<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636</id><updated>2011-07-31T02:25:03.668-07:00</updated><category term='nithyananda - actress ranjitha full video'/><category term='News results for swami nityananda'/><category term='nithyananda latest video'/><category term='sokkan'/><category term='sokcan'/><category term='Fonseka  to retire'/><category term='shockan.blohspot.com'/><category term='shockan latest news'/><category term='General Fonseka resigns'/><category term='sokan'/><category term='sokkan latest news'/><category term='srilanka new 1000 rupee note'/><category term='Government confirms Fonseka handed over letter'/><category term='www.shockan.blogspot.com'/><category term='letter to President'/><category term='Sarath Fonseka letter'/><category term='latest tamil news'/><category term='nithyananda latest news'/><category term='breaking news srilanka'/><category term='jaffna'/><category term='sockan'/><category term='latest tamil cinema news'/><category term='Sarath Fonseka'/><category term='Fonseka says he will decide on Politics on handing over the Uniform..'/><category term='shockan'/><title type='text'>srilanka breaking news</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>4177</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-8327265398822262459</id><published>2010-09-23T00:37:00.000-07:00</published><updated>2010-09-23T04:31:21.470-07:00</updated><title type='text'>தேசத் துரோகிகள்!</title><content type='html'>இயற்கையின் சீற்றத்தாலோ, அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் - அவமானத்துக்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக  புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ  70,000 கோடி விரயமாக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப்போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா? &lt;br /&gt;&lt;br /&gt;தில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில்  655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள்  11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார்  17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் - இதில் பெரும்பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை - சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ &lt;br /&gt;&lt;br /&gt; 70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம்  961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம்  669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம் &lt;br /&gt;&lt;br /&gt; 262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம்  149 கோடி என்று ஏறத்தாழ  44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு  85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு  80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt; 961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், "அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல' என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் "விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? ""சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா? அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், "எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை.&lt;br /&gt;&lt;br /&gt; அதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt; விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கின்றன. இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக்குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே   வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt; 70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே! ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று? இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் "ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா? கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப்படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின் &lt;br /&gt;&lt;br /&gt;கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்?    &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-8327265398822262459?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/8327265398822262459/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/8327265398822262459'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/8327265398822262459'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_23.html' title='தேசத் துரோகிகள்!'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-4516014185667798732</id><published>2010-09-22T05:39:00.000-07:00</published><updated>2010-09-23T04:31:21.585-07:00</updated><title type='text'>ரகசிய போலீஸில் பெண் பகிரங்க வாக்குமூலம்! மீண்டும் நித்யா கைது?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJn5kszsUoI/AAAAAAAAEx0/8nCmd5vIoG8/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 151px;" src="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJn5kszsUoI/AAAAAAAAEx0/8nCmd5vIoG8/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519717227217834626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;""ஹலோ தலைவரே... ...   தப்பு செஞ்சு அம்பலப்பட்ட பிறகும், புகார் கொடுக்க ஆளில்லைங்கிறதால தண்டனையிலிருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்கிறவங்க பற்றி என்ன நினைக்கிறவங்க பற்றி என்ன நினைக்கிறீங்க?''&lt;br /&gt;&lt;br /&gt;""தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்ங்கிற வாசகத்தைத்தான் நினைக்கத் தோணுதுப்பா.''&lt;br /&gt;&lt;br /&gt;""நித்யானந்தா சாமியாரின் சரச வீடியோ வெளியான பிறகும், அவர் மேலே லெனின்தர்மானந்தா மட்டும்தானே புகார் கொடுத்திருக்காருன்னும், பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது புகார் கொடுத் திருக்காங்களான்னுதான் நித்தி தரப்பு இதுவரை கொஞ்சம் தெனா வெட்டாகவே கேட்டுக்கிட்டிருந்தது. லெனின்தர்மானந்தாவின் புகாரின் பேரில் நித்தி மீதான வழக்கை சீரியஸா விசாரிச்சிக்கிட்டிருக்கும் கர்நாடக சி.ஐ.டி போலீசாருக்கு அந்த மாநில  ஆளுந்தரப்பிலிருந்து ஏகப்பட்ட நெருக்கடி. வேகத்தைக் கட்டுப்படுத்தும்படி மாநில உள்துறை அமைச்சரே சொன்னாலும், சி.ஐ.டி.யின் வேகம் குறையலை. இந்த நிலைமையில்தான், நித்யானந்தாவால் பாலியல் பாதிப்புக்குள்ளான ஒரு பெண், சி.ஐ.டி போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.''&lt;br /&gt;&lt;br /&gt;""யார் அந்தப் பெண்?''&lt;br /&gt;&lt;br /&gt;""புகார் கொடுப்பவர்களுக்கெல்லாம் நித்தி தரப்பால் கொலை மிரட்டல் வந்துக்கிட்டிருக்கிற நிலைமையில், அந்தப் பெண்ணின் பெயரையும் முகத்தையும் நாம ஏன் அடையாளம் காட்டணும். விசாரணை தீவிரமாகும்போது எல்லா விஷயங்களும் வெளியே வந்திடப்போகுது. ஆன்மீகங்கிற பேரில் நித்யானந்தா என்னவெல்லாம் பேசி, தன்னை எப்படியெல்லாம் ஏமாற்றினார், எத்தனை முறை சீரழிச்சாருங்கிற விவரத்தை அந்தப் பெண்  சொல்லியிருப்பதால்,  இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்குது. பாதிக்கப்பட்ட  பெண் கொடுத்திருக்கிற புகாரின் அடிப்படையில் நித்யானந்தா மீண்டும் கைதாவாராங்கிறதுதான் பரபரப்பான எதிர்பார்ப்பா இருக்கு.''&lt;br /&gt;&lt;br /&gt;""இங்கே  தமிழ்நாட்டிலும் விஜிலென்ஸ் துறை தீவிரமா செயல்பட்டு, லஞ்ச அதிகாரிகளை கையும் களவுமா பிடிக்குது. ஆனா, அவங்க மேலேயே நடவடிக்கை எடுக்க முடியாம அதிகார வர்க்கத்திலிருந்து நெருக்கடிகள் வருதாமே?''&lt;br /&gt;&lt;br /&gt;""ஆமாங்க தலைவரே.. ...மின்சார வாரியத்தில் அசிஸ்டெண்ட் இன்ஜினியரான செல்வம்ங்கிறவரை வாரியத்தின் உள்ளடி வேலையில்  ஈடுபடுபவர்களின் தூண்டுதலால் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க.  அந்த சஸ்பென்ஷனை ரிவோக் செய்வதற்காக அவர் சீஃப் இன்ஜினியர் சீனி வாசனை நாடினார். சீஃப் அதற்கு லஞ்சம் கேட்க, இது பற்றி விஜிலென்ஸிடம் புகார் கொடுத்தார் செல்வம்.  விஜிலென்ஸ் அறிவுரைப்படி செயல்பட்ட செல்வம், சீஃப் கேட்ட பணத்தோடு நேரில் போய் அவரை சந்தித்து கொடுத்தப்ப ரெடியா இருந்த விஜிலென்ஸ் அதிகாரிகள் மடக்கிட்டாங்க.''  &lt;br /&gt;&lt;br /&gt;""கையும் களவுமா சீஃப் இன்ஜினியர் சீனிவாசன் கைதானது பெரியளவில் பேசப்பட்டது.''&lt;br /&gt;&lt;br /&gt;""தொடர்ந்து நடந்த விசா ரணையில் சீனிவாசனுக்கு பல பேங்க் அக்கவுண்ட் இருப்பதும், கோடிக் கணக்கில் பணம் பல இடங்களில் இருப்பதும் தெரிய வந்தது. அத         னால் அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டார். நிர்வாகத்தின் தவறான நடவடிக்கைகளால் சஸ்பெண்ட்டான ஏ.இ.செல்வத்தின் சஸ்பெண்ட்டை உடனே ரிவோக் செய்திருக்கணும். அதுதான் நடைமுறை. ஆனா, மின்வாரியமோ இதுநாள்வரை செல்வத்தின் சஸ்பெண்ட்டை ரத்து செய்யலை. அதே நேரத்தில், சீஃப் இன்ஜினியரின் சஸ்பென்ஷனை ரிவோக் செய்யும் வேலைகள் நடந்துக்கிட்டிருக்குது. சஸ்பெண்ட் டான நிலையிலும் சீனிவாசனை மின்துறை அமைச்சரின் வீட்டிலும், வாரிய சேர்மன் சி.பி.சிங்குடனும் அடிக்கடி பார்க்க முடியுதுன்னு டிபார்ட்மென்ட்டில் உள்ளவங்களே சொல்றாங்க.''&lt;br /&gt;&lt;br /&gt;""கோலிவுட் வட்டாரம் சொல்ற ஒரு தகவலைச் சொல்றேன்.. வரும்  30-ந் தேதியன்னைக்கு தன்னோட ஆதரவாளர்கள் 1000 பேரோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி       யில் சேரப்போறாரு சினிமா தயாரிப்பாளரான ரோஜா கம்பைன்ஸ் காஜா மொய் தீன். சினிமா துறையில் பல நெருக்கடிகளைத் தாண்டி வந்த காஜாமொய்தீன் இப்ப அரசியலில்  காலடி எடுத்து வைக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் சிறுத்தைகள் கட்சி வேட் பாளரா இவர் களமிறங்கு வார்னு எதிர்பார்க்கப்படுது.''&lt;br /&gt;&lt;br /&gt;""தேர்தல் நெருங்குதே... இனி கோலிவுட் ஆட்கள் அரசியலுக்குள் என்ட்ரியாகும் தகவல்களை நிறைய எதிர்பார்க்கலாம்.''&lt;br /&gt;&lt;br /&gt;""சென்னையில் நடந்த டேவிஸ்கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரேசில் அணியை இந்திய அணி அபாரமா ஜெயித்திருக்குது. 5 ஆட்டங்கள் கொண்ட போட்டியில் முதல் இரண்டு ஆட்டத்தில் சீனியர்களான பயஸும் பூபதியும் ஜெயிக்க முடியாமல் போனாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடிய இரட்டையர் ஆட்டம்,  இளம் வீரர்களான  சோம்தேவும், போபண்ணாவும் ஆடிய சிங்கிள் ஆட்டங்களில் ஜெயித்து 3-2 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்று, உலக சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்குதே..''&lt;br /&gt;&lt;br /&gt;""பெருமையான விஷயம்தாங்க தலைவரே.. முதல்வர் கலைஞர் குலுக்கல் முறையில் ஆட்டங்களை நிர்ணயித்தார். இந்த விளையாட்டுப் போட்டியை அனைத்து இந்திய டென்னிஸ் சங்கத்தின் துணைத் தலைவரும் உள்துறை அமைச்சர் ப.சியின் மகனுமான கார்த்தி சிதம்பரம்தான் சென்னையில் நடத்துவதில் முன்னின்றார்.''&lt;br /&gt;&lt;br /&gt;""ஆனால், இந்திய டென்னிஸை உலக அரங்கில் உயர்த்தி யவர்களான தமிழகத்தைச் சேர்ந்த விஜய்அமிர்தராஜையோ, ரமேஷ் கிருஷ்ணனையோ இந்த போட்டிக்கு விருந்தினராகக் கூட அவர் அழைக்கலைங்கிற வருத்தம் டென்னிஸ் ஆர்வலர்களிடம் இருக்குது. இத்தனைக்கும், டென்னிஸ் வீரர்களை உருவாக்குவதற்காக விஜய் அமிர்தராஜ் ஒரு அகாடமியே நடத்தி வருகிறார். பயஸ், பூபதி இருவர் உள்பட இன்றைய பிரபல டென்னிஸ் வீரர்கள் பலரும் இந்த அகாடமியில் பயிற்சி எடுத்தவங்கதான். அப்படிப்பட்ட அமிர்தராஜை அழைக்காத கார்த்தியின் செயல் விமர்சனத்திற்குள்ளாகியிருக்குது.''&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-4516014185667798732?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/4516014185667798732/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/4516014185667798732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/4516014185667798732'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_22.html' title='ரகசிய போலீஸில் பெண் பகிரங்க வாக்குமூலம்! மீண்டும் நித்யா கைது?'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJn5kszsUoI/AAAAAAAAEx0/8nCmd5vIoG8/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-3149513268220317258</id><published>2010-09-22T05:35:00.000-07:00</published><updated>2010-09-23T04:31:21.601-07:00</updated><title type='text'>பாடகி சொர்ணலதா மரணத்தில் மர்மம்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJn4rNsHk5I/AAAAAAAAExs/e0FGy5EqSUs/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 282px;" src="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJn4rNsHk5I/AAAAAAAAExs/e0FGy5EqSUs/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519716239612023698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; "மாலையில் யாரோ மனதோடு பேச...' என்று ஒலித்த அந்தக் குரல் இனி நேரில் பேசவோ பாடவோ போவதில்லை. நுரையீரல் பாதிப்பினால் 37 வயது பின்னணிப் பாடகி சொர்ணலதா மரணமடைந்ததால் திரையுலகத்திலும் ரசிகர்களிடமும் ஏற்பட்ட அதிர்ச்சி இன் னும் முழுமையாக விலகவில்லை. அவ ருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் படத்திறப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய விருது பெற்ற சொர்ணலதாவின் பெருமைகள் பற்றி சொல்லும் "படத்தொகுப்பாளரும் கதாசிரியருமான சுபாஷ்' ""புகழ்பெற்ற இந்திப்படமான "மொகலே ஆசம்' படத்தை தமிழில் டப் செய்து "அனார்கலி' என்ற பெயரில் தயாரானது. செங்கம் ஜபார்தான் இதற்கானப் பணிகளை செய்தார். இந்திப்படத்தில் நவ்ஷாத் அலியின் இசையில் புகழ்பெற்றிருந்த கவாலி என்ற போட்டிப் பாடலை ஷம்ஷாத் பேகமும் லதாமங்கேஷ்கரும் பாடியிருந்தார்கள். லதாமங்கேஷ்கர் பாடிய பகுதியை தமிழில் பாடுவதற்கு சொர்ணலதாவை தேர்வு செய்தார் இசைச் சேர்ப்பு பணி மேற்கொண்ட சங்கர்கணேஷ். ஷம்ஷாத்பேகம் குரலில் யாரை பாடவைப்பது என்று ஆலோசித்தபோது, அந்தப் பாடலைக் கேட்ட சொர்ணலதா, அந்தக் குரலிலும் தானே பாடுவதாகச் சொன்னார். போட்டிப்பாடலில் இரண்டு வெவ்வேறு குரல்களில் இரு பெரும் பாடகிகள் இந்தியில் பாடியிருந்ததை, தமிழில் சொர்ணலதா மட்டுமே பாடி அசத்தியிருந்தார். இதை அப்போது நவ்ஷாத்திடம் போட்டுக் காட்டினோம். சொர்ணலதாவின் அபார திறமை கண்டு பாராட்டினார் அந்த இசை மேதை. அத்துடன், நாங்கள் வாங்கிச் சென்ற மோதிரத்தையும் சொர்ண லதாவுக்கு விருதுபோல வழங்கினார். "தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் இது' என்று எப்போதும் சொல்வார் சொர்ணலதா'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரால் மறக்க முடியாத சம்பவங்கள் நிறையவே இருக்கின்றன என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சொர்ண லதாவின் பெற்றோருக்கு 10 பிள்ளை கள். 4 பெண்கள், 6 ஆண்கள். ஒன்பதாவது குழந்தைதான் சொர்ண லதா. அவருக்கு இரண்டு அக்கா, 6 அண்ணன், 1 தங்கை.  இத்தனை பேர் இருந்தாலும்,  குடும்பத்தில் வரு மானம் ஈட்டக்கூடிய நபர் சொர்ண லதாதான். அக்காக்களுக்கு திரு மணமாகி அவரவர் கணவருடன் தனியாகச் சென்றுவிட்டார்கள். அண்ணன்களுக்கோ தங்கை சொர்ணலதாவின்  வருமானத்தில் தான் வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;ரெகார்டிங் என்றால் இரண்டு அண்ணன்கள் எஸ்கார்டு போல கூடவே வருவார்கள். பாட்டு சீன் என்ன என்று மியூசிக் டைரக்டர் விளக்கிச் சொல்வதற்குக்கூட சங்கடமாக இருக்கும். அந்தளவுக்கு பின்தொடர்ந்து கொண்டிருப்பார்கள். யாருடனும் சொர்ணலதா பழகிவிடக் கூடாது. அவருக்கு கல்யாண எண்ணம் வந்துவிடக்கூடாது என்ப தற்காகத்தான் இந்தளவுக்கு கண் காணிப்பு. சில மியூசிக் டைரக்டர்கள் கோபப்பட்டு, அண்ணன்களை விரட் டிய சம்பவமும் உண்டு. சொர்ணலதா அதிகளவில் பாட முடியாமல் போன தற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். அண்மைக்காலமாக சொர்ணலதாவை மேடைகளில் கூட பாடவிடவில்லை. அடிக்கடி சொந்த மாநிலமான கேரளாவுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். அங்கு டி.வி. நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக உட்கார வைத்து இவர்கள் செட்டுக்கு வெளியே நின்று கண்காணித்து வந்தார்கள். இந்த நிகழ்ச்சிகளில் நல்ல வருமானம் என்கிற அவரது நெருங்கிய வட்டாரத்தினர் மேலும் சில தகவல்களையும் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பச் சுமை முழுவதையும் சுமந்து கொண்டு, தனது விருப் பங்களை வெளிப்படுத் தக்கூட முடியாமல் நெருக்கடியில் இருந்த சொர்ணலதா பயங்கர மனஅழுத்தத்தில்தான் இருந்தார். அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டி ருந்ததாக இப்போது சொல்கிறார்கள். சைனஸ், ஆஸ்துமா, ஈஸ்னோபீலியா போன்ற நுரையீரல் சம் பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் இத்தனை சிறப்பான பின்னணி பாடகியாக அவர் வந்தி ருக்க முடியாது. அவர் இறப்பதற்கு இரண்டு நாள் முன்னாடிகூட, ஒரு திரைப்பட விழா தொடர்பான அழைப்பிதழை நேரில் கொடுக்க அவர் வீட்டுக்குச் சென்றவர்களிடம், சொர்ணலதா ஊரில் இல்லையென்றும் வருவதற்கு ஒரு மாதமாகும் என்றும் அண்ணன்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இரண்டு நாள்கழித்து நுரையீரல் பாதிப்பால் சென்னை மலர் மருத்துவமனையில் அவர் மரணமடைந்துவிட்டதாக செய்தி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;""சொர்ணலதாவின் வீடு இருப்பது சாலிகிராமத்தில்.  விஜயா, சூர்யா போன்ற ஆஸ்பிட்டல்கள் பக்கத்திலேயே இருக்கின்றன. ஆனால், எதற்காக அடையாறில் உள்ள மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்? அந்த மருத்துவமனை ஒன்றும் நுரையீரல் நோய்க்கு ஸ்பெஷாலிட்டி இல்லையே!  பாடிப் பறந்த அந்தக் குயிலின் இதய கீதம் ரொம்பவும் சோகமானது. மன அழுத்தமே இதயத்தை நொறுக்கியதா, தற்கொலைக்குத் தூண்டியதா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.   அவரது குரலைப் போலவே உண்மைகளும் ஒரு நாள் உரக்க வெளிப்படும் என்று நினைக்கிறோம்'' என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-3149513268220317258?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/3149513268220317258/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_4847.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/3149513268220317258'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/3149513268220317258'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_4847.html' title='பாடகி சொர்ணலதா மரணத்தில் மர்மம்!'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJn4rNsHk5I/AAAAAAAAExs/e0FGy5EqSUs/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-5523292188568171103</id><published>2010-09-22T05:31:00.000-07:00</published><updated>2010-09-23T04:31:21.618-07:00</updated><title type='text'>எம்.ஜி.ஆரின் தீர்க்கதரிசனம்! -சோலை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJn35bjl4ZI/AAAAAAAAExk/F8eYkUOm3OY/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 107px;" src="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJn35bjl4ZI/AAAAAAAAExk/F8eYkUOm3OY/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519715384340898194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக காங்கிரஸ் கட்சியில் எப்போதும் கோஷ்டி கானங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கும். தேர்தல் நெருங்கினால் அந்த கானங்கள் உச்சநிலையில் ஒலிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படித்தான் கடந்த சில மாதங்களாக அபசுரங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதா இல்லையா என்று மக்களுக்கே சந்தேகம் பிறந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளையாக "நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம். எங்கள் உறவு உறுதியானது, இறுதியானது' என்று குலாம்நபி ஆசாத் அறிவித்தார். சோனியாவின் ஒப்புதலின்றி அவர் அப்படி அறிவித்திருக்க முடியாது. காரணம் அவருடைய அறிவிப்பு என்பது கொள்கை முடிவு.&lt;a href="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJn3oJ7PCtI/AAAAAAAAExc/vMn8RrLHswE/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 373px; height: 357px;" src="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJn3oJ7PCtI/AAAAAAAAExc/vMn8RrLHswE/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519715087550450386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1971-ம் ஆண்டிலிருந்து தி.மு.க.வுடன் அல்லது அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி கண்டு வருகிறது. ஆனால் அமரர் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர் அரசியல் நாகரீகம், கண்ணியம், உறவு என்பதெல்லாம் அண்ணா தி.மு.க.வில் மங்கி மறைந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1998-ம் ஆண்டு ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி கண்டது. நாடாளு மன்றத் தேர்தலில் நல்ல வெற்றியும் பெற்றது. வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைக்க பி.ஜே.பி. தயாரானது. ஆனால் அ.தி.மு.க. பரிவாரங்களின் ஆதரவினைப் பெறுவதற்குள் அதன் விழிகள் வெளியே தெறித்து விட்டன. பதினொரு மாதங் களில் வாஜ்பாய் அரசை அ.தி.மு.க. கவிழ்த்தே விட்டது. காரணம் அ.தி.மு.க.வின் கட்டளை களுக்கு பி.ஜே.பி.யால் அடிபணிய முடியவில்லை. தமிழக தி.மு.க. அரசை கலைக்க வேண்டும். தங்கள் மீதுள்ள வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்பனவைதான் அ.தி.மு.க.வின் பிரதான கோரிக்கைகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றைக்கு தமது அரசு கவிழ்ந்ததோ அன்றைக்கே வைர வரிகளால் பொறிக்கத்தக்க ஓர் பொன்மொழியை வாஜ்பாய் கூறினார். "அப் பாடா! இனிமேல்தான் நான் நிம்மதியாகத் தூங்கப் போகிறேன்' என்றார். அந்த அளவிற்கு அவருக்கு அண்ணா தி.மு.கழகம் தினம் தினம் நெருப்புக் குளியல் நடத்திக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின்னர் அண்ணா தி.மு.கழகம் டெல்லி நட்சத்திர ஓட்டலில் முகாமிட்டது. சோனியாவை நேரில் சந்தித்தது. தாங்கள் அடுத்த பிரதமராக ஆதரவு என்று நேசக்கரம் நீட்டியது. என்ன காரணத்தாலோ அடுத்த சில தினங்களி லேயே அந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தது. அதனையும் இன்னொரு நடை போய் சோனியாவை நேரில் சந்தித்தே தெரிவித்தது. சோதனைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின்னர் 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி காண வேண்டும் என்று அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் வலியுறுத்தியது. ஏற்கனவே பட்ட அவமானங் களை மறந்து கட்சியின் முடிவை சோனியா ஏற்றுக் கொண்டார். தேர்தல் பிரச்சாரத்திற்குத் தமிழகம் வந்தார்... இரண்டு அம்மணிகளும் விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்தனர். சோனியா வந்தார். மணிக்கணக்காக மேடையில் காத்திருந்தார். ஆனால் அ.தி.மு.க. அம்மணி கடைசி வரை வரவே இல்லை. சோனியா தமது கடமையை நிறைவு செய்தார். இது அவர் கண்ட இரண்டாவது சோதனை.&lt;br /&gt;&lt;br /&gt;இனி அ.தி.மு.க.வுடன் எந்த உறவும் வேண் டாம் என்று அப்போது சோனியாவிடம் ஒருவர் சொன்னார். அவர் வேறு யாருமல்ல. தனது அன்னை தன் கண் முன்னேயே அவமானப்படுத்தப்பட்டதைக் கண்ட பிரியங்காதான்.&lt;br /&gt;&lt;br /&gt;2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஆட்சிப் பீடம் ஏறியது. அடுத்து செல்வி ஜெயலலிதா டெல்லி சென்றார். சோனியாவைச் சந்தித்தார். நன்றி கூறினார். வெளியே வந்தார். வாசலில் நிருபர்கள் காத்திருந்தனர். தமிழகத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடன் கொண்டிருந்த உடன்பாடு தேர்தலுடன் முடிந்தது என்று தெளிவாகத் தெரிவித்தார். இதனை சோனியா சந்தித்த மூன்றாவது சோதனை என்று சொல்லலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;சோனியாவைப் பற்றிய கடுமையான தனி நபர் விமர்சனங்களை அகில இந்திய அரசியலுக்கு அள்ளிக் கொடுத்ததே அ.தி.மு.க. தலைமைதான். அந்த வகையில் பி.ஜே.பி.க்கே ஆசானாக விளங்கியது என்றும் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தங்கள் தலைவி அடுக்கடுக்காக அவமானங்களையும் சோதனைகளையும் சந்தித்தது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் கவலைப்படுவதேயில்லை. சூடு, சொரணையுள்ளவர்கள் மட்டும் எரிச்சல் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க.வைப் பரம்பரை எதிரியாகக் கருதுகிற ஒரு சிறு பிரிவினர் செயல்படுகிறார்கள். அடுத்து அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி. தங்களுக்கு ராகுல்காந்தி சூசகமாகச் சொல்லிவிட் டார் என்றெல்லாம் அவர்கள் கிசுகிசு பிரச்சாரம் செய்கிறார்கள். காங்கிரஸ்-அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி என்கிறார்கள். காங்கிரஸ்-தே.மு.தி.க.-பா.ம.க. கூட்டணி என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி அதிகாரத்தில் தி.மு.கழகத்திற்கு பங்கு தருகிறோம். தமிழகத்தில்  ஏன் தி.மு.கழகம் தங்களுக்கு பங்கு தரக்கூடாது என்று கேட்கிறார்கள். நியாயமான கேள்வி. இதே கேள்வியை கலைஞரிடம் டெல்லித் தலைவர்கள் கேட்டிருந்தால் விடை கிடைத்திருக்கும். தங்கள் அதிகார பற்றை தமிழக காங்கிரசாரும் சோனியாவிற்குத் தெரிவிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன்னால் ராகுல் காந்தி தமிழகம் வந்தார். சென்னை சத்யமூர்த்தி பவனில் கட்சியினரை சந்தித்தார்.  தமிழகத்தில்  ஏன் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை என்று  ஒரு தொண்டர் துணிச்சலாகக் கேட்டார். ""தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன என்பது தலைமைக்குத் தெரியும். அதனால் கேட்கவில்லை'' என்றார் ராகுல்.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய மன்மோகன்சிங் அரசு நிலையாக நின்று ஐந்து ஆண்டுகள் செயல்பட்டதற்கு தி.மு.கழகம்தான் காரணம். அதனை காங்கிரஸ் தலைமை அறியும். இன்றைக்கும் கூட்டணியின் சூத்திர தாரியே  கலைஞர்தான் என்று அந் தத் தலைமை பெருமையாகக் கூறு கிறது. எனவே மையத்தில் நிலையான அரசு அமைவதுதான் காங்கிரஸ் கட்சியின் லட்சியம். 1971-ம் ஆண்டிலிருந்து அந்த அடிப்படையில்தான் இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும், தமிழகத்தில் கூட்டணி கண்டார்கள். அதன் அடிப்படை யில்தான் தி.மு.க. உறவு நாணயமானது -நம்பிக்கையானது என்பதை சோனியாகாந்தி அனுபவரீதியாக அறிந்து முடிவெடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மையத்தில் நிலையான ஆட்சி வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் நாங்கள் பண்டாரம் பரதேசிகளாக இருக்க வேண்டு மா? எங்களுக்கும் அதிகார அரசியலில் ஆசை யிருக்காதா என்று கேட்க ஆரம்பித்திருக் கிறார்கள். இங்கேயும் ஆட்சியில் பங்கு என்ப தனை முதன் முதலில்  உரக்கச் சொன்னவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான். இப்போது ப.சிதம்பரம் என்ன சொல்கிறார்? தமிழகத்தில்  அடுத்து கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்கிறார் அவர் நாட்டின் உள்துறை அமைச்சர், கோவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை அருகில் அமர்த்திக்கொண்டு அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார். எனவே கூட்டணி ஆட்சி என்று அவர் போகிற போக்கில்  கூறியிருக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;தங்களுக்கு சரிபாதி இடங்கள் வேண் டும். எல்லா மாவட்டங்களிலும் தொகுதிகள் வேண்டும் என்றும் கோருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வரும் தேர்தலில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்றும் சொல் கிறார்கள். குலாம்நபி ஆசாத் சொன்ன பின்னரும் இப்படி காங்கிரஸ்  அரங்கில் பல்வேறு ராகங்கள் கேட் கின்றன. இதிலிருந்து ஒன்று மட்டும்  உறுதியாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கேட்கும்.  ஆட்சியிலும் பங்கு  கேட்கும் என்பது தெளிவாகிறது. இறுதி முடிவு எடுப்பது சோனியா காந்தி என்று மெத்தனமாக இருந்து விடக்கூடாது. நெருக்கடி களுக்கும் நிர்பந்தங்களுக் கும் தி.மு.கழகம் பணிந்த தில்லைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும்  காலத்தோடு நிலைமையைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறு ஏற்கனவே நமக்கு ஓர் பாடம் படித்துக் கொடுத்திருக்கிறது. 1980-ம் ஆண்டு தி.மு.கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உடன்பாடு ஏற்பட்டது. நாடாளு மன்றத் தேர்தலில் அந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.கழகம் இரண்டே இடங்களில்தான் வெற்றி பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சில மாதங்களிலேயே சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இன்றைக்கு காங்கிரஸ் கட்சியினர் சொல்லும் சூத்திரப்படி அன்றைக்கே தொகுதிப் பங்கீடுகள் நடந்தன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக... தி.மு.கழகம் 109 தொகுதிகளிலும் காங்கிரஸ் 109 தொகுதிகளிலும்  போட்டியிட்டன. கூட்டணி வெற்றி பெற்றால்  கலைஞர்தான் முதல்வர் என்று சென்னை வந்த அன்னை இந்திரா காந்தி அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்தக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. அன்னக்காவடியாக எந்த வசதி வாய்ப்பும் இல்லாது களம் கண்ட எம்.ஜி.ஆர். அமோக வெற்றி பெற்றார். அதிகாரத்தில் சமபங்கு என்ற காங்கிரஸ் சித்தாந்தத்திற்கு தமிழகம் முற்றுப்புள்ளி வைத்தது. தி.மு.கழகமும் பாடம் படித்துக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;விளம்பர வெளிச்சங்களும் வண்ணத் தோரணங்களும் கட்சியின் வளர்ச்சியைக் குறிக்காது.   இன்றைக்கு அந்தக் கலையில் காங்கிரஸ் கைதேர்ந்திருப்பதையும் மறுப் பதற்கில்லை. திருமணம் என்றாலும் ஜோடிப் பொருத்தம் சரியாக இருக்க வேண்டும். டென்னிஸ் விளையாட்டில் இரட்டையர் ஆட்டம் என்றாலும் அவர்களு டைய திறமை சமமாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினரைப் பார்த்து அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ஓர் கருத்தைத் தெரிவித்தார். ""தமிழகத்தில் அ.தி.மு. கழகம் ஆட்சி பீடத்தை விட்டு இறங்கினால் தி.மு.கழகம்தான் ஆட்சிபீடம் ஏறும். நீங்கள் கோட்டைக்கு வரலாம் என்று கனவு காணாதீர்கள்'' என்றார். அவருடைய தீர்க்கதரிசனக் கருத்து என்றைக்கும் பொருந் தும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம் மையத்தில் காங்கிரஸ் அரசு அமைய வாக்களிக்கும். தமிழகத்தில் திராவிடக் கட்சி ஆட்சி அமைக்க வாக்களிக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-5523292188568171103?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/5523292188568171103/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_2528.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/5523292188568171103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/5523292188568171103'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_2528.html' title='எம்.ஜி.ஆரின் தீர்க்கதரிசனம்! -சோலை'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJn35bjl4ZI/AAAAAAAAExk/F8eYkUOm3OY/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-4504092868810962298</id><published>2010-09-22T05:25:00.000-07:00</published><updated>2010-09-23T04:31:21.636-07:00</updated><title type='text'>கவுன்சிலர்களின் கட்டப்பஞ்சாயத்து! தி.மு.க.வுக்கு எதிராக சென்னை? -மேயர் மா.சு.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJn23T-Cf0I/AAAAAAAAExU/3BZ1KjF3uxQ/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 157px;" src="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJn23T-Cf0I/AAAAAAAAExU/3BZ1KjF3uxQ/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519714248432975682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கவுன்சிலர்களின் கட்டப்பஞ்சா யத்துகள் சென்னைக்குள் கட்டுக்கடங் காமல் தலைவிரித்தாடுகின்றன. இந்த நிலை தொ டர்ந்தால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பாதகமாக முடியும் என்கிற தகவல்கள் பரவிக் கிடக்கின்றது. இந்த நிலையில், சென்னை மாநகர மேயரும் தி.மு.க. இளைஞரணி யின் மாநில துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான மா.சுப்ரமணியனை சந்தித்தோம்...&lt;a href="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJn2lHAxA8I/AAAAAAAAExM/1SOtaSYUVJg/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJn2lHAxA8I/AAAAAAAAExM/1SOtaSYUVJg/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519713935717106626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க. கவுன்சிலர்கள் பலரின் கட்டப் பஞ்சாயத்துகளால் தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறதே?&lt;br /&gt;&lt;br /&gt;கவுன்சிலர்கள் சிலரின் போக்குகள் ஆரோக்கியமாக இல்லை என்பது உண்மைதான். ஆனால், இதுபற்றி நிறைய புகார்கள் வந்ததை யடுத்து கவுன்சிலர்கள் அனைவரையும் அழைத்து கடுமையாகக் கண்டித்தார் தலைவர் கலைஞர். இந்த கண்டிப்புக்குப் பிறகு கவுன்சிலர்கள் தங்களைத் திருத்திக்கொண்டார்கள். தவறு செய்வதில்லை. அதேசமயம், துணை முதல்வரும் (மு.க.ஸ்டாலின்) கவுன்சிலர்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதால் அவர்கள் தவறு செய்ய நினைப்பது கிடையாது. ஆக, கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதில்லை என்பதுதான் இப்போதைய நிலை. அதனால், அவர்களால் ஆட்சிக்கு கெட்ட பெயர் என்பது தற்போது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கவுன்சிலர்களுக்கு என்னதான் நீங்கள் சப்போர்ட்டாக இருந்தாலும், அவர்களைப் பற்றி மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதுதான் எங்களுக்குத் தகவல். ஏற்கனவே சென்னையில் 7 தொகுதிகளை கைப்பற்றியிருக்கும் அ.தி.மு.க. வருகிற தேர்தலில் மொத்த தொகுதிகளையும் கைப் பற்றிவிடும் என்கிறார்களே?&lt;br /&gt;&lt;br /&gt;இதனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். கடந்த தேர்தலில் 7 தொகுதிகளை அ.தி.மு.க. ஜெயித்ததற்கு முக்கிய காரணம்... வெள்ள நிவாரணத் தொகை  2000 ரூபாயை எல்லோருக்கும் கொடுத்ததுதான். இன்றைக்கு அப்படிப்பட்ட சூழல்கள் எதுவும் கிடையாது. கடந்த நாலரை வருடங்களில்  தமிழக அரசும் மாநகராட்சியும் ஏகப்பட்ட நலத் திட்டங்களை சென்னை மக்களுக்காக  நிறை வேற்றியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னை முழுக்க மேம்பாலங்கள், சுரங்கப் பாலங்கள், தரைப்பாலங்கள் கட்டியிருக்கிறோம். தரமான சாலைகள், தடையின்றி குடிநீர் விநியோகம், குப்பை இல்லா நகரம், மாநகராட்சிப் பள்ளிகளில் தரம் உயர்த்தல் போன்ற மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் சாதித்திருக் கிறோம். மேலும், மழைக்காலங்களில் வெள்ளம் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளால் மக்களின் அவஸ்தைகள் நீங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகள் தவிர, கலைஞரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சி, ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, மலிவு விலையில் மளிகைப் பொருட்கள், முதியோர் ஓய்வூதியம், திருமண நிதி உதவி, விதவைகளுக் கும், வயது முதிர்ந்த நிலையிலும் திரு மணம் ஆகாத பெண்களுக்கும் வாழ்க்கைப் பாது காப்பிற்கான மாதாந் திர நிதி உதவி, வேலையில்லா பட்ட தாரிகளுக்கு உதவி... இப்படி தலைவர் கலைஞர் நிறைவேற்றியுள்ள ஏகப்பட்ட நலத் திட்டங்கள் சென்னை மக்களையும் முழுமையாக சென்றடைந்திருக் கின்றது. மொத்தத்தில்... அரசின் நலத்திட்டங்களில் ஏதேனும் ஒன்று ஒவ்வொரு குடும்பமும் பெற்றிருக்கிறது. மேலும் தலைவர், தளபதியின் உத்தரவுக் கேற்ப காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களோடு இணைந்து   பணி செய்துகொண்டிருக்கிறோம். ஆக, வரும் தேர்தலில் சென்னை தி.மு.க.வின் கோட்டை என்பதை மக்கள் நிரூபிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களின் இதே சாதனைகள்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இருந்தது. ஆனாலும், அந்த தேர்தலில் தென் சென்னையை தி.மு.க. இழந்திருக்கிறதே?&lt;br /&gt;&lt;br /&gt;தொகுதி மறு சீரமைப்பு மாற்றங்கள் ஒரு காரணம். இது தவிர சில காரணங்கள் இருக்கிறது. அதனை வெளிப்படையாக சொல்வதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை தி.மு.க.வில் நிலவும் உள்கட்சிப் பிரச்சினைகளால் தி.மு.க.வின் 100 சதவீத வெற்றி என்பது கேள்விக்குறிதான் என்கிறார்களே?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட  கேள்விகளையெல் லாம் எங்கிருந்துதான் பிடிக்கிறீர்களோ...! (சிரிக்கிறார்) ஆனால், இதில் உண்மை இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரின்  வீட்டிலும் அறிவாலயத்திலும் மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது என்கிறாரே ஜெயலலிதா?&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் வீட்டின் பின்புறம் மாநகராட்சிக்கு சொந்தமாக சின்ன லேன் (சந்து) இருக்கிறது. இதைத்தான்  ஆக்கிர மித்திருப்பதாகச் சொல்கிறார் ஜெயலலிதா. ஆனால், ஆக்கிரமிக்கப் படவில்லை. ஜெயலலிதாவே நேரில் சென்று அதனை செக் பண்ணிக் கொள்ளலாம். தான் வாழ்ந்த வரலாறுமிக்க இல்லத்தையே மக்களுக்காக எழுதி வைத்த கலைஞரா மாநகராட்சி நிலத்தை ஆக்கிர மிப்பு செய்வார்? இதெல்லாம் மண்டூகங்கள் அறியாது. அறிவாலயத்தை பொறுத்தவரை... மாநக ராட்சிக்குச் சொந்தமான ஓ.எஸ்.ஆர். லேண்ட் விதிகளின்படி  பூங்காவாக பராமரிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பூங்காவை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது வெளிப்படையான தெளிவு. பூங்காவாக பராமரிக்கப்படுகிறதா? இல்லையா? என்பதை குற்றச்சாட்டுகள் கூறும் ஜெயலலிதாவும் செங்கோட்டையனும் சேகர்பாபுவும் ஒன்றாக சேர்ந்தோ அல்லது தனித் தனியாகவோ வந்து பார்க்கட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பூங்காவில் அமர்ந்து நாள் முழுக்க காற்று வாங்கிச் செல்லட்டும். யார் தடுக்கப் போகிறார்கள்? யாரும் தடுக்கமாட்டார்கள். பூங்காவுக்கு வர ஜெயலலிதா தயாரா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-4504092868810962298?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/4504092868810962298/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_1403.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/4504092868810962298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/4504092868810962298'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_1403.html' title='கவுன்சிலர்களின் கட்டப்பஞ்சாயத்து! தி.மு.க.வுக்கு எதிராக சென்னை? -மேயர் மா.சு.'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJn23T-Cf0I/AAAAAAAAExU/3BZ1KjF3uxQ/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-9149764559769007970</id><published>2010-09-21T23:06:00.000-07:00</published><updated>2010-09-23T04:31:21.651-07:00</updated><title type='text'>யுத்தம் 90 நக்கீரன் கோபால்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJmdOBQ5A7I/AAAAAAAAExE/cVi5oV1MDK8/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 212px;" src="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJmdOBQ5A7I/AAAAAAAAExE/cVi5oV1MDK8/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519615682502263730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தம்பி சிவக்குமாரின் குரலில் படபடப்பு அதிகமாகவே இருந்தது. ""அண்ணே.. 20-ந் தேதிக்குள்ளே உங்களைப் பிடிச்சி, ஜெயிலில் போட்டுடணும்ங்கிறது மேலிடத்து உத்தரவாம். அதனாலதான், சுப்ரீம் கோர்ட் பெட்டிஷனைக்கூட அப்புறம் பார்த்துக்கலாம்னும், நீங்க உடனே ரொம்ப தொலைவில், பாதுகாப்பான இடத்துக்குப் போயிடணும்னும் சீனியர் சொல்றார். சி.பி.ஐ. வக்கீல் மூலமா சீனியருக்கு இந்த தகவ லெல்லாம் கிடைத்திருக்கு'' என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;தம்பி காமராஜை உடனே தொடர்பு கொண்டேன். அவர் தான் சுப்ரீம் கோர்ட் விஷயங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கும் 20-ந் தேதி கெடு பற்றி தெரிந்திருக்கிறது. ""அண்ணே... உங்களை ஃபிக்ஸ் பண்ணிட்டதா நம்ம சோர்ஸ் சொல்லுது. சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு சாதகமான எந்த உத்தரவும் வருவதற்குள்ளே அரெஸ்ட் பண்ணிடணும்னு நினைக்கிறாங்க'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பொடா வழக்கில் ஏற்கனவே கைதானவர் களுக்காக ஆஜராகிக் கொண்டிருந்த பிரபல தி.க. வழக்கறிஞர் துரைசாமி, ""பெரியளவில் பணத்தை கையில் வச்சிக்கிட்டு உங்க எடிட்டரை தேடுறாங்க'' என்று சீனிய ரிடம் சொல்லியிருக்கிறார். காட்டுப்பகுதியில் நான் இருந்தபோது, "பணத்தோடு பிடித்ததாக காட்டவேண்டும்' என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்காகத்தானே இப்படி அடிக்கடி பணத்தோடு வாகனத்தில் போலீஸ் அலைந்துகொண்டிருக்கிறது. சீனியருக்கு இந்தத் தகவல் தெரிந்ததால்தான் என்னை எங்கேயாவது பாதுகாப்பான இடத்திற்குப் போகச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைமறைவாக இருந்தால் "அறிவிக்கப்பட்ட குற்றவாளி' என போலீஸ் விளம்பரம் செய்யும். அதனால் தான், புத்தக கண்காட்சி போன்ற இடங்களில் தலைகாட்டும்படி நமது வழக்கறிஞர்கள் சொன்னார்கள். நான் அங்கே சென்ற தை தொலைக்காட்சிகளும் பத்திரிகை களும் பதிவு செய்துவிட்டதால், ஆட்சி செய்தவர்களின் வெறி எக்கச்சக்க மாகிவிட்டது. அவர்களிடம் சிக்கினால் குதறிவிடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சுப்ரீம் கோர்ட் வழக்கிற்காக டெல்லிக்குப் புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த நமது அட்வகேட் பெருமாள் அந்த சமயத்தில் வக்கீல் துரைசாமியை சந்தித்திருக்கிறார்.  ""மிஸ்டர் பெருமாள்.. பொடாவில் புதுசா ஒரு அமென்ட்மெண்ட்டை சப்-கிளாஸாக அவசர அவசரமாக சேர்த்து கவர்னரிடம் அரசாங்கம் கையெழுத்து வாங்கிடிச்சி தெரியுமா? அந்த அமென்ட்மெண்ட் வேறு யாருக்காகவுமில்லை.. உங்க நக்கீரன் கோபாலுக்காகத்தான்'' என்றிருக்கிறார் வக்கீல் துரைசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;பொடா சட்டத்தின் 4(ஹ) பிரிவில்தான் இந்த திருத்தத்தை செய்து, கவர்னரிடம் கையெழுத்து வாங்கியிருந்தது ஜெயலலிதா அரசாங்கம். இந்தப் பிரிவின்படி, ஒரு மாநிலத் தில், கலவரம் ஏற்படும் என அறிவிக்கப்பட்ட (நோட்டிஃபைடு ஏரியா)பகுதியில் கைது செய்யப்பட்டால் அவர் மீது உடனடியாக பொடா சட்டத்தைப் பாய்ச்ச முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை 98-ல்  தொடர் குண்டுவெடிப்பு கொடூரத்திற்குள்ளான கோவையும் வீரப்பன் காட் டுப்பகுதியும்தான் நோட்டிஃபைடு ஏரியா. ஆனால், ஜெ அரசு செய்த திருத்தத்தினால், Under Explanation to section 4 of the Preventive of Terrorism Act 2002 (central act 15 of 2002) the Governor of Tamilnadu hereby specifies the whole of the State of Tamilnadu  as notified area for the purpose of section 4 of the said Act என்று அரசாங்க கெஜட்டில் அப்போதைய உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோடாவினால் வெளியிடப்பட்டது. அதாவது, என்னைப் பிடித்து பொடாவில் தள்ளவேண்டும் என்பதற்காகவே ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கலவரம் ஏற்படும் என அறிவிக்கப்பட்ட பகுதியாக சட்டத்திருத்தம் செய்தது அரசாங்கம். "என்ன கொடுமை பாருங்க. என் ஒருத்தனுக்காக நல்லா இருக்குற தமிழ் நாட்டையே தீவிரவாத மாநிலமாக்கி அரசாணை?'&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 21-ந் தேதி. இன்னும் இரண்டு நாளில் கோபி கோர்ட்டில் ஆஜராகவேண்டும். வக்கீல்கள் யோசிக்கிறார்கள். நானோ "கட்டாயம் ஆஜராகவேண்டும்' என்கிறேன். டெல்லியிலிருந்த பெருமாள் சார் போன் செய்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;""அண்ணாச்சி... முகமது அலி உள்ளிட்ட மொத்த போலீஸ் அதிகாரிகளும் டெல்லியில்தான் குவிஞ்சிருக்காங்க'' என்றார்.  கோர்ட்டில் நமது வழக்கு விசாரணைக்கு வரும் நாளில் பதட்டம் அதிகமாகவே இருந்தது என்றார். தம்பி காமராஜ் போன் செய்தார். ""அண்ணே.. வழக்கு விசா ரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைச்சிருக்காங்க. கவர்மென்ட் தரப்பில் நம்ம வழக்கு அட்மிட் டாகாமல் தள்ளுபடி செய்யப்படும்னு நினைச்சாங்க. சீனியரோட ஆர்க்யூமென்ட்டை கேட்டதும் வழக்கை அட்மிட் பண்ணி, விசாரணையை ஒத்திவச்சிருக்காங்க'' என்றார்.&lt;a href="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJmdBqk1w0I/AAAAAAAAEw8/8ZN6U3sRb9A/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 303px;" src="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJmdBqk1w0I/AAAAAAAAEw8/8ZN6U3sRb9A/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519615470253491010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு சாதகமான மூவ் நடந்திருப்பதால், நிச்சயமாக கோபி கோர்ட்டில்தான் அரசும் போலீசும் செக் வைக்கும். அதிலிருந்து எப்படி தப்பிப்பது' என ஆலோசித்தேன். ஒட்டுமொத்த போலீஸ் அதிகாரிகளின் பார்வையும் கோபி பக்கம் திரும்பியிருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் நம் வழக்கு 2 வாரத்துக்கு ஒத்தி வைக்கப் பட்டிருப்பது என்பதை காப்பி போட்டு சீனியரிடமிருந்து வாங்கும் படியும், அந்த விவரத்தை சீனியரே அட்வகேட் ப.பா.மோகனுக்கு தந்தி மூலமாகத் தெரிவிக்கும்படியும் சொன்னேன். அவரும் அனுப்பி வைத்தார். சுப்ரீம் கோர்ட் சம்பந்தப்பட்ட காப்பியை நேரில் வாங்குவதற்காக சிவக்குமாரும் கௌரியும் ஏர்போர்ட்டுக்கே போய்விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நிருபர் ஜீவாவைப் பிடித்து, ""உடனடியா ஒரு புது சிம் வாங்கி ப.பா.மோகன்கிட்டே கொடுத்து, அதில் எனக்குப் பேசச் சொல்லுங்க'' என்றேன். அப்படியே பேசினார் ப.பா.மோகன். நான் அவரிடம், ""சார்.. போலீஸ்காரங்க கண்கொத்தி பாம்பா சுத்திக்கிட்டிருக்காங்க. எப்படி கோர்ட்டில் ஆஜராகிறதுன்னு தெரியல. எக்காரணத்தைக் கொண்டும் வாரண்ட் வந்திடக்கூடாது.''&lt;br /&gt;&lt;br /&gt;""பிரச்சினையில்லீங்க சார்.. நான் பார்த்துக்கிறேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 10.45 மணிக்கு, சுப்ரீம்கோர்ட்டிலிருந்து வாங்கி வந்த காப்பியை ப.பா.மோகனுக்கு ஃபேக்ஸ் செய்கிறார்கள் தம்பிகள் சிவாவும் கௌரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் 22-ந் தேதி மதியம். சென்னையில் பெருமாள் சாரிடமிருந்து போன்.  ""அண்ணாச்சி... 1 மணிக்கு சீனியர் வரச் சொன்னார். ஆனா கொஞ்ச நேரம் கழித்து அவரே  போன்செய்து, அவரோட வீட்டை போலீஸ் சர்வைலன்ஸ் பண்றதாகவும், ஒன்றரை மணிக்கு வாங்கன்னும் சொன்னார். ஏதோ சீரியஸ்னு நினைக்கிறேன்'' என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;12.30 மணி. தம்பி சிவக்குமாருக்கு போன் செய்தேன். ""அண்ணே... சீனியர் தன்னோட சேம்பருக்கே வரச்சொல்லிட்டார். பெருமாள் சாரோடு போய்க்கிட்டிருக்கேன்'' என்றார்.  1.30 மணிக்கு பெருமாள் சார் லைனில் வந்தார். ""அண்ணாச்சி, ரொம்ப சீரியஸா இருக்கு போலிருக்கு. உங்க மேலே கோபி கோர்ட்டில் வாரண்ட் வாங்கிவிட்டதாகவும், போலீஸ் இங்கே வந்துக்கிட்டிருப்பதாகவும் நாம என்ன செய்யப்போறோம்னும் சீனியர் கேட்கிறார்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""இருக்காதுங்க சார்... வாய்தா நாளைக்குத்தானே... அதற்குள் எப்படி வாரண்ட் வாங்குவாங்க? நாளைக்கு ஆஜராகலைன்னா வாரண்ட் வாங்கணும்னு பேசியிருப்பாங்க. அது இப்படி பாஸ் ஆகியிருக்கும்''.&lt;br /&gt;&lt;br /&gt;""அண்ணாச்சி அவங்க சீரியஸாகத்தான் இருக்காங்க. ஹைகோர்ட்டில் நாம போட்டிருக்கிற 6 ரிட் வழக்கும் என்னைக்கு போஸ்டிங்னு செக்ஷனுக்குப் போய் விவரம் கேட்டிருக்கிறார் சீனியர்.  அங்கே இருந்தவங்க, "இப்பதான் போலீஸ் ஆஃபீசர்ஸ் வந்து உங்க பண்டல்களை வாங்கிட்டுப் போனாங்க'ன்னு சொல்லியிருக்காங்க''&lt;br /&gt;&lt;br /&gt;-பெருமாள் சார் சொன்னபோது, போலீஸ் எந்தளவுக்கு வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது புரிந்தது. பண்டல் களை அட்வகேட் ஜெனரல் அல்லது அடிஷனல் பி.பி.தான் வாங்க வேண்டும். அவர்களுக்குத் தெரியாமலேயே போலீசார் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;போலீசின் வேகத்தைவிட நமது தரப்பு வேகமாகச் செயல் பட்டால்தான் சட்டப் பாதுகாப்பை பெற முடியும். மாலை ஆறரை மணிக்கு அட்வகேட் பெருமாளை வரச்சொல்லியிருந்த சீனியர் கே.எஸ்.,  மறுபடியும் போன் செய்து.. ""4 மணிக்கெல்லாம் வந்தி டுங்க'' என்றிருக்கிறார்.  "ரொம்ப அவசரம்' என்று சீனியர் சொன்ன தால், அடுத்த சில நிமிடங்களில் அவரை சந்தித்தார் பெருமாள்.&lt;br /&gt;&lt;br /&gt;""அந்த பொம்பளை ரொம்ப சீரியஸா இருக்காம். எப்படியும் உள்ளே தூக்கிப் போடணும்னு சத்தம் போட்டிருக்குது. டெல்லியிலிருந்து சுப்ரீம் கோர்ட் அட்வகேட் ரேவதிராஜன்ங்கிறவர் இங்கே வந்து கேம்ப் போட்டிருக்கிறார். நாளைக்கு கோபியில் வாரண்ட் வராமல் பார்த்துக்கணும். அதனால , கோபாலை ஆஜராகச் சொல்லிடுங்க. வாரண்ட் விழுந்திடிச்சின்னா, சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நம்ம வழக்கில் பிரச்சினையாயிடும். கோர்ட்டை நாம் மதிக்கலைன்னு ஆயிடும்.''&lt;br /&gt;&lt;br /&gt;""நான் அண்ணாச்சிகிட்டே சொல்லிடுறேன் சார்..''&lt;br /&gt;&lt;br /&gt;""மிஸ்டர் பெருமாள்.. டெல்லியிலே அ.தி.மு.க தரப்பிலிருந்து 2 பேர் வந்து என்னை இந்தக் கேஸிலிருந்து ஒதுங்கிக்கச் சொன்னாங்க. பத்திரிகைகாரர் விஷயத்திலிருந்து நீங்க ஒதுங்கிக்குங்க. நானும் ஒதுங்கிக்கிறேன்னு சொன்னேன்.'' &lt;br /&gt;&lt;br /&gt;-சீனியர் சொன்ன விஷயங்களை என்னிடம் தெரிவித்தார் அட்வகேட் பெருமாள். பெருமாள் சார் சொன்னதை அப்படியே ப.பா. மோகனிடம் சொன்னேன்.  ""சார்.. நான் வாய்தா வாங்கிடுறேன். நீங்க கவலைப்படவேண்டாம்.''&lt;br /&gt;&lt;br /&gt;""வாய்தா தேதியை 2 வாரம் கழிச்சி வாங்குங்க சார். நாம் ஆஜராகும்போது வேற கேஸில் கைது செய்தால் என்ன செய்யமுடியும்?''&lt;br /&gt;&lt;br /&gt;""நீங்க சொல்றதும் சரிதான்.'' &lt;br /&gt;&lt;br /&gt; அங்கிருந்து பெருமாள் சாரை தொடர்புகொண்டேன். ""சார்...  கோபியில் ஆஜரானால் என்ன  ப்ளஸ், என்ன மைனஸ்னு நீங்க ஒரு பேப்பரில் எழுதிக்குங்க. நானும் எழுதிப் பார்க்கிறேன். ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிக்குவோம்.'' &lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் பேசியபின், என் வீட்டுக்குப் போய்விட்டு இரவு 3 மணிக்கு மேல் கோபி செல்வதாக திட்டம்.. போலீஸ் நடமாட்டம் தெரியவில்லை.  நள்ளிரவு கடந்திருந்தது. என் மகள்களும் தம்பி பையனும் என்னுடைய கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டி ருந்தார்கள். நான் எழுதிக் கொண் டிருக்கிறேன். ப்ளஸ், மைனஸ் விஷயங்களையும், அன்றைக்கு முழுவதும் என்ன நடந்தது என்பதையும் நோட்டில் விரிவாக எழுதிக்கொண்டிருந்தேன். வாரண்ட் விழுந்தால் நிச்சயமாக சர்ச் என்ற பெயரில் போலீசார் வந்துவிடுவார்கள். அவர்களிடம் சிக்கக்கூடாது என்பதால் பெட்டியில் துணிகளை தயாராக எடுத்துவைத்துவிட்டுத்தான் எழுதிக்கொண்டிருந் தேன். கதவருகே ஏதோ நிழல்..&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பிப் பார்க்கிறேன். என் துணைவியார் நின்று கொண்டிருக்கிறார். அவர் முகத்தில் கலக்கம் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;""நீங்க வீரப்பனை பார்க்கப் போனப்பகூட இவ்வளவு பயம் வரல. இப்ப ரொம்ப பயமா இருக்குது. ஏன் இப்படியெல்லாம் நடக்குது? இந்த பொம்பளை நம்மையெல்லாம் என்னதான் செய்ய நினைக்குது?'' -பேசப் பேச அவரது கண்களில் கண்ணீர். நான் தைரியப்படுத்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி 3.30. அந்த இரவு நேரத்தில், போலீஸ் ஜீப் சத்தம்... ...&lt;br /&gt;&lt;br /&gt;-யுத்தம் தொடரும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-9149764559769007970?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/9149764559769007970/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/90.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/9149764559769007970'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/9149764559769007970'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/90.html' title='யுத்தம் 90 நக்கீரன் கோபால்'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJmdOBQ5A7I/AAAAAAAAExE/cVi5oV1MDK8/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-6358804978758402990</id><published>2010-09-21T23:02:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:21.678-07:00</updated><title type='text'>ஜெயேந்திரர் உத்தரவு! மதக்கலவர டென்ஷன்!</title><content type='html'>""சாமியில்லாமல் இருந்த நம்ம மலைக்கோட்டை கோயிலுக்குள்ளே அபிராமி அம்மன் விக்கிரகத்தை வச்சு ஆராதனை பண்ணியாச்சு. எல்லாரும் தேங்காய் பழத் தோட போய் அர்ச்சனை செய்து அம்மனை கும்பிட்டு பிரசாதம் வாங்கிக்கங்க.''&lt;br /&gt;&lt;br /&gt;14.9.10 காலையில், திண்டுக்கல் நகரம் முழுதும் இந்தத் தகவல் பரவியது. பக்தர்கள் கூட்டம், புகழ்பெற்ற மலைக்கோட்டை கோயில் நோக்கிக் கிளம்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;3 அடி உயர கருங்கல்லால் ஆன படிமம். 4 கரங் களுடன் அருள்சொரியும் முகத்துடன் காட்சியளித்தாள் அபிராமியம்மன். சிலமணி நேரத்திற்கு முன்புதான் யாகம் நடத்தி, இந்த அம்மன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து விட்டுப் போயிருக்கிறார்கள் இந்து மக்கள்  கட்சியினர்.&lt;br /&gt;&lt;br /&gt;கோயில்  வளாகத்திலும் கோபுரத்திலும் காவிக் கொடியும், இந்து மக்கள் கட்சிக் கொடியும் பறந்துகொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தொல்பொருள் ஆராய்ச்சித் துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள மண்டபக் கோயிலுக்குள் சிலை வைத்து வழிபாடு நடக்கும் செய்தி காவல்துறைக்கும் எட்டி யது.  எஸ்.பி.தினகரன், டி.எஸ்.பி.ராமமூர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு வந்தனர். ""இது வழிபாட்டுத் தலமல்ல, திரும்பிச் செல்லுங்கள்'' பக்தர் களைத் தடுத்தது போலீஸ். போலீஸாரின் தடுப்பையும் மீறிக்கொண்டு புதிய அம்மனை வழிபடுவதற்காக கோஷங்களோடு செல்ல முயன்ற, இந்து முன்னணி மா.செ. ரவிபாலன் உட்பட  200 பேரை கைது செய்தது போலீஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் திண்டுக்கல் பகுதியில் வாழும் முஸ்லிம் கள்,  ""நம்ம திப்பு சுல்தான் மலைக்கோட்டைக்குள் இந்து சாமியை வைத்துவிட்டார்கள். திரண்டு வாருங்கள்... நாமும் பள்ளிவாசலை உருவாக்குவோம். நம்ம கொடியை கோட்டையில் பறக்கவிடுவோம்'' உணர்ச்சிப் பெருக்கோடு கிளம்பினார்கள். திண்டுக்கல் முழுதும் மதப் பதட்டம் மையம் கொள்ளத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குள் திருச்சியில் இருந்து தொல் பொருள் ஆராய்ச்சித்துறையின் உதவி ஆய் வாளர் பாஸ்கரன் தலைமையில் வந்த குழு, கோயிலுக்குள் நுழைந்து அம்மன் சிலையை பெயர்த்து, சாக்கு  கட்டிக் கொண்டு கிளம் பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல இடங் களிலும் சாலை மறியல்களில் ஈடுபட்ட இந்து பக்தர்களை போலீசார் "சமாதானப்படுத்தி' விரட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;""13-ம் நூற்றாண் டில் பாண்டிய மன்னன்  சடையவர்மன் குலசேக ரப் பாண்டியனால் கட் டப்பட்டது இந்த மலைக்கோட்டை மண் டபமும் அபிராமி அம் மன் கோயிலும். அதன் பிறகு இதை ஆக்கிரமித்த திப்புசுல்தான், கோயிலில் இருந்த சிலையை கீழே கொண்டு வந்து வைத்துவிட்டான். மீண்டும் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக பக்தர்கள் கோரிக்கை வைத்தும் பலனில்லை. 6 மாதம் முன்பு மலைக்கோட்டைக்கு வந்த காஞ்சி சங்கராச் சாரியாரும், இராம கோபாலனும், "மீண்டும் அபிராமி அம்மனை' மலைக்கோட்டை கோயிலில் வைக்க வேண்டுமென்று  எங்க ளுக்கு உத்தரவிட்டார்கள். அதனாலதான் வைத்தோம்'' என்கிறார்கள் இந்து மக்கள் கட்சியினரும், இந்து முன்னணியினரும்.&lt;br /&gt;&lt;br /&gt;""இனி இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்படாமல் போலீஸ் பாதுகாப்பு போடப் படும்'' என்றார் தொல்பொருள் ஆராய்ச்சி உதவி ஆணையாளர் பாஸ்கரன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-6358804978758402990?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/6358804978758402990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_6799.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/6358804978758402990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/6358804978758402990'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_6799.html' title='ஜெயேந்திரர் உத்தரவு! மதக்கலவர டென்ஷன்!'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-8490489380496944105</id><published>2010-09-21T23:02:00.000-07:00</published><updated>2010-09-23T04:31:21.667-07:00</updated><title type='text'>நக்கீரன் செய்தி! புலவர் குடும்பத்துக்கு முதல்வர் தந்த 10 லட்சம்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJmcbXJez4I/AAAAAAAAEw0/lWE2v5WdEPQ/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 376px;" src="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJmcbXJez4I/AAAAAAAAEw0/lWE2v5WdEPQ/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519614812203437954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நக்கீரன் செய்தியின் எதிரொலியாக... வறுமையில் வாடிய மேலப்பெருமழை சோமசுந்தரப் புலவரின் வாரிசுகளுக்கு 10 லட்சரூபாய் நிதி உதவிக்கான அரசாணையை தந்தை பெரியாரின் 132-வது பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி பிறப்பித்து... தமிழ் உணர்வாளர்களின் மனதைக் குளிரவைத்திருக்கிறார் முதல்வர் கலைஞர். &lt;br /&gt;&lt;br /&gt;சங்க இலக்கிய நூல்களுக்கு உரைகள் எழுதி.. அவற்றைத் தமிழ் சமூகம் எளிதில் படிக்க வழிவகுத்த உரையாசிரியர் சோமசுந்தரப் புலவர்... தன் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் எண் ணம்கூட இல்லாமல்... தன்னை மறந்து தமிழ்ப்பணி ஆற்றியதையும்... தற்போது அவரது வாரிசுகள்.... அர சின் 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் வயிற்றைக் கழுவிவந்த சோகத்தையும்... "வறுமையில் மேலப்பெரு மழை சோமசுந்தரப்புலவரின் வாரிசுகள்'’ என்ற தலைப் பில் ஒரு செய்திக் கட்டுரையைத் தந்திருந்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டுரையின் எதிரொலியாக தமிழார் வலர்கள்... கடந்த 5-ந்தேதி மேலப்பெருமழையில் கூடி... அவரது நூற்றாண்டு விழாவைக் கொண் டாடி மகிழ்ந்ததோடு... புலவர் குடும்ப நிலவரத் தைத் தெரியப்படுத்திய நக்கீரனுக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ந்தனர். விழாவுக்குத் தலைமை தாங்கிய புலவரின் பழைய நண்பர் ரெங்கசாமி ""நக்கீரனின் செய்திக்குப் பிறகே.. அனைவரின் கவனமும் புலவரின் பக்கம் திரும்பியிருக்கிறது'' என்று உணர்ச்சி வயப்பட்டார். புதுவை பேராசிரி யர் முனைவர் இளங்கோவனோ “என் தமிழறிவை வளர்த்தது புலவரின் புலமை. அவர் வாரிசுகள் வறுமையில் வாடியதை நக்கீரன் மூலம் அறிந்து திடுக்கிட்டேன். செய்தியைப் படித்ததுமே புலவர் குடும்பத் தைச் சந்தித்தேன். அவரது நூற்றாண்டுவிழாவை வருடம் முழுக்க நடத்துவோம்''’என்று முழக்கமிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில்தான் புலவரின் குடும்பத்துக்கு நிதி உதவி யை அறிவித்து... அனைவரின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பை யும் நிறைவேற்றியிருக்கிறார் கலைஞர். மேலப்பெருமழை கிரா மத்துக்குச் சென்றோம். ஊர்மக்கள் உற்சாகத்தில் இருந்தனர். செல்போனில் பேசியபடியே எதிர்ப்பட்ட அ.தி.மு.க. மாஜி ஊராட்சிமன்ற தலைவர் ராஜமாணிக்கம்.. நம்மைக் கண்டதும் ‘""வாங்க நக்கீரன் தம்பீ... புலவர் குடும்பத்துக்கு உதவிசெய்த முதல்வர் கலைஞருக்கும்... முயற்சியெடுத்த நக்கீரனுக்கும் நன்றி. புலவர் குடும்பத்துக்கு கலைஞர் உதவிசெய்யும் செய்தியைத் தான் என் நண்பர்களுக்கெல்லாம் போன்ல சொல்லிக்கிட்டு இருக்கேன். எங்க ஊர் ஜனங்க சார்பில் கலைஞருக்கு பாராட் டுக் கூட்டம் நடத்தப்போறோம்'' என்றார் ஏக உற்சாகமாய்.&lt;br /&gt;""கலைஞருக்கு விழா எடுத்தா உங்க கட்சித் தலைமை உங்க மீது நடவடிக்கை எடுக்காதா?'' என்றோம். அ.தி.மு.க. ராஜ மாணிக்கமோ ""நல்ல காரியத்தை செய்யும்போது... மத்த விவ காரங்களை யோசிக்கக்கூடாது. முதல்வரின் தாயுள்ளத்தைப் பாராட்டாட்டி நான் மனுசனே இல்லை'' என்றார் உணர்சிப் பூர்வமாய். புலவரின் வீட்டுக்குச் சென்றபோது வீட்டில் யாரும் இல்லை. புலவரின் இளையமகன் மாரிமுத்து வயல்வேலைக்குச் சென்றிருக்க... சாதிச்சான்றிதழ் வாங்க திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் போயிருந்தார் மூத்த மகன் பசுபதி. மதியம் 3 மணிக்கு உற்சாகமாக வந்த பசுபதி... ""தம்பீ... தாசில் தார் அலுவலகத்தில் இருந்த ஒரு ஆர்.ஐ.தான் விசயத்தைச் சொன்னார். சந்தோசத்தில் அழுகை வந்துடுச்சி. உடனே நேத்தைய கூலிக்காசில் சாக்லெட் வாங்கி... அங்க எல்லாருக்கும் கொடுத்தேன். இந்தாங்க நீங்களும் எடுத்துக்கங்க. கலைஞரின் உதவியையும்... அவர் கவனத்துக்கு எங்க நிலைமையை கொண்டு போன நக்கீரனையும் எந்தக் காலத்திலும் மறக்கமாட்டோம். புலவரின் மகன்களான நாங்களும் எங்க பிள்ளைகளும் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கலை. அதனால் கலைஞரின் உதவிப்பணத்தை வைச்சி எங்க பேரன் பேத்திகளை நல்லா படிக்கவைப்போம்'' என்றார் நெகிழ்ச்சியாய். அடுத்த கொஞ்ச நேரத்தில் வயலிலிருந்து வந்த இளையமகன் மாரிமுத்துவும் நெகிழ்ச்சியோடு நமக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்த வீடு முழுக்க குதூகலம் பொங்கியது. பிள்ளைகள்.. சாக்லெட்டு களை அக்கம்பக்கம் குழந்தைகளுக்குக் கொடுத்துக் குதூகலித்தனர். அந்த இருண்ட வீட்டிற்குள் சந்தோச வெளிச் சம் நுழையத் தொடங்கியதைப் பார்த்த மகிழ்ச்சியோடு அங்கிருந்து மனநிறைவோடு கிளம்பினோம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-8490489380496944105?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/8490489380496944105/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/8490489380496944105'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/8490489380496944105'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/10.html' title='நக்கீரன் செய்தி! புலவர் குடும்பத்துக்கு முதல்வர் தந்த 10 லட்சம்!'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJmcbXJez4I/AAAAAAAAEw0/lWE2v5WdEPQ/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-5723302088400589964</id><published>2010-09-21T23:01:00.000-07:00</published><updated>2010-09-23T04:31:21.696-07:00</updated><title type='text'>காக்கியா? கருப்பா?</title><content type='html'>பட்டுக்கோட்டை நகரில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியான மணிக்கூண்டுப் பகுதி... நோ பார்க்கிங் போர்டுக்கு அருகில் தனது காரை "பார்க்' செய்துவிட்டு, மனைவியோடு ஷாப்பிங் கிளம்பினார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜராஜன்.&lt;br /&gt;&lt;br /&gt;""சார்... சார்... நோ பார்க்கிங்க்ல வண்டியை நிறுத்தக் கூடாது... எடுங்க!'' -சொல்லிக் கொண்டே வேகமாக வந்தார் ஏட்டு ராஜேந்திரன். கடைக்குள் நுழைந்து விட்டார் வழக்கறிஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;அரைமணி நேரத்திற்குப் பிறகு அங்கு வந்த எஸ்.ஐ. சுகுமாரன் ""யாருடைய கார் இது?'' சத்தம் போட்டுக் கொண்டிருந்தபோது கடைக்குள்ளிருந்து வெளியே வந்த வழக்கறி ஞர், ""இருய்யா என் மனைவி இப்ப வந்திடு வாங்க... வந்ததும் எடுக்கிறேன்!'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ஐ.க்கும் வக்கீலுக்கும் வாக்குவாதம் ஆரம்பமானது. பொதுமக்களும் கடைக் காரர்களும் வேடிக்கை பார்க்கத் திரண்டனர். வாக்குவாதம் முற்றி, கைகலப்பு, அடிதடி, தடியெனப் பரபரப்பானது. எஸ்.ஐ.சுகுமாற னின் சட்டை கிழிந்து ஸ்டார்பேட்ஜ் கீழே விழுந்ததும் இன்ஸ்பெக்டர் ஆவேசமானார். அவரும் அங்கு வந்த காக்கிகளும் சேர்ந்து வழக்கறிஞர் ராஜராஜனை ரவுண்ட் கட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கறிஞர் தாக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அவருடைய தந்தையும் வழக்கறிஞரும் அ.தி.மு.க. முன்னாள் ந.செ.யுமான விவேகானந்தன், உறவினர்களு டன் காவல்நிலையத்திற்கு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு தரப்பும் புகார்களைப் பதிவு செய்தார்கள். இருவருமே மருத்துவமனை களுக்குக் கிளம்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனையில் எஸ்.ஐ. சுகுமாறனைச் சந்தித் தோம். ""காரை எடுக்கச் சொன்னதுக் காக ஏட்டு ராஜேந்திரனை ஓவராக பேசிக் கொண்டிருக் கிறார் வக்கீல். அப்பத்தான் நான் போனேன். ஏன் பிரச் சினை பண்றீங்க, காரை எடுங்க என்றேன். வேணும்னா நீயே எடுத்துக்கோ என்று சாவி யைத் தூக்கி வீசினார். ஏன் சார் இப்படி செய்றீங்கன்னு கோபமாகக் கேட் டதும் என் சட் டையைப் பிடித்து தாக்கினார். ஸ்டாரும் விழுந்து விட்டது. அப்புறம்தான் நாங்க ரெண்டு தட்டுத் தட்டி தூக்கிச் சென்றோம்!'' என்றார் எஸ்.ஐ.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கறிஞர் ராஜ ராஜன் தனது பெரி யப்பாவின் மருத்துவ மனையில் ஐ.சி.யூனிட் டில் இருந்தார். ""வழக்கறிஞர்னு கூடப் பார்க் காம சுற்றி நின்று அடித்தார்கள். ரொம்ப காயம். அதனால்தான் இங்கே வந்து அட்மிட் ஆனேன்!'' என்றவர் ""இந்த எஸ்.ஐ. ரொம்ப மோசம்... ஏற்கனவே இவர் மேல கேஸ் இருக்கு. இவரை உடனே சஸ்பெண்ட் செய்ய ணும்!'' என்றார். ""எஸ்.ஐ.யை சஸ்பெண்ட் செய் யும் வரை நீதிமன்ற புறக்கணிப்புதான்'' என் கிறது பட்டுக்கோட்டை வழக்கறிஞர் சங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ஐ.யும் வழக்கறிஞரும் ஒரே சாதி தான். என்றாலும் வேறு வேறு குலம். அதனால்தான் இவர்கள் பிரச்சினை உள்சாதி மோதலாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-5723302088400589964?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/5723302088400589964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_5805.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/5723302088400589964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/5723302088400589964'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_5805.html' title='காக்கியா? கருப்பா?'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-2275218594574060448</id><published>2010-09-21T23:00:00.000-07:00</published><updated>2010-09-23T04:31:21.707-07:00</updated><title type='text'>சிறையிலும் நல்லவங்க - விடுதலையான புஷ்பவள்ளி பாட்டி!</title><content type='html'>திருச்சி பெண் கள் சிறையில் இருந்து வெளி யில் வந்த புஷ்பவள்ளி பாட்டியின் கண்களில் கண்ணீர்த்திரை.&lt;br /&gt;&lt;br /&gt;அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, இந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்ட 13 கைதிகளில், 80 வயதுப் பாட்டி புஷ்பவள்ளியும் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;""எப்படிக் கூட்டிக்கழிச்சுப் பார்த் தாலும் இன்னும் 10 வருஷத்தை நான் ஜெயில்லதான் கழிக்கணும். அது வரைக்குமா என் உடம்புல உசுரு இருக்கப் போகுது? ஜெயில்லதான் எனக்குச் சாவுனு திடமா நம்புனேன். புண்ணியவான் கலைஞர் அய்யா உத்தரவு போட்டு என்னை விடுதலை செஞ்சுட்டாங்க. என் பேரன் பேத்தி மக்க முன்னால சாகிற குடுப்பினை எனக்கு கெடைச்சிருக்கு... அறிஞர் அண்ணா பேரைச் சொல்லி என்னை விடுதலை செய்யச் சொன்ன கலைஞர் அய்யாவுக்கு என்னோட நன்றியைச் சொல்லுங்கய்யா!'' மகிழ்ச்சியில் தழுதழுத் தார் பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலையான பாட்டியின் மடியில், 8000 ரூபாய் இருந்தது. ""கடைசிக் காலத்தில எனக்கு உதவியா இருக்கும்னு கலெக்டரய்யா சவுண் டையா 3000 தந்தார். சிறை மீண்டோர் மறு வாழ்வு சங்க பொருளாளர் கோவிந்த ராஜய்யா 5000 தந்தார். நான் வெளியே வந்தது... வீட்டுக்குப் போகப் போறது... எல்லாமே ஒரு கனவு மாதிரி நிறைவேறுது...!'' கண்களைத் துடைத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனிக்குடித்தனம் போக விரும்பிய மருமகள் கவிதாவின் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொன்ற வழக்கில், 1998-ல் கைதாகி, 15 நாளில் ஜாமீனில் வெளியே வந்தார் பாட்டி. 2000-ஆம் ஆண்டில், நாகை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மீண்டும் சிறை                  வாசம். உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்கள். ஜாமீனில் வந்தார் பாட்டி. 3.10.2005-ல் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் புஷ்பவள்ளி பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;""உங்க சிறை அனுபவங்களைப் பற்றி சொல்லுங்க பாட்டி!''.&lt;br /&gt;&lt;br /&gt;""குடும்பத்தினரோடு வீட்டில இல்லைங்கிறது தவிர வேற குறையொண்ணுமில்லை. ஜெயில்ல ரொம்ப வயசானவ நான்தான். எல்லாக் கைதிகளும் "செல்லப் பாட்டியா' கவனிச்சுக்கிட்டாங்க. சாப்பாடு கூட வேளா வேளைக்கு டான்னு நான் இருக்கிற இடத்துக்கே வந்துடும். அதான் சொல்றன்ல... வீட்ல கூட இவ்வளவு சிறப்பா கவனிக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு கவனிச்சிக்கிட்டாங்க. சிறையிலயும் ரொம்ப ரொம்ப நல்ல மனுஷங்க எல்லாம் கைதிகளா இருக்காங்க. தம்பி... இங்க கைத்தொழில்களெல்லாம் கத்துக் கொடுக்கிறாங்க. என்னாலதான் முழுசா எதையும் கத்துக் கொள்ள முடியலை!'' -சிரித்துக் கொண்டார் பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;""பாட்டி... நீங்க எந்த ஊர்னு சொல்லலையே!''.&lt;br /&gt;&lt;br /&gt;""நாகப்பட்டினம்... என் புருஷன் தங்கராஜ். 5 பையன் கள் ஒரு பொண்ணு. எல்லாருக்கும் கூலி வேலைதான். என் வாழ்க்கையில இப்படியொரு களங்கம்... ம்... என் பேரனுக்கு சொல்லி விட்டிருக்கோம். இப்ப வந்திடுவான்... அதோ...!'' விடைபெற்ற பாட்டி வீட்டுக்குக் கிளம்பினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-2275218594574060448?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/2275218594574060448/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_1690.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/2275218594574060448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/2275218594574060448'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_1690.html' title='சிறையிலும் நல்லவங்க - விடுதலையான புஷ்பவள்ளி பாட்டி!'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-1852951594099607832</id><published>2010-09-21T22:59:00.000-07:00</published><updated>2010-09-23T04:31:21.717-07:00</updated><title type='text'>சிறுமிகள் நரபலி?</title><content type='html'>பட்டாம் பூச்சியாய் சிற கடித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளின் மர்ம மரணத்தால் திகைத்து நிற்கிறது சேலம்.&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் ஜாரிகொண்டலாம் பட்டியில், வழக்கமாக ரசாயன மற் றும் சாயப்பட்டறைக் கழிவுகளோடு ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடை வாய்க்காலில் ஒரு சிறுமியின் சடலம் மிதந்து வந்தது. தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. பிறப்புறுப்பில் சூட்டுக்காயம். கை, கால், முட்டிகளில் வெட் டுக்காயம். நிர்வாணமாக மிதந்து வந்த அந்தச் சிறுமிக்கு 5 வயதிருக்கும்... அங்கே ஒதுங்கிய அந்தச் சிறுமியின் சட லத்தை பார்த்த லட்சுமி பாட்டி பெருங்குரலில் அலறினார். ""அய்யோ... காயத்ரி எங்களை விட்டுட்டு போயிட்டியேடி... ஒண்ணை இந்த ஆக்கினை பண்ணுன பாவி யாருடீ...?''.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி தெரிந்து ஓடி வந்தார் காயத்ரியின் தந்தை நாகராஜ். ""நான் சாதாரண தறி ஓட்டுற கூலிங்க. டி.பி. வியாதியில கிடந்த என் சம்சாரம் 20 நாள் முன்னாடிதான் எங்களையெல்லாம் விட்டுட்டு ஒரேயடியா போய்ச் சேர்ந்தாள். நான் பெத்த செல்வம் இப்ப சாக்கடையில பொணமா ஒதுங்கிக் கெடக்கிறாள். 5 நாள் முன்னாடி வீட்டு வாசல்ல விளையாடிட்டு இருந்த காயத்ரியை திடீர்னு காணலை. எங்கெங்கேயோ தேடினோம். போலீஸ்லயும் புகார் கொடுத்தோம்... இப்படி பிணமாப் பார்ப்பேன்னு நெனைக்கலியே!'' தேம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;காயத்ரியின் வீட்டருகே வசிப்பவர்களோ ""இது நிச்சயமா மந்திரவாதிங்க வேலைதான்... நரபலி கொடுத்துட்டானுங்க!'' என்று ஆளாளுக்கு பயமூட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஆறாம் நாளில்... ஓமலூர் குப்பாண்டியூரில், ஒரு கிணற்றில் மிதந்தது 9 வயது சிறுமி வனிதாவின் சடலம். &lt;br /&gt;&lt;br /&gt;வனிதாவின் வலது கண்ணைக் காணவில்லை. காது, உதடு, கழுத்தில் காயங்கள்... வனிதா வின் தாய் சுமதியின் கதறல் குப்பாண்டி யூரையே கண்ணீரில் மிதக்க விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;""ரெண்டு மாசமா குரூப் குரூப்பா புள்ளை புடிக்கிறவனுங்க சுத்திட்டு நிக்கிறானுங்க. போன வாரம்... யாரோ முகம் தெரியாதவன் எங்க பக்கத்து வீட்டுக்காரர் குழந்தைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து கொஞ்சுனதைப் பார்த்து ரெண்டு போட்டு விரட்டினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஒரு குரூப்தான் குழந்தைகளை கடத்தி நரபலி கொடுக்குது... இந்தக் குழந் தையை அப்படித்தான் நரபலி கொடுத்திருக் கானுங்க. போலீஸ்தான் விசாரிச்சு நடவடிக்கை எடுக்கணும்!'' என்கிறார்கள் ஓமலூர் குப்பாண்டியூர் வாசிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஓமலூர் காவல்துறையோ ""கிணற்று மீன்கள் கடித்துதான் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. தீயணைப்புத்துறை, குழந்தையை மேலே கொண்டு வரப் பயன்படுத்திய பாதாள கரண்டி பட்டுத்தான் கழுத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது!'' என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போலீசார் சொல்வதை ஏற்பதற்கு, இந்தக் குழந்தைகளின் பெற்றோரோ, ஏரியா மக்களோ தயாராக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஏவல் பிசாசான யட்சையை வசப் படுத்துவதற்காக சிறுமிகளை நரபலி கொடுத்துவிட்டு, சாக்கடை, வாய்க்கால், கிணறு போன்ற நீர் நிலைகளில் தூக்கிப் போடுகிறார்கள். இவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்பதே ஏரியா மக்களின் பயம் கலந்த கோரிக்கை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-1852951594099607832?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/1852951594099607832/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_2117.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/1852951594099607832'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/1852951594099607832'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_2117.html' title='சிறுமிகள் நரபலி?'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-8949428168468407838</id><published>2010-09-21T22:52:00.000-07:00</published><updated>2010-09-23T04:31:21.743-07:00</updated><title type='text'>மீண்டும் மோதல்! தி.மு.க டென்ஷன்!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJma1n_yttI/AAAAAAAAEws/3gYXpjrVHBM/s1600/1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5519613064379545298" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 146px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJma1n_yttI/AAAAAAAAEws/3gYXpjrVHBM/s400/1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""எந்தலைவனுக்கு கிடைத்த வரவேற்பை பாத்தியா?'' முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள குமரி மாவட்டம் வந்த கலைஞரை, வழி நெடுகிலும் மக்கள் திரண்டு நின்று வரவேற்ற காட்சியைப் பார்த்து பூரித்துப் போன "வட்டம்' துரை மணி ""இதே கலைஞரை'' என இழுத்து பெருமூச்சு விட்டு இமை களை மூட... அம்முதியவரின் கண்களிலிருந்து கசிந்தது கண்ணீர்-&lt;br /&gt;&lt;br /&gt;""நேசமணி நாடார் இறந்து நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதிக்கு 1969 ஜனவரி 8-ல் இடைத்தேர்தல் வருகிறது. காங்கிரஸ் வேட்பாளராக பெருந்தலை வர் காமராஜர். தி.மு.க. கூட்டணியின் சுதந்திரா கட்சி வேட்பாளராக டாக்டர் மத்தியாஸ். காங்கிரஸின் கோட்டையாகத் திகழ்ந்த கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிரச்சாரம் செய்ய வருகிறார்கள், அப்போது பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞரும், விவசாயத்துறை அமைச்சரான சி.பா.ஆதித்தனாரும். விருதுநகரில் காமராஜரைத் தோற்கடித்ததால் கடுங்கோபத்தில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள், கலைஞர் தங்கியிருந்த நாகர்கோவில் பயணியர் விடுதிக்கே சென்று அவர் கார் மீது கல்லெறிந்தார்கள். சாணிக் கரைசலை ஊற்ற ஆயத்தமாக இருந்தார்கள். ஆனாலும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒரு சில இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு திருச்சி சென்றார் கலைஞர். அங்கே நாகர்கோவில் இடைத்தேர்தல் குறித்து பத்திரிகையாளர்கள் கலைஞரிடம் கேள்வி கேட்க, "கட்டாந்தரையில் விதைத்திருக்கிறோம்' என ஒரே வரியில் பளிச்சென்று நிலவரத்தைச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று கட்டாந்தரையில் கலைஞர் விதைத்ததுதான், இன்று இதே குமரி மாவட்டத்தில் தி.மு.க.வுக்கென்று ஒரு எம்.பி., ஒரு அமைச்சர், 2 எம்.எல்.ஏ.க்கள், மேலும் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள், கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு எம்.எல்.ஏ.க்கள் என மாவட்டம் பூராவும் தி.மு.க.வை செழித்து வளர்த்திருக்கிறது. இன்று இம்மாவட்டம் முப்பெரும் விழா காண்கிறது.''&lt;br /&gt;&lt;br /&gt;""ஆனாலும்...'' கட்சி விசுவாசத்தால் துரைமணி சொல்ல தயங்க...&lt;br /&gt;&lt;br /&gt;"தென் மண்டல அமைப்புச் செயலாளரான நானல்லவா முப்பெரும் விழாவை முன்னின்று நடத்த வேண்டும்? எனக்கெதிராக அமைச்சர் சுரேஷ் ராஜன் போன்றவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள்?' என மு.க.அழகிரி ஆதங்கப்பட, விழாவுக்கு அவர் வராதது ஒரு பேச்சாகிவிட்டது என்றனர் உ.பி.க்கள். அவரது அடியொற்றி மதுரை தி.மு.க.வும் ஊருக்குள்ளேயே தன்னை முடக்கிக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"பகுத்தறிவு ஏர்பூட்டி பெரியார் உழுது, அண்ணா விதைத்து, கலைஞர் வளர்த்த திராவிட இயக்கமல்லவா?' முதல்நாள் இரவே கலைஞர் வந்துவிட, கட்சிப் பணியோடு, குமரிமாவட்ட மக்கள் பணியிலும் மு.க.ஸ்டாலின் சுறுசுறுவென இறங்க... உற்சாகப் பெருக் கோடு களை கட்டியது முப்பெரும் விழா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாளும் சாலையின் இருபுறமும் நெடுநேரம் காத்திருந்து ஆவலுடன் கலைஞரை வரவேற்றார்கள் மக்கள். அவரும் நெகிழ்ச்சி யுடன் புன்னகைத்து, கையசைத்து பதில் மரியாதை செய்தவாறே விழா மேடைக்கு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பெரும் விழா திடலிலும் "அழகிரிக்கு அப்படி என்ன கோபம்?' என்பதை விவாதப் பொருளாக்கிக் கொண்டிருந்தார்கள் அவரது ஆதரவாளர்கள் ஓரிருவர். ""தென்மாவட்டத்தில் முப்பெரும் விழா எங்கே நடத்துறதுன்னு அண்ணனைக் கேட்டுல்ல முடிவு பண்ணிருக்கணும். தளபதி மூலம் சுரேஷ்ராஜன்ல காய் நகர்த்தி காரியம் சாதிச்சுட்டாரு. அழைப்பிதழிலும் விளம்பரங்களிலும் அண்ணனுக்கு முக்கியத்துவம் தரல. அத விடு, நேர்ல போயி அழைக்காததும் முறையில்லியே. எல்லாமே தளபதி கண்ணசைவுலதான் நடக்கு. அப்புறம் அண்ணனுக்கு என்ன மரியாதை? அவர் எப்படி விழாவுக்கு வருவாரு?'' என்றார்கள் அங்கலாய்ப்புடன்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ்ராஜன் தரப்பிலோ, ""மதுரைக்கு நேர்ல போயி அழைக்கணும்னு எதிர்பார்க்கிறாரு. இங்கயிருந்து மதுரை போயிட்டு வர்றதுன்னா ஒருநாள் வீணாயிரும். இங்க தலைவர் வர்றாரு, தளபதி வர்றாரு, விழா வேலையவும் பொறுப்பா கவனிக்கணும். எங்கே நேரம் இருக்கு? எம்புட்டு கஷ்டப்பட்டு இந்த மண்ணுல கட்சிய வளர்த்தாரு கலைஞர். அதச் சிந்திச்சுப் பார்க்க வேணாமா?'' என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பெரும் விழா நடந்த செப்டம்பர் 20-ந் தேதி மதியம் 1.30 மணி ஃப்ளைட்டில் மதுரையிலிருந்து சென்னைக்கு கிளம்ப சூட்கேசுடன் ரெடியாகிவிட்டார் அழகிரி. மதுரை மாவட்டத்திலயிருந்து அமைச்சர் தமிழரசி மட்டும் விழாவுக்காக நாகர் கோவிலுக்கு சென்றிருக்க, அழகிரியுடன் இருந்த மற்ற நிர்வாகிகளில் சிலர், ""தலைவர் நேற்றிரவே குமரி மாவட்டத்துக்கு வந்துட்டாரு. நாம விழாவுக்குப் போறதுதான் சரியா இருக்கும். கிளம்பலாமாண்ணே'' என்று கேட்க, இன்னும் சிலரோ, ""நாம ஏன் அழையா விருந்தாளியா போகணும்?'' என எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். ஒரு சிலர், ""நாங்க விழாவுக்கு போலாமாண் ணே'' என்று கேட்க, ""அது உங்க விருப்பம்'' என்று சொன்ன அழகிரி, ""நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன்'' என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகிரியின் முடிவு, தி.மு.க தொண்டர்களிடம் டென்ஷனை உண்டாக்கியுள்ளது. ""சிறப்பா நடந்துக் கிட்டிருக்கிற விழாவில், அழகிரி-ஸ்டாலின் மோதல்ங்கிற விஷயம்தான் முக்கியத்துவம் பெறும். இதைத்தான் எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்குது. ஆளுங்கட்சி மேலே எந்தக் குறையும் சொல்ல முடியல. நலத்திட்டங்களால் மக்கள் ஆதரவும் ஆளுந்தரப்பின் பக்கம்தான் இருக்குது. கழகத்திற்குள் ஏதாவது கலகம் நடந்தால்தான் நல்லதுன்னு நினைக்கிற எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்புக்கு நம்ம கட்சியிலே இருப் பவங்களே காரணமாகலாமா? 2000த்தில் நடந்த முப்பெரும் விழாவை யும் இப்படித்தான் அழகிரி புறக்கணிச்சாரு. அப்ப தன் மகன் என்று கூட பாராமல் கட்சியிலிருந்து நீக்கினாரு. இப்ப என்ன நிலைமைகள் ஏற்படப் போகுதோ'' என கவலையை வெளிப்படுத்தினார்கள் உ.பி.க்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கவலையெல்லாம் நிகழ்ச்சி தொடங்கியதும் போன இடம் தெரியவில்லை. முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கி குமரி மாவட்டத்தினர் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறிவிட்டு பேச்சைத் தொடங்கினார் கலைஞர். ""பெரியார் இடத்தில், அண்ணா இடத்தில் இந்த சாதாரண கருணாநிதியை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். என் உயரம் என் காலிலிருந்து தலை வரை அல்ல. உங்க உள்ளத்திலிருந்துதான் என் உயரம் அளக்கப்படும். என்னை எதிர்த்தவர்கள் நெஞ்சில் குத்தியிருக்கிறார்கள். முதுகில் குத்தியிருக்கிறார்கள். பக்கத்தில் தூங்கும் போது குத்திக்கொல்ல பார்த்திருக்கிறார்கள். அதிலிருந்தெல்லாம் தப்பித்தவன் தான் இந்த கருணாநிதி. என் பிள்ளைகளுக்காக, என் பேரன்களுக்காக என் குடும்பத்திற்காக நான் இல்லை. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. 86 வயதில் பிள்ளையா என்று கேட்கலாம்... 90 வயதானாலும் 100 வயது வரை நான் வாழ்ந்தாலும் உங்கள் வீட்டுப் பிள்ளை தான்'' என்று சொன்னபோது, "அதையும் தாண்டி வாழ்வீங்க தலைவா' என்ற குரல் கூட்டத்திலிருந்து உரக்கக் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;""திராவிட இயக்கத்தின் பணி இந்த மக்களுக்கு கிடைக்கத்தான் இந்தக் கட்சி பாடுபடுகிறது. திராவிடர் என்ற உணர்வை இங்கு உள்ள எல்லோரும் பெற்றுவிட் டோம் என்ற உணர்வுதான் எனக்கு அளிக்கும் பெரிய பரிசு. என்று காலைத் தொட்டு கும்பிட்டுக் கேட்கிறேன். காஷ்மீர் பிரச்சினையில் என்ன முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறோம். அயோத்தி பிரச்சினை தீர்ப்பில் என்ன நடக்குமோ என்ற கவலை உருவாகிறது. வன்முறையைத் தவிர்த்து வாழ்விலே வளம் சேர்க்க உங்களை அர்ப்பணிக்க வேண்டும்'' என்றவர், ""இதற்கு உறுதுணையாக இருப்பீர்களா'' என்று கேட்க, "இருப்போம்.. இருப்போம்..' என்ற குரல்கள் கடல் அலைபோல ஒலித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJmZ-MZzJlI/AAAAAAAAEwM/yFNbUheBryY/s1600/1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5519612112079627858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 361px; CURSOR: hand; HEIGHT: 141px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJmZ-MZzJlI/AAAAAAAAEwM/yFNbUheBryY/s400/1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* நாகர்கோவிலில் முப்பெரும் விழாவை நடத்தி வரவேற்புரையாற்றியவர் மாவட்ட தி.மு.க செயலாளரும் அமைச்சருமான சுரேஷ்ராஜன். பெண்கள், குழந்தைகள் என்று கலைஞர் வரும் வழியெல்லாம் மக்கள் நின்றதும், கூட்டத்திற்கு வந்தி ருந்ததும் அவரது முயற்சிக்கான வெற்றியைக் காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJmZxzuBAnI/AAAAAAAAEwE/ex6zOuWZq7s/s1600/1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5519611899295105650" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 120px; CURSOR: hand; HEIGHT: 205px" alt="" src="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJmZxzuBAnI/AAAAAAAAEwE/ex6zOuWZq7s/s400/1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;* மேடைக்கு சக்கர நாற் காலியில் கலைஞர் வந்தபோது, பார்வையாளர் வரிசையிலிருந்த ஒரு பெண்மணி எழுந்து நின்று கும்பிட்டுக் கொண்டே இருந்தார். பின்னால் இருந்தவர்கள் மறைக்கிறது என்ற போதும், தொண்டர் படையினர் உட்காரச்சொன்னபோதும் அவர் கும் பிட்டபடியே இருந்தார். என்ன காரணம் என்று நாம் அவரிடம் விசாரித்தோம். மதுரையில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றும் கவிதாராணி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், ""கலைஞரைப் பார்க் கும்போது பரவசத்தால் சிலிர்க்கிறது. அந்த உணர்வுதான் என்னைக் கும்பிட வைக்கிறது. எந்த சோதனைக்கும் கலங்காத உள்ளத் தையும் அயராத உழைப்பையும் அவரிடம் கற்றுக்கொண்டு, ஒவ் வொரு தமிழனும் தனதாக்கிக் கொண்டால் வெற்றி நிச்சயம். கலைஞரை நான் தமிழன்னையாகப் பார்க்கிறேன்'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* மாணவ-மாணவியருக்கு பரிசு, ஆட்டோ ஓட்டுநருக்குப் பரிசு ஆகியவற்றுக்குப்பின் அமைச்சர் வீரபாண்டி ஆறு முகத்ததுக்கு பெரியார் விருது. முன்னாள் எம்.பி. செ.குப்புசாமிக்கு அண்ணா விருது, மகளிரணி ராஜம் ஜானுக்கு பாவேந்தர் விருது, ஜி.எம்.ஷாவுக்கு கலைஞர் விருது ஆகியவை வழங்கப்பட்டன. பரிசு வாங்க வந்த மாணவிகளில் சிலர் தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்த விரும்பி, கலைஞரிடம் தெரிவிக்க அவர்களுக்கு மேடையில் வாய்ப்பளிக்கப்பட்டது. புதிய தலைமுறையின் பேச்சாற்றல் தி.மு.க மேடை வழியாக வெளிப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* முப்பெரும்விழா விருது பெற்றவர்களின் சார்பில் பேசிய வீரபாண்டி ஆறுமுகம், நாஞ்சிலாரின் பெயரை மறக்காம குறிப்பிட்டதுடன், 1993-ல் கட்சியிலிருந்து சிலர் பிரிந்த நேரத்தில், கொடியும் சின்னமும் யாருக்கு என்ற வழக்கில் தேர்தல் ஆணையம் தீர்ப்பு தரவேண்டிய நாளில், கலைஞர் அவர்கள் எந்த நிகழ்ச்சிக்கும் போகாமல் இருந்தார். அவரிடம் நான் பேசியபோது, அண்ணா தந்த கட்சிக்கொடியோ உதயசூரியன் சின்னமோ நம்மைவிட்டுப் போனால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றார் . அத்தகைய கொள்கைப் பற்று உள்ள தலைவர் விரும்பிய படியே கட்சியையும் சின்னத்தையும் மீட்டார் என்று உணர்ச்சிகரமான சம்பவத்தைக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* குஷ்பு பேச்சை ஆர்வ மாகத் தொண் டர்கள் கேட்டனர். வடநாட்டில் ஒரு தலைவர் பெரிய கூட்டம் கூட்டி னார். ஆனால் அவர் முகம் கவலை யாகவே இருந்தது. அருகிலிருந்த வர்களோ, உங்களுக்கு 60 மாலைகள் போட்டார்களே அப்புறம் ஏன் கவலையாக இருக்கிறீங்கன்னு கேட்க, என்கிட்டே 90மாலைக்கு காசு வாங்கிட்டாங்க. 60தான் போட்டிருக்காங்க என்றார். அதுபோலத்தான் எதிர்க்கட்சித் தலைவி நடத்தும் கூட்டத்துக்கு ஆள் சேர்க்கி றார்கள். அவர் முகத்தில் சந்தோஷ மில்லை. இங்கே நம் தலைவர் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார் பாருங்கள் என்றபோது, கலைஞரின் முகத்தில் புன்னகை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* கவிஞர் கனிமொழி எம்.பியின் பேச்சு உணர்ச்சிமயமாக இருந்தது. நான் டெல்லிக்குப் போகும்போதெல் லாம் பார்க்கிறேன். லாலுபிரசாத் யாதவி லிருந்து எல்லாத் தலைவர்களும் என் னிடம், எங்க தலைவர் எப்படி இருக் கிறார் என்று கலைஞரைப் பற்றிக் கேட்பார்கள். அப்படிப் பட்ட தலைவரை, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் நள்ளிரவில் கைது செய்து இழுத்துச் சென்றார். சிறைச்சாலை முன்பு கட்டாந்தரையில் உட்கார வைத்தார். இப்போதும் என் கண்களை மூடினால் அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. இப்படிப்பட்ட கொடுங்கோலாட்சி நடத்திய அவர்களை எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்க மாட்டார் கள்'' என்றார் ஆவேசமாக. தொண்டர்கள் அதைக் கேட்ட தும் கண்கலங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* பேராசிரியர் பேசும் போது, திராவிட இயக்க வரலாற்றை இந்த முப்பெரும் விழா விருது பெறுபவர்களின் வரிசையைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். எப்படிப் பட்ட லட்சிய வீரர்கள் இருக்கி றார்கள் என்பது தெரியும்.அந்த வரலாறு தெரியாத சிலபேர், தி.மு.க ஆட்சியை வீழ்த்தப் போவதாகப் பேசுகிறார்களாம். எனக்கு அவர்களைத் தெரியாது. அவர்களின் முகவரியைத் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஒவ்வொரு வரையும் அவரவர் அளவில் மதிக்கிறேன். ஆனால், கலைஞரோடும் தி.மு.க வோடும் ஒருவரையும் ஒப்பிட முடியாது என்று சொன்னவர், இந்தியாவுக்கே வழிகாட்டும் தலைவராக இருக்கிறார் கலைஞர் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* துணைமுதல்வர் ஸ்டாலின் முதல் நாளே நாகர்கோவிலுக்கு வந்து ஏற்பாடுகளை பார்வையிட்டார். தனது படங்கள் அதிகமாக இருந்ததை எடுக்கச் சொல்லிவிட்டு, பேராசிரியர் படங்களை வைக்கச் சொல்ல, விழா ஏற்பாட்டாளர் கள் உடனடியாக அதைச் செய்தனர். முப்பெரும்விழாவில் நிகழ்ச்சி நிரலை வாசிப்பது, பரிசு பெற்றவர்கள் பற்றிய விவரங்களை அறிவிப்பது, முதல்வருக்கு உறுதுணையாக மைக்கை அட்ஜஸ்ட் பண்ணுவது, தண்ணீர் எடுத்துக் கொடுப்பது என்று ஒரு தொண்டர் போல பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* குமரி மாவட்ட அரசியல் வர லாற்றில் 40ஆயிரம் பேருக்கு மேல் திரண்ட பிரம்மாண்ட கூட்டம் இதுதான் என்றனர் பத்திரிகையாளர்களும் அர சியல் பார்வையாளர்களும் &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-8949428168468407838?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/8949428168468407838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_4570.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/8949428168468407838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/8949428168468407838'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_4570.html' title='மீண்டும் மோதல்! தி.மு.க டென்ஷன்!'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJma1n_yttI/AAAAAAAAEws/3gYXpjrVHBM/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-4592046975340421027</id><published>2010-09-21T21:34:00.000-07:00</published><updated>2010-09-23T04:31:21.762-07:00</updated><title type='text'>ராமரா? பாபரா?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJmY--MIWJI/AAAAAAAAEv8/xpI9-UO2HeM/s1600/1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5519611025932441746" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 161px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJmY--MIWJI/AAAAAAAAEv8/xpI9-UO2HeM/s400/1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;செப்டம்பர் 24-ந் தேதி இந்தியாவின் ஜனநாயக பன்முகத்தன்மையை காப்பாற்றக்கூடிய அல்லது பாதிக்கக்கூடிய விதத்தில் பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு அமையும் என்ற கருத்து அனைவரின் மத்தியிலும் நிலவுகிறது. கடந்த 60 ஆண்டுகளில் பல்வேறு அவதாரங்களை எடுத்த இந்த வழக்கு, இப்போது ஒரு உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு பெஞ்ச்சின் தீர்ப்பில் அடுத்த கட்டத்தை அடையவிருக்கிறது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருப்பினும் மற்றொரு தரப்பினர் கண்டிப்பாக உச்சநீதிமன்றத்திற்குச் சென்று மேல்முறையீடு செய்ய இருப்பதால் 60 ஆண்டுகால நீதிமன்றப் போராட்டம் முடிவுக்கு வரப்போவதில்லை. ஆனாலும், இந்தத் தீர்ப்பின் தாக்கம் பலமாக இருக்கும் என்ற அச்சம் ஆளுங்கட்சியிடமும் இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.கவிடமும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் வெள்ளியன்று வெளிவரும் தீர்ப்பில் இரண்டு முக்கிய கேள்விகளுக்கு விடை கிடைக்க இருக்கிறது. ஒன்று, பாபர் மசூதி இருந்த இடத்தின் கீழ்தான் ராமர் பிறந்தாரா என்பது முதல் கேள்வி. இரண்டாவது, பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கே ஒரு கோயில் இருந்ததா, இல்லையா? என்ற கேள்வி. இதில் முதல் கேள்வியானது சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கேள்வி என்பது அடிப்படை அறி வுடைய அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. மத நம்பிக்கை அடிப்படையிலோ அல்லது மத துவேஷத்தின் அடிப்படையிலோ இங்குதான் ராமர் பிறந்தார் என்று வாதிட் டாலும்கூட, அங்குதான் பிறந்தார் என்பதற்கான எந்தவித ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்களும் அவர்களிடம் இல்லை. கைகேயிக்கு பிள்ளைப் பேறு பார்த்த மருத்துவச்சியைத் தவிர வேறு யாராலும் ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறமுடியாது. கைகேயி யின் மருத்துவச்சி யாரென்று வால்மீகிக்கே தெரிய வில்லை. ஆக, இந்த விஷயத்தில் சட்டரீதியாக நீதிபதிகள் எப்படி முடிவெடுக்கப்போகிறார்கள் என்பது மக்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய விதத்தில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக, மசூதி இருந்த இடத்தில் கோயில் இல்லை என்று கூறிவிட்டால், அந்த நிலம் முஸ்லிம் மக்களுக்கே சென்றுவிடும். அவர்கள் அதில் மசூதி கட்டுவது உள்பட என்ன வேண்டு மானாலும் செய்துகொள்ளலாம். ஆனால், கோயில் இருந்தது உண்மை என்றொரு நிலையை நீதி மன்றம் எடுத்தால்கூட, வி.ஹெச்.பியும் ஆர்.எஸ். எஸ்ஸும் அங்கு சென்று நிலத்தை கையகப்படுத் திக்கொள்ள முடியாது. 400 வருட வயதுடைய மசூதியை 1992ஆம் ஆண்டில் இவர்கள் இடித்துத் தள்ளியது அனைவரும் அறிந்ததுதான். இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்ன வென்றால், பல்லாண்டு காலமாக இருக்கக்கூடிய வழிபாட்டுத்தலத்தில் வரலாற்றின் அடிப்படையில், முதல் வழிபாட்டுத் தலத்திற்குரிய மதத்தினர், பின்னால் வந்தவர்களுக்கு அதனைத் தர வேண்டியதில்லை என்பதே சட்ட முன்னுதாரணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;1940ஆம் ஆண்டு இன்றைய இந்திய உச்சநீதி மன்றத்தின் முன்னோடியான பிரிவி கவுன்சில் என்றழைக்கப்பட்ட காலனி ஆதிக்க உச்சநீதி பரிபாலன அமைப்பு, லாகூரில் சாகித் கஞ்ச் மசூதி பற்றி அளித்த தீர்ப்புதான் இந்த முக்கிய முன்னுதாரணம். அங்கு 1722 முதல் ஒரு மசூதி இருந்து வந்தது. ஆனால், 1962ஆம் ஆண்டு சீக்கிய ஆட்சியின்கீழ் அந்தக் கட்டிடம் குருத்வாராவாக மாற்றம் பெற்றது. இது எங்களுடைய வழிபாட்டுத் தலம் எங்களுக்குத் திருப்பித் தரவேண்டும் என்று பல நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு, 1935ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் ஒரு வழக்கு தொடுத்தனர். பல்வேறு நீதி மன்றங்களைக் கடந்த இந்த வழக்கு 1940-ல் பிரிவி கவுன்சில் முன்னால் வந்தது. அதை முழுமையாக விசாரித்த பிரிவி கவுன்சில் இந்த இடத்தை சீக்கியர்கள் வக்ஃப் வாரியத்தின் நலனுக்கு எதிராக எடுத்திருப்ப தற்கான வாய்ப்புகள் இருக்கலாம். ஆனால், எடுத்த 12 வருடங்களுக்குள் இது எந்தவிதமான சட்டமுறை களுக்கும் வராத காரணத்தினால் இந்த நிலத்தின் உரிமை குறித்து, 200 வருடங்கள் கழிந்த நிலையில் விவா திக்க முடியாது. ஆகவே, வரலாற்று ரீதியாக மசூதி யாக இருக்கிறதா அல்லவா என்பதல்ல பிரச்சினை.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி குடியுரிமை என்பது, இரண்டு தலை முறைகளாக ஒருவர் ஒரு நாட்டில் இருந்துவிட்டால் அவர் அந்த நாட்டின் குடியுரிமைக்குப் பாத்தியதாரர் ஆகிறாரோ அது போலவும், எப்படி நிலச்சுவான்தார் களுக்கு சொந்தமாக உள்ள நிலங்கள், அவர்கள் அங்கு இல்லாத நிலையில்- அங்கு வேலை செய்யும் தொழி லாளர்களால் தொடர்ந்து 14 ஆண்டுகள் விவசாயம் செய்யப்பட்டபின்- 3 தலைமுறை கழித்து திரும்பி வரும் நிலச்சுவான்தாரர்களின் வாரிசுகள் அதனை உரிமை கொண்டாட முடியாதோ, அதுதான் வழி பாட்டுத் தலங்களுக்கும் பொருந்தக்கூடிய பொது வான சட்டமாகும். காரணம், வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் அதை சொத்துப் பிரச்சினையாகவும் சொத்தின் வாரிசுதாரர் உரிமைப் பிரச்சினையாகவும் மட்டுமே பார்க்க முடியும் என்று தெளிவாகச் சொல்லியுள்ளது பிரிவி கவுன்சில். ஆக, பாபர் காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு இடத்தை 400 ஆண்டு கள் கழித்து உரிமை கொண்டாட வருவதற்கு சொத் துரிமை சட்டத்தின்கீழ் இடமில்லை என்பதே முதல் கருத்து. எனவே அந்த இடம் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி.க்கு செல்லும் வாய்ப்பு குறைவே.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, சொத்து சட்டம் மட்டுமில்லாமல் இந்தியாவில் பொதுநல சட்டமும் உண்டு. சொத்து தகராறில் குற்றம் இழைக்கப்பட்டால் பொதுநல சட்டமும் சொத்து சட்டமும் இணைந்தே பார்க்கப் படவேண்டும் என்பது சட்டவிதி. உதாரணமாக, சொத்துக்கு ஆசைப்பட்டு தன் மூதாதையர் யாரையேனும் ஒருவர் கொன்றுவிட்டால் அவர் வாரிசுதாரராகும் உரிமையை இழந்துவிடுகிறார். பாபர் மசூதி வழக்கைப் பொறுத்தவரையில், மசூதி இடிப்பு என்பது நீதியரசர் ராஜேந்தர் சச்சார் வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், ம்ன்ழ்க்ங்ழ் ம்ர்ள்ற் ச்ர்ன்ப் அதாவது, மிக மோசமான திட்டமிட்ட கொலை. இந்த விதத்தில் பார்க்கும்போது, நிலத்தை அபகரிப்பதற்காக அங்கிருந்த வழிபாட்டுத் தலத்தை அழித்த காரணத்தினால் நிலத்தை பெறும் உரிமையை இந்துத்வா அமைப்புகள் இழந்துவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு சில இஸ்லாமிய அமைப்புகள் இந்துத்வா அமைப்புகளைப் போலவே அனுசரித்து போகக்கூடிய தன்மை யற்றவையாக மாறியது உண்மை. ஆனால், பெரு வாரியான முஸ்லிம்கள் இந்தியாவின் பன்முக அமைப்பினை ஏற்றுக்கொண்டு, தங்களுக்கான அடையாளத்தை இழக்காமல் நம்பிக்கையுடன் இருப்பதை நாம் மறக்கக்கூடாது. 1947ல் மதத்தின் அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்தபோதுகூட, இந்தியா வை விட்டு வெளியேறிய முஸ்லிம்களைவிட இந்தியாவி லேயே தங்கிவிட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 75% அதிகமாகும். இன்று, உலகத்தில் இந்தோனேஷியா வுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள இரண்டாவது நாடு இந்தியாவாகும். ஆக, இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு காரணம், பெருவாரியான இந்துக்களின் பரந்த மனப்பான்மை என்ற பொய்முகத்தைத்தாண்டி, இந்த நாட்டின் மீதும் இந்த மக்களின் மீதும் சிறுபான்மையினர் வைத்திருக்கும் நம்பிக்கைதான் அடிப்படை காரணம் என்பதை உணரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதகமான தீர்ப்பு வந்தாலும், பாதகமான தீர்ப்பு வந்தாலும் இதனை எப்படி எதிர்கொள்வது என்ற தெளிவில்லாமலேயே இருக்கிறார்கள் இந்துத்வா தலைவர்கள் என்பது நிதர்சன உண்மை. 1986 முதல் 96 வரையிலிருந்த தீ உமிழும் மொழிகள் இன்று பரிவாரத் தலைவர்களிடமிருந்து வெளிப்படவில்லை. காரணம், அவர்களைப் பொறுத்தவரையில் அயோத் தியா விவகாரம் 80-களின் இறுதியிலும் 90களிலும் இருந்த அளவுக்கு, மக்களைத் திரட்டக்கூடிய ஒரு ஆயுதமாக இப்போது இல்லாமல் போய்விட்டதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், 1992-ல் மசூதி இடிக்கப்பட்டபோது அதன் செயல்தலைவராய் விளங்கிய அத்வானி இப்போது கட்சிக்குள்ளேயே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். 92-ல் கதாநாயகனான கல்யாண்சிங், எந்தவித அடையாளமும் இல்லாதவ ராக மாறியிருக்கிறார். அவர் செப்டம்பர் 14-ந் தேதி அயோத்தியில் நடத்திய போராட்டத்தில் அவரும் அவரது நிழலும் மட்டுமே கலந்து கொண்டதை டெலிவிஷனைப் பார்த்தவர் களுக்குத் தெரியும். இன்னும் ஒரு தள்ளு தள்ளுவோம் என்று கோஷம் எழுப்பிய சாத்வி ரிதம்பரா இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தனியாக இருக்கிறார். உமாபாரதியும் பஜ்ரங்தள் நிறுவனரான வினய் கட்டியாரும் தங்களுடைய ஆகிருதி மிகச் சுருங்கி, கட்சியில் மீண்டும் தங்களுக்கு ஒரு இடம் கிடைக்காதா என்ற ஆவலில் அலையும் நிலையில் இருக்கி றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, 92-ல் பாபர் மசூதி இடித்தபிறகு ஒரு புதிய தலைமுறை யையே இந்த நாடு கண்டுவிட்டது. இந்தத் தலைமுறையினர் தாராள மயமாக்கல், தொழில்நுட்பத்தின் பரவல், உலகமயமாக்கல் ஆகியவற்றின் கவர்ச்சியில் இந்துத்வாவை விட்டு வெளியேற ஆரம் பித்துவிட்டனர் என்ற உண்மையை யும் நாம் மறுக்க முடியாது. 1991-க்கு முன்பிருந்த வணிகம் சார்ந்த வியாபாரிகளும் தொழிலதி பர்களும் காங்கிரசின் இடதுசாரித்தன்மைக்கு எதிரான நிலையை பா.ஜ.க எடுத்து, தங்கள் நலனைப் பாதுகாக்கும் என அதற்கு பணமளித்து வந்தது உண்மை. ஆனால், தாராளமயமாக்கலின் தந்தையான மன்மோகன்சிங்கே பிரதமராக இருக்கும் ஆட்சி, தங்களுடைய நலனை மிக அதிகம் பாதுகாக்கும் என்று முடிவெடுத்திருக்கிற காரணத்தினால் தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களின் ஆதரவு பா.ஜ.க.வுக்கு கடந்த 7 ஆண்டுகளில் குறைந்திருப்பதை கண் கூடாக காணமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது 1980-களின் இறுதியில் இருந்த தீவிர இந்துத்வா வெறியை, அயோத்தி தொடர்பான தீர்ப்புக்கு பிறகு இந்துத்வா அமைப்புகளால் தூண்ட முடியாது என்ற நம்பிக்கை நமக்கு ஏற்படுகிறது &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-4592046975340421027?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/4592046975340421027/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_447.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/4592046975340421027'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/4592046975340421027'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_447.html' title='ராமரா? பாபரா?'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJmY--MIWJI/AAAAAAAAEv8/xpI9-UO2HeM/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-6641926720020645080</id><published>2010-09-21T04:10:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:21.778-07:00</updated><title type='text'>இந்தியா மூன்றாவது சக்திவாய்ந்த நாடு : அமெரிக்க ஆய்வறிக்கை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJiS9BCHOXI/AAAAAAAAEvc/ND_ZNUImJwQ/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 288px;" src="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJiS9BCHOXI/AAAAAAAAEvc/ND_ZNUImJwQ/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519322920289515890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து உலகின் அதிக சக்திவாய்ந்த நாடாக இந்தியா இருக்கிறது என அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;'குளோபல் கவர்னன்ஸ் 2025' என்ற பெயரில் உலகின் சக்திவாய்ந்த நாடுகள் குறித்த ஆய்வறிக்கையை, அமெரிக்காவின் நேஷனல் இன்டெலிஜன்ட்ஸ் கவுன்சில் மற்றும் ஐரோப்ப்பிய யூனியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் செக்யூரிட்டி ஸ்டடிஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;2010-ல் 22 சதவீத சர்வதேச அதிகாரத்துடன், அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தொடர்ந்து, 16 சதவீத உலக அதிகாரத்தை சீனாவும் ஐரோப்பிய யூனியனும் கொண்டுள்ளன; இந்தியா 8 சதவீத்தை பெற்றுள்ளது. அடுத்தாக, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் 5 சதவீத அதிகாரத்தைப் பெற்றுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;2025-ல் தற்போதைய தரநிலைப் பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லாமல் இருந்தாலும், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் அதிகாரம் சரிந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளையில் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் அதிகாரம் குறிப்பிடத்தக்க வகையில் உயரும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;2025-ல் அமெரிக்கா 18 சதவீத சர்வதேச அதிகாரத்துடனும், சீனா 16 சதவீத அதிகாரத்துடனும் இருக்கும்; ஐரோப்பிய யூனியனிடம் 14 சதவீத அதிகாரம் இருக்கும்; இந்தியா 10 சதவீத அதிகாரத்தைக் கொண்டிருக்கும் என அந்த ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலத்தில் காலநிலை மாற்றம், எல்லை பிரச்னை, புதிய தொழில்நுட்பம் மற்றும் இயற்கை ஆதாரத்தை மேலாண்மை செய்தல் போன்ற விவகாரங்களில் சர்வதேச அளவில் பிரச்னைகள் வலுவாக வாய்ப்புள்ளது என்றும் ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-6641926720020645080?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/6641926720020645080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_2694.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/6641926720020645080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/6641926720020645080'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_2694.html' title='இந்தியா மூன்றாவது சக்திவாய்ந்த நாடு : அமெரிக்க ஆய்வறிக்கை'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJiS9BCHOXI/AAAAAAAAEvc/ND_ZNUImJwQ/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-3244428702401848971</id><published>2010-09-21T03:48:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:21.793-07:00</updated><title type='text'>சீக்கிரம்ன்னா எப்ப?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJiO12V9fEI/AAAAAAAAEvU/bsmnbvRx0TE/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 294px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJiO12V9fEI/AAAAAAAAEvU/bsmnbvRx0TE/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519318399114378306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து 'நண்பேன்டா!' என்று கலக்கி எடுத்த ஆர்யாவிடம் பேசினோம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;''பாலாவின் 'அவன் இவன்' டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிப்பதைப்போல் வேறு டைரக்டர்கள் படத்திலும் நடிப்பீர் களா?''&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''நான் ஆரம்பத்தில் நடித்த 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்' ஆகியவை டபுள் ஹீரோ மேட்டர்தானே! அவ்வளவு ஏன்... தெலுங்கில் வில்லனாகக்கூட நடித்து இருக்கிறேன். நல்ல கதை ப்ளஸ் இரண்டு ஹீரோக்களுக்குமே செம வேலை இருந்தால், நிச்சயம் நடிப்பேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;''உண்மையைச் சொல்லுங்கள்... 'பாஸ் (எ) பாஸ்கரன்' படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்தபோது பிரபுதேவா, நயன்தாராவை டிஸ்டர்ப்செய்தாரா?''&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;''எத்தனை மணிக்கு ஷ¨ட்டிங், எவ்வளவு நேரம் ஸ்பாட்டில் இருக்க வேண்டும் என்று முதல் நாளே கேட்டுத் தெளிவாகத் தெரிந்துகொள்வார், நயன்தாரா. மறு நாள் சொன்ன நேரத்துக்கு கரெக்ட்டாக ஸ்பாட்டில் இருப்பார். அவர் நடிக்க வேண்டிய ஸீன்கள் முடிந்தவுடன், பறந்துவிடுவார்... நமக்கு அவ்வளவுதான் தெரியும், பாஸ்!'' சிரித்தார் ஆர்யா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;சென்னை சத்யம் தியேட்டரில் 'எந்திரன்' டிரெய்லர் வெளியானதும், தியேட்டர் வாசலில் இருந்த தனது காரில் சூப்பர் ஸ்டார் மின்னலாக ஏற... அப்போது வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் கௌரவத் தலைவர் குருசீனிவாசன் பாசத்தோடு ஓடி வந்து, ''எப்ப தலைவா எங்களுக்கு விருந்து தரப்போறீங்க?'' என்று ஆசையோடு கேட்டார். அவரையே சில நிமிடம் வெறித்துப் பார்த்த ரஜினி, ''சீக்கிரமா... சீக்கிரமா!'' என்று படபடத்தபடி காரில் ஏறிப் பறந்தார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;முதன் முதலாக பின்னணி இசைக்கான தேசிய விருது இசைஞானியிடம் பெரிய சலனம் எதையும் உண்டாக்கவில்லை. ''இப்போது உள்ள இசை... அழகான இசை மகளை... மொட்டை அடித்து, புருவத்தையும் மழித்த கதையாகிவிட்டது. இப்படி ஒரு நிலைமை வரும் என்று முன்னாடியே தெரிந்தால், சென்னைக்கே வந்திருக்க மாட்டேன். பாடலுக்கான இசை விருது கிடைத்தால் மகிழ்வேன். பின்னணி இசைக்கான விருது பெறுவதில் பெருமைப்பட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை. ஏனென்றால், அந்த உழைப்பில் பலருடைய பங்கு இருக்கிறது!'' என்கிறார் ராஜா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663366;"&gt;இசையின் மாப்பு ஒரு படத்தை இயக்கும் அளவுக்கு பரபரப்பாக இருந்தார். இடையில், அவருக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று லவட்டிக்கொண்டதாம். கேட்கப் போனபோது, ரியல் எஸ்டேட் பின்னால் கரை வேட்டிகள் கைகோத்து நின்றனவாம். நொந்துபோனவர் இப்போது புழுதி பாய்ந்த செருப்போடு பாவமாக அலைந்து திரிகிறார்!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-3244428702401848971?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/3244428702401848971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_3859.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/3244428702401848971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/3244428702401848971'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_3859.html' title='சீக்கிரம்ன்னா எப்ப?'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJiO12V9fEI/AAAAAAAAEvU/bsmnbvRx0TE/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-8054556677676379344</id><published>2010-09-21T03:42:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:21.814-07:00</updated><title type='text'>கலைஞர் ஏன் சிரிக்கிறார்; ஜெயலலிதா ஏன் சிரிக்காமல் இருந்தார்:</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJiMX3gzYPI/AAAAAAAAEvM/tszWG3cDaIU/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 334px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJiMX3gzYPI/AAAAAAAAEvM/tszWG3cDaIU/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519315685008957682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திமுக முப்பெரும் விழா இன்று  மாலை 6 மணிக்கு நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் தொடங்கியது. இந்த விழாவில் திமுக தலைவர், முதலமைச்சர் கருணாநிதி தலைமையேற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய, மாநில அமைச்சர்கள்,எம்.பிக்கள், சட்டமன்ற உருப்பினர்கள் இவ்விழாவில்பங்கேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவின் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு இவ்விழாவில் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்,  ‘’திமுகவின் முப்பெரும் விழா.  இது திமுகவினருக்கு தீபாவளி;பொங்கல் விழா.&lt;br /&gt;நாகர்கோயில்…இந்த மண்ணுக்கும் எனக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உண்டு. 20 வருடங்களுக்கு முன்பு வடமாநிலத்தில் இருந்து வருசம்-16 படத்தில் நடித்த படம் இந்த மண்ணில் பெரிய அளிவில் வரவேற்பை பெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் நான் தமிழ்நாட்டின் மருமகள் ஆகி, திமுகவின் உறுப்பினர் ஆகி இன்று அதே மண்ணில் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே கூடியிருக்கும் தொண்டர்களைப்பார்த்து நம் தலைவர் கலைஞர் மகிழ்ச்சி கொள்கிறார்.   அந்த மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எதிர்க்கட்சி தலைவர்,  சமீபத்தில் திருச்சியில் மாநாடு நடத்தினார்.  அந்த மாநாட்டில் அவர் சிரிக்கவேயில்லை. காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வடஇந்தியாவில் ஒரு தலைவர் கட்சி கூட்டம் நடத்தினார்.  தொண்டர்கள் அவருக்கு 60 மாலைகள் போட்டார்கள்.  அப்போது அந்த தலைவர் கடு கடுவென்று இருந்தார்.  ஒருவர் அவரிடம், என்ன தலைவரே..60 மாலைகள் போட்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியிருந்தும் இப்படிகோபமாக இருக்கிறீர்களே என்று கேட்டாராம்.  அதற்கு அந்த தலைவர்,  அடப்போய்யா, நேற்று 90 மாலைகளுக்கு காசு வாங்கினார்கள்;இன்று 60 மாலைகள் தான் போட்டிருக்கிறார்கள் என்று கோபத்துக்கான காரணம் சொன்னாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் புரிந்தது.  காசு வாங்கிட்டு சரியா கூட்டத்தை கூட்டலேன்னா கோபம் வராதா என்ன? ஆனால் இங்கே கூடியிருக்கும் கூட்டம் காசுக்காக கூடிய கூட்டமல்ல. கொள்கைக்காக கூடிய கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது பிரியாணிக்காக கூடிய கூட்டம் கிடையாது; தலைவரின் அன்புக்காக கூடிய கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் எப்போதும் அடுத்த தேர்தல் பற்றி சிந்திப்பதில்லை.   அடுத்த தலைமுறை பற்றியே சிந்திக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பல்வேறு கலவரங்களால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.  தமிழகம் மட்டும்தான் சொர்க்க பூமியாக இருக்கிறது.  அதற்கு காரணம் நம் தலைவர் ஆட்சிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சி கூட்டம் முடிந்து தலைவர் பிளைட்டில் வந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி வரவிலை. வழியெங்கும் தொண்டர்களை பார்த்து வர காரில் வந்தார்.   ஆனால் எதிர்கட்சி தலைவரோ தொண்டர்களை பற்றியெல்லாம் கவலைபடுவதில்லை.  பிளைட்டிலேயே வந்து பிளைட்டிலேயே சென்றுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்க்கட்சியின் தலைவர்  கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.   தொண்டர்கள் ஆரவாரமாக வரவேற்றனர். நான் கேட்கிறேன்….ஒரு கட்சியின் தலைவர் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருவதற்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயத்தில் ஒரு பெண்மணி அந்த தலைவரிடம் வந்து, நான் ஒவ்வொரு கூட்டத்திலும் கோஷம் போடுவேன் என்று சொல்கிறார்.  ஒரு கட்சி தொண்டர் இப்படி சொல்லும்போது கட்சியின் தலைமை என்ன செய்யவேண்டும்.  அப்படியா,  நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்;என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று விசாரிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அது தலைமைக்கு அழகு.  ஆனால் அவர் என்ன செய்தார்?  நான் இதுவரை உங்களை கோஷம் போட்டு பார்க்கவில்லையே என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொண்டர்கள் கோஷம் போடுவதை அவர் ரசிக்கிறார்;மகிழ்கிறார்.   அவர் தொண்டர்களை சர்க்கஸ்காரர்களை போல் நடத்துவதால்தான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவர்கள் நமது கட்சியில் வந்து இணைகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டணி..கூட்டணி.. என்கிறார்கள்..எங்கள் தளபதி, அஞ்சாநெஞ்சன் இருக்கும் வரை அந்த கூட்டணி எல்லாம் தூள் தூளாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்க்கட்சி தலைவர் நம் தலைவரை தீய சக்தி என்று சொல்கிறார்.  நம் தலைவர் தீய சக்தி அல்ல; தூய சக்தி-ஊக்க சக்தி, ஆக்க சக்தி’’ என்று பேசினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-8054556677676379344?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/8054556677676379344/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_1581.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/8054556677676379344'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/8054556677676379344'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_1581.html' title='கலைஞர் ஏன் சிரிக்கிறார்; ஜெயலலிதா ஏன் சிரிக்காமல் இருந்தார்:'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJiMX3gzYPI/AAAAAAAAEvM/tszWG3cDaIU/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-7089322060750273174</id><published>2010-09-21T03:15:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:21.831-07:00</updated><title type='text'>பிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள் யாழ்ப்பாணத்தில் பெருகும் ’ரெடிமெட்’ காதல்களின் பெறுபேறா?</title><content type='html'>முதல் நாள் பெய்த பெருமழையின் மிச்சமாக வானம் இருண்டு கிடந்தது. மெலிதான தூறல். விடிந்தும் விடியாத காலைப்பொழுது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளத் தொடங்கிய கிராமத்தின் வீதிகளில் இன்னமும் மனித நடமாட்டம் தொடங்கவில்லை. எங்கும் அமைதி போர்த்தப்பட்டி ருந்தது. அந்த அமைதி வெகு நேரம் நீடிக்கவில்லை.  வீதியோரமாய் தேங்கிநின்ற வெள்ள நீரைவிலக்கியவாறு வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவரின் காதில் திடீரென எழுந்த  முனகல் ஒலி விழுந்தது.வீதியில் யாருமில்லை. வீடுகளும் திறந்திருக்கவில்லை.  எங்கிருந்து அந்த முனகல் சத்தம் வருகின்றதென அவருக்கு ஒரே குழப்பம். சுற்றும் முற்றும் துழாவிப்  பார்த்த போதுதான்   ஒரு சாக்குப்பை அவரின் கண்ணில் பட்டது. அதிலிருந்தே பூனைக்குட்டியின்  மெலிதான குரல் போல ஒலி வந்துகொண்டிருந்தது. அவருக்கு எரிச்சலாக வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;""வேற இடம் இல்லையெண்டு பூனைக்குட்டிகளை எங்கட றோட்டில போட்டிருக்கிறாங்கள்'' என்று சற்று உரத்து சொல்லியவாறே அகன்றார். அவருடைய வார்த்தைகள் வீட்டின் வாசலுக்கு வந்துகொண்டிருந்த பெண்ணொருவரின் காதுகளிலும் விழுந்தது. மெதுவாக எட்டிப்பார்த்தார். தூரத்தே சாக்கு மூடை ஒன்று அசைந்து கொண்டி ருந்தது.  அது பூனைக்குட்டியாய் இருக்க முடியாது என்று அவருக்கு சந்தேகம் தோன்றியது. சந்தேகம் வலுக்கவே   என்னவோ ஏதோவோ என்று பதறியவாறு ஓடிச்சென்று பார்த்தார். உதிரமும் கண்ணீரும் மழைநீரும் சேர்ந்து சாக்குமுழுதையும் ஈரமாக்கியிருந்தன. ஆனாலும் துளிகூட நெஞ்சில் ஈரமில்லாமல் ஒரு சிசுவை சாக்கில் சுற்றி யாரோ வீசி விட்டுப் போயிருக்கிறார்கள். தொப்புள் கொடிகூட அறுக்கப்படாமல் ஒரு அவசரத்தனத்தோடு அந்தச் சிசு எறியப்பட்டிருந்தது. நடந்தது எதுவுமே அறியமுடியாமல்  பிரசவித்த மறுநொடியே பெற்றவளால் தூக்கி வீசப்பட்ட அவலம் புரியாமல்  தாயின் அணைப்பைத் தேடி பூமியில் பிறந்து ஒரு சில மணித்துளிகளேயான அந்த சிசு அழுதுகொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையைக் கண்டெடுத்த அந்தப் பெண் துணைக்கு அயலவர்களை அழைத்தார். "ஒரு குழந்தையை ஆரோ போட்டுட்டுப் போட்டாங்களாம்' என்ற தகவல் காட்டுத்தீயாய் அடுத்த நொடியே எங்கும் பரவியது. கூட்டம் குழுமியது.  அனுபவமுள்ளவர்களால் குழந்தையின் தொப்புள் கொடி அகற்றப்பட்டு, பிறந்த மேனியாக இருந்த  அந்த ஆண் குழந்தைக்கு சின்னதாக சட்டையும் அணிவிக்கப்பட்டது. குழந்தையைக் கண்டெடுத்த பெண்ணும் அண்மையிலேயே குழந்தை ஒன்றைப் பிரசவித்திருந்ததால்  அநாதரவாகக் கிடந்த சிசுவுக்கு இரவல் தாய்ப்பாலும் கிடைத்தது. மகாபாரதத்திலே குந்தியால் கர்ணன்  இதே போன்று கைவிடப்பட்ட போது குந்தியின் சேலையால் சுற்றியே ஆற்றில்  பெட்டியினுள் வைத்து விடப்பட்டான். தனது தாய் குந்தி என்பதை கர்ணனுக்கு கடைசியில் அந்தச் சேலை தான் காட்டிக்கொடுத்தது. அதே போன்று இந்தக் குழந்தை வீசப்பட்டுக் கிடந்த சாக்கிலும் ஒரு "பெற்சீற்'றும், தாயின் "கவுண்' ஒன்றும் இருந்தன. வீதியெங்கும் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலைகின்ற நாய்கள் போன்ற பிராணிகளால் எவ்வித ஆபத்தும் நேராமல் குழந்தை தப்பியது அதிசயம் தான். கிராமசேவகர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. இப்போது அந்தக் குழந்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப் பட்டு நலமாக உள்ளது.  ஆனாலும் இன்னமும் தாயைத் தேடியோ  அந்தக் குழந்தை அலைவதையும், அழுவதையும் நிறுத்தவேயில்லை. கடந்தவாரம் கொக்குவில் சம்பியன் லேனில் நிகழ்ந்த சம்பவமே இது. இது தவிர இந்த ஒரு வாரத்தில் மட்டும் திருகோணமலை, மட்டக்களப்பு, பசறை, போன்ற இடங்களிலும் இதே பாணியில் குழந்தைகள் கைவிடப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் பசறை என்ற இடத்தில் தனது குழந்தையை தூக்கி வீசிவிட்டுச் சென்ற தாயை பொலிஸார் கண்டுபிடித் திருக்கிறார்கள். மற்றைய இடங்களில் எல்லாம் இந்தக் குழந்தைகள் இன்னமும் தாய்மாரின் மடியைத் தேடியபடியே உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத் தில் பொதுவாகவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரம் நீண்டகாலமாக எழுதப்படாத விதியாகப் பேணப்பட்டு வருகிறது. ஒருவகையில்  பல சமூகச் சீரழிவுகள் இல்லாமல் போவதற்கும், எயிட்ஸ் முதலான பாலியல் சார் நோய்களின் தாக்கம் மிகக் குறைந்தளவில் இருப்பதற்கும்  இத்தகைய பண்பே காரணமாக உள்ளது. யாழ்ப்பாணத்தவர்களின்   குறிப்பாக பெண்களின்  நன்னடத்தை பற்றி அனைவருமே சிலாகித்துச் சொல்வதுண்டு.  ரஜினிகாந்த் நடித்த "சிவாஜி' படத்தில் ஒரு காட்சி வருகிறது. தமிழ்ப்பண்பாடுடைய  பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று ரஜினிகாந்த் ஒற்றைக்காலில் நிற்க அவரது மாமனான விவேக் அத்தகைய கலாசாரமுள்ள பெண்ணைத் தேடி ஊரெல்லாம் அலைந்துவிட்டு கடைசியாக  ""தமிழ்ப் பண்பாடுள்ள பெண் தேவையென்றால் இனி யாழ்ப்பாணத்துக்குத்தான் செல்ல வேண்டும்'' என்று கூறுவார். அந்தளவு தூரம் தமிழ்ப் பெண்கள் என்றாலே அது யாழ்ப்பாணத்துப் பெண்கள் தான் என்று அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு பண்பாட்டோடு ஊறித்திளைத்தவர்கள். (ஒருசிலர் மிக மோசமான ஆணாதிக்கத்துக்குள் யாழ்ப்பாணத்துப் பெண்கள் சிக்குண்டிருப்பதாகவும் இத்தகைய ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை விமர்சிக்கவும் செய்கிறார்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்து இளம் சந்ததியினரிடையே இத்தகைய நீண்டகால மரபு செல்லாக்காசாகி வருவதையே குழந்தைகள் அநாமதேயமாக கைவிடப்படும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. போர், அது சார்ந்து உருவான புறச்சூழல் என்பனவெல்லாம் கலாசாரச் சீரழிவுகளை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. ஆனால் அவையெல்லாம் விலகியவுடன் மிக மோசமான சூழலுக்குள் எமது இளையவர்கள் பிரவேசிக்கத் தொடங்கிவிட்டார்கள். வீட்டில் இருந்து நீங்கள் வீதிக்கு வந்தால், வீதியில் பயணிப்பவர்களில் 80%மானோர் காதுகளில் "ஹான்போனை' பொருத்திய படி தம்பாட்டுக்குச் சிரித்துக் கதைத்தபடி சென்று கொண்டிருப்பார்கள். இவர்களில் அனேகமானோர் இளையோர். அவர்களது இத்தகைய வீதியோர நடமாடும் செல்போன் உரையாடலை  கொஞ்சம் உற்றுக் கேட்டால் நிச்சயம் யாரோ ஒரு எதிர்ப்பாலரோடுதான் அவர்கள் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருப்பதை அறிய முடிகிறது.  இத்தகைய "ரெடிமெட்' காதல்களின் பெறுபேறுகளே கடைசியில் கைவிடப்பட்ட குழந்தைகளாக மாறுகின்றன. வெறுமனே பாலினக் கவர்ச்சியில் மயங்கித் தவறான பாதையில் பயணிக்கும் இளையவர்கள் தமக்குப் பின்னே நீண்டு கிடக்கும் பெரும் பாதையைக் கவனிக்க மறந்துவிடுகிறார்கள். இதுவே அவர்களது காதலுக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிடுகிறது. அனேகமாக  "ரெடிமேட்'காதல் தந்த பரிசுகளைப் பெண்களே சுமக்க வேண்டியதாகி விடுகின்றது. அவர்களும் ஏதோ ஒரு வழியில் ஊருக்குத் தெரியாமல் உண்மைகளை மறைத்து, இறுதியில் பெற்றெடுத்த சில நொடிகளிலேயே தமது பிள்ளைகளைத் தூர உள்ள இடங்களில் வீசி விட்டு வந்துவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கைத்தொலைபேசிப் பாவனை மட்டுமல்லாது குடாநாடெங்கும் மலிந்து போய்விட்ட உல்லாச விடுதிகளின் பெருக்கம், ஆபாசப் படங்களின் அதிகரிப்பு, தவறான பாதைக்கு வழிகாட்டும் இணையத் தளங்களின் உள்நுழைவு, போதைப் பொருள்கள் பாவனை போன்றவையெல்லாம் இத்தகைய மோசமான நிலைக்கு நமது இளையவர்களைக் கைபிடித்து அழைத்துச் செல்கின்றன. அண்மையில் யாழ்ப்பாணத்தில் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்ட நல்லூர் ஆலயத்திருவிழாவில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளான "பாவுள்' என்னும் பொருள் அடங்கிய பீடாவை பகிரங்கமாக விற்பனை செய்ததைக் காணமுடிந்தது. இதனை எல்லோருமே கண்ணுற்றாலும் எவருமே தடைசெய்யவோ, கட்டுப்படுத்தவோ முன்வரவில்லை. கண்முன்னே நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் முதுகெலும்பு நம்மில் பலருக்கும் காணாமல் போய் இருப்பதும் இத்தகைய சமூக சீரழிவுகளின் பெருக்கத்திற்கு பெரிதும் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்.பஸ் நிலையப் பகுதி தவறான நடத்தைகளுக்கான மையப்புள்ளியாக மாறிவருவதாக சமூக அக்கறையுள்ளவர்கள் பலரும் சுட்டிக்காட்டிவருகின்றார்கள். தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகவோ அல்லது வேறேதோ முக்கியமான அலுவலுக்காக செல்வதாகவோ கூறி வீட்டிலிருந்து "சிங்கிளாகப்' புறப்படும் இளசுகள் பஸ்நிலையத்தில் சோடிகளாக மாறி எங்கெங்கோவெல்லாம் செல்வதாக தகவல்கள் வந்தவண்ணமே உள்ளன. (யாழ்ப்பாணத்தில் உள்ள சில திரையரங்குகளில் காதலர்களுக்கான தனிப்பட்ட அறைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.) கணநேரத் தவறுகள் காரணமாக ஒரு குழந்தைக்கு தாயாகி பின்னர் பிரசவமானவுடனேயே அவற்றைக் கைகழுவிவிடுவதற்கு சில நியாயப்பாடுகளை அவர்கள் தமக்குத்தாமே சொல்லக்கூடும். குடும்பக் கௌரவம், சகோதரர்களின் சமூக அந்தஸ்து நிலை, எதிர்காலம் பற்றிய தொலைநோக்கு இவற்றை தக்கவைத்துக் கொள்ளவே தவறின் அடையாளமான சிசுக்களை உதறிவிடுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் உண்மையில் தமது தவறுகளை மறைப்பதற்காக, தமது எதிர்காலத்தின் இருப்புக்காக எதுவுமே அறியாத மனித உயிர் ஒன்றோடு விளையாடுவது உலகிலேயே மிகப்பெரிய பாவகாரியம். இவ்வாறு கைவிடப்படும் குழந்தைகளில் அனேகமாவை இறந்த நிலையிலேயே மீட்கப்படுகின்றன. கொக்குவில் சம்பவம் போல தெய்வாதீனமாகத் தப்புகின்ற குழந்தைகள் கூட மனக் குறைகளோடே வளரவேண்டியுள்ளது. இத்தகைய மனக்குறைகள் எதிர்காலத்தில் இந்த சமூகத்தின் மீது கோபம்கொள்ளக்கூடிய மனிதன் ஒருவனை உருவாக்கிவிடும். அது சமூகச் சீரழிவுகள் இன்னும் பெருக புதிய வழியைத் திறந்துவிடுவதாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தின் இருப்பினைக் கறையான்கள் போல் அரித்துச் செல்லும் எதிர்மறையான பண்புகளை, அழிவு நிலைக்கு இட்டுச் செல்லும் புதிய நிகழ்ச்சித் திட்டங்களை இனங்கண்டு அவற்றைத் தடுப்பதற்கு எவருமே தயாராயில்லை. எனினும் அந்தத் திராணியை ஒவ்வொருவருமே வரவழைத்துக்கொள்ளவேண்டும். குறைந்தபட்சம் பெற்றோர் பருவநிலையை அடைந்து விட்ட தத்தம் பிள்ளைகள் மீது அக்கறையோடு ஒருகண் வைத்திருக்க வேண்டும். அவர்கள் தவறுவிடும்போதாவது மாத்திரம் தட்டிக்கேட்டு சரியான வழிக்கு திசைதிருப்ப வேண்டும். ஒவ்வொரு பெற்றோருமே அவ்வாறு செய்தால் எந்தவொரு இளையதலைமுறையும் எப்படி தவறுசெய்யமுடியும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-7089322060750273174?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/7089322060750273174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_1585.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/7089322060750273174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/7089322060750273174'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_1585.html' title='பிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள் யாழ்ப்பாணத்தில் பெருகும் ’ரெடிமெட்’ காதல்களின் பெறுபேறா?'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-2898030106366276379</id><published>2010-09-21T02:58:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:21.856-07:00</updated><title type='text'>போராட்டம் நடத்திய மாதர் சங்க பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர்</title><content type='html'>திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த கீரனூரில் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க மாநிலத் தலைவர்அமிர்தம் பேசியது:&lt;br /&gt;&lt;br /&gt;கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வானை, ராணி, வசந்தா ஆகியோரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்ய முயற்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இக்கிராமத்தில் 5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை வீடில்லாத ஏழைகளுக்கு வழங்க தெய்வானை முயற்சி எடுத்தார். ஆனால், அவர்களை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புகார் தந்தவர்கள் மீதே பொய் வழக்கு போட்டுள்ளனர். பாலியல் கொடுமை செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு நிலத்தை உண்மையான பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அமிர்தம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-2898030106366276379?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/2898030106366276379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_944.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/2898030106366276379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/2898030106366276379'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_944.html' title='போராட்டம் நடத்திய மாதர் சங்க பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர்'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-3572653221658352474</id><published>2010-09-20T20:03:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:21.877-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgiOsnz4yI/AAAAAAAAEvE/UUVo-RMw_38/s1600/1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5519198979234194210" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 350px; CURSOR: hand; HEIGHT: 76px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgiOsnz4yI/AAAAAAAAEvE/UUVo-RMw_38/s400/1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஹாய்! மீட் பண்ணி நாளாச்சுல்ல"-அழுத்தமாகக் கை குலுக்குகிறார் டைரக்டர் சித்திக்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நாள் தாடி, ஊடுருவுகிற பார்வையில் புன்னகைக்கிறார். மலையாளத்தின் முக்கியமான இயக்குநர்.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு ஒவ்வொரு படமும் முக்கியம். அதில் மலையாளம், தமிழ்னு வேறுபாடு கிடையாது. மனதைத் தொடணும், அப்படியே மூட் செட் பண்ணிடுவேன். இப்போ, ஆறேழு மாசமா எனக்குள் உட்கார்ந்திருக்கிறது இந்த 'காவலன்'தான். இதில் வருகிற பூமிநாதன்... அதாங்க நம்ம விஜய், சொன்னா சொன்னதைச் செஞ்சே தீருவான். தன்னை நம்புறவங்களை அள்ளி அணைச்சுத் தூக்கிச் சுமக்கிற மனுஷன். அவன் தூக்கிச் சுமக்கிற ஒரு விஷயம்... அதுக்குள் நடக்கிற அதிரடியான, அழகான விஷயங்கள்தான் படம்!"&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgiBKbbVDI/AAAAAAAAEu8/GYJuakU6ac0/s1600/1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5519198746717148210" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 218px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgiBKbbVDI/AAAAAAAAEu8/GYJuakU6ac0/s400/1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;"இன்னும் சொன்னால் விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுவாங்களே?"&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"முத்து ராமலிங்கம்னு அழைக்கப்படுகிற ராஜ்கிரண். ஒரு காலத்தில் ஊரையே குலை நடுங்கவைத்த பெரிய தாதா அவர். எதுவும் வேண்டாம்னு ஒதுங்கி, அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பும் அவருக்கு ஒரே ஒரு பொண்ணு... அசின். தன்னோட பெண்ணுக்குக் காவலனா விஜய்யை நியமிக்கிறார் ராஜ்கிரண். கொஞ்சம் கொஞ்சமாக விஜய் அந்தக் குடும்பத்துக்கும் அசினுக்கும் நெருக்கமாகிற விதம்... அவர்களின் அடையாளம் தெரியாத காதல்... அது கல்யாணத்தில் முடிந்ததா, என்னதான் நடந்தது? விஜய்யின் காமெடித் திறமை இதில் இன்னும் பளிச்னு வந்திருக்கு. 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தை எவ்வளவு தூரம் எல்லோரும் ரசிச்சுப் பார்த்தோம். அந்த ஃப்ளேவர் இதில் இன்னும் தூக்கலா இருக்கும். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை என்டர்டெயின்மென்ட் செய்யும் படம். ஒரு படத்துக்கு இதைவிட சர்ட்டிஃபிகேட் வேறு எதுவும் வேண்டாம்னு நினைக்கிறேன்!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;"இப்போ விஜய் அவசியமா ஒரு ஹிட் தேவைப்படுகிற நெருக்கடியில் இருக்கார். தெரியும்தானே?"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;"அப்படி ஒரு நெருக்கடி விஜய்க்கு இல்லைன்னு நினைக்கிறேன். ஜனங்க எதிர்பார்த்த மாதிரி சில படங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு படத்திலும் விஜய்யின் உழைப்பு, திறமை கொஞ்சம்கூடக் குறையவே இல்லை. 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் நடிக்கும்போது விஜய் ஒரு ஸ்டார்தான். இப்போ விஜய் இங்கே பெரிய ஸ்டார். ஆனால், அதே அமைதி, உள்வாங்கிக்கிற அழகு, அதிசயக்கவைக்கிற டைமிங், பெர்ஃபெக்ஷன்னு எல்லோரும் கத்துக்க வேண்டியதுதான் அவர்கிட்டே இருக்கு. நானோ, அவரோ, எந்த நெருக்கடியிலும் இல்லை. எல்லா ஹீரோக்களுக்கும் விஜய்க்கு வந்த மாதிரி சின்ன ஒரு இடைவெளி வரும். எல்லோரையும் மாதிரி விஜய் மேலே எழும்பி வருவார்... இன்னும் வேகமா!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;"மலையாள ஒரிஜினல் 'பாடிகார்ட்'ல நயன்தாரா இருந்தாங்க..."&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJghjbmKhpI/AAAAAAAAEus/sIQ8dRmK3bQ/s1600/1.jpg"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5519198235929511570" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 140px; CURSOR: hand; HEIGHT: 183px" alt="" src="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJghjbmKhpI/AAAAAAAAEus/sIQ8dRmK3bQ/s400/1.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;"அந்தப் படத்துக்கும் நான் தேதி கேட்டது அசின்கிட்டேதான். அவங்க அப்போ ஒரு இந்திப் படம் முடிக்கிற கடைசி நாட்களில் இருந்தாங்க. எனக்கோ ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தம். அதான் நயன்தாரா வந்தாங்க. தமிழ்ல ஆரம்பிச்சதும் அசின் வந்துட்டாங்க!" &lt;a href="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJghver-RbI/AAAAAAAAEu0/ORDaqHqnFDE/s1600/1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5519198442917610930" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 136px; CURSOR: hand; HEIGHT: 275px" alt="" src="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJghver-RbI/AAAAAAAAEu0/ORDaqHqnFDE/s400/1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;"நீங்களே திலீப்பை வெச்சு 'பாடிகார்ட்' பண்ணி இருக்கீங்க. இப்போ, இங்கே விஜய். யார் பெஸ்ட்னு உங்களால் சொல்ல முடியும்தானே?"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;"மலையாளத்தில், திலீப்தான் சரியான சாய்ஸ். எங்க மொழிக்கு திலீப்பைவிட்டால், யாரும் அவ்வளவு சரியா செய்திருக்க முடியுமான்னு சந்தேகம். ஆனால், இங்கே விஜய் லைஃப் சைஸ் ஹீரோ. அவருக்கு ஏற்றபடி, பொருத்தமா சில மாற்றங்கள் இருக்கு. நிச்சயம் மலையாள ரோலை விஜய் பண்ண முடியாது. அதே மாதிரி தமிழ் விஜய் ரோலை திலீப் செய்யவே முடியாது!"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-3572653221658352474?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/3572653221658352474/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_7038.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/3572653221658352474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/3572653221658352474'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_7038.html' title=''/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgiOsnz4yI/AAAAAAAAEvE/UUVo-RMw_38/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-8793518874205012456</id><published>2010-09-20T19:59:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:21.898-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJggW3YUs5I/AAAAAAAAEuk/t5wYDmOx4f8/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 169px;" src="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJggW3YUs5I/AAAAAAAAEuk/t5wYDmOx4f8/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519196920537723794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''வைகோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்!'' - இந்த வார்த்தைகளை வைகோ உச்சரித்தபோது தொண்டர்களின் கைதட் டலால் காஞ்சிபுரமே கிடுகிடுத்தது! &lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிபுரத்தில் ம.தி.மு.க. மாநாடு என்று அறிவிக்கப்பட்டதுமே, ஊரின் அனைத்துச் சுவர்களையும் வளைத்து விளம்பரங்களாக எழுதித் தள்ளினார் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் வெங்கடேசன். ஆனால் அவர் சாராயம் விற்ற வழக்கில் கைதானார். ''திரும்பிய பக்கமெல்லாம் ம.தி.மு.க. கொடியையும், அண்ணாவையும், வைகோவையும் வரைந்து வைத்தார் வெங்கடேசன். ஸ்டாலின் இங்கு வந்து சென்ற இரண்டாவது நாளே அவர் மீது சாராய கேஸ்! &lt;a href="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJggIL8SOKI/AAAAAAAAEuc/96pQj6Ls4TY/s1600/1.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 203px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJggIL8SOKI/AAAAAAAAEuc/96pQj6Ls4TY/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519196668359227554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓய்வுபெற்ற ஹெட் கான்ஸ்டபிளின் பையனான வெங்கடேசன், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவர் இருப்பது சின்னக் காஞ்சிபுரம். ஆனால், பக்கத்தில் உள்ள பாலுச்செட்டி சத்திரத்தில் சாராய வழக்கு போட்டிருக் கிறார்கள். செல்லமுத்து என்பவரை சாராயம் விற்றதாக கைது செய்து... அவருக்கு வெங்கடேசன் சப்ளை செய்ததாக &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;வழக்கு. கையில் விலங்கு போட்டு அவரை நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்துள்ளார்கள். இப்போது காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அவர் இருக்கிறார்...'' என்கிறார் ம.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா,&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ், மாவட்ட நிர்வாகம் இடைஞ்சல் கொடுப்பது பற்றி கேள்விப்பட்ட வைகோ, ''அதிகமான தொல்லை கொடுத்தால், அண்ணா சமாதிக்குப் போய் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்...'' என்று அறிவித்த பிறகுதான் அமைதியானார்களாம் அதிகாரிகள். மாநாட்டு நாளான 15-ம் தேதி காலையில் இருந்தே காஞ்சி நகருக்குள் கூட்டம் குவிய... உண்மையில் வைகோவுக்கு உற்சாகம். 'எல்லாரும் கைக் காசை செலவு பண்ணி வந்திருக்காங்க. மழை மட்டும் வராமல் இருந்தால் போதும்...' என்று சொல்லிக்கொண்டு இருந்தாராம் வைகோ. மாலை நெருங்க நெருங்க... காஞ்சிபுரம் முழுக்க மனிதத் தலைகளாகவே காட்சி அளித்தது. இதில் இன்னோர் ஆச்சர்யம், எங்கே திரும்பினாலும் அண்ணா படங்கள் மட்டுமே இருந்தன. வைகோ படம் இல்லை. ''வைகோ தனது படத்தை வைக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்...'' என்று காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு சொன்னபோது, வைகோ சிரித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டைத் திறந்துவைத்துப் பேசிய செந்தில திபன் முதல் வைகோ வரை அனைவருமே முதல்வர் கருணாநிதி மீதுதான் கடும் தாக்குதல் நடத்தி னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;''நாடாளுமன்றத்தில் தமிழ் இனத்துக்காக மட்டுமே வைகோ குரல் கொடுத்தார். 11 பிரதமர்களின் முன்னால் சிங்கத்தைக் குகையில் சந்திப்பதைப்போல பிடரியைப் பிடித்து உலுக்கியவர் வைகோ. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டைப் பார்த்து டெல்லி அஞ்சியது. ஆனால், சோனியாவுக்கு பயம் போய்விட்டது. அதற்குக் காரணம் கருணாநிதிதான். அவர் ராஜாவையே மிஞ்சிய ராஜ விசுவாசியாக மாறிவிட்டார்! இந்த அடிமை மனோபாவமும், குடும்பப் பாசமும் இருக்கும் வரை கருணாநிதியால் இந்த இனத்துக்கும், நாட்டுக்கும் எந்த நன்மையும் இல்லை!'' என்று செந்திலதிபன் சொன்னதற்குப் பின்னால், மைக் பிடித்த நாஞ்சில் சம்பத்தின் பேச்சு மொத்தக் கூட்டத்தையும் சிரிப்பு மழையால் நனையவைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;''இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று தாசில்தார் ஒருவர் தடுத்திருக்கிறார். உன்னைத் தூண்டிவிடுவது யார், குன்றத்தூர் குள்ளனா?'' என்று அவர் சொன்னபோது ஏதோ புரிந்தாற்போல் பலத்த விசில்.&lt;br /&gt;&lt;br /&gt;''ஒரு குடும்பமே அனைத்துப் பதவிகளையும் பங்கு போட்டுக்கொள்கிறது. ஆனால், அந்த இயக்கத்துக்காக உழைத்த டி.ஆர்.பாலு உதாசீனப்படுத்தப்படுகிறார். நான் ம.தி.மு.க-வுக்கு மட்டுமல்ல... நொந்துபோன தி.மு.க-காரர்களுக்கும் கொள்கை பரப்புச் செயலாளர் தான். 'இப்படியே போங்க சம்பத்! அப்பதான் இவய்ங்களை ஒழிக்க முடியும்'னு தி.மு.க-காரனே என்னிடம் சொல் றான். ஏன்னா... பணம் ஒரே இடத்தில் குவிகிறது. ஆள்பவர் ஏழையாக இருந்தால்தான், ஆளப்படுபவன் பணக்காரனாக முடியும் என்பார்கள். அண்ணா ஏழையாக இருந்தார். மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தார். இன்று இன்ஜினீயரிங் கல்லூரி இல்லாத மந்திரி உண்டா? கருணாநிதி குடும்பம் நிலத்தை, வானத்தை, கடலை வளைத்துவிட்டது. அடுத்த தேர்தலிலும் அவர்கள் ஜெயித்தால் கறிக் கடையைக்கூட எவனும் நடத்த முடியாது. இன்னார் பெயரில் கறிக் கடை என்று ஆரம்பித்து, இன்னாரை கல்லாப்பெட்டியில் உட்காரவைத்துவிடுவார்!'' என்று சில பெயர்களைச் சொல்லி முடித்தபோது விசில்பறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 8.45 மணிக்கு மைக் பிடித்தார் வைகோ. முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கி... முள்ளி வாய்க்காலில் நடந்த படுகொலை சம்பவங்களை அவர் விவரித்து முடிப்பது வரை மொத்தக் கூட்டத்தையும் தனது வார்த்தைகளால் கட்டிப் போட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;''நான் தமிழ்நாட்டு மக்களின் ஊழியன். இந்த நாட்டுக்காக... மொழிக்காக உழைப்பவன். கட்சி சார்பற்ற பொதுமக்களுக்கும் சேர்த்து நான் முன்வைக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், 'ஒரு குடும்பத்தின் ஆதிக்கமா... தமிழ்நாட்டின் ஜனநாயகமா? எது தேவை?' என்ற ஒரு கேள்வியின் அடிப்படையிலே இந்தத் தேர்தலே நடக்கப்போகிறது...'' என்பதை பகிரங்கமாக அறிவித்த வைகோ, இந்த மாநாட்டில் ஒரு சம்பவத்தைச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;''2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நான் சிறையில் இருந்து வெளியே வந்த நாள். அன்று இரவில் கலைஞரை சந்தித்தேன். 'உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்' என்று அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்றேன். 'நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒரே ஒரு ஸீட் அதிகம் வேண்டும். கணேச மூர்த்திக்குத் தாருங்கள்' என்றேன். உடனே கலைஞர், 'அதெல்லாம் முடியாது. அதுக்கு மேல் கொடுக்க முடியாது!' என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே வரப் போனார். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு திடீரென்று நின்றவர், 'எனக்குப் பிறகு நீதான்யா... உன் கட்சிதான்யா தி.மு.க-வா இருக்கும்!' என்று தழுதழுத்த குரலில் சொன்னார். நான் பதறிப்போனேன். 'ஏன் அண்ணே, இப்படி எல்லாம் பேசுறீங்க! நீங்க 100 வருஷம் இருப்பீங்கண்ணே!' என்று சொன்னேன். அன்றைக்கு என்னை சமாதானப்படுத்துவதற்காக அப்படிச் சொன்ன பசப்பு வார்த்தைகள் அவை. எனவே, முக்கியஸ்தர்களுக்கு மட்டும் இதைச் சொன்னேன். கட்சித் தொண்டர்களுக்கு இதை முதல் தடவையாகச் சொல்கிறேன்!'' என்ற வைகோ....&lt;br /&gt;&lt;br /&gt;''இன்றைக்குச் சொல்கிறேன்... கலைஞர் அவர்கள் 100 ஆண்டுகள் வரை நல்ல நலத்துடன்... திடத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆனால், உங்களுக்கு முன்னால் உங்களது குடும்ப அரசியல் நொறுங்கிப்போகும். உண்மையான தி.மு.க-வாக ம.தி.மு.க-தான் இருக்கும். உமர் முக்தாரை தூக்கிலேற்றும்போது, அவரது மூக்குக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு ஒரு சிறுவன் ஓடுவான். அதைப்போல, அண்ணாவின் லட்சியத்தை நிறைவேற்ற நான் இருப்பேன். ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்தினர் எனக்கு வீர வாள் ஒன்றைக் கொடுத்தார்கள். அது தங்க வாளோ, வெள்ளி வாளோ அல்ல. உண்மையான வாள். கூர்மையாக இருந்தது. இதை ஓர் அடையாளமாக எடுத்துக் கொள்கிறேன்'' என்று முடித்தபோது... தொண்டர்கள் அனைவரும் முறுக்கேறி இருந்தார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ சொல்வது நிஜமா? &lt;br /&gt;ம.தி.மு.க. அவைத் தலைவராக இருந்து விலகி, இப்போது தி.மு.க-வில் இருக்கும் எல்.கணேசன் என்ன சொல்கிறார்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgf-SM0vqI/AAAAAAAAEuU/vY_YqC5K9og/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 194px; height: 203px;" src="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgf-SM0vqI/AAAAAAAAEuU/vY_YqC5K9og/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519196498240519842" /&gt;&lt;/a&gt;''நல்லா இருக்குதுய்யா கதை! 'தனக்குப் பிறகு நீதான்!' என எனக்குத் தெரியாமல் கலைஞர் வைகோவிடம் சொன்னாராமா? கலைஞர் அப்படிப்பட்ட வார்த்தைகளை ஏன் சொல்லணும்? 93-ம் ஆண்டு தி.மு.க-வைவிட்டுப் பிரிந்த நாங்கள், 10 வருடங்களுக்குப் பிறகு கலைஞரிடம் 2004-ல் கூட்டணிக்காகவந்தோம். 10 வருட வசைப் பாடல்களை மறந்துவிட்டு அந்த நேரத்தில் கலைஞர் அப்படிச்சொல்லி இருப்பாரா என்ன? 'தி.மு.க-வுக்கு இவர்தான் அடுத்து' என உயில் எழுதும் பழக்கம் கலைஞருக்குக் கிடையாது. தனக்குப் பின்னால் யார் என்பதை கலைஞர் தன்வாயால் இன்று வரை சொல்லவில்லை. ஆனால், அதனை அடுத்தடுத்த செயல்களால் விளக்கி விட்டார். இன்றைக்கு கலைஞரின் பாதிச் சுமை ஸ்டாலினுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்க, கலைஞரின் வார்த்தைகளாக வைகோ ஏன் இப்படிப் பேசுகிறார் என்பது புரியவில்லை!'' என்றார் எல்.ஜி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-8793518874205012456?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/8793518874205012456/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_6462.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/8793518874205012456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/8793518874205012456'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_6462.html' title=''/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJggW3YUs5I/AAAAAAAAEuk/t5wYDmOx4f8/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-346245958549545439</id><published>2010-09-20T19:55:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:21.918-07:00</updated><title type='text'>சீக்ரெட் பிரபுதேவா</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgfTXKANeI/AAAAAAAAEuM/VDpIKHdhSEA/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 316px;" src="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgfTXKANeI/AAAAAAAAEuM/VDpIKHdhSEA/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519195760836490722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பிரபுதேவா - நயன்தாரா ரகசியத் திருமணத்தின் அடுத்த எபிசோடு ஆரம்பம்! &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை எதுவும் பேசாமல் இருந்த பிரபுதேவா, ''நயன்தாராவைத் திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறேன்!'' என்று மீடியாக்களிடம் சொன்ன தாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில்... இதற்கு அவர் முதல் மனைவி ரம்லத் எந்த பதிலோ... மறுப்போ சொல்ல வில்லை. இந்த நிலையில், ஃப்ளாஷ்பேக்கில் இருந்தே ரம்லத்தின் பழைய காதலையும், கல்யாணத்தையும் எடுத்து வைப்போம்...&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;முதல் கல்யாணம்... முறையான கல்யாணமா? &lt;br /&gt;&lt;br /&gt;சென்னை வடபழனியில் பிறந்த ரம்லத், பிரபுதேவாவின் அப்பா டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்திடம் குரூப் டான்ஸராக சினிமாவுக்குள் நுழைந்தார். பிரபு தேவாவும் &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;படிப்பை விட்டுவிட்டு அப்பாவின் நடனக் குழுவில் சேர்ந்தார். அதோடு, முறையாகப் பரதம் பயின்று, தனியாக ஒரு நடனக் குழுவை ஆரம்பித்தார். அந்தக் குழுவுக்கு 'இன்சார்ஜ்' ரம்லத். அவரை நியமித்தவர் சுந்தரம்! &lt;br /&gt;&lt;br /&gt;1991-ம் வருடம் 'தளபதி' படத்தின் நடன ஒத்திகைக்காக மைசூர் போனபோதுதான் பிரபுதேவாவுக்கும் ரம்லத்துக்கும் காதல் மலர்ந்தது. தொடர்ந்து 95-ம் வருடம் டிசம்பர் மாதத்தில் வெளியில் தெரியாமல் ரம்லத்தின் வீட்டில் அவர்கள் திருமணம் நடந்தது. அதில் மொத்தமே ஐந்து பேர்தான் கலந்துகொண்டனர். அவர்களும் ரம்லத் வீட்டினர் மட்டுமே! அந்தக் கல்யாணத்தை எங்கும் பதிவு செய்யவில்லை. விஷயம் வெளியில் தெரிந்தபோது, பிரபுதேவாவின்வீட்டில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. கன்னட பிராமணக் குடும்பமான சுந்தரம் மாஸ்டரின் உறவுகள், முஸ்லிம் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக்கொண்டதுபற்றிப் பெரிதாக விவாதித்தன. எதிர்ப்பைத் தாங்க முடியாத பிரபுதேவா, ரம்லத்தைப் பிரிந்தார். ரம்லத் அவரது வடபழனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். பிரபுதேவா, அப்போது 'காதலன்' படத்தில் பிரபலமாகி உச்சத்தில் இருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு ஆறுதலாக இருந்தவர்கள், ரஜினிகாந்த், பி.வாசு, எஸ்.தாணு ஆகியோர் மட்டுமே! &lt;a href="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgfJWl7ZuI/AAAAAAAAEuE/jG6UFPV5Pvg/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 329px; height: 338px;" src="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgfJWl7ZuI/AAAAAAAAEuE/jG6UFPV5Pvg/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519195588886488802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேர் சூட்டிய ரஜினி!&lt;br /&gt;&lt;br /&gt;பிரபுதேவாவைக் கண்காணிக்க சுந்தரம் மாஸ்டர் சிறிய படையை உருவாக்கினார். அந்தப் படை எப்போதும் பிரபுதேவாவுடன்இருந்தது. ஒரு நாள் சுந்தரம் மாஸ்டரை அழைத்து ரஜினி பேசினார். சுந்தரம் வந்தபோது, அவரைப் பார்த்ததும் ரம்லத் காலில் விழுந்து வணங்கினார். சுந்தரம் எதுவும் சொல்லாமல் போய்விட்டார். அந்த ஜோடி நேராகப் போனது ரஜினியின் போயஸ் வீட்டுக்கு. ரம்லத்துக்கு, ரஜினி தைரியம் சொன்னார். அவரது வீட்டில்தான் ரம்லத் இந்து மதத்துக்கு மாறுவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. இந்த விஷயம் சுந்தரத்துக்கு எட்ட, கொஞ்சம் கோபம் குறைந்தது. ரம்லத் தனக்கு சாந்தி என்ற பெயர் பிடிப்பதாகச்சொல்ல, ரஜினியின் குடும்பமோ ரம்லத்துக்கு சூட்டிய பெயர் லதா. அண்ணா நகரில் சாந்தி காலனியில் 'சிங்கிள்' பெட்ரூம் வீட்டில் ஜோடி குடியேறியது! &lt;br /&gt;&lt;br /&gt;டீச்சர் ரம்லத், &lt;br /&gt;கருணாநிதி வீட்டு சேலை!&lt;br /&gt;&lt;br /&gt;பிரபுதேவா பிஸியான நடிகராகிவிட்ட பிறகு, ரம்லத் வீட்டில் தனிமையானார். ஆகவே, பெரும் பாலும் ரஜினியின் வீட்டில்தான் அவரது வாசம். ஒரு நாள் எதேச்சையாக ரஜினி, 'சும்மா இருக்காம நம்ம ஸ்கூல்ல ஏதாவது வேலை பார்க்கலாமே?' என சொல்ல, ரம்லத் 'ஆஸ்ரம்' பள்ளியில் டீச்சர் வேலையில் சேர்ந்தார். சில வாரங்கள் அந்தப் பள்ளிக்குச் சென்று வந்தவர், ப்ரீ கேஜி பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டார். 'வி.ஐ.பி.' படப்பிடிப்புக்கு நடுவில் வீட்டுக்கு வந்த பிரபுதேவா, ரம்லத்துக்கு பட்டுச் சேலை எடுத்துத் தர ஆசைப்பட்டார். அவர் பிரபலமான ஹீரோ. அவரே கடைக்குப் போனால், கூட்டம் கூடும் என்பதால்... தனக்கு நெருக்கமான வீட்டுக்குப் போனார். அங்கு இருந்து கருணாநிதியின் மகள் செல்விக்கு போன் போனது. செல்வி நடத்தும் 'எஸ்.எஸ்.சாரீஸ்' நிறுவனத்தில் இருந்து 30 பட்டுப் புடவைகள் வந்தன. அதில் அரக்கு கலர் புடவையை செலக்ட் செய்து மனைவிக்குக் கொடுத்தார் பிரபுதேவா. அதுதான் ரம்லத்துக்கு அவர் வாங்கிக் கொடுத்த முதல் பரிசு!&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்போர்ட் ஆதாரம்!&lt;br /&gt;&lt;br /&gt;தனது திருமணத்தை வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்த பிரபுதேவா, முதல் தடவையாக அந்தத் தகவலை ஆனந்த விகடனுக்கு சொன்னார். இருவரும் கொடுத்த பேட்டிதான் அந்தக் கல்யாணத்தின் முதல் ஆதாரம். அதற்குப் பிறகு பிரபுதேவா, தனது பாஸ்போர்ட்டில் ரம்லத்தைத் தன் மனைவியாகப் பதிவு செய்தார். அடுத்தடுத்துக் குழந்தைகள் பிறக்க, அவர்களின் பிறப்புச் சான்றிதழிலும் பிரபுதேவா தன்னை அப்பாவாக அடையாளம் காட்டினார். இந்து மதம் மாறிய ரம்லத், தனது பிறந்த வீட்டுக்குக்கூட போகாமல், தொலைபேசி வழியாக மட்டுமே தன் உறவுகளைத் தொடர்ந்தார். ஏனோ, ரம்லத்தின் சொந்தங்களை பிரபுதேவா தனது வீட்டுக்குள் சேர்க்கவில்லை. இந்த சமயத்தில் அவர் நடிப்பை விட்டு இயக்குநரானார். அதிலும் அவருக்கு சக்ஸஸ். அப்போதுதான் அவருக்கு நயன் தாராவின் அறிமுகம். &lt;br /&gt;&lt;br /&gt;நயன்தாரா எப்போதும் தி.நகரில் இருக்கும் ஓர் ஹோட் டலில்தான் தங்குவார். அங்கு இருவரும் சந்தித்த விஷயங்கள் ரம்லத்தின் காதுக்கு வந்து சேர்ந்தன. இருவருக்கும் இடை யிலான காதலை ரம்லத் உறுதி செய்தபோது, அவருக்கும் பிரபுதேவாவுக்கும் வார்த்தைகள் தடித்தன. &lt;br /&gt;&lt;br /&gt;குஷ்புவின் ராஜா அண்ணாமலைபுரம் ஃப்ளாட்டில் தற்காலிகமாகக் குடியிருந்த பிரபுதேவா - ரம்லத் ஜோடி, அதன் பிறகு தாங்கள் சொந்தமாகக் கட்டிய அண்ணா நகர் வீட்டுக்கே குடி போனார்கள். அங்கு போன பிறகு, பிரபுதேவா அவ்வளவாக வீட்டுக்கு வரவில்லை. இந்திப் பட இயக்கத்தில் பிஸியாக எட்டு மாதங்கள் மும்பையில் தங்கினார். இது இடைவெளியை அதிகப்படுத்தியது. 'எந்திரன்' படப்பிடிப்பின்போது பிரபுதேவாவுக்கு ரஜினி, 'இரண்டாம் கல்யாணம் வேண்டாம்' என்று அட்வைஸ் கொடுக்க... வீட்டுக்கு வந்தார் பிரபுதேவா. இந்த சமயத்தில்தான் வெளிப்படையாக நயன்தாராவைப்பற்றிய பிரபுதேவாவின் கமென்ட் வந்து சேர்ந்தது! &lt;br /&gt;&lt;br /&gt;நயன் - ரம்லத் நியாயங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;நயன்தாராவும் ரம்லத்துமே உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். அதனால்தான் ரம்லத் தன் கணவரிடம் பெரிதாக எதிர்ப்புக் காட்டவில்லை என்று கோலிவுட்டில் தகவல் படபடக்கிறது. அதே செய்தியில் பெரும் மதிப்பிலான வைர நகைகளை நயன்தாரா, ரம்லத்துக்கு வாங்கிக் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தியதாகவும் ஒரு தகவல் பரவியது. கேரளாவில் சொத்து, சென்னையில் வீடு, ஹைதராபாத்தில் நிறைய சொத்துகள் என நயன்தாராவின் வளர்ச்சியையும் கோடம்பாக்கம் ஆச்சர்யத்தோடுதான் பார்க்கிறது. சினிமா வட்டாரத்தின் உள்வட்டங்களைப் பொறுத்த வரை பிரபுதேவாவின் அறிவிக்கப்படாத மனைவி அவர்தான்! &lt;br /&gt;&lt;br /&gt;'அண்ணன் என்ன? தம்பி என்ன? சொந்தம் என்ன பந்தம் என்ன?' என்ற ரஜினியின் பாடல் வரிகள்தான் இப்போது ரம்லத்தின் காலர் டியூன். அதோடு அவர் செல்போனில் வேறு சில பாடல்களும் மாறி மாறி இடம்பெறுகிறது. அதில் பாதி சோகம், மீதி உற்சாக டியூன் என்று கலவை! ''பிரபு தேவாவின் கல்யாண அறிவிப்பு முதலில் வெளியானது, ஓர் இணையதளத்தில்தான்.அதில் பிரபுதேவா கொடுத்த பேட்டியாக வந்து இருக்கிறது. அந்த இணையதள செய்தியாளர், நயன்தாரா கூடவே இருக்கும் அவரது ஊர்க்காரர். பிரபுதேவாவின் பேட்டியைப் போடச் சொன்னதே நயன்தாராதான். இந்த பேட்டி வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அதே செய்தியாளர், 'இனி நயன்தாரா நடிக்கப்போவதில்லை. படங்களைக் குறைத்துக்கொண்டார்' என்று செய்தி போட்டார்...'' - இது ரம்லத் வட்டாரம் சொல்லும் பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து பலரும் ரம்லத்திடம் தொலைபேசி மூலம் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் ''இப்போது என் கணவர் மும்பையில் இந்திப் படப்பிடிப்பில் இருக்கிறார். ஆகவே, அவரை நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் கணவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. என்னையும் குழந்தைகளையும் அவர் மிகவும் நேசிக்கிறார். மீடியாக்களில் வரும் செய்திகளை வைத்து என் கணவரை நான் சந்தேகப்பட மாட்டேன். மற்றவர்களுக்காக எனது வாழ்க்கையை எப்போதும் நான் பங்கு போட எந்த சமாதானத்தையும் ஏற்க மாட்டேன்!'' என்று திட்டவட்டமாக சொல்லி வருகிறாராம். &lt;br /&gt;&lt;br /&gt;பிரபுதேவாவின் மனதில் என்ன இருக்கிறதோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-346245958549545439?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/346245958549545439/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_5108.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/346245958549545439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/346245958549545439'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_5108.html' title='சீக்ரெட் பிரபுதேவா'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgfTXKANeI/AAAAAAAAEuM/VDpIKHdhSEA/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-6273357716051585473</id><published>2010-09-20T19:52:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:21.945-07:00</updated><title type='text'>இருட்டு சென்னையின் முரட்டு முகம்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgef04nT1I/AAAAAAAAEt8/S14hg6q4u4o/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 264px;" src="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgef04nT1I/AAAAAAAAEt8/S14hg6q4u4o/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519194875463421778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;சமீபத்தில் எப்போதாவது இரவு 11 மணிக்கு மேல் சென்னையின் பிரதான  &lt;br /&gt;&lt;br /&gt;சாலைகளில் பயணித்து இருக்கிறீர்களா? சீறி வரும் கார்கள்... மரண வேகத்தில் மிரட்டும் பைக்குகள்... நடுரோட்டு ரகளைகள் எனக் கண்ணில் படும் கலவரங்கள் ஈரக்குலையை நடுங்கவைக்கின்றன. 'காவல் துறையின் இரவு நேர ரோந்துப் பணியே இல்லாமல் போய்விட்டதா?' என எண்ணுகிற அளவுக்கு, இரவு கவிழத் தொடங்கினாலே, சென்னையின் க்ரைம் ரேட் எகிறத் தொடங்குகிறது. பணத்துக்குப் பஞ்சம் இல்லாத உயர்தர வர்க்கம்தான் இரவு நேர சென்னையின் இதயத்தை உலுக்கி வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல ஹோட்டல் வாசலில் நடந்த தகராறு இது. இரவு 12 மணி வரை அந்த ஹோட்டலில் ஆட்டம் போட்டுவிட்டு, காரில் வெளியே வரும் மூன்று இளைஞர்கள், மிதமிஞ்சிய போதையில் சாலையில் ஏறும்போதே பைக் ஒன்றின் மீது மோதினார்கள். பைக் மனிதர் தடுமாறி விழ, காரில் இருந்து ஜன்னல் கண்ணாடியை இறக்கிய ஒருவன், 'டேய், என் காரோட ரேட் தெரியுமா உனக்கு?' எனக் காறித் துப்பிவிட்டுப் போகிறான். 'நடப்பது சென்னையில்தானா?' என அந்த பைக் மனிதரால் நம்பக்கூட முடியவில்லை. தடுமாறி எழுந்தவர், தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்குப் போய் நடந்த சம்பவத்தைச் சொல்ல... காரின் நம்பர் குறித்து விசாரித்தவர்கள், 'பெரிய இடத்து விவகாரம்... பிரச்னை பண்ணாமல் கிளம்புப்பா!' என விரட்டி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா சாலை சம்பவம், ஒரு சாம்பிள்தான். கடற்கரைச் சாலை, வள்ளுவர் கோட்டம், வடபழனி 100 அடி ரோடு, தி.நகர் உள்ளிட்ட சென்னையின் இதயத் துடிப்பு ஏரியாக்களில் இரவு நேரங்களில் இப்படிப்பட்ட ராவடிகள் அதிகமாகிவிட்டன. இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ''வெளியே சொன்னால் வெட்கக்கேடு... நம்பர் பிளேட் இல்லாத கார்களில் வலம் வருகிற அண்ணா நகர் இளைஞர்கள் கும்பல் நள்ளிரவில் தங்கள் நகர்வலத்தை ஆரம்பிக்கிறார்கள். கூத்தும் கும்மாளமும் ஒரு புறம்... டிக்கியில் ஸ்பீக்கர்கள் கட்டிய காரில் அவர்கள் பயணிக்கும்போது, மியூஸிக் ஓசை வீதிகளை அதிரவைக்கிறது. கேட்டால், 'கார் ஓனர் யார் தெரியுமா?' என்று சிரித்தபடி கேட்டுவிட்டு தமிழகத்தின் வி.வி.ஐ.பி-யின் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்கள். அதைக் கேட்டு நொந்துபோகும் போலீஸார், ஒதுங்கி வழிவிடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் பெரிய இடத்துப் பையன்களின் பெயர்களைச் சொல்லி 50-க்கும் மேற்பட்ட கும்பல்கள் சென்னையை ஆட்டிப் படைக்கின்றன. பிரபல மருமகன் ஒருவர் இரவு மூச்சு முட்டக் குடித்துவிட்டு கார் ஓட்டி, சாலையில் படுத்துக்கிடந்த நான்கு பேர் மீது ஏற்றிவிட்டார். அடுத்த நிமிடமே, அங்கே போலீஸ் ஆஜரானது. ஆனால், காயம்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் வேலையை மட்டுமே போலீஸால் செய்ய முடிந்தது. அதை விபத்து எனப் பதிவு செய்யக்கூட முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;புதிய தயாரிப்பாளர், சமீபத்தில் தி.நகரில் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்தார். முழு போதையில் வெளியே வந்த அவரின் நண்பர்கள், என்ன ஜாலியோ... சாலையில் நடந்து போன அப்பாவிகளை விரட்டி விரட்டி அடித்திருக்கிறார்கள். விஷயம் தெரிந்தும், போலீஸ் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. காரணம், ஏற்கெனவே அந்த வி.ஐ.பி-யின் விவகாரத்தை விசாரிக்கப்போனவர்கள் எங்கே தூக்கி அடிக்கப்பட்டார்கள் என்பது காக்கி வட்டாரத்துக்குத் தெரியும். &lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் மட்டுமல்ல... சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்கும் களமாக இரவு நேரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் இரவு நேரத்தில் நடந்த 20-க்கும் மேற்பட்ட தகராறுகள், சினிமாப் புள்ளிகளால் ஏற்பட்டவை. ஜிலுஜிலு நடிகர், மோசடி விவகாரத்தில் சிக்கிய முன்னெழுத்துப் புள்ளி, பாட்டுக்கார வித்தகர், புதிதாக தயாரிப்பு பக்கம் வந்திருக்கும் தாதா உள்ளிட்டவர்களின் சமீபத்திய வம்பு வழக்குகள் போலீஸ் ரெக்கார்டில் குறிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், மேலிடத்து நெருக்கடிகளுக்கு பயந்தே அவர்களை போலீஸ் கைவைப்பது இல்லை!'' எனச் சொன்னார் ஆதங்கம் அடங்காமல்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையின் இருட்டு முகத்தை ஏற்கெனவே உணர்ந்துவைத்து இருந்த வழக்கறிஞர் ஒருவர், ''ஒரு நாள் இரவு ஒரே ஒரு ஏரியாவுக்கு மட்டும் என்னுடன் வாருங்கள்... அங்கு நடப்பதை நீங்களே நேரில் பார்த்தால்தான் புரியும்!'' என நெல்சன் மாணிக்கம் சாலை வழியே அழைத்துப் போனார். சுரங்கப் பாதையைத் தாண்டிய உடனேயே சாலையின் இரு ஓரங்களிலும் நின்றுகொண்டு இருந்த கார்களைக் காட்டியவர், ''ஒவ்வொரு காருக்குள்ளும் உற்றுப் பார்த்தால்தான் உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியும். இந்தப் பக்கம் காரில் வரும்போது, தெரியாமல் கூட காரையோ பைக்கையோ நிறுத்திவிடக் கூடாது. தப்பித்தவறி நிறுத்தினால், சட்டென சில பெண்கள் மொய்த்துக்கொள்வார்கள். ஒரு முறை இந்தப் பக்கமாக வந்தபோது, செல்போனில் அழைப்பு வர, காரை ஓரம்கட்டி விட்டேன். அவ்வளவுதான்... கார் கண்ணாடியை ஒரு பெண் தட்ட, இன்னொரு பெண் காரை எடுக்கவிடாமல் முன்னால் வந்து நின்றாள். அவர்களின் நோக்கம் அறிந்து, கண்ணா டியை இறக்கி, 'நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை!' எனச் சொன்னேன். 'நீ எவனா இருந்தா என்ன? எங்களுக்கு ரூபாயை வெட்டிட்டுப் போ!' என மிரட்டி பணத்தைப் பறித்துக்கொண்டுதான் கிளம்பினார்கள். டி.பி சத்திரம் ஏரியாவில் கஞ்சா வாங்கிக்கொண்டு, நேரே இந்த ஏரியாவுக்கு வரும் கல்லூரி மாணவர்கள், சாலை ஓரத்திலேயே அசிங்கக் கூத்து நடத்துகிறார்கள். இவ்வளவு நடந்தும் இது வரை இந்தப் பக்கம் போலீஸ் கண் காணிப்பு காட்டிய சரித்திரமே இல்லை!'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடிந்தால் பரபரப்பும் விறுவிறுப்புமாக சுழலும் சென்னை... இரவு நேரத்தில் இப்படி ஒரு கொடூர முகத்தோடு இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இரவு நேர சென்னையின் அபாயத்தை முழுக்க முழுக்க அறிந்திருக்கும் காவல் துறை 'ஆளும் கட்சி...' என்கிற ஒற்றை வார்த்தையை அஸ்திரமாக்கி இன்னும் எத்தனை காலத்துக்குக் கண்ணயர்ந்து கிடக்கப்போகிறதோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-6273357716051585473?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/6273357716051585473/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_536.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/6273357716051585473'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/6273357716051585473'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_536.html' title='இருட்டு சென்னையின் முரட்டு முகம்!'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgef04nT1I/AAAAAAAAEt8/S14hg6q4u4o/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-7808968946235571586</id><published>2010-09-20T19:50:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:21.961-07:00</updated><title type='text'>அல்லாடும் தோழி...அலை பாயும் தோழர்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgd5CJ0D6I/AAAAAAAAEt0/vNtA-Bc5sAQ/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 201px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgd5CJ0D6I/AAAAAAAAEt0/vNtA-Bc5sAQ/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519194209010323362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கடந்த சட்டமன்றத் தேர்தலின் ஹீரோ தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைதான்!  &lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தயாரித்தவர் பேராசிரியர் நாகநாதன். திருவல்லிக்கேணி சட்ட மன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு, ஜெயலலிதாவின் தோழி பதர் சயீத்திடம் தோற்றுப்போனார். &lt;br /&gt;&lt;br /&gt;வரும் தேர்தலில் இந்த இரண்டு பேருமே மீண்டும் போட்டியிட முடியாத நிலை. காரணம், தொகுதி மறுசீரமைப்பில் திருவல்லிக்கேணி தொகுதியே காணாமல் போய்விட்டது. நாகநாதன், கருணாநிதியின் காலை நேர வாக்கிங் தோழர். கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவில், பொருளாதாரம் அறிந்த நாகநாதனை நியமித்தார் கருணாநிதி. 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டி.வி., 2 ஏக்கர் நிலம், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி... என தி.மு.க-வின் கவர்ச்சியான தேர்தல் அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்தார் நாகநாதன். இந்த அறிவிப்புகள் மக்களை வெகுவாக ஈர்த்தன. குறிப்பாக, இலவச கலர் டி.வி. ஆசை மக்களை மயக்கிவிட்டது! &lt;br /&gt;&lt;br /&gt;தனது பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போட்டியிட்ட நாகநாதன் தோற்றுப்போனார். அவர் ஜெயித்திருந்தால்... நிச்சயம் அமைச்சர் ஆகி இருப்பார் என்ற பேச்சு இருந்தது. தோற்றாலும், அவரை மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராக நியமித்தார் கருணாநிதி. இந்த முறையும் அவரைக் களம் இறக்கத் தயாராகி வருகிறது தி.மு.க. திருவல்லிக்கேணி தொகுதி சேப்பாக்கத்துடன் சேர்ந்து விட்டதால், நாகநாதனுக்கு தொகுதி கிடைப்பதில் சிக்கல். அண்ணாநகர், துறைமுகம், விருகம்பாக்கம், வேளச்சேரி, தி.நகர் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் நாகநாதன் நிறுத்தப்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பதர் சயீத்துக்கும் இதே நிலைதான். ஜெயலலிதாவின் பள்ளித் தோழியான பதர் சயீத், 2004-ம் ஆண்டு எம்.பி. தேர்தலில் தென் சென்னைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எப்படியாவது அவரை மக்கள் பிரதிநிதி ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜெயலலிதா, கடந்த சட்டசபைத் தேர்தலில் திருவல்லிக்கேணியில் நிறுத்தி வெற்றி பெறவைத்தார். ஆனால், உள் கட்சிப் பிரச்னைகளில் இவரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டனர். ஏதாவது சின்னப் பிரச்னை என்றாலும், 'அம்மாவுக்கு போன் போடட்டுமா?' என்று கட்சியினரை மிரட்டுகிறார் என்று பதர் சயீத்தின் எதிர் கோஷ்டியினர் புலம்புகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் திருவல்லிக்கேணிப் பகுதியில் ஜெயலலிதா கலந்துகொண்ட ரம்ஜான் நோன்பு நிகழ்ச்சி அழைப்பிதழில் பதர் சயீத் பெயரையே கட்சியினர் தவிர்த்துவிட்டனர். இருந்தும், பதர் சயீத் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 'அம்மாவின் கோஷ்டி நான்' என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் இவரை, கட்சியினர் பயம் கலந்த மிரட்சியுடன்தான் பார்க்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவுக்கு இவர் மீது நட்பு கலந்த பாசம் எப்போதும் உண்டு. எனவே, பதர் சயீத்துக்கு மீண்டும்வாய்ப்புக் கிடைக்கலாம். மயிலாப்பூர் அல்லது தி.நகர் தொகுதி தோழிக்குக் கிடைக்கலாம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-7808968946235571586?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/7808968946235571586/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_8268.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/7808968946235571586'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/7808968946235571586'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_8268.html' title='அல்லாடும் தோழி...அலை பாயும் தோழர்!'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgd5CJ0D6I/AAAAAAAAEt0/vNtA-Bc5sAQ/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-3631054908401533713</id><published>2010-09-20T19:49:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:21.984-07:00</updated><title type='text'>உமாசங்கர் கிளப்பும் அடுத்த பூதம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgdWhDuGtI/AAAAAAAAEts/QKTOpEzIa_I/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 148px; height: 375px;" src="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgdWhDuGtI/AAAAAAAAEts/QKTOpEzIa_I/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519193616010844882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;'பறிக்கப்பட்ட பதவி திரும்பக் கிடைத்த பிறகும் அமைதி ஆகும் ரகம் அல்ல  &lt;br /&gt;&lt;br /&gt;நான்' என்பதை நிரூபிக்கிறார் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்! &lt;br /&gt;&lt;br /&gt;சாதிச் சான்றிதழ் முறைகேடு, ஊழல் புகார் போன்ற குற்றச்சாட்டுகளால் இடைநீக்கம் செய்யப் பட்டவருக்கு, திடீரென்று பதவியை மீண்டும் கொடுத்து அதிர்ச்சியைக் கொடுத்தது அரசு. உடனே, சென்னைப் பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு குடும்பத்தோடு வந்து, 'என்னுடைய வழக்கை சட்டப்படி சந்திப்பேன்' என்று பகிரங்கமாக அறிவித்தார் உமாசங்கர். பொதுவாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இப்படி நடந்து கொள்வதில்லை. அடுத்த அதிர்ச்சியாக திருநெல்வேலிக்கு வந்து ஒரு பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டார். அதில் அவர் பேசிய பேச்சு ஆட்சியாளர்களை இன்னும் கடுப்பேற்றும் பச்சை மிளகாய் ரகம்!&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் நல சங்கங்களின் சார் பாகவே உமாசங்கருக்கு இந்தப் பாராட்டு விழா கடந்த 14-ம் தேதி நடந்தது. தான் பிறந்த மாவட் டத்தில்நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அவர் என்ன பேசப்போகிறார் என்று பரபரப்பாக எதிர்பார்த்து, கூட்டம் நடந்த அரங்கம் நிரம்பி வழிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.சி., எஸ்.டி. நல சங்கத்தின் மாவட்டத் தலைவர் அரிராம், ''நாங்கள் இதுவரை உங்களை ஓரமாக நின்று கவனித்து பெருமைப் பட்டோம். உங்களது அறிவும் தைரியமும் எங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். நீங்கள் தலித் மக்களின் அறிவுக் கருவூலம். இப்போது எங்களோடு நெருங்கிவிட்டதால்... இனி இந்த அரசு உங்களுக்கு என்ன இன்னலைத் தந்தாலும் மத்திய மாநில எஸ்.சி., எஸ்.டி. அமைப்புகளை ஒருங்கிணைத்து வீதிக்கு வந்து போராடுவோம்!'' என்று காட்டம் காட்டினார். அடுத்துப் பேசியவர்களும் அரசை கடுமையாக வறுத்து எடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவர் பேச்சையும் உன்னிப்பாக கவனித்த உமாசங்கர் மைக் பிடித்தார். ''எனக்கு அநீதி இழைக்கப் பட்டதைக் கண்டதும், அதைத் தங்கள் சொந்த சகோ தரனுக்கு ஏற்பட்ட அநீதியாக நினைத்துப் போராடி வெற்றி பெற்று இருக்கிறீர்கள். சுயநலம் பார்க்காமல் போராடிய உங்களுக்குத்தான் உண்மையில் பாராட்டு விழா நடத்த வேண்டும்! எனக்கு எதற்கு? எனக்காகப் போராடிய உங்கள் ஒவ்வொருவரின் பாதம் தொட்டு நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்!'' என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர், &lt;br /&gt;&lt;br /&gt;''நாடு முழுவதும் லஞ்சமும் ஊழலும் பெருகி விட்டன. பட்டியல் இனத்தவரான நம்மைப் பார்த்து, 'திறமை இல்லாதவர்கள், ஊழலுக்கு எளிதில் வசப்படுபவர்கள்' என்றெல்லாம் அவச் சொல் பேசுகிறார்கள். அதை மாற்ற வேண்டுமானால், நாம் ஒவ்வொருவரும் 'லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம், வாங்கவும் மாட்டோம்' என உறுதியேற்க வேண்டும். அப்படி இருந்தால்தான், எந்த விளைவையும் துணிவுடன் நின்று எதிர்கொள்ள முடியும். நான் சட்டப்படி இப்போதும் இந்துதான். ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்பு கிறிஸ்துவத்துக்கு மாறிவிட்டேன். அது என் விருப்பம், உரிமை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. மதம் மாறியதால் மட்டும் சமூக அந்தஸ்து மாறிவிடாது. நீங்கள்கூட இப்படி மாறினால், ஞானஸ்நானம் எடுத்தாலும் அதற்கான சர்ட்டிஃபிகேட் வாங்காதீர்கள். எந்த ரெக்கார்டிலும் கையெழுத்துப் போடாதீர்கள். நீங்க பாஸ்டராவே இருந்தால்கூட, சட்டப்படி இந்துவாகவே இருங்கள்!'' என்று பள்ளிக்கூட மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதுபோல அவர் பேசியதைக் கூட்டத்தினர் உன்னிப்பாகக் கவனித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிகையாளர்களிடம் மிகவும் கவனத்துடன் பேசிய உமாசங்கர், ''நான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 43 நாட்களும் எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் ஓய்வாகத்தான் இருந்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம், நான் பாதிக்கப்பட்டபோது எனக்காக எந்தக் குரலும் கொடுக்கவில்லை. ஒருவேளை நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியே இல்லை என்று விட்டுவிட்டார்களோ என்னவோ! என்னை இந்த அரசாங்கம் தூக்கி எறிந்தபோது, பட்டியல் இனத்து சமுதாயம் என்னைத் தங்கள் சகோதரனாகப் பாவித்து அன்போடும் ஆதரவோடும் பூ போல என்னைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். இது வரை நான் அவர்களுக்காக எதையும் செய்யவில்லை. அவர்களில் பலர் என்னை நேரில்கூட பார்த்தது கிடையாது. ஆனால், உணர்வுரீதியாக எனக்காகக் குரல் கொடுத்த அவர்களுக்காக நானும் நிறையச் செய்வேன். சமுதாயப் பணியாற்றுவேன். அதை யாரும் தடுக்க முடியாது. கடந்த 20 வருடங்களாக என்னிடம் வருவதற்குத் தயக்கம் காட்டியவர்கள், இப்போது நெருங்கிவிட்டார்கள். இனி மேல் நான்கூட அவர்களைத் தடுக்க முடியாது. பட்டியல் இனத்து மக்களுக்கு ஒரு தங்கமான சகோதரன் கிடைத்துவிட்டான். எனக்கு ஆதரவாகப் பல அரசியல் கட்சியினரும் தொடர்ந்து பேசினார்கள். குறிப்பாக, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயலலிதா போன்றவர்கள் தமிழகம் முழுவதும் பல கூட்டங்களில் பேசினார்கள். அவசியப்பட்டால்... அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்!'' என்று படபடத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கெனவே நெல்லை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் காளியப்பன், ஜெயலலிதாவை சந்தித்த பரபரப்பு அடங்குவதற்குள்... உமாசங்கரும் இப்படிப் பேசி இருப்பதால், அ.தி.மு.க. தரப்பு உற்சாகம் அடைந்திருக்கிறது. அ.தி.மு.க-வை சந்தேகத்துடன் பார்க்கும் தலித் வாக்குகளைக் கவர நினைக்கும் ஜெயலலிதா, தேர்தல் சதுரங்கத்தில் அடுத்த 'மூவ்' வைக்கத் தயாராகிவிட்டார். இதற்கு தி.மு.க. சைடில் இருந்து என்ன செக் இருக்கும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-3631054908401533713?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/3631054908401533713/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_2738.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/3631054908401533713'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/3631054908401533713'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_2738.html' title='உமாசங்கர் கிளப்பும் அடுத்த பூதம்'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgdWhDuGtI/AAAAAAAAEts/QKTOpEzIa_I/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-8557233117865401115</id><published>2010-09-20T19:42:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:22.001-07:00</updated><title type='text'>கொடநாட்டுக்குப் போனதா கார்?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgckNo6Y0I/AAAAAAAAEtk/dv1uvaM0D-U/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 308px; height: 263px;" src="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgckNo6Y0I/AAAAAAAAEtk/dv1uvaM0D-U/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519192751804670786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இறக்கைகளில் ஏ.ஸி-யைப் பொருத்தியது போல ஜில்லென வந்து இறங்கினார்  &lt;br /&gt;&lt;br /&gt;கழுகார். ''இரண்டு நாள் முகாம்... சிலுசிலு காற்று... நிறைய செய்திகள்...'' என்றவரை ஏற இறங்கப் பார்த்தோம். ''முக்கியமான சோர்ஸ் ரொம்ப ரகசியமாக அழைத்ததால் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் கொடநாடு போய் வந்தேன். அங்கே பரபரப்பாக அடிபடும் விஷயம் என்ன தெரியுமா? 'ஜெயலலிதாவை பார்க்க விஜயகாந்த்தின் திருமதி பிரேமலதா ரகசியப் பயணமாக வந்தாரா?' என்பதுதான். கடந்த வாரத்தில் ஒரு நாள் மாலையில் சொகுசு கார் ஒன்று கொடநாடு பங்களாவுக்குப் போய் இருக்கிறது. அதில் இருந்தவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாதான் என கொடநாட்டில் 'குபீர்' கிளம்பிக் கிடக்கிறது. அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி ஏற்பட்டுவிடவே கூடாது என்பதில் ஏகத் தீவிரம் காட்டுபவர்கள், இந்தத் தகவலை விசாரித்தபோது உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லையாம்!'' &lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgcaT01CUI/AAAAAAAAEtc/9hU0IgDnzho/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgcaT01CUI/AAAAAAAAEtc/9hU0IgDnzho/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519192581666572610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''உண்மையாகவே அப்படி ஒரு சந்திப்பு நடந்ததா?''&lt;br /&gt;&lt;br /&gt;''அது போகப் போகத் தானாகத் தெரிந்துவிடும். இப்போதைக்கு நான் கேள்விப்பட்டதெல்லாம், விஜயகாந்த் தரப்பு மீது ஜெயலலிதா சமீபத்தில் கோபமானார் என்பது. ஒரு பக்கம் தங்களோடு கூட்டணிக்கான முயற்சி செய்துகொண்டே, தி.மு.க. தரப்புடன் முற்றிலும் வேறொரு வகையான பேச்சை தே.மு.தி.க. தரப்பு நடத்துவதாக ஜெ-வுக்கு தகவல் போனதாம். 'எனக்குக் கிடைத்த தகவலை அப்படியே மதுரைக் கூட்டத்தில் போட்டுக் கிழிக்கவா?' என்று ஜெ. சீறியதாகவும்... இது உடனே தே.மு.தி.க. தலைமையின் காதுக்குப் போனதாகவும் சொல்கிறார்கள். 'தி.மு.க-வுடன் தனி பேரங்கள் எதுவுமில்லை' என்று ஜெ-விடம் விளக்க ஸ்பெஷல் தூதர் அனுப்பப்பட்டார் என்றுகூட ஒரு பேச்சு உண்டு! 'இரண்டு வாரத்தில் நடத்தப் போகிற பிரமாண்ட கூட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு தி.மு.க-வை கேப்டன் போட்டுத் தாக்கப் போகிறார். அதிலேயே நீங்கள் புரிந்துகொள்ளலாம்' என்று ஜெ-வுக்கு அந்த தூதர் கூறியதாகவும்... இப்போதைக்கு ஜெ. கூலானதாகவும் கூறுகிறார்கள்!''&lt;br /&gt;&lt;br /&gt;''நீர் கூறுவதை எல்லாம் பார்த்தால் அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்பதில் ரொம்ப முன்னேற்றமோ..?''&lt;br /&gt;&lt;br /&gt;''அப்படிச் சொல்ல முடியாது! தி.மு.க-வை மறுபடி ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதில் ஒரே நோக்கோடு இருக் கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்...'' என்ற கழுகார்,&lt;br /&gt;&lt;br /&gt;''காங்கிரஸோடு விஜயகாந்த் கட்சி கூட்டணியாகப் போனால்... அதையும் ஜெ. உள்ளூர வரவேற்பாராம். அவர் கணக்குப்படி காங்கிரஸ், தே.மு.தி.க. கூட்டணியாக நின்றால்... தி.மு.க-தான் பலவீனம் அடையும் என்றும், இந்தப் பிரிவினையால் அ.தி.மு.க. அலேக்காகத் தொகுதிகளை அள்ளும் என்றும் ஒரு கணக்கு வைத்திருக்கிறாராம். தனது கணக்கை மேலும் சரிபார்த்துவிட்டு, அதற்கேற்ப பா.ம.க-வை ஏற்பதா... வேண்டாமா என்றும் முடிவெடுப்பாராம்!''&lt;br /&gt;&lt;br /&gt;''பயனுள்ள கணக்குதானா இது?''&lt;br /&gt;&lt;br /&gt;''அது தெரியாது! ஆனால், மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சி பற்றி ராகுல் காந்தி பேசும்போது, காங்கிரஸின் கூட்டணி தர்மம் என்ன என்று வெளுத்து வாங்கியிருப்பதை கவனியும். 'குட்டக் குட்ட குனிய மாட்டோம்!' என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார். அதேபோல், அக்டோபரில் நடக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் நிலவரத்தைப் பார்த்துக்கொண்டு, தமிழ்நாட்டுக்கும் வந்து முழங்குவாராம் ராகுல் காந்தி. பீகார் தேர்தல் முடிந்ததுமே தமிழ்நாட்டில் தன் மனக் கணக்கை வெளிப்படையாக காங்கிரஸ் செயல்படுத்த ஆரம்பித்துவிடும். அப்போதுதான் தெரியும் - தி.மு.க-வுடன் கூட்டணி தொடருமா... அல்லது விஜயகாந்த் கட்சியுடன் பேச்சுவார்த்தை வேகம் பிடிக்குமா என்பதெல்லாம்!''&lt;br /&gt;&lt;br /&gt;''கேட்கையிலேயே கிறுகிறுக்குதே!''&lt;br /&gt;&lt;br /&gt;''இதையும் கேட்டால் இன்னும் கிறுகிறுக்கும்... தே.மு.தி.க-வுக்கு 40 ஸீட் தரத் தயாராம் அ.தி.மு.க.! ஆனால், முதல்கட்ட தூதுப் பேச்சுகளில் தே.மு.தி.க. கேட்கும் பல தொகுதிகள் எம்.ஜி.ஆரின் ஓட்டு வங்கி இப்போதும் பலமாக உள்ளவை! இது கொடநாட்டை கொஞ்சம் சலிப்பில் ஆழ்த்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள்!''&lt;br /&gt;&lt;br /&gt;''சரிதான்!''&lt;br /&gt;&lt;br /&gt;- தொண்டைக்கு இதமாக தூதுவளை மிட்டாய் கொடுத்தோம் கழுகாருக்கு. கனைத்தபடி கம்பீரக் குரலில் கனஜோராகத் தொடர்ந்தார் - ''காஷ்மீர் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடந்தது. பிரச்னையை அனைவரும் சும்மா மென்று முழுங்கிப் பேசியபோது விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் அதிகமாகவே சீறியிருக்கிறார். அவர் பேசியதை உன்னிப்பாக கவனித்திருக்கிறார் சோனியா...''&lt;br /&gt;&lt;br /&gt;''என்ன சொன்னதாம் சிறுத்தை?''&lt;br /&gt;&lt;br /&gt;''சோனியா பேசும்போது 'ஜம்மு காஷ்மீரத்து மக்களும் நம் மக்களே' என்று சொல்லியிருக்கிறார். இதைச் சுட்டிக்காட்டிய திருமா, 'இப்படி அம்மாநிலத்து மக்கள் நினைக்கவில்லை. அந்த மாநிலத்து மக்களின் உணர்வுகளை இந்த இந்திய அரசு உணர்ந்திருக்கிறதா? இந்திய அரசாங்கத்துக்கும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்குமான இந்த முரண்பாட்டை முதலில் களைய வேண்டும்' என்றபோது பிரதமரும் புருவம் உயர்த்தினாராம்!''&lt;br /&gt;&lt;br /&gt;''அப்படியா?''&lt;br /&gt;&lt;br /&gt;''ஆயுதப்படைகள் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதைச் சொல்லித்தானே இத்தனை கலவரமும் நடக்கிறது. அந்த சட்டத்தை உடனே திரும்பப் பெறுங்கள் என்று சொன்ன திருமா, 'நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது, ஆயுதத்தை ஆயுதத்தால் நசுக்க முடியாது' என்று சொல்லும்போது குரலை கொஞ்சம் உயர்த்தியிருக்கிறார்.''&lt;br /&gt;&lt;br /&gt;''இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் காஷ்மீரைப் பற்றி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதோ?'' என்று வருத்தம் தெரிவித்தோம்!&lt;br /&gt;&lt;br /&gt;''அந்தக் கவலை இருக்கட்டும். சமீபகாலமாக நிருபர்கள் மீதான தாக்குதல் அதிகமாவதைப் பற்றி தலைமைச் செயலாளர் மாலதி ரொம்பவே கவலைப்பட்டாராம். இதைதொடர்ந்து அரசு உயர் அதிகாரிகள், மூத்த பத்திரிகையாளர்கள், அதற்கான அமைப்புகள், போலீஸ் அதிகாரிகள் கொண்ட கமிட்டி ஒன்றை விரைவில் அமைப்பதற்கான திட்டங்களைத் தீட்டி வருகிறாராம் மாலதி. நல்லதே நடக்கட்டும்!'' என்றபடி கழுகார் ஜூட்!&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கோவன் கோபத்துக்கு இதுதான் காரணம்?!&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் தொழில் அதிபர் ஒருவரின் திருமண விழாவுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வந்திருக்கிறார். அந்த விழாவுக்கு தி.மு.க. சார்பாக வந்திருந்த முக்கியப் புள்ளியைப் பார்த்த இளங்கோவன், அவர் அருகில்போய் அமர்ந்து இருக்கிறார். ''கூட்டணியில் இருந்துட்டே ஏன் இப்படி எங்களை வறுத்து எடுக்குறீங்க?'' என்று தி.மு.க. புள்ளி கேட்க... ''உங்க கட்சியில் யார் மேலேயும் எனக்கு வருத்தம் இல்லை. என்னோட டார்கெட்டே அமைச்சர் பொன்முடிதான்! என்னமோ, இந்தியாவுக்கே ஜனாதிபதியாகிட்ட மாதிரி யாரையும் மதிக்காமல் அவர் போடுற ஆட்டம் கொஞ்சமா... நஞ்சமா? காங்கிரஸ் ஆளுங்களைக் கண்டாலே அவருக்கு ஆகலை. அவர் அடங்குற வரைக்கும் எங்க குரல் ஒலிச்சுட்டுதான் இருக்கும்!'' எனக் கொந்தளித்தாராம் இளங்கோவன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-8557233117865401115?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/8557233117865401115/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_7937.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/8557233117865401115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/8557233117865401115'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_7937.html' title='கொடநாட்டுக்குப் போனதா கார்?'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgckNo6Y0I/AAAAAAAAEtk/dv1uvaM0D-U/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-560427640795096037</id><published>2010-09-20T19:33:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:22.018-07:00</updated><title type='text'>எங்கே போகிறது தமிழ் சினிமா..?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgbkIwX6nI/AAAAAAAAEtU/Bdf_qMqrFuA/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgbkIwX6nI/AAAAAAAAEtU/Bdf_qMqrFuA/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519191650982161010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;2009 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள்...&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய மொழிவாரியாக பார்க்கும்போது, பல்வேறு பிரிவுகளிலும் கிடைத்த விருதுகளின் எண்ணிக்கை விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;• இந்தி - 15 &lt;br /&gt;&lt;br /&gt;• மலையாளம் - 10&lt;br /&gt;&lt;br /&gt;• பெங்காலி - 6&lt;br /&gt;&lt;br /&gt;• கன்னடா - 3&lt;br /&gt;&lt;br /&gt;• தமிழ் - 3&lt;br /&gt;&lt;br /&gt;• தெலுங்கு - 2&lt;br /&gt;&lt;br /&gt;இந்தி சினிமாவுக்கு பிறகு, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் வெளியாவது, தமிழில் தான். அத்துடன், தமிழ் சினிமா வர்த்தகமும் முன்னணியில் இருப்பது கவனத்துக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2009 ஆம் ஆண்டு கோடம்பாக்கத்தில் இருந்து வெளியான படங்களின் எண்ணிக்கை 131.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், 2009-ம் ஆண்டின் இந்திய தேசிய திரைப்பட விருதுகளில் வெறும் 'மூன்றினை' மட்டுமே தமிழ் சினிமா பெற்றிருக்கிறது. அதுவும், ஒரே படத்துக்காக (பசங்க).&lt;br /&gt;&lt;br /&gt;இது எதைக் காட்டுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;விவாதிப்போம் வாருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-560427640795096037?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/560427640795096037/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_4793.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/560427640795096037'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/560427640795096037'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_4793.html' title='எங்கே போகிறது தமிழ் சினிமா..?'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgbkIwX6nI/AAAAAAAAEtU/Bdf_qMqrFuA/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-1355460501978634850</id><published>2010-09-20T19:24:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:22.043-07:00</updated><title type='text'>பெண்கள் ஏன் அதிகம் செலவழிக்கிறார்கள் தெரியுமா?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgZUSQx-jI/AAAAAAAAEtM/DPPCK_sahVE/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 175px; height: 175px;" src="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgZUSQx-jI/AAAAAAAAEtM/DPPCK_sahVE/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5519189179632843314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;லண்டன்: ஜவுளிக் கடைக்கோ, ஷாப்பிங்குக்கோ மனைவிமார்கள் கூப்பிட்டால் கணவர்மார்கள் 'பீதி' அடைவது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பொதுவானதுதான். ஆனால் ஏன் பெண்கள் பெரும் செலவாளிகளாகவும், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் பிரியம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு சுவாரஸ்யமான தகவலை வெளிக்கொணர்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது மாதந்தோறும் பெண்களுக்கு வரும் மாதவிடாய் எனப்படும் மென்சஸ்தான் இதற்கு முக்கியக் காரணமாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது மென்சஸ் சமயத்தில் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் பதட்டமே ஷாப்பிங் ஆர்வத்தை பெண்களிடையே அதிகரிக்கிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதவிடாய் காலத்தில், எந்தக் கட்டத்தில் இருக்கிறார்களோ அதைப் பொருத்தே அவர்களின் செலவு செய்யும் பாங்கும் இருக்கும் என்று ஹெர்ட்போர்டு பல்கலைக்கழக மனோதத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஷாப்பிங் செய்வதற்கும், பெண்களின் ஹார்மோன் மாற்றங்களுக்கும் தொடர்பு இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து புகழ்பெற்ற நூல் ஆசிரியர் கேரன் பைன் கூறியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் தங்கள் நடவடிக்கைகளின் மாற்றத்திற்கு காரணம் என்னவென்பதைத் தெரிந்து கொள்வது அவர்களுக்கு நல்லது. இதன் மூலம் அவர்கள் செலவு செய்வதைக் கட்டுப்படுத்த முடியும். இனி பெண்கள் மென்சஸ் வரும் முன் ஆடைகள் வாங்கச் செல்ல வேண்டாம் என்று முடிவு எடுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால், மென்சஸ் சமயத்தின்போதுதான் அவர்களுக்கு அதிக அளவில் செலவழிக்கத் தோன்றும் என்று அவர் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;18 வயது முதல் 50 வயது வரை உள்ள 450 பெண்களிடம் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவிற்கு வந்துள்ளனர். அவர்கள் அந்த பெண்களிடம் முந்தைய வாரத்தில் அவர்கள் செலவு செய்தது பற்றியும், அவர்களுடைய கடைசி 'பீரியட்ஸ்' தேதி பற்றியும் கேட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;இதில் கலந்து கொண்ட பெண்களின் செலவழிக்கும் பழக்கம் மாதம் முழுவதும் மாறிக் கொண்டிருந்தது. மென்சஸ் வரும் முன் இருக்கும் பதட்டத்தில் பெண்கள் ஏராளமான ஆடம்பரப் பொருட்களை வாங்குகின்றனர். இந்த பதட்டம் குறைந்ததும் அவர்கள் குறைந்த அளவிலேயே செலவு செய்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே, 'பீரியட்ஸ்' சமயத்தி்ல 'பர்ச்சேஸு'க்குப் போவதைத் தவிர்த்தால் 'பர்ஸ்' தப்பும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-1355460501978634850?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/1355460501978634850/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_6137.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/1355460501978634850'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/1355460501978634850'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_6137.html' title='பெண்கள் ஏன் அதிகம் செலவழிக்கிறார்கள் தெரியுமா?'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJgZUSQx-jI/AAAAAAAAEtM/DPPCK_sahVE/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-24156739935235574</id><published>2010-09-20T06:15:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:22.065-07:00</updated><title type='text'>உங்கள் கணவர் என்ன வேலை செய்தால் வெற்றி பெறுவார்?</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJde8yk8dEI/AAAAAAAAEtE/Inekhi8GZSg/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 277px;" src="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJde8yk8dEI/AAAAAAAAEtE/Inekhi8GZSg/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518984266827723842" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எல்லா பெண்களுமே தங்களுக்கு வரப்போகும் கணவர் என்ன தொழில் செய்கிறார் என்பதை அறிந்துகொள்ள ஆவலாக இருப்பார்கள். இன்றைய சூழலில் ஆண்களும் தங்களுக்கு வரும் மனைவி வேலை செய்கிறவளாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆண்- பெண் இருவருக்குமே திருமணப் பேச்சு ஆரம்பித்தவுடன் முதல் எண்ணம் இதுவாகத்தான் இருக்கும். இதற்கு அவரவர் ஜாதகத்தில் 4-ஆம் பாவத்தை வைத்து வரப்போகும் கணவரோ மனைவியோ என்ன தொழில் செய்வார் என்று ஓரளவு தெரிந்து கொள்ளலாம். 4-ஆம் அதிபதி சுப பலம் பெற்று பலமாக இருந்தால், கீழே சொல்லப்பட்டுள்ள வேலைகளில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள் என்றும்; 4-ஆம் அதிபதி பலம் குறைந்திருந்தால் அந்தந்த வேலையில் குறைவான சம்பாத்தியம் உடையவர் என்றும் அறிந்து கொள்ளலாம். இனி 12 ராசியினருக்கும் தங்கள் வாழ்க்கைத் துணை என்ன வேலை செய்வார் என பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேஷம்&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் வாழ்க்கைத் துணை நீர் சம்பந்தமான தொழில், பெட்ரோல் சம்பந்தமான தொழில், ஹோட்டல் நடத்துவது, கப்பல் தொழிலில் வேலை, மின் சம்பந்தமான தொழில், கடல் ஆராய்ச்சி, குழாய், கிணறு தோண்டுவோர், பால், காய்கறிகள் சம்பந்தமான தொழில், முத்து, சுற்றுலா, துணி வியாபாரம், உப்பு போன்ற தொழில்களைச் செய்வார். மேஷ ராசிக்கு சந்திரன் பலமாக இருந்தால் இத்தொழில்களில் மேன்மையான புகழ், செல்வத்தோடு பணி புரிவார். சந்திரன் பலம் குன்றி இருந்தால் குறிப்பிட்ட தொழில்களில் சுமாரான வேலை கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரிஷபம்&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு சூரியன் பலமாக இருந்தால் அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மருத்துவம் சார்ந்த தொழில், தந்தையின் பரம்பரைத் தொழில்,  வனத்துறையில் வேலை, இயக்குநர், கவுன்சிலர், ஷேர் புரோக்கர்கள், கொள்கலன்கள், பேக்கிங் உபகரணங்கள் விற்பனை போன்ற தொழில்களைச் செய்வர். சூரியனின் பலத்தைப் பொறுத்து பணியில் ஏற்ற- இறக்கம் இருக்கும். பணியில் கண்டிப்புடன் இருப்பர். அநேகமாக ஒரே இடத்தில் செய்யும் வேலை சிலருக்கு அமையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மிதுனம்&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர், ஆசிரியர், கணக்காளர், ஜோதிடர், அச்சு சம்பந்தமான தொழில், மொழிபெயர்ப்பாளர், வணிகர், புரோகிதர், புரோக்கர், நூல் வெளியீட்டாளர், ஆடிட்டர்கள் போன்ற தொழிலில் இருப்பர். இவர்கள் சொந்த இடத்திலிருந்து அவ்வப்போது சிறிது அலைந்து வேலை பார்ப்பர். புதன் பலமாக இருப்பது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடகம்&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளி, பட்டு, ஆபரணங்கள், ஓவியம், இசை சம்பந்தப்பட்ட தொழில், வரவேற்பாளர், பாடகர், ரசாயனப் பரிசோதகர், பால், ஜாம், ஊறுகாய் உற்பத்தியாளர், போக்குவரத்து ஏஜெண்ட், கட்டடம் சம்பந்தமான தொழில் அமையும். சுக்கிரனைப் பொறுத்து தொழிலில் மேன்மை வேறுபடும். இவர்கள்  ஓயாமல் அலைந்து கொண்டே பணிபுரியும் நிலை இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிம்மம்&lt;br /&gt;&lt;br /&gt;அறுவை சிகிச்சை மருத்துவர், ஆய்வாளர், ராணுவம் சம்பந்தப்பட்ட தொழில், பல் மருத்துவர், கப்பல் தொழிலாளர், அணைக்கட்டு, நீர் விநியோகப் பணியாளர்கள் போன்ற வேலைகளைச் செய்வர். மேலும், தோல் பதனிடும் இடத்திலும் இரும்புக் கிடங்கு போன்ற இருட்டு- பள்ளம் நிறைந்த இடங்களிலும் தொழில் புரிவர். செவ்வாயின் பலத்தைப் பொறுத்து வேலையில் மேன்மை அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;கன்னி&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர், நீதிபதி, பேச்சாளர், அரசியல்வாதி, விளம்பரத் தொழில், கட்டடத் தொழில், போக்குவரத்துத் தொழில், மருந்துகள் சம்பந்தமான தொழில், பள்ளி, கல்லூரி, தேவாலயங்கள் போன்ற இடங்களில் வேலை செய்வர். குருவின் பலத்தைப் பொறுத்து பணியில் உயர்வு- தாழ்வு அமையும். பணியில் கண்டிப்பாக நடந்துகொள்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;துலாம்&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவர், துப்பறியும் நிபுணர், கைரேகை நிபுணர், பழைய பொருட்கள் சேகரிப்போர், வேளாண்மைத் தொழில், பாலம் கட்டும் தொழில், ராணுவத் தொழில், சர்வேயர், நெருக்கமான- இருட்டான இடத்தில் பணி, பழைய- மறைவான கட்டடத்திலும் பணிபுரிவர். சனியின் பலத்தைப் பொறுத்து மேன்மை அமையும். மிகவும் தேவையான பணி நேரத்தில் மட்டுமே அலைச்சல் மேற்கொள்வர்.&lt;a href="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJdetBM-5dI/AAAAAAAAEs8/AH0nBEU5wVo/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 234px;" src="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJdetBM-5dI/AAAAAAAAEs8/AH0nBEU5wVo/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518983995875845586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விருச்சிகம்&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் அறிஞர்கள், சுரங்கப் பொருட்கள் சம்பந்தமான வேலை, தோல் நோய் மருத்துவர், ரசாயனம், மெக்கானிகல் இஞ்ஜினீயர், மின்சாரம் சம்பந்தமான அனைத்து தொழில்கள், ஏற்றுமதியாளர்கள், வண்ணம் சம்பந்தமான தொழில் போன்றவற்றை மேற்கொள்வர். சனியின் பலத்தைக் கொண்டு உயர்வு- தாழ்வு அமையும். இவர்கள் அமைதியாக இருப்பதுபோல் தோன்றினாலும், உள்ளுக்குள் படபடப்பாகப் பணிபுரிவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தனுசு&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல்வாதி, அமைச்சர், பேராசிரியர், சினிமா நடிகர், மது சம்பந்தமான தொழில், மருந்து, எண்ணெய், வாசனைப் பொருட்கள், மீன் கண்காட்சி சாலையில் வேலை, துறைமுகத் தொழிலாளர், கைரேகை, எண் கணித வல்லுநர்,  கப்பலில் வேலை, சாது, சந்நியாசி என்று வாழ்க்கை நிலை அமையும். பொதுவாக இவர்கள் ஈரம் சூழ்ந்த இடங்களில் பணிபுரிவர் அல்லது பதனிடும் இடங்களில் பணிபுரிவர். குருவின் பலத்தைக் கொண்டு ஏற்ற- இறக்கம் உண்டாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகரம்&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸ் துறையில் வேலை, ரயில்வேயில் வேலை, விளையாட்டு சம்பந்தமான பொருட்கள் விற்பனை, சமையல் கலை, குத்துச்சண்டை வீரர், தொழிற்சாலைகளில் பணி, அறுவை சிகிச்சை மருத்துவர், ராணுவத்தில் வேலை, கடிகாரம் சம்பந்தமான வேலை, தீப்பெட்டி, பட்டாசு சம்பந்தமான தொழில், பெரிய வாகனங்கள் சம்பந்தமான தொழில் புரிவர். செவ்வாயின் பலத்தைப் பொறுத்து தொழில் நிலை அமையும். இவர்கள் பொதுவாக வெப்பமான இடத்தில் தொழில் புரிவர். தொழிலில் கடுமையாக நடந்து கொள்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;கும்பம்&lt;br /&gt;&lt;br /&gt;தோட்டம் சம்பந்தமான தொழில்கள், பேங்க் வேலை, விவசாயிகள், டிரைவர்கள், சினிமாவில் வேலை, வண்ணம் பூசுபவர், பூக்கடை வைத்திருப்போர், கண்ணாடி, பிளாஸ்டிக், பட்டு, பருத்தி, பால், ஐஸ்கிரீம், காய்கறி, பெட்ரோல், அரிசி விற்பனை போன்ற தொழில் செய்வர். (இந்த ராசிப் பெண்கள் பெரும்பாலும் பெண்கள் சம்பந்தமான ஆடம்பரப் பொருட்களை விற்பனை செய்பவராக அமைவர்) பணியில் உறுதியான மனப்பான்மை கொண்டவர்கள். சுக்கிரனின் பலம் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;மீனம்&lt;br /&gt;&lt;br /&gt;நாளிதழ், வார இதழ் ஆசிரியர்கள், தூதரக அலுவலர், தபால்காரர், விற்பனையாளர், புகைப்படக் கலைஞர், பேருந்துத் தொழிலாளர், மொழிபெயர்ப்பாளர், வழிகாட்டி, வழக்கறிஞர், காரியதரிசி, மூக்கு கண்ணாடித் தொழில், பச்சை நிறம் கொண்ட பொருட்கள், ரயில்வேயில் வேலை போன்ற தொழிலைச் செய்வார். புதனின் வலு முக்கியம். இவர்கள் எப்போதும் அலைந்து திரிந்து கொண்டே பணி புரிவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் ஜாதகத்தைக் கொண்டு பலன் காணும்போது அவர்கள் கணவரின் வேலைக்குரிய கிரகம் பலமிழந்து இருந்தால், அந்த குறிப்பிட்ட கிரகத்திற்குரிய பரிகாரம் செய்தால் வேலையில் நிறைவும் பணவரவும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்- பெண் இருபாலருக்கும் சம்பந்தப்பட்ட கிரகம் 9, 12-ஆம் இடங்களுடன் சம்பந்தப்பட்டாலும்; சர ராசிகள் சம்பந்தப்பட்டாலும் வெளியூர், வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தப்பட்ட கிரகம் சனியின் ராசியிலோ சனியின் அம்சத்திலோ சனியின் பாதத்திலோ இருந்து, நீசமாகியும் கெட்டும் பலமிழந்தும் இருந்தால் துணைவர் வேலைக்குச் செல்லாமல் தூங்கியே பொழுதைக் கழிப்பார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-24156739935235574?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/24156739935235574/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_8287.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/24156739935235574'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/24156739935235574'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_8287.html' title='உங்கள் கணவர் என்ன வேலை செய்தால் வெற்றி பெறுவார்?'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJde8yk8dEI/AAAAAAAAEtE/Inekhi8GZSg/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-2126119347981415822</id><published>2010-09-20T05:58:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:22.094-07:00</updated><title type='text'>தேடி வரும் பகையை ஓட வைக்கும் பகளா தந்திரம்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJdeHZEK4tI/AAAAAAAAEs0/H6JvS0RYZHo/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 393px;" src="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJdeHZEK4tI/AAAAAAAAEs0/H6JvS0RYZHo/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518983349446304466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நம் வாழ்க்கைப் பாதையில் நமது எதிரிகளைப் பற்றி ஆராய்ந்து பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும். வேத சாஸ்திரங்களில் உத்தியோக சத்ரு, பஹிர் சத்ரு, அந்தர் சத்ரு என்று பிரித்துச் சொல்லி இருக்கிறார்கள். சத்ரு என்ற வார்த்தையை சத்+ரு என்று பிரிக்கலாம். சத்- நம்மிடம் உள்ள பொருட்களை- சத்துகளை உறிந்து கொண்டு, ரு- நம்மைக் கடனாளி ஆக்கிவிட்டுப் பிரிந்து சென்று விடுபவர் என்று இதற்குப் பொருள். தொழிற்கூட்டாளியாகச் சேரும் மனிதர்கள் லாபம் வரும் போது சேர்ந்திருந்து, நஷ்டம் வரும் என்று தெரிந்தால் பொருளைப் பிரித்துக்கொண்டு சென்றுவிடுவது. கடனை ருணம் என்றும் பிரிவோரை சத்ரு என்றும் பொருள்படக் கூறி உள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதன் எதிரிகளைச் சந்திப்பதும், எதிரியாக ஆகி விடுவதும் அவரவர் ஜாதக நிலைப்படிதான். லக்ஷ்மீதரரின் வாக்கியத்தில், "ஆறாம் இடத்தில் நீசரும் சுபரும் கூடினால்கூட எதிரிகள் வலுப்பர்' என்பது குறிப்பிடத் தகுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பகையும் எதிரியும் சேரும் ஜாதகம்நல்ல பெயர், பட்டம், சமூக அந்தஸ்து, புகழ் ஆகியவற்றுக்கு ஒரு காரகனாக சந்திரன் விளங்கு வதால், 6-ல் சந்திரன் இருக்கப் பிறந்தவர் கள் ஜென்ம விரோதிகளை உடையவர்களாக விளங்குவர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆறாம் இடத்தில் செவ்வாய் இருக்கப் பெற்றவர்களுக்கு கொடுக்கல்- வாங்கலின் வழியாக எதிரிகள் ஏற்படுவார்கள். ஆனால் எதிர்ப்போரை விலகி ஓடச் செய்துவிடும் ஆற்றலையும் கொடுத்து விடுவார். அதேசமயம் கடகச் செவ்வாயானால் எதிரி வெற்றி பெற்று விட வாய்ப்பு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாம் இடத்தில் புதன் இருந்தால் தவளை தன்னுடைய வாயால் கெட்டது போன்று அதிகமாகப் பேசி, தேவையில்லாத ஒப்பந்தங் களைச் செய்துவிட்டு, தொழில் செய்யுமிடத்தில் எதிரிகளை உருவாக்கிக் கொண்டு அவஸ்தைப் படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டாம் இடத்தில் சனி இருக்க அதுவே மேஷமாகிவிட்டால், ஒரு பெரிய சண்டையின் வழியாக தொழிலில் எதிரிகளைச் சேர்த்துக் கொண்டு விலக முடியாமல் தத்தளிப்பார்கள். அதேசமயத்தில் ஆறாம் வீட்டில் சனி அமர்ந்து விட்டால் விரோதிகளை அடக்கும் ஆள்பலம், பணபலம் ஆகியவற்றைப் பெற்றி ருப்பார். ஆனால் ஆயுதங்களால் ஆபத்து வரலாம். சற்று கவனமாக இருத்தல் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் ஜாதகத்தில் புதன் நீசமாகிவிட்டால், உறவினர்களையே எதிரிகளாக ஆக்கிக் கொள்வார். ஆனால் உச்சமாகவும் 2-க்குடைய வரோடும் சேர்ந்துவிட்டால் விரோதமே விருப்பமாக மாறிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;8-ஆம் இடத்தில் செவ்வாய் வலுப்பெற்றால் சகோதரர்களின் உறவில் விரிசல் ஏற்படும். திருடர்களாலும் பகைவர்களாலும் தொழில் மட்டுமல்ல; வாழ்க்கைக் காலமே மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னிரண்டில் செவ்வாய் அமர, அவரோடு ஒரு பெண் கிரகம் கூடியிருந்தால், பெண்களே எதிரிகளாகி பொருட்களை அபகரித்துச் சென்றுவிடக்கூடிய காலகட்டம் உருவாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;4-ல் குரு இருக்க 6-ல் ஒரு பாப கிரகம் நீசமடைந்து விட்டால், ஜாதகரை நல்ல மனிதராக வாழ வைப்பார். ஆனால், எதிரிகளால் தொல்லைகள் தொடர்ந்து வந்து நிம்மதி யைக் கெடுத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாம் இடத்தில் குரு வக்ரகதி அடைந்து லக்னத்தில் சுபர்கள் இருப்பினும், மறைமுகப் பகைவர்கள் நிம்மதியைக் கெடுக்கக் கூடிய சில்மிஷங்களைச் செய்ய வைப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5-ல் சனி அமர்ந்திருக்க 6-ல் சுபர் இருப்பினும், புத்தி மந்தத்தையும் பகைவர்களால் மீளாத துயரை யும் உண்டாக்கித் தருவார். சில நேரங்களில் மனநிலையும் தொழில் எதிரியால் பாதிப்ப டையக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னிரண்டில் சனி இருந்தாலும் 6-ல் ராகு- கேது அமர்ந்திருந்தாலும் ஜாதகருக்குப் பகைவர் தொல்லையே பழக்கத்திற்கு வந்து விடும். இதனால் கோர்ட், வக்கீல் செலவு, அவமானம் ஆகியவை கடுமையாக வந்து சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ராகு ஏழில் அமர்ந்திருக்க, 6-ல் சுபர்கள் இருந்தாலும், அந்நியர்களது கூட்டுத் தொழில் வழியாகப் பிரச்சினை ஏற்பட்டு எதிர்ப்புகள் உருவாகும். இதனால் பெருத்த பொருட் செலவும் வரக்கூடும். மேலும், "10-ஆம் ராகு படிந்து செல்வோர்க்கும் பகை தருவார்' என்பது ஜோதிட விளக்கம். அதேசமயம் கேது 6-ல் அமர்ந்திருக்கும்போது 10-ல் ஒரு சுபர் அமர்ந்தால் எதிரியையும் தந்து எதிர்க்கும் துணிவையும் தருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;"மனித வாழ்க்கை என்பது ரோஜா மலர் தூவிய படுக்கை அறை அல்ல; அது ஒரு போர்க்களம் போன்றது' என ஒரு தத்துவஞானி கூறினார். அந்த போர்க்களத்தில் புதிது புதிதாய் எதிரிகள் முளைக்கத்தான் செய்வார் கள். ஜனன ஜாதக- தசா புக்திகளை ஆராய்ந்து, எதிரிகள் வரும்முன் காப்போம். பகளா தேவியின் கருணையை நாடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பகளா தந்திரப் பிரயோகம்: &lt;br /&gt;&lt;br /&gt;தசமகா வித்யை என்னும் சக்தி அவதார நூலில் உள்ளவாறு பத்து அவதாரங்களில் எட்டாவது சக்தியாக வருபவளே ஸ்ரீ பகளாமுகீ தேவி.&lt;br /&gt;&lt;br /&gt;ருத்ரயாமள தந்திரத்தில் எதிர்ப்புகளை விலக்கிவிடும் பிரம்மாஸ்திரம் போன்ற ஸ்ரீ பகளாமுகி தந்திரம் இதுவே. மூவுலகங் களிலும் பிரசித்தி பெற்ற இந்த வித்தை லட்சுமி கடாட்சம், புத்திர- பௌத்திரர்கள், எதிரி விலக்கம் ஆகிய நற்பலன்களைத் தரக்கூடிய ஆற்றல் வாய்ந்தது. இதை உபதேசம் பெற்றுவிட்டால் கண்ட நபர்களிடம் தராமல் வாக்கு, உடல் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விதியில் உள்ளது. மொத்தம் பதினேழு அனுவாகங்களில் வெவ்வேறு சௌபாக்கியப் பலன்கள் வருகின்றன. அவற்றில் பத்தாவது அனுவாகமாக வருவதே இந்த எதிரி விலகும் தந்திரம். இதன் மூலத்தையும் துதியையும் யந்திர வரைவையும் எழுதி (தாமிரத் தகட்டில்) தாயத்து போன்று கட்டிக் கொள்வதால் &lt;br /&gt;&lt;br /&gt;அரசன், மோசமான எதிரிகள், பாம்பு, விலங்குகள் மயங்கி ஓடிவிடும் என்பது அனுபவம். நன்மைக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். யாருக்கும் கெடுதல் நினைத்தல் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் குளித்தவுடன் மடியுடுத்தி மூன்று முறை பகளாமுகியின் ப்ராத ஸ்மரணம் கூற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ராத: ஸ்மராமி பகளாம் கமலாய தாக்ஷீ ம்&lt;br /&gt;&lt;br /&gt;இந்து ப்ரசன்ன வதனாம் பரிவீத வர்ணாம்/&lt;br /&gt;&lt;br /&gt;பாணித் வயேன தததீம் ச சீலாம் கிரீந்த்ரே&lt;br /&gt;&lt;br /&gt;த்வேஷ்யாம்ச வாஸன கதாம் மதமத்த சித்தாம்//&lt;br /&gt;&lt;br /&gt;ப்ராதர் நமாமி பகளாமுகீ தர்ம மூர்த்திம்&lt;br /&gt;&lt;br /&gt;காருண்ய பூர்ண நயனாம் முகமந்த ஹாஸாம்/&lt;br /&gt;&lt;br /&gt;இந்து ப்ரஸன்ன வதனாம் பரிமீத வர்ணாம்&lt;br /&gt;&lt;br /&gt;பீதாம்பராம் ருசிர கஞ்சுக சோபமானாம்//&lt;br /&gt;&lt;br /&gt;ப்ராதர்ப் பஜாமி யஜமான ஸீ சௌக்யதாத்ரீம்&lt;br /&gt;&lt;br /&gt;காமேஸ்வரீம் கனக பூஷண பூஷிதாங்கீம்/&lt;br /&gt;&lt;br /&gt;கம்பீரதீர ஹ்ருதயாம் ரிபு புத்தி ஹந்த்ரீம்//&lt;br /&gt;&lt;br /&gt;ஸம்பத் ப்ரதாம் ஜகதி பாத ஜுஷாம் நராணாம்/&lt;br /&gt;&lt;br /&gt;ச்லோகத் ரயமிதம் புண்யம் பகளாயாஸ்து ய: படேத்&lt;br /&gt;&lt;br /&gt;ரிபுபாதாதி பிர்முகதோ லக்ஷ்மீ ஸ்தை யர்யம் அவாப்னுயாத்//'&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து, செந்நிறப் பட்டில் பகளாமுகி யின் யந்திர வரைவை வைத்து, ஐங்காயம் தடவி பூஜை உபசாரங்கள் செய்து, ஏழு முறை முக்கியமான பகளா தந்திர ஸ்துதி கூற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாதர்ப் பைரவி பத்ரகாளி விஜயே&lt;br /&gt;&lt;br /&gt;வாராஹி விஸ்வாக்ரயே&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீவித்யே ஸமயே மஹேசி பகளே&lt;br /&gt;&lt;br /&gt;காமேசி ராமே ரமே/&lt;br /&gt;&lt;br /&gt;மாதங்கி த்ரிபுரே பராத் பரதரே&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வர்க்காப வர்க்கப்ரதே&lt;br /&gt;&lt;br /&gt;தாஸோஹம் சரணாகத: கருணயா:&lt;br /&gt;&lt;br /&gt;விச்வேச்வரி த்ராஹி மாம்//'&lt;br /&gt;&lt;br /&gt;மூலமந்திரம்&lt;br /&gt;&lt;br /&gt;"ஓம் ஹ்ரீம் பகளாமுகி சர்வதுஷ்டானாம்&lt;br /&gt;&lt;br /&gt;வாசம் முகம் ஸ்தம்பய &lt;br /&gt;&lt;br /&gt;ஜிஹ்வாம் கீலய கீலய புத்திம்&lt;br /&gt;&lt;br /&gt;நாசய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா.'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-2126119347981415822?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/2126119347981415822/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_6645.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/2126119347981415822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/2126119347981415822'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_6645.html' title='தேடி வரும் பகையை ஓட வைக்கும் பகளா தந்திரம்!'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJdeHZEK4tI/AAAAAAAAEs0/H6JvS0RYZHo/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-7912279211337660647</id><published>2010-09-20T04:08:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:22.117-07:00</updated><title type='text'>தெரிந்தே கெடுத்த நயன்தாரா!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJdBSk62IVI/AAAAAAAAEss/dn5W8SIxRNc/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJdBSk62IVI/AAAAAAAAEss/dn5W8SIxRNc/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518951655769776466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பிரபு தேவா - நயன்தாராவின் 'கள்ளக் காதல்', சட்ட விரோதமான கல்யாண ஏற்பாடுகள் கோடம்பாக்கத்தில் பெரும் அதிருப்தியையும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திருமணம் நடக்காமல் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் பல்வேறு அமைப்புகள் மும்முரமாக இறங்கியுள்ளன. பல்வேறு மகளிர் அமைப்புகள் ரம்லத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஒருவேளை நயன்தாராவுடன் ரம்லத் சமரசமாகப் போனாலும், சமூக விரோதமான பலதார மணத்தை ஆதரிக்கும் இந்தத் திருமணத்தை எதிர்த்து வழக்குத் தொடரத் தயாராக உள்ளன. எனவே ரமலத்தை விவாகரத்து செய்யத் தயாராகிறாராம் பிரபு தேவா.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம் பிரபுதேவா - ரம்லத் திருமணம் நடந்த போது கிளம்பிய பெரும் எதிர்ப்பைச் சமாளித்து அவர்களுக்கு ஆதரவாக இருந்த விவிஐபிகள் நயன்தாரா மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சூப்பர் ஸ்டார் ரஜினியின் தளபதி படத்தில் ஒரு குரூப் டான்ஸராக பணியாற்றிவர்தான் ரம்லத். இவர் மீது காதல் கொண்ட பிரபு தேவா, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்தத் திருமணத்தை அவரது பெற்றோர் சில ஆண்டுகள் வரை ஏற்கவே இல்லை. அவர்களின் புறக்கணிப்பைத் தாங்காத பிரபு தேவா, ரம்லத்தை ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் மனம் உடைந்த ரம்லத்துக்கு ரஜினிகாந்த்தும், அவரது மனைவி லதா ரஜினியும்தான் ஆதரவு கூறி தைரியம் அளித்தனர். பிரபுதேவாவை அழைத்துப் பேசி தனிக் குடித்தனம் நடத்துமாறு அட்வைஸ் கொடுத்து தனியாக வீடு பார்த்தும் கொடுத்தனராம். மேலும் லதா ரஜினி தனது ஆஸ்ரம் பள்ளியில் ரம்லத்துக்கு ஆசிரியை வேலையையும் வழங்கி உதவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காலகட்டத்தில் இயக்குநர் பி வாசு, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட சிலர் மட்டுமே அப்போது பிரபுதேவாவுக்கு ஆதரவளித்து வந்தனர். தொடர்ந்து வாய்ப்புகளையும் வழங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ரஜினி போன்ற திரையுலகப் பெரியவர்ள் பிரபுதேவாவுக்கும், அவரது திருமணத்திற்கும் ஆதரவாக இருப்பதைப் பார்த்த பிறகே பிரபுதேவா குடும்பத்தினர் இறங்கி வந்து கல்யாணத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டனராம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட 12 வருடங்கள் வரை மறைத்து வைத்திருந்த தனது திருமண வாழ்க்கையையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் பிரபு தேவா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழ்நிலையில்தான் நயன்தாரா - பிரபு தேவா காதல் வெளிச்சத்துக்கு வந்தது. விஷயம் தெரிந்ததும் பிரபுதேவாவை முதலில் கண்டித்தவர் ரஜினிதான் என்பது கோடம்பாக்கமே அறிந்த ரகசியம். அவரது அறிவுரைக்குப் பின் நயன் விஷயத்தில் ரொம்பவே அடக்கி வாசித்தார் பிரபு தேவா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனால் நயன்தாரா விடுவதாக இல்லை. இப்போதும் கூட, குறிப்பிட்ட அந்த இணைய தளத்தில் பிரபு தேவா பேட்டியை வெளியிட வைத்தவர் நயன்தாராதான். இந்தப் பேட்டிக்கு முன்தினம், நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு என்று செய்தி போட வைத்தார். அடுத்த நாளே, நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரபு தேவா சொன்னதாக பேட்டியையும் வர வைத்தார். காரணம், குறிப்பிட்ட அந்த செய்தியை எழுதிய நபர் நயன்தாராவுக்கு மிக நெருக்கமானவர், நயனின் சொந்த ஊர்க்காரரும் கூட," என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைய நிலவரப்படி, ரம்லத் சம்மதித்தாலும், இந்தத் திருமணம் எப்படியும் பிரச்சினைக்குள்ளாகும் என்பதால், 'பரஸ்பர விவாகரத்து' பெறும் முடிவுக்கு பிரபுதேவா குடும்பத்தினர் வந்திருப்பதாகவும், இதற்கு ஈடாக பெரும் தொகை மற்றும் பணத்தை ரம்லத்துக்கு நயன்தாரா தர சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபு தேவா - நயன்தாரா - ரம்லத் விவகாரத்தில் நடக்கிற வில்லங்க விவகாரங்களைக் கேள்விப்பட்ட ரஜினி மற்றும் நண்பர்கள், பெரும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-7912279211337660647?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/7912279211337660647/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_2882.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/7912279211337660647'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/7912279211337660647'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_2882.html' title='தெரிந்தே கெடுத்த நயன்தாரா!'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJdBSk62IVI/AAAAAAAAEss/dn5W8SIxRNc/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-7710972024534236990</id><published>2010-09-19T19:34:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:22.138-07:00</updated><title type='text'>முருகதாஸை தயாரிப்பாளராக்கிய ஹாலிவுட் நிறுவனம்!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJbI71-KrGI/AAAAAAAAEsk/XDgObhoPZHo/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 299px;" src="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJbI71-KrGI/AAAAAAAAEsk/XDgObhoPZHo/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518819323814784098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ட்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்தின் ஆசிய கிளை நிறுவனம் பாக்ஸ் ஸ்டார் இந்திப் படங்களைத் தயாரித்தும், ஹாலிவுட் படங்களை விநியோகித்தும் வருகிறது. உலகப் புகழ் பெற்ற இந்த நிறுவனம் இந்திப் படங்களைத் தொடர்ந்து தமிழ்ப் படங்களையும் தயாரிக்க முன்வந்திருக் கிறது. அதை ஒரு வெற்றிகரமான இயக்குநருடன் சேர்ந்து செய்தால் சரியாக இருக்கும் என்று யோசித்த போது, அவர்கள் தேர்ந்தெடுத்தது ஏ.ஆர். முருகதாஸை.&lt;br /&gt;&lt;br /&gt;"தீனா', "ரமணா', "கஜினி' என மூன்று தொடர் வெற்றிகளைக் கொடுத்த முருகதாஸ், தமிழ் "கஜினி'யை அமீர் கானை வைத்து இந்தியில் இயக்கினார். அந்தப் படம் 250 கோடி ரூபாய் வசூல் செய்து சரித்திரம் படைத்துள் ளது. இதையெல்லாம் கணக்கெடுத்து முருகதாஸை தனது தமிழ்ப்பட பார்ட்னராகத் தேர்வு செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முருகதாஸ் இதன் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி பாக்ஸ் ஸ்டார்ஸ் நிறுவனத்தோடு இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கக் களம் புகுந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தை முருகதாஸின் சீடர் சரவணன் இயக்குகிறார். ஜெய்- விமல் நடிக்கிறார்கள். நாயகி? தேடிக் கொண்டிருக்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;""திறமையான புதியவர்களை வைத்து முதலில் படம் தயாரிப்பது; பின்னர் பெரிய ஸ்டார்களை வைத்துப் படம் பண்ணுவதுதான் எங்கள் திட்டம். தமிழைத் தேடி ஹாலிவுட் வந்திருக்கிறது. தமிழ் இனி ஹாலிவுட்டை நோக்கிப் போகும்'' என்கிறார் முருகதாஸ்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-7710972024534236990?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/7710972024534236990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_3307.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/7710972024534236990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/7710972024534236990'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_3307.html' title='முருகதாஸை தயாரிப்பாளராக்கிய ஹாலிவுட் நிறுவனம்!'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJbI71-KrGI/AAAAAAAAEsk/XDgObhoPZHo/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-937418618719722698</id><published>2010-09-19T19:30:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:22.153-07:00</updated><title type='text'>எந்திரனுக்கு எதிராக குவாட்டர்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJbHp4DJGFI/AAAAAAAAEsc/4lj3LOhqPAs/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 238px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJbHp4DJGFI/AAAAAAAAEsc/4lj3LOhqPAs/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518817915623250002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;படத்திற்கு பின்னணி பேசும் கலைஞர்களிடம் விசாரித்தால் படத்தின் ரிசல்ட்டை துல்லியமாக சொல்லி விடுவார்கள். "சுப்ரமணியபுரம்', "நாடோடிகள்' வெற்றியை முன்கூட்டியே சொன்னவர்கள் டப்பிங் கலைஞர்கள்தான். இதனால் "எந்திரன் படத்திற்கு டப்பிங் பேசியவர்களை துரத்தி துரத்தி ரிசல்ட் கேட்டு வரு கிறார்கள் விநியோகஸ்தர்கள். மிக அதிகபட்சமாக 700 பேர் டப்பிங் பேசி யிருக்கிறார்கள் "எந்திர'னுக்கு. படத்தைப் பற்றி எல்லோருமே பாஸிடிவ் ரிசல்ட் தர... வியாபாரம் படு சூடு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இந்த மாதம் 24-ந்தேதி, 30-ந்தேதி, அடுத்த மாசம் 1-ந்தேதி... என மூணு விதமான ரிலீஸ் தேதி உலவிக் கொண்டிருக்கிறது. "சன்'னும் ரிலீஸ் தேதியைச் சொல்லாமல் சஸ்பென்ஸ் கூட்ட...&lt;br /&gt;தயாநிதி அழகிரி தரப்போ "எந்திரன்' ரிலீஸ் சமயத்தில் தங்களது "வ-குவாட்டர்-கட்டிங்' படத்தை கொண்டு வர ஜரூராக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கமல் படத்தில் சூர்யா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கமலின் "மன்மதன் அம்பு' படத்தில் ஒரு கெஸ்ட் ரோல். "சூர்யா' என்பது கே.எஸ்.ரவிக்குமார் சாய்ஸ். நண்பரான சூர்யாவிடம் பேசி சம்மதிக்க வைத்து விட்டாராம் தயாரிப்பாளர் உதயநிதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சனா யள் ஸ்ரேயா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கு ஹீரோயின் அஞ்சனாவுக்கு கோலிவுட் ஆசை. ஹைதராபாத்திலிருந்து கிளம்பி வந்து சென்னையில் டேரா போட்டார். சில படங்களுக்கான பேச்சுவார்த்தையும் நடந்த நிலையில்... "அந்தப் பொண்ணு தெலுங்கு ஹீரோ ராணாவை லவ் பண்ணுது. அதனால் அடிக்கடி ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டு ராணா வைத் தேடி காணாமப் போக வாய்ப்பிருக்கு' என ஸ்ரேயா ஆஃப் த ரெக்கார்டாய் அடித்து விட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹைதராபாத்துக்கு கிளம்பிப் போன அஞ்சனா தன் ஆசை ராணாவிடம் ஸ்ரேயாவைப் பற்றி போட்டுக் கொடுத்தாராம். விளைவு... ராணாவின் படத்தில் நடிக்கவிருந்த ஸ்ரேயாவின் வாய்ப்பை இலியானாவுக்கு கொடுத்திட்டாராம் ராணா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பட்ஜெட் அக்ரிமெண்ட்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அங்காடித் தெரு' வசந்தபாலனின் அடுத்த படம் "அரவாண்' பூஜை போட்டு ரெண்டு மாசமாச்சு. இன்னும் ஷூட்டிங் போகலை. சென்னைக்கு வெளியே பிரமாண்ட செட் போடும் வேலை மழையால் தாமதமாகி நடந்து கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"செட்டு ரெடியான பின்னாடி அங்க எடுத்துக்கலாம். மத்த போர்ஷனை எடுங்க' என தயாரிப்பாளர் சிவா சொல்ல... வசந்த பாலனோ "செட்டு ரெடியாகட்டும்' எனச் சொல்லிவிட்டார். படப் பிடிப்பு தாமதமானால் பட்ஜெட் எகிறும் என்பதால் "இதுக்குள்ள முதல் காப்பி எடுத்துத் தரணும். கூடுதல் செலவானா அது ஒங்க பொறுப்பு' என புது அக்ரிமெண்ட் போட்டாராம் சிவா. வசந்தபாலனும் ஓ.கே. சொல்ல... நிலைமை சுமுகமாகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய இடம் வெளியிடவிருக்கும் "பறவை' படத்தின் இசைவிழா சமீபத்தில் நடந்தது. விழாவில் கலந்து கொள்ள ஆசை ஆசையாக கிளம்பி வந்தார் படத்தின் நாயகி. ஆனால் இந்த நாயகி "மாமனார்- மருமகள்' படத்தில் மருமகளாக நடித்தவர். நிகழ்ச்சிக்கு வந்தால் மீடியாவெல்லாம் "மருமகள்' வேஷம் குறித்தே கேட்டு விழாவின் நோக்கத்தை திசைமாற்றுவார்கள் என்பதால் "விழாவுக்கு வர வேணாம்' என தடை போட்டுட்டாங்களாம் படக்குழுவினர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-937418618719722698?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/937418618719722698/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_7704.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/937418618719722698'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/937418618719722698'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_7704.html' title='எந்திரனுக்கு எதிராக குவாட்டர்!'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_g9OBy09avmo/TJbHp4DJGFI/AAAAAAAAEsc/4lj3LOhqPAs/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-8187314122547174045</id><published>2010-09-19T09:15:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:22.232-07:00</updated><title type='text'>இலங்கையில் 200 லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் - அமெரிக்கா</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJY6nRuOJeI/AAAAAAAAEsM/66_wuGrnDGk/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 140px; height: 143px;" src="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJY6nRuOJeI/AAAAAAAAEsM/66_wuGrnDGk/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518662839835698658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்காக கொழும்பில் வைத்து லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக முன்னரே அறிக்கைகள் வந்திருந்தன. ஆனால் இதை இலங்கை பலமாக மறுத்துவந்த நிலையில், லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் இலங்கையில் பயிற்சி எடுத்து வருவதாகவும், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல்களைத் தொடுக்கவென ஏற்கனவே 200 லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் தயாராக உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;அதோடு, மேற்படி பயிற்சி முகாம்கள் பற்றி வோஷிங்டன் கொழும்புக்கும் தகவல் கொடுத்துள்ளதாம். இந்தியா மீது தொடுக்கவுள்ள தாக்குதலில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளும் ஈடுபட்டார்கள் என்றால் அத்தாக்குதல் மிகவும் மோசமாக இருக்கும் என்று புதுடில்லியின் ஆய்வு எச்சரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜேர்மன் பேக்கரியில் நடந்த தாக்குதலில் பங்கெடுத்த, பெய்க் கொழும்புக்கு 2008 இல் சென்று அங்கு லஷ்கர் ஈ-தொய்பாவைச் சந்தித்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாம். மேலும் இவர் எத்தனை தடவைகள் அங்கு விஜயம் செய்தார் மற்றும் இலங்கையை பயிற்சித் தளமாக லஷ்கர் ஈ-தொய்பா பயன்படுத்துகிறதா என்பதைக் கண்டுபிடிக்கும் பொருட்டு விசாரணை நடந்துவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், இலங்கைக்கு அனுப்பி அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்கென அனுப்பப்பட்டுள்ள 200 பேரும் இதற்கெனத் தனியான பயிற்சிகளைப் பெற்றுள்ளதாக அமெரிக்க அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் தமது நிலைப்பாட்டை நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலும் பலப்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள் எனக் கூறியுள்ள அவ்வறிக்கை, நேபாளத்தைப் பயன்படுத்தி ஏற்கனவே இந்தியாவுக்குள் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்றாலும், தற்போது அவர்களின் புது இலக்காக மாலைதீவும் சேர்ந்துள்ளதாகக் கூறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வறிக்கை இவ்வாறிருக்க, லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினருக்கு பயிற்சி அளித்ததில் விடுதலைப் புலிகளுக்கு எவ்வித சம்பந்தமும் இருக்கவில்லை என்று இந்திய மஹாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் போலீஸ் தெரிவித்துள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-8187314122547174045?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/8187314122547174045/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/200_19.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/8187314122547174045'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/8187314122547174045'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/200_19.html' title='இலங்கையில் 200 லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் - அமெரிக்கா'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJY6nRuOJeI/AAAAAAAAEsM/66_wuGrnDGk/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-4387602254422106344</id><published>2010-09-19T02:06:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:22.248-07:00</updated><title type='text'>எந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டிபோட்டு ஏறிய ரஜினி ரசிகர்கள்!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJXTN9wjY3I/AAAAAAAAEsE/qgE18cCUy08/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJXTN9wjY3I/AAAAAAAAEsE/qgE18cCUy08/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518549155282379634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எந்திரன் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்காக ரஜினி ரசிகர்கள் கோயில்களில் வேண்டுதல், அன்னதானம், நற்பணிகள் என கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்திரன் ட்ரைலரையே யானை மீது ஊர்வலமாகக் கொண்டுபோய் கொண்டாடியவர்கள் ரசிகர்கள். இந்த நிலையில், இந்தக் கொண்டாட்டங்களையெல்லாம் மிஞ்சிவிட்டது வேலூர்  மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் என்.ரவி தலைமையில் ரசிகர்கள் மேற்கொண்ட 'முழங்கால் நடைப் பயணம்'.&lt;br /&gt;&lt;br /&gt;சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் தலைவர்  சூப்பர் ஸ்டார் நடித்த எந்திரன் திரைப்படம் உலகளாவிய மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்று வேண்டியபடி சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலின் 1305 படிகளில் முட்டி போட்டபடி நடந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று (18-9-10) காலை நடந்த இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான ரசிகர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் மலைக் கோயிலில் உள்ள பெருமாள் மற்றும் தாயருக்கு மண்டல அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடத்தினர் ரசிகர்கள். படத்துக்கு ஏற்பட்டுள்ள திருஷ்டியைக் கழிக்க சிறப்பு பூஜையும் நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து சோளிங்கர் என் ரவி கூறுகையில், "உலக சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினியின் எந்திரன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தலைவரின் வெற்றி மகுடத்தில் கோஹினூர் வைரமாக மின்ன வேண்டும் என்பதற்காக நாங்கள் நடத்திய சிறப்பு பூஜை இது...." என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-4387602254422106344?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/4387602254422106344/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/1305_19.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/4387602254422106344'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/4387602254422106344'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/1305_19.html' title='எந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டிபோட்டு ஏறிய ரஜினி ரசிகர்கள்!'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_g9OBy09avmo/TJXTN9wjY3I/AAAAAAAAEsE/qgE18cCUy08/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-801691056060993984</id><published>2010-09-19T02:04:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:22.262-07:00</updated><title type='text'>டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJXShgTlF4I/AAAAAAAAEr0/fRtmSBhP5pY/s1600/1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 170px;" src="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJXShgTlF4I/AAAAAAAAEr0/fRtmSBhP5pY/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518548391461984130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முன்னாள் உலக அழகியும், நடிகையுமான லாரா தத்தாவை, பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி விரைவில் திருமணம்  செய்யவுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மகேஷ் பூபதி முன்பு ஸ்வேதா ஜெய்சங்கரை மணந்தார். இந்தத் திருமணம் சமீபத்தில் முறிவடைந்தது. முறைப்படி இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்போது லாரா தத்தாவை மகேஷ் பூபதி மணக்கவுள்ளாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வேதாவை பிரியும் முன்பாகவே லாராவுடன் மகேஷ் பூபதிக்கு காதல்  மலர்ந்ததாக செய்திகள்  வெளியாகின. இருப்பினும் அதை பூபதியும், லாராவும் மறுத்து வந்தனர். இந்த நிலையில் இப்போது பூபதி விவாகரத்து செய்து கொண்டதைத் தொடர்ந்து லாராவை மணக்க முடிவு செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான நிச்சயதார்த்த நிகழ்ச்சி நியூயார்க் நகரில் வைத்து நடந்துள்ளது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போது மகேஷ் பூபதியுடன் லாரா தத்தாவும் உடன் இருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;தனது நிச்சயதார்த்தத்தை உறுதி செய்துள்ள பூபதி திருமணம் விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-801691056060993984?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/801691056060993984/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_3392.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/801691056060993984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/801691056060993984'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_3392.html' title='டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை மணக்கிறார் லாரா தத்தா'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJXShgTlF4I/AAAAAAAAEr0/fRtmSBhP5pY/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-1933129508732048065</id><published>2010-09-18T22:42:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:22.281-07:00</updated><title type='text'>காஷ்மீர் கலவரம்! டெல்லியின் பொய் முகம்! -ஏ.எஸ்.பன்னீர்செல்வன்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJWjDzylT_I/AAAAAAAAErs/NHv2_rnJGKI/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 359px;" src="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJWjDzylT_I/AAAAAAAAErs/NHv2_rnJGKI/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518496204249714674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பனிப்பிரதேசமும் பற்றி எரிய முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கானப் போராட்டம். கடந்த 3 மாதமாக ஸ்ரீநகர் எரிகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு என்பது அரசியல்ரீதியான சிக்கலுக்குரிய இடம்.  அங்குதான் இப்போது போராட்டங்கள் தீவிரமாகி, அரசாங்கத்தால் கலவரம் என வர்ணிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1991-க்குப் பிறகு முழு பள்ளத்தாக்கும் சிக்கலுக்குள்ளாகியிருப்பது இப்போதுதான். அதேநேரத்தில்  முதன்முறையாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும்தான் பிரச்சினை பெரிதாக உள்ளது. காஷ்மீரின் மற்ற இரு பகுதிகளான லடாக்கிலோ ஜம்முவிலோ  இதன் தாக்கம் இல்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இளைஞர்களும் பெண்களும் வீதியில் இறங்கி, ராணுவத்தினர் மீதும் துணை ராணுவத்தினர் மீதும் கற்களை வீசுகிறார்கள். செருப்புகளால் அடிக்கிறார்கள். ராணுவத் துப்பாக்கிகளிலிருந்து தவறிப் பாயும் தோட்டாக்களால் ஒவ்வொரு நாளும் 5 முதல் 10 பேர் வரையிலான பொதுமக்கள் உயிரிழக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய பிரச்சினைகளுக்கு காரணம், வெளிநாட்டுத் தூண்டுதல் என்கிறது மத்திய அரசு. இந்தக் காரணம் என்பது பிரச் சினையிலிருந்து மத்திய அரசு மிக சுலபமாகத் தப்பித்துக்கொள்ளக் கூடிய வழி. உண்மையில்,  வெளிநாட்டுத் தூண்டுதல் என்பது மிகக்குறைவான அளவிலேயே இப்பிரச்சினைக்கு காரணமாக இருக் கிறது. காஷ்மீர் பிரச்சினை குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டின் தொடர் தோல்விகள், முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு எதிராக  மெகபூபாவின் பி.டி.பி.எஃப் கட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்,  உமர் அப்துல்லாவை பலவீனப்படுத்த, அவரது அப்பா பரூக் அப்துல்லா தரப்பினரே செய்து வரும் வேலைகள்... இவையெல்லாம் பிரச் சினையைத் தீவிரப்படுத்தியிருக்கும் அம்சங்களாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகள் இன்று அவற்றின் கைகளிலிருந்து நழுவி, அது காஷ்மீர் இளைஞர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது. நியாயமான சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் கேட்டுப் போராடும் இளைஞர்களுக்கு பெண்கள் உள்ளிட்ட காஷ்மீர் பொதுமக்கள் துணை நிற்கிறார்கள். காஷ்மீர் இளைஞர்களின் கோபம் இந்திய அரசுக்கு எதிரான கோபம். &lt;br /&gt;&lt;br /&gt;1989-ல் அமைந்த வி.பி.சிங் தலைமையிலான இந்திய அரசில் தான் முதன்முறையாக உள்துறை அமைச்சர் பொறுப்பில் காஷ்மீர் முஸ்லிமான முஃப்டி முகமது சயீத் நியமிக்கப்பட்டார்.  அதன்பிறகு மத்திய அரசில் முக்கியமான துறை ஒன்று, காஷ்மீர் முஸ்லிமுக்கு ஒதுக்கப்பட்டது என்பது வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ.கூ. அரசில்தான். 1999-ல் இந்தியாவை ஆட்சி செய்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக்கட்சி சேர்கிறது. அவரது மகன்  உமர் அப்துல்லா வெளிவிவகாரத்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்பிறகு, காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பிப்போம் என இந்திய அரசு முடிவெடுக்கிறது. பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் தீர்வுக்கு நகர்வது என்ற அடிப்படையில் அனைத்துப் பிரிவினரும் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்தியாவின் பிரதான அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகியவற்றுடன், இந்தியாவிலிருந்து பிரிந்து போகும் உரிமை கேட்கும் காஷ்மீரின் ஹூரியத் அமைப்பையும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துகிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தையினைத்  தொடர்ந்து பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதும், மிக முக்கியமானதுமான வாக்குறுதி என்பது, காஷ்மீரில்  ராணுவத்திற்கு உள்ள சிறப்பு அதிகார சட்டத்தை நீக்குவ தாகும்.  பாதுகாப்பு என்ற  பெயரில் ராணுவத்தினர்  என்ன குற்றம் செய்தாலும்   அவர்களை எந்த சட்டத்தின்  கீழும் தண்டிக்கமுடியாது என்பதுதான் இந்தச் சிறப்புச் சட்டம். காஷ்மீரில் ராணுவத்தினரின் செயல்பாடுகளுக்கு முழுமையான அதிகாரமும் சுதந்திரமும் இருக்கிறது. இந்த  சட்டம்  இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீரிலும் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இச்சட்டம் நீக்கப்படும் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை நம்பிய காஷ்மீர் மக்கள், 2002 தேர்தலில் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிகளவில் வாக்குப்பதிவைச் செலுத்தினர். 1970-களுக்குப் பிறகு, மத்திய அரசுப் படையினரின் முறைகேடுகள் இல்லாமல்  நடந்த இந்த தேர்தலில் காங்கிரஸ்-பி.டி.பி. கூட்டணி வெற்றி பெற்று காஷ்மீரில் ஆட்சி அமைத்தது. ஆனால், மத்திய அரசோ, தான் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தே.ஜ.கூ. அரசு வீழ்த்தப்பட்டு மன் மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004-ல் பொறுப்பேற்றபோதும் காஷ்மீர் மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உறுதிமொழி அளிக்கப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பிரமுகராக இருந்தவர் அப்போது வெளியுறவுத் துறையைக் கவனித்து வந்த பிரணாப் முகர்ஜி.  நாளாக, நாளாக ராணுவத்தின் எண்ணிக்கையை காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து குறைப்போம் என்றது ஐ.மு.கூ. அரசு.  ஆனால், அது நடக்க வில்லை. அரசு மிகவும் புத்திசாலித்தனமாக ஒரு  பெட்டாலியன் ராணுவத்தை விலக்கிக்கொண்டு, அதற்குப் பதிலாக சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப்  ஆகியவற்றின் 2 பெட்டாலியனைக் கொண்டு வந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிறுத்தியது. இதனால்,  ஆயுதம் ஏந்திய படையினரின் எண்ணிக்கை அதிகமானது. அவர்களின் அதிகார எல்லை மீறல்களும் அதிகமானது.&lt;br /&gt;&lt;br /&gt;2009 ஏப்ரலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஷோஃபியனில் படையினர் நடத்திய போலி என்கவுன்ட் டர் மற்றும் வல்லாதிக்க பாலுறவு ஆகியவற்றால் கொதிப்படைந்த காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.  இச்சம்பவங்கள் தொடர்பான நியாயமான நடவடிக்கைகளையோ, அப்பகுதியில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையோ அரசாங்கம் எடுக்கவில்லை. அத்துடன், அரசு அளித்த 6 வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லைக்கு அப்பால் உள்ள தங்கள் உறவினர்களை ஸ்ரீநகர்- முசாபராபாத் சாலை வழியாகச் சென்று காஷ்மீர் மக்கள் சந்திப்பதற் காக போக்குவரத்து வசதிகள் அதிகப்படுத் தப்படும் என்று சொன்ன மத்திய அரசு,  ஒரே ஒரு பஸ் மட்டுமே விட்டது. அதிலும் 9 பேருக்கு மேல் பயணிக்க அனுமதியில்லை. காஷ்மீரில் விளையும் ஆப்பிள் உள்ளிட்ட  பொருட்களை  ஜம்மு வழியாக முழு இந்தியாவுக்கும் அனுப்பு வதைவிட, ஜம்மு-சியால்காட் பாதை வழியாக  லாகூருக்கு அனுப்புவது எளிதாகவும் லாபகர மானதாகவும் இருக்கும் என்பது காஷ்மீர் மக்களின் கோரிக்கை. அழுகும் பொருட் களாக இருப்பதால், இதனை அருகிலுள்ள லாகூருக்கு அனுப்பினால் வீணாகாமல் இருக்கும் என்றனர். எல்லையைத் தாண்டிய வியாபாரம் என்பது நியாயமான கோரிக் கைதான் என்றும் அதை அனுமதிக்கப் போவதாகவும் ஒத்துக்கொண்ட மத்திய அரசு, இதுநாள்வரை ஒரு கண்டெய்ன ருக்கும் அனுமதி வழங்கவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வருடமும்  ரம்ஜானுக்கு முன்பாக பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முன்னெடுப்பு நடைபெறும்.. இந்த வருடம், ரம்ஜான் மாதத்தில் பேச்சுவார்த்தைக்கான எந்த முயற்சியையும் இந்திய அரசு மேற்கொள்ளவில்லை. வழக்கமான பாவ னைகூட இல்லையே என்ற கோபம் காஷ்மீர்  மக்களிடம் வந்துவிட்டது. இதனால் பள்ளத்தாக்குப் பகுதி போராட்டத்தால் எரியத் தொடங்கியது. காஷ்மீர் பற்றி எரிந்து உயிர்பலிகள் தொடர்ந்துகொண்டுள்ள நிலையிலும் ராணுவத்தின்  சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;மிகத் தாமதமாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காஷ்மீருக்கு  அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் அடங்கிய குழுவை அனுப்பும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. ராணுவ  சிறப்பு சட்டத்தை ரத்து செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது தொடர்பான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசின் பொய் முகம்தான் வெளிப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ராணுவத்தின் சிறப்பு அதிகாரம்  தொடர்பாக 2004-ல் ஒரு கமிட்டி ஜெனரல் வி.ஆர்.ராகவன், பத்திரிகையாளர் சஞ்சய் அசாரிகா  ஆகியோரைக் கொண்டு அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டி 2006-ன் தொடக்கத்திலேயே,  சிறப்பு அதிகாரத்தை நீக்க வேண்டியது ஏன் என்பதை வலியுறுத்தி ரிப்போர்ட் கொடுத்துவிட்டது. சிறப்பு அதிகாரமே  தேவை யில்லை என்றும், இதுதான் தேவை என்று அரசு கருதினால் அந்த அதிகாரத்தின்  வீச்சையும் தாக்கத்தையும் குறைக்கவாவது ஆரம்பிக்கவேண்டும் என்கிறது அந்த ரிப்போர்ட். ஆனால், தான் அமைத்த கமிட்டியின் அறிக்கையின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் எங்கெல்லாம் மக்களின் அரசியல் ரீதியான உரிமைகளுக்கான போராட்டங்கள் வேகம் பெறுகிறதோ,  அங்கே மத்திய அரசின் பார்வை பிரச்சினையைத் தீர்ப்பதைவிட சமாளிப்பதில்தான் உள்ளது. Interest in conflict management. But, not conflict resolution.  பிரச்சினைக்குரிய இடங்களில், சகஜ நிலைமைக்குத் திரும்புதல்  (Restoration of normalcy)  என்ற வார்த்தை மட்டுமே அரசுத் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. சகஜ நிலை என்பது கல்வீச்சும் செருப்படியும்  நிற்பதால் உருவாகும் சூழல் அல்ல. உரிமைகளுடன் கூடிய   அரசியல் அதிகாரத் தையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதில்தான் உள்ளது. ஆனால், இந்திய அரசைப் பொறுத்தவரை வடகிழக்கிலும் காஷ்மீரிலும் சகஜநிலைக்குத் திரும்புதல் என்று போராட்டத்தை ராணுவத்தின் மூலம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்படுகின்றன. அது நிரந்தரத் தீர்வாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் உள்ள அரசியல் தட்பவெப்ப நிலைக்கேற்றபடியே இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரைக் கையாளுகின்றன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் காஷ்மீர் மக்கள்.  செப்டம்பர் 18-ந் தேதி ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்றத்தேர்தல் நடை பெறுகிறது.  இதற்கு முன் அங்கு நடந்த  அதிபர் தேர்தலில் கர்சாய் கஷ்டப்பட்டு வெற்றி பெற்றார். 18-ந் தேதி யாருடைய விருப்பம் அதிகளவில் வெற்றி என்ற போர் இந்தியா-பாகிஸ் தானிடையே உச்சகட்டத்தில் உள்ளது. அதன் வெளிப்பாடாக பலுசிஸ்தானில் இந்தியாவும் காஷ்மீரில் பாகிஸ்தானும் விளையாடிக்கொண்டிருக்கின்றன. இந்த ஆட்டங்களை விட, காஷ்மீர் மக்கள் உரிமைகளில் கவனம் செலுத்துவதே முக்கிய மானது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்றி, பேச்சுவார்த்தைகளைத்  தயங்காமல் அதைத் தொடரவேண்டும். இல்லையென்றால், காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளும் அதனையொட்டிய போராட்டங்களும் தொடரவே செய்யும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-1933129508732048065?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/1933129508732048065/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_487.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/1933129508732048065'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/1933129508732048065'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_487.html' title='காஷ்மீர் கலவரம்! டெல்லியின் பொய் முகம்! -ஏ.எஸ்.பன்னீர்செல்வன்'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJWjDzylT_I/AAAAAAAAErs/NHv2_rnJGKI/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-724675102158401105</id><published>2010-09-18T22:33:00.001-07:00</published><updated>2010-09-23T04:31:22.303-07:00</updated><title type='text'>""அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்!'' - வைகோ!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJWg9G8PzcI/AAAAAAAAErk/6IR5EbAY6-E/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 260px;" src="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJWg9G8PzcI/AAAAAAAAErk/6IR5EbAY6-E/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518493890108181954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""ஒரு சிறிய அமைப்பை நடத்துவதற்கு நாங்கள் எத்தனை கஷ்டப்படுகிறோம்?''&lt;br /&gt;&lt;br /&gt;அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழாவை திறந்தவெளி ம.தி.மு.க. மாநாடாக காஞ்சிபுரத்தில் நடத்திய வைகோ வெளிப்படையாகவே வேதனையைக் கொட்டிவிட்டார். ""அண்ணா பிறந்த மண்ணில் சத்திய வார்த்தை மட்டுமே பேசுவேன். என் பின்னால் வந்தால் துன்பங்களையும், துயரங்களையும் தாங்க வேண்டியிருக்கும். எதுவும் கிடைக்காது'' என குமுறிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோவின் இந்த வேதனை பின்னணியை ஆய்ந்தறிந்து நம்மிடம் பேசினார் அக்கட்சியின் சீனியர் ஒருவர்-&lt;br /&gt;&lt;br /&gt;""ம.தி.மு.க. ஆரம்பிச்சப்ப இவரை நம்பி நெறயப் பேரு வந்தாங்க. அப்ப இருந்த மொழிப் போர் தியாகி அண்ணன் எல்.ஜி.இப்ப இந்த மேடைல இல்ல. தொண்டர்களோடு தொண்டராக வாழும் செஞ்சியார் மேடையில இல்ல. மிசா காலத்துலயும் அத்தனை நெஞ்சுரத்துடன் இருந்த கண்ணப்பனும் இல்ல. கலைஞரோ, நாவலரோ, எம்.ஜி.ஆரோ, எஸ்.எஸ்.ஆரோ அத்தனை பேரையும் அனுசரிச்சு கட்சி நடத்திய அண்ணா எங்கே? அத்தனை சீனியர்களையும் கொத் தாக விரட்டி விட்டு தனக்கு "ஆமாம்' போடறவங்கள மட்டுமே கட்சில வச்சி ருக்குற வைகோ எங்கே? பல மாவட் டங்கள்ல கட்சியே கரைஞ்சு ஒண்ணுமில் லாமப் போச்சு. இந்த மாநாடு எதுக்கு? அங்கீ காரத்தையும் இழந்து நிற்கிற ம.தி.மு.க.வுக்கு அ.தி.மு.க. தலைமை எத்தனை சீட்டு கொடுக்குமோங்குற பரிதவிப்பு. என் பின் னாலயும் ஒரு கூட்டம் இருக்குன்னு காட்டு னாத்தான் அங்க மரியாதை. இன்னொரு கட்சித் தலைவிய திருப்திப் படுத்த மாநாடு நடத்துற ஒரே தலைவன் எங்க வைகோதான். பிறகு, மனு ஷன் புலம்பத்தானே செய் வாரு...'' என்றார் நிதர் சனத்தை.&lt;br /&gt;&lt;br /&gt;"வாழும் அண்ணா' என வைகோவை சித்தரிக்க மெனக்கெட்ட அந்த மாநாட்டு மேடையில் கலைஞரையும், அவரது குடும்பத்தையும், காங்கிரஸ் தலைவி சோனியாவையும் கட்டுப்பாடே இல்லாமல் திட்டித் தீர்த்தார்கள். அமர ராகிவிட்ட முரசொலி மாறனையும் கூட வசை பாடத் தவறவில்லை. கண் ணியம் இழந்த இந்த பேச்சு களை ஜெ. ஸ்டைலில் ரசித்துச் சிரித்தார் வைகோ. ""அண்ணாவுக்குப் பின் வைகோதான்'' என சந்தடி சாக்கில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு வைகோவை மல்லை சத்யா முன்னிறுத்திப் பேசியபோது முகத்தில் இறுக்கம் காட்டினார் ஜெ. தூதராக வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ""அரசியல் அதிகாரத்தைக் கைப் பற்றும் இடத்துக்கு ஒருநாள் ம.தி.மு.க. வரும்'' என்று முதலமைச்சர் நாற்காலியை வைகோவும் குறிவைத்துப் பேசிய போது ரொம்பவே நெளிந்தார் ஜெயக்குமார்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJWgwoDBp_I/AAAAAAAAErc/C4UYYHe5Apg/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 151px;" src="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJWgwoDBp_I/AAAAAAAAErc/C4UYYHe5Apg/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518493675656685554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்வது, மாநில சுய ஆட்சியை வலியுறுத்துவது, ராஜ பக்சேவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தமிழீழத்தை வென்றெடுப்பது என மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியது இம் மாநாடு.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ ராசியோ என்னவோ, அவர் மைக் பிடித்த போது வானமே அதிர வெடி போட்டு அவரை டென்ஷன் ஆக்கி னார்கள். "பேச்சைத் தொடங்கும்போதே தடங்கலா?' என வைகோ முகத்தில் எள்ளும் கொள் ளும் வெடிக்க... பதறி னார்கள் மேடையிலிருந்தவர்கள். அந்தக் கோபத்துடனே பேச எழுந்தவர், வழக்கம் போல யுவான் சுவாங்கிலிருந்து ஆரம்பித்து, ""கொடும்பழி சுமத்தப்பட்டு தி.மு.க.விலிருந்து தூக்கி எறியப்பட்டேன்...'' என்ற பழைய பல்லவியையே பாடி, ""எனக்குப் பிறகு தி.மு.க. இருக்காது என்று கலைஞரே என்னிடத்தில் சொன் னார்'' என புதிய தகவல் ஒன்றை எடுத்துவிட்டு, ""நாள்தோறும் நான் தவறாமல் படிப்பேன் முரசொலி. அதில் "அறியாமையில் அரற்றுகிறார் அம்மையார்' என ஜெயலலிதாவை விமர்சித்து கலைஞர் எழுதிய கட்டுரையைப் படித்தேன். 100 வயது வரை கலைஞர் நலமுடன் வாழவேண்டும்'' என தன்னையுமறியாமல் வாழ்த்திவிட்டு, ""கலைஞ ருக்கு கொள்கைக் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்காக நான் பரிதாபப்படுகிறேன்'' என்று வாய் கொள்ளாச் சிரிப்பு ஒன்றை உதிர்க்க... "ஒரு மணி நேரம் கடந்தும் இத்தனை இழுவையாகப் பேசிக் கொண்டேயிருக்கிறாரே...' என கூட்டம் கலைய... ""நான் பேச்சை முடிக்கப் போவதில்லை. இப்போது தான் பேசவே ஆரம்பித்திருக்கிறேன். இனிமேல் தான் பேசவே போகிறேன்...'' என்று மோடி மஸ்தான் பாணியில் "இடையில் யாரும் எழுந்து செல்லக்கூடாது' என கண்டிப்புடன் எச்சரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவரின் கோபமறிந்து, எழுந்த கூட்டத்தை நோக்கி பிரம்பை நீட்டி ஆங்காங்கே அமர வைத் தது ம.தி.மு.க. தொண்டரணி. சொன்னது போலவே உற்சாகத் துள்ளலுடன் மீண்டும் பேச ஆரம்பித்தார் வைகோ. ""யாரைப் பார்த்தாலும் பேசாமல் விட மாட்டேன். இது என்னோட குணம். ஸ்டண்ட் பார்ட்டிக இத்தனை பேரு எம்.ஜி.ஆருக்கு பக்கத்துல இருந்தும் எப்படிச் சுட விட்டீங்கன்னு அவங்ககிட்டயே கேட்டேன். அண்ணா இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது எனக்குச் சரியான தலைவலி. நியூஸ் பேப்பரை விரிச்சுத் தரையில படுத்துக்கிடந்தேன்.  அண்ணா செத்துட்டதாச் சொன்னாங்க. இதைக் கேட்டதும் எஸ்.எஸ்.ஆரு கூப்பாடு போட்டாரு, சிவாஜி வந்தாரு. கதறி அழுதாரு. அப்புறம் மூக்கைச் சிந்திக்கிட்டேயிருந் தாரு. எம்.ஜி.ஆரு அங்கயே மயங்கி விழுந்தாரு'' என அழுவது போல் முகபாவனை காட்டி வைகோ சீரியஸாகப் பேச... கூட்டத்தில் ஒரு பகுதி விசி லடித்து, கைதட்டி அவருக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. ஒருவர் பொறுக்க முடியாமல் பத்திரி கையாளர் பகுதிக்கே வந்து, கை தட்டியபடியே இருந்தார். ஆனாலும் பேச்சைத் தொடர்ந்த வைகோ உமர்முக்தார் சினிமாவில் தனக்குப் பிடித்த காட்சிகள், லிபியாவின் விடுதலை, ரானடேயின் தியாகம், கோவா போராட்ட வரலாறு, போர்ச்சுக லின் அட்டூழியம், பிரெஞ்சு நாட்டுத் தளபதி ட்ரைபஸ், எமிலி ஜோலா, தொல்காப்பிய சூத்திரம், மகேந்திர பல்லவன், சாளுக்கிய பேரரசன் இரண்டாம் புலிகேசி, ஹர்ஷ வர்த்தனன், நரசிம்ம பரஞ்சோதி, ஜான் எஃப்.கென்னடி, போப் ஆண்டவர், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகள் என வாழ்நாளில் தான் அறிந்து வைத்திருந்த அத்தனையையும் ஒன்று விடாமல் ஒப்பிக்க... "இவரு பேச ஆரம்பிச்சு 2 மணி நேரம் ஆச்சு...' என வேகமாக கலைய ஆரம்பித் தது கூட்டம். ஆனாலும், இன்னொரு வரலா றைச் சொல்லி ""அவனுக்கு பைத்தியம் பிடிக்கிற நிலை ஏற்பட்டது. அவன் தனக்குத்தானே பேசிக் கொண்டான். தான் பைத்தியக்காரனாகி விடக்கூடாது என்று ரொம்பவே கவலைப்பட் டான்'' என்று கூட்டத்தின் மனநிலையை அறியாமல் பேசி ஒரு இடைவெளி விட, மொத்த கூட்டமும் எழுந்து நின்றது. பிறகு ஒரு வழியாக ""என் பேச்சைக் கேட்க இவ்வளவு நேரம் ஒதுக்கித் தந்திருக்கின்றீர்கள்'' என தலைக்கு மேலே கைகளை உயர்த்தி கும்பிடு போட்டு விட்டே ஓய்ந்தார் வைகோ.&lt;br /&gt;&lt;br /&gt;-சி.என்.இராமகிருஷ்ணன்&lt;br /&gt;படங்கள்: ராம்குமார்&lt;br /&gt;&lt;br /&gt; ""அரசியலுக்கு லாயக்கு இல்லை''&lt;br /&gt;-தொண்டர்களின் கருத்து!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"மற்ற கட்சிகளைப்போல தொண்டர்களை மாநாட்டுக்கு அழைக்க திட்டமிடவுமில்லை. நிதி ஒதுக்கவுமில்லை' என குறைபட்டுக் கொண்டாலும், வியாபாரிகள், செல்வந்தர்கள், பெரிய கம்பெனி களிடம் வசூலித்தே மாநிலம் முழு வதிலுமிருந்து ஓரளவு கூட்டத்தைச் சேர்த்திருந்தார்கள் பொறுப்பாளர் கள். அப்படி வந்திருந்த தொண் டர்களின் கருத்தறிய பேச்சுக் கொடுத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென்னரசு என்பவர், ""இந்தக் கூட்டமே போதும். அம்மா 50 சீட் தருவாங்க. ஒரு 35 இடத்துல ஜெயிப்போம். அப்புறம் தானா கட்சி வளரும். மத்த தலைவர்கள் மாதிரி முதலமைச்சர் ஆகணுங்குற ஆசை வைகோவுக்கு இல்ல'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறுபதைக் கடந்து விட்ட காவேரி, ""வடபழனியிலிருந்து கூட்டி வந்திருக்காங்க. என் கூட வந்தவங்க இன்னும் ஏழு பேரு இருக்காங்க. நாங்க எந்த கட்சியுமில்ல. சும்மா வந்தோம். வேணும்னா சமூக சேவகின்னு போட்டுக்கங்க...'' என்று சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""திருநெல்வேலில கட்டிட சென்டரிங் வேலை பார்க்கிறேன். நிஜாம் கூட்டியாந்தாரு. நான் கட்சி கிடையாது. வைகோ பிடிக்கும். ஆனா, கலைஞர் அளவுக்கு வைகோவுக்கு "நாலெஜ்' இல்ல'' என்றார் இளைஞரான சம்பத்குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;""பணம் செலவழிச்சு கட்சி நடத்த முடியவில்லை. எத்தனை காலத்துக்குத்தான் கைக்காசைச் செலவழிச்சுக்கிட்டு இருப்பான் தொண்டன். வைகோ அரசியலுக்கு லாயக்கில்ல. அதான் கட்சில உறுப்பினர்கள் குறைஞ்சு கிட்டே போறாங்க. தலைவர்களும் வெளியேறிகிட்டே இருக் காங்க. நாஞ்சொல்லுறது நெஜம். அதான், மாநாட் டுக் கூட்டம் எட்டா யிரத்தைக்கூட தாண்டலை'' என்று கவலைப்பட்டார் பாண்டியன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1377927159880033636-724675102158401105?l=srilanka-breaking-news.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://srilanka-breaking-news.blogspot.com/feeds/724675102158401105/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_9994.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/724675102158401105'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1377927159880033636/posts/default/724675102158401105'/><link rel='alternate' type='text/html' href='http://srilanka-breaking-news.blogspot.com/2010/09/blog-post_9994.html' title='&amp;quot;&amp;quot;அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்!&amp;#39;&amp;#39; - வைகோ!'/><author><name>tharsini</name><uri>http://www.blogger.com/profile/10604107957280078663</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJWg9G8PzcI/AAAAAAAAErk/6IR5EbAY6-E/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1377927159880033636.post-1447408065851181393</id><published>2010-09-18T22:23:00.002-07:00</published><updated>2010-09-23T04:31:22.322-07:00</updated><title type='text'>ஆசியாவின் அதிசயம்!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJWeqX7WU2I/AAAAAAAAErU/09owveSuY1M/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 376px;" src="http://3.bp.blogspot.com/_g9OBy09avmo/TJWeqX7WU2I/AAAAAAAAErU/09owveSuY1M/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518491369227047778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை வருடம் முழுவதும் விமரிசையாக கொண்டாடியது தமிழக அரசு. இதன் நிறைவு விழாவாகவும் அண்ணா நூற்றாண்டின் பெருமைகளை எதிர்கால தலைமுறையினர் நினைவுகூரும் வகையிலும் கோட்டூர்புரத்தில் எட்டு அடுக்கு மாளிகையாக மிக பிரமாண்டமான வடிவத்தில் உயர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் கலைஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்களுடன் சரியாக மாலை 5 மணிக்கு விழாவிற்கு வந்த கலைஞர், நூலக கட்டிடத்தின் முகப்பு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அண்ணாவின் சிலையைத் திறந்து வைத்தார். கம்பீரமாக  சம்மணம் போட்டு அமர்ந்து புத்தகம் படிக்கும் அண்ணாவின் சிலை அது. அந்த சிலையையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கலை ஞர், அந்த சமயத்தில் ரொம்பவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;""இந்தச் சிலையில் புத்தகத்தை அண்ணா படிக்கும்போது அவரது முகத்திற்கும்  புத்தகத்திற்குமான இடைவெளி சரியாக இருக்கிறதா என்று கலைஞர் கவனித்தார். இதற்காக, 2, 3 முறை திருத்தம் செய்து சரி பார்த்தார் கலைஞர்'' என்கின்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் தலைமையுரை ஆற்றிய பேராசிரியர், ""இந்தியாவின் நூலகத்துறையை ஒழுங்குபடுத்தி செம்மைப்படுத்திய பெருமை தமிழகத்திற்கு மட்டுமே உண்டு. நூலகம் குறித்து அண்ணா கண்ட கனவை இன்று நிறைவேற்றியிருக்கிறார் கலைஞர். தெற்காசியாவிலேயே இப்படி ஒரு நூலகம் பார்த்திருக்க முடியாது. ஆசியாவின்  அதிசயம் இது'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJWed9jVN1I/AAAAAAAAErM/BXI05ApoE-g/s1600/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 288px; height: 134px;" src="http://4.bp.blogspot.com/_g9OBy09avmo/TJWed9jVN1I/AAAAAAAAErM/BXI05ApoE-g/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5518491155988559698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்புரையாற்றிய கலைஞர், தமிழகத்தின் வீதிகள்தோறும் வீடுகள்தோறும் நூலகம் இருக்க வேண்டும் என்று  அண்ணா ஆசைப்பட்டதையும், மருத்துவ மனையில் அட்மிட் ஆனபோதும் புத்தகமும் கையுமாகவே அண்ணா இருந்ததையும் நினைவுகூர்ந்தவர், ""அண்ணாவின் நினைவாக நாம் உருவாக்கியிருக்கிற இந்த நூலக எழில் மாளிகை, தம்பி தென்னரசு வின் உழைப்பால், முயற்சியால் உருவாக்கப்பட்டி ருக்கிறது. யாரிடத்தில் எந்த காரியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று சிந்தித்து ஒப்படைக்க நினைக்கும் போது, எனக்கு நினைவு வருபவர் தென்னரசுவின் அப்பா தங்கபாண்டியன்தான். மாவட்ட செயலாளர்களிலேயே இதுபோன்ற காரியங்களை விரைந்து, வியந்து போற்றும் வண்ணம
