்தான் கொடுப்பேன்.


மூன்று, நான்கு வருடங்கள் ரிஸ்க் எடுத்து நடிப்பதை இப்போதைக்கு தவிர்க்கிறேன்’’ என்றவரிடம் விசயத்திற்கு வந்தார்கள்.


’தமன்னா உங்களை காதலிக்கிறாரா? என்று கேட்டதுக்கு, ‘ஆமாம், அவர் காதலிக்கிறார்...சினிமாவை!’என்று தப்பித்தார்.


பத்திரிக்கையாளர்கள் அவரை தப்ப விடவில்லை. வசமாக கொக்கி போட்டார்கள்.


அண்ணன் சூர்யாவும் இப்படித்தான் மூன்று வருடமாக ஜோதிகாவை லவ் பண்ணலன்னு சொன்னார். ஜோதிகா சினிமாவை லவ் பண்ணுறாரு. நானும் சினிமாவை லவ் பண்ணுறேன்னு சொன்னார் சூர்யா. ஆனால் கடைசியில் என்னாச்சு? என்றதும்,


’’அடடா.. நான் இப்ப என்ன சொல்லனும்னு எதிர்பார்க்குறீங்க. அப்படியெல்லாம் எதுவும் இல்லங்க...என்று சங்கடப்பட்டதும்,


சரி, போகட்டும்..சூர்யாவும், நீங்களும் இணைந்து நடிப்பீர்களா? என்றதற்கு,


‘’நானும் அண்ணனும் நடிப்போம். ஆனால் அண்ணும் தம்பியுமா நடிக்க விருப்பமில்லை. அவர் ஹீரோவாகவும், நான் வில்லனாகவும் நடிக்க ஆசை’’என்றார்.

No comments:

Post a Comment