Tuesday, April 6, 2010

அரவாணி வேடத்தில் ஆண்!


மதுரை மண்ணுக்கும் கிளுகிளு புகார்களுக்கும் அப்படி என்னதான் தொடர்போ? எங்கிருந்தாவது ஏதாவது ஒரு விவகாரம் வெடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தை 300-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் முற்றுகையிட... ஏரியாவே பரபரப்பானது. காக்கிகள் திகைத்து நிற்க... அந்த வழியாக போய்வந்த பொதுமக்கள் என்னவோ ஏதோவென... விறுவிறுப்பாய் வேடிக்கை பார்க்க... சாலைகளில் சென்ற வாகனவாசிகளும் அப்படியே ஆணி அடித்தார்போல் நின்று பராக்கு பார்க்க... போக்குவரத்தே ஸ்தம்பிக்க ஆரம்பித்தது.

ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாத திருநங்கையர் ""நாங்க எங்க தாய் விழுதுகள் அறக்கட்டளை சார்பா கொடுத்த புகாரை ஏத்துக்கிட்டு எஃப்.ஐ.ஆர். போடுங்க. பாரதி கண்ணம்மா மேல உடனடியா நடவடிக்கை எடுங்க. அப்பதான் இந்த இடத்தை விட்டு நகருவோம்''’என்றார்கள் ஒருவித கரகர குரலில்.

அப்போது அங்கு வந்த கமிஷனர் பாலசுப்பிர மணியத்தையும் அவர்கள் முற்றுகையிட... திகைத்துப்போன காக்கிகள்... திருநங்கைகள் குறிப்பிட்ட பாரதி கண்ணம்மா மீது எப்.ஐ.ஆரைப் பதிவு செய்து...’கைகூப்பாத குறையாய் வளைந்து நெளிந்து திருநங்கைகளை வழியனுப் பினர்.

இதோடு நிறுத்தவில்லை அவர்கள். மறுநாள் மாலை சிட்டி கமிஷனர் அலுவல கத்தை முற்றுகையிட்டு... ""என்ன சார்

அநியாயமா நடந்துக்குறீங்க. எஃப்.ஐ.ஆர் போட்டபிறகும் அந்த பாரதி கண் ணம்மாவை ஏன் கைது பண்ணமாட் டேங்கறீங்க.? நீங்க கைது பண்ணி னாத்தான் நாங்க போவோம். அதுவரை இங்கதான் கைதட்டி பாட்டுபாடிக் கிட்டு இருப்போம்''’என்றபடி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர்.

உதவி கமிஷனர்களான வெள்ளத்துரையும் கணேசனும் அவர்களை வழிமறித்து “""அவசரப்படாதீங்க. விசாரணை பண்ணித்தான் நடவடிக்கை எடுக்க முடியும். நீங்க பொறுமையாகக் கலைந்துபோங்க'' என்றனர் வியர்த்துப்போய். எனினும் திரு நங்கையர் இதைக் கேட்காமல் அலுவலகத்துக்குள் நுழைய... அவர்களில் சிலரின் முதுகில் அடிபோட்டார் வெள்ளத்துரை.

என்ன பிரச்சினை? பாரதி கண் ணம்மா யார்? என்று தாய் விழுதுகள் அறக்கட்டளையின் கோ-ஆர்டினேட்டர் அருணாவிடம் கேட்டோம்.

அருணாவோ ""தாய் விழுதுகள் அறக்கட்டளையை 2004-ல் ஆரம்பிச்சோம். இதில் மதுரை தியாகராயர் கல்லூரியில் எம்.ஃபில் படிச்ச அழகுராஜா என்பவன்... தன்னையும் ஒரு திருநங்கைன்னு சொல்லிக் கிட்டு 2007-ல் எங்க அமைப்பில் சேர்ந்தான். சேர்ந்தவன்... அரவாணி களுக்கான ஆபரேசனை செய்து கொள்ளாமலே காலம் கடத்தி னான். அப்பவே அவன்மேல் எங்களுக்கு டவுட்டு. இருந் தாலும் இவன் பெரிய படிப்பு படிக்கிறவனாச்சேன்னு எங்க அறக்கட்டளையில் அவனுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். எங்க கணக்கு வழக்கையெல்லாம் கூட அவனை கவனிக்கச் சொன்னோம். இந்த நிலையில் அவனோட போக்குகள் ரொம்ப மாற ஆரம்பிச்சிது. இளம் அரவாணிகள் எங்கக்கிட்ட வந்து... அவன் அரவாணியே இல்லை. பக்கா ஆம்பளை. அவன் எங்கள்ல பலரை மிரட்டி அழைச் சிக்கிட்டுப்போய் தன்னோட இச்சைகளுக்குப் பயன்படுத்தியதோட... எங்களை வச்சி விபச்சாரம் பண்ணியும் லட்சக்கணக்கில் சம்பாதிச்சிட்டான்னு கதறுனாங்க. எங்களுக்கோ அதிர்ச்சியான அதிர்ச்சி.. இது உண்மையான்னு விசாரிச்சப்ப... அவனுக்கு கல்யாணமாகி 12 வயசில் ஒரு மகள் இருக்கும் விசயம் தெரியவந்தது. அதோட... எங்க டிரஸ்ட்டுக்கு வர்ற பணத்தையெல்லாம் இவன் மோசடி பண்ணி பாரதி கண்ணம்மா என்கிற தனி டிரஸ்ட்டை ஆரம்பிச்சதும் எங்க கவனத்துக்கு வந்தது. இது பத்தி நாங்க கேட்டதும் எங்க ஆளுங்களை பழி வாங்க ஆரம்பிச்சிட்டான். கிருஷ்ணாபுரம் 6-வது தெருவில் இருக்கும் எங்க அமைப்பின் உறுப்பினரான.. ரோஸி வீட்டில் விபச்சாரம் நடப்பதா பொய்த் தகவல் கொடுத்து... அந்த வீட்டில் இருந்த ஒரு திருநங்கை யையும் இரண்டு பெண்களையும் பிடிச்சிக் கொடுத்துட்டான். ஆனா இவன் அரவாணிகளை மட்டுமல்லாது மதுரையில் இருக்கும் பல குடும்பப் பெண்களையும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி லட்ச லட்சமா சம்பாதிச்சிக்கிட்டு இருந்திருக்கான்.

ஒரு ஆண்மகன், திருநங்கை வேஷம் போட்டு... எங்க திருநங்கைகள் பலரை தன்னோட மன்மத இச்சைகளுக்குப் பயன்படுத்திவந்ததும்... விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதித்ததும் எங்க டிரஸ்ட்டை ஏமாத்தியதும் மிகப்பெரிய குற்றம். அதனால் பாரதி கண்ணம்மா என்கிற வேஷத்தில் இருக்கும் அழகு ராஜாவை உடனே கைது செய்யணும். அவனை கைது செய் யும்வரை நாங்க ஓயப்போறதில்லை'' என்றார் ஆவேசமாக.

நாம் இதுகுறித்து விளக்கம் கேட்க பாரதி கண் ணம்மாவின் விளக்குத்தூண் பகுதி வீட்டிற்குச் சென்றோம். அங்கிருந்த அவரது பாட்டி “""அழகுராஜா மனைவி மக்களோட வெளியூருக்கு டூர் போயிருக்கான். எப்போ வருவான்னு தெரியலை. அவன் அரவாணியா இருந்தா அவளுகளுக்கு என்ன? ஆம்பளையா இருந்தாத்தான் அவளுகளுக்கு என்ன? பேசாம போங்க சார்'' என்றார் காட்டமாய்.

அழகுராஜா என்கிற பாரதி கண்ணம்மாவின் செல்போனும் ஸ்விட் ஆஃபிலேயே இருக்கிறது.

காவல்துறையின் நிலைகுறித்து அறிய உதவி கமிஷனர் கணேசனையும் சந்தித் தோம். அவர் நம்மிடம் ""என்னமால்லாம் புகார் வருது பாருங்க. பாரதி கண்ணம்மா ஆணா, அரவாணி யாங்கிறது நாட்டுக்கு தெரிய வேண்டிய தலையாய விஷயம் பாருங்க. ஒருவாரமா இந்தத் திருநங்கைகள்ட்ட சிக்கி... நாங்க தான் கிறுகிறுத்துப் போயிருக் கோம். ஆ...வூன்னா... சேலம், கோவை, திருச்சி, பெங்களூர்னு எல்லா ஊர்கள்ல இருந்தும் திருநங்கைகள் கிளம்பி வந்துடறாங்க. சமா...ளி...க்...க முடியலை சார்'' என்றார் நொந்துபோய்.

பிரபல அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சி.ராமசுப்பிரமணியத்திடம் பாரதி கண்ணம்மா விவகாரம் குறித்துச் சொல்லி "ஒரு அரவாணியானவர் குடும்பம் நடத்திப் பிள்ளை பெறுவது சாத்தியமா?'’என்றோம்.

டாக்டரோ ""முழுமையான அரவாணி யாக இருப்பவரால் திருமண வாழ்க்கை... குழந்தை என்பதையெல்லாம் அடைய முடி யாது. ஆனால் அரவாணிகளில் பலவகை யினர் உண்டு. சிலருக்கு லேசான பெண் தன்மைகள் இருக்கலாம். அப்படிப்பட்ட வர்கள் திருமண வாழ்வில் ஈடுபடமுடியும். இப்படிப் பட்டவர்களை அரவாணி கள் என்று சொல்ல முடி யாது. அதனால் பாரதி கண்ணம்மா அரவாணி யாக இருக்க வாய்ப்பில் லை''’என்றார் தீர்மானமாக.

மதுரை காக்கிகள் இந்த இரண்டும்கெட்டான் வழக்குச் சோதனையில் இருந்து எப்படி விடுபடப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப் போம்.

No comments:

Post a Comment